Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதத்தை இழிவுபடுத்துவோருக்கு கொடுக்கும் தண்டனை ஏனையவர்களுக்கு படிப்பினையாக வேண்டும்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனித இஸ்லாம் மதத்தினையும் எம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு சிறுவர், அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் இக்கண்டனம் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர் ஏ.எம்.ஜெசீம் இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

மேற்கத்திய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இது போன்ற தொடர்ச்சியான காழ்புணர்ச்சிகளை இஸ்லாத்திற்கு விரோதமான விஷமிகள் மேற்கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம்இனியும் பொறுத்திருக்க முடியாது.

இத்தகைய இழி நிலையை திரைப்படத்தின் மூலம் தயாரித்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இத்தரைப்படத்தை வெளியீடு செய்ய உதவிய அனுசரணையாளர்கள் மற்றும் இத்திரைப்படம் காட்சியினை ஒளிபரப்பிய ஊடகங்கள் இவை அனைத்துக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு இத்தகையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி பகிரங்கமாக இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

அத்துடன் இத்தகையோர்களுக்கு வழங்கும் தண்டனைகள் இனிவரும் காலங்களில் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதி திட்டங்களை மேற்கொள்ள காத்திருக்கும் அனைவருக்கும் படிப்பினையாக அமையும் என்பதுடன் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட்டோர் உடன் தண்டிக்கப்படாதவிடத்து தொடர்ந்தும் உலக முஸ்லிம்களின் ஆக்ரோஷமான போராட்டங்கள் ஓயப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=768

[size=4]அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு அல்ல, அங்கே 'சரியா' சட்டமும் செல்லாது. [/size][size=1]

[size=4]அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை, அது மற்றையவர்களை புண்படுத்தினாலும், மதிக்கும் / பேணும் நாடு. [/size][/size]

இத் திரைப்படத்துக்கு செலவின்றி விளம்பரம் செய்து ஊக்குவித்த அனைத்து இஸ்லாமியத் தோழர்களுக்கும் நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

இத் திரைப்படத்துக்கு செலவின்றி விளம்பரம் செய்து ஊக்குவித்த அனைத்து இஸ்லாமியத் தோழர்களுக்கும் நன்றிகள் பல.

:lol: :lol: :D

நிறைய மனைவிகளும் வைப்பாட்டிகளும் வைத்து இருந்த ஒருவரின் அன்றாட வாழ்க்கையை படமாக எடுத்தால் பிரச்சனையில்தான் முடியும். இதெல்லாம் தேவைதானா?

பல்லிருக்கிறவன் பகோடா சாப்பிடுவான், கோல் இருக்கிறவன் கோலம் போடுவான். சும்மா விடுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய மனைவிகளும் வைப்பாட்டிகளும் வைத்து இருந்த ஒருவரின் அன்றாட வாழ்க்கையை படமாக எடுத்தால் பிரச்சனையில்தான் முடியும். இதெல்லாம் தேவைதானா?

பல்லிருக்கிறவன் பகோடா சாப்பிடுவான், கோல் இருக்கிறவன் கோலம் போடுவான். சும்மா விடுங்கப்பா.

கோலால் கோலம் போடமுடியுமா??? எந்தக் கோலைச் சொல்லுகிறீர்கள்?? ஹி...ஹி...ஹி... :D

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மக்களை எமாற்றி வாக்குகளைப் பெற்று விட்டு பள்ளிவாசல்களை இடித்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்களைத்தான் அல்லா தண்டிக்க வேண்டும்.போங்கடா! நீங்களும் உங்க மதவெறியும்,,,,,,,,,,,,,,,,,

[size=5] பாகிஸ்தானில் மத குருவின் மகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வாலிபர்கள்[/size]

Published: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2012, 15:26 [iST]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லிம் மத தலைவர் ஒருவரின் மகனை வாலிபர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மதத் தலைவரின் 3 மகள்கள் கடைக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அதில் இருவருக்கு கடந்த வியாழக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அவர்கள் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள நவான் லாகூர் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் 5 வாலிபர்கள் அவர்களை தாக்கினர்.

அப்போது 2 சகோதரிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். ஆனால் சகோதரிகளில் ஒருவரான ராஹிலா மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். அந்த வாலிபர்கள் ராஹிலாவை கற்பழிக்க முயன்றனர். பின்னர் அவரது ஆடைகளை கிழித்தெறிந்துவிட்டு நிர்வாமணாக்கி ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். யாராவது அவரை காப்பாற்ற வந்தால் அவருக்கும் இதே கதி என்று மிரட்டனர்.

முன்னதாக அந்த 5 வாலிபர்களில் ஒருவர் ராஹிலாவின் சகோதரர் தனது சகோதரியை கிண்டலடித்ததாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து மதத் தலைவரின் மகனை 2 ஆண்டுகள் கிராமத்திற்குள் வரக்கூடாது என்று உள்ளூர் பெரியவர்கள் உத்தரவிட்டனர். ஆனால் தலைவர் மகன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிந்த பிறகு அவரை ஊரைவிட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் இன்னும் 4 பேருடன் சேர்ந்து தலைவரின் மகன் மீதுள்ள காட்டத்தால் அவரின் சகோதரி ராஹிலாவை அவமானப்படுத்திவிட்டார்.

இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

http://tamil.oneindi...tan-161961.html

விரச ஆசைகளை மதம் என்று எப்படிக்கூறுவது?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.