Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மிலேச்சத்தனமான தாக்குதல்;;: ஒருவர் பலி பலர் படுகாயம்

மட்டக்களப்பு சந்திவெளியில் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் 25க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை சந்திவெளிப்பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைத்த காவலரணை அகற்றும்படி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் டுபட்டனர்.

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பிரசன்னமாகி இருந்த அவ்வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி படையினர் மிலேச்சத்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பாவி பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 60 வயதுடைய வயோதிபராவார்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கேள்வியுற்று அவ்விடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவ்வேளை எஎஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பியை நோக்கியும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர் சடுதியாக நிலத்தில் வீழ்ந்து படுத்ததால் அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருக்கின்றார்.

சங்கதி..

  • 2 weeks later...
  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

கொலைசெய்தவர்களின் அடையாளம் இனம் காணப்படவில்லை. காதுவெட்டியவர்கள் இனம்காணப்பட்டுள்ளனரா? உறுதியாகத் தெரியவில்லை. அறிந்து எழுதுங்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

f-5.jpg

புலிகளின் பகுதிக்கு அடுத்த தடவை செல்வேன் - கல்முனையில் கிளின்டன் தெரிவிப்பு

வட, கிழக்கில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணைந்து முன்னெடுப்பதற்கான உத்தேச `பொதுக்கட்டமைப்பு' ஏற்பாட்டுக்கு தனது முழுமையான ஆதரவை இலங்கையின் உள்ளூர்த் தலைவர்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த விரும்பியதாக தெரிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கடல்கோள் புனர்நிர்மாணத்திற்கான ஐ.நா.வின் விசேட தூதுவருமான பில் கிளின்டன், அடுத்த தடவை இலங்கைக்கு வருகை தரும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று பார்வையிடவிருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாட்டிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த கிளின்டன் நேற்றுச் சனிக்கிழமை கல்முனைக்குச் சென்று கடல்கோளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உள்ளூர் தலைவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த விரும்புவதாக கிளின்டன் தெரிவித்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு ஏன் விஜயம் செய்யவில்லையென கிளின்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், `நான் மீண்டும் வருவதற்கு உத்தேசித்திருக்கிறேன். அடுத்த தடவை அங்கு (புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி) செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். இத்தடவை ஒரே ஒரு சந்திப்புக்கு மட்டுமே நேரம் கிடைத்திருக்கிறது. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், பௌத்தர்களை நான் சந்திக்க விரும்பினேன்.

இந்த நோக்கம் நிறைவேறியிருப்பதாக கருதுகிறேன். ஏனெனில், சகல சமூகங்களினதும் பிரதிநிதிகளையும் சந்திக்க முடிந்தது' என்று கிளின்டன் குறிப்பிட்டிருக்கிறார்.

மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க பொதுக்கட்டமைப்பு முக்கியமானதொன்று என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடல்கோள் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையிலிருந்து 100 - 200 மீற்றர் எல்லைக்குள் வசித்தோருக்கு வேறு இடங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து அக்கறை காட்டிய கிளின்டன், இந்தத் திட்டம் எல்லா வேளைகளிலும் நடைமுறை சாத்தியமானதாக அமையாது என்றும் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலமான வீடுகளை அமைத்தலே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்றும் சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது கிளின்டன் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு செல்லும் கிளின்டன், பின்னர் அங்கிருந்து இந்தோனேசியாவின் அசே மாகாணத்துக்கு செல்வார். அசேயில் 2,28,000 பேர் கடல்கோளால் பலியாகியுள்ளனர்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

புலிகளின் தளபதிகளின் `ஹெலி' பயணத்திற்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

கிழக்கிலிருந்து வன்னிக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், அங்கிருந்து மீண்டும் கிழக்கே செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து புலிகளின் திருமலை மாவட்ட தளபதி கேணல் சொர்ணம் சம்பூருக்கும் கிளிநொச்சியிலிருந்து புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கரடியனாறுக்கும் செல்வதற்கே ஹெலிகொப்டரை வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

திருகோணமலையிலிருந்து கடந்த 2 ஆம் திகதி கேணல் சொர்ணம் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உட்பட ஐவர் ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி சென்றிருந்தனர்.

இவர்களே சம்பூர் திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கேட்டபோது அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது.

இது போன்று, இம் மாத முற்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குச் சென்ற கேணல் பானுவும் மற்றும் உறுப்பினர்களும் எதிர்வரும் 2 ஆம் திகதி கரடியனாறு திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கோரப்பட்டது. எனினும் அதுவும் பாதுகாப்பு அமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் வன்னியிலிருந்து தரை வழியாக மட்டக்களப்பிற்கு புலிகளின் அணியொன்று இராணுவப் பாதுகாப்புடன் சென்று திரும்புவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதனையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

இதற்கான கோரிக்கைகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக விடுக்கப்பட்டிருந்தது.

இதே நேரம் ஐரோப்பாவிலிருந்து கொழும்புக்கு திரும்பும் இரு புலி உறுப்பினர்களை ஓமந்தை சோதனை நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

தினக்குரல்

  • தொடங்கியவர்

ஓமந்தையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்த்தனர்

20050531152858vavuniabudha203a.jpg

சர்ச்சைக்குரிய ஓமந்தைப் புத்தர் சிலை

வவுனியா ஓமந்தை பிள்ளையார் கோவில் காணியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எழுந்துள்ள நிலைமையை நேரில் கண்டறிவதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அங்கு விஜயம் செய்து பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக அந்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

ஆலயக் காணியின் உறுதிப்பத்திரத்தைத் தரவேண்டும் என்று படையினர் ஆலய குருக்களிடம் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவர் ஊரைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று விட்டதாகவும் ஓமந்தைவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பரம்பரைகளாக அந்த ஆலயத்தைப் பராமரித்து, பூஜை வழிபாடுகளை நடத்தி வந்த குடும்பத்தைச் சேர்ந்த குருக்களே அச்சம் காரணமாக ஊரைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக் கோவில் காணியில் புத்தர் சிலையை நிறுவியதுடன், இங்கு புராதன பௌத்த ஆலயம் இருந்ததாகக் காட்டும் வகையில் அறிவித்தல் பலகை ஒன்றை படையினர் வைத்துள்ளதாகவும் ஊர்வாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

புத்தர் சிலையை வைத்திருப்பதன் காரணமாக தமது வழிபாடுகளை உரிய முறையில் செய்ய முடியாமல் இருப்பதுடன், அங்குள்ள மக்கள் மத்தியில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று வந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையக அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.

இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இதற்கிடையில் யாழ். சாவகச்சேரி கச்சாய் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்டிருந்த கிணறு ஒன்றைத் துப்புரவு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருளைப் பரீட்சித்துப் பார்த்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்; 22 வயதுடைய கந்தசாமி காண்டீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; யாழ் மாவட்ட பதில் நீதவான் எம்.திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

BBC தமிழ்

பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! :P :lol:

பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! :P :lol:

புத்தர் மனிசனைப் போட்டு படுத்திறாரா அல்லது மனிசன்

புத்தரை போட்டு படுத்திறானா? :roll:

பாவம் அந்தாள் அரசனாக அரண்மனையில் வாழ விரும்பாமல்

மரத்துக்கு கீழ போய் நிம்மதியா குந்தி இருந்தார்.

இவர்கள் அவரை கொண்டுபோய் நடுரோட்டில வைச்சிருக்கினம்.

பத்தாததுக்கு இராணுவ பாதுகாப்பு முள்ளுக்கம்பி பாதுகாப்பு பெற்றோல் கான் :evil:

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி :!: :?: :idea:

பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! :P :lol:

தம்பி மனுசன் புத்தரைப் போட்டு படுத்திற பாடு எண்டு நொல்ல வேணும் அந்த மனுசன் நிம்மதியா இருந்துச்சு இப்ப தனக்கு கிட்ட எப்ப குண்டு வெடிக்கும் எண்டு பயத்திலை எல்லோ இருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன்

  • தொடங்கியவர்

வவுனியாவில் தாக்கப்பட்டது தமது ஒலிபரப்பு நிலையம் அல்ல என்று சன் தொலைக்காட்சி கூறுகிறது

20050602152328suntvattack.jpg

வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையம்

இலங்கையில் வவுனியாவில் நேற்று குண்டு வீசித் தாக்கப்பட்ட மறு ஒலிபரப்பு நிறுவனம் தங்களுக்கு சொந்தமானது அல்ல என்று சென்னையில் இருந்து இயங்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு நிலையத்தின் மீது நேற்று இரவு 1.45 மணியளவில் இனந்தெரியாதவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் அந்த நிலையம் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் அந்த நிறுவனத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும், இலங்கையில் தமக்கு மறுஒளிபரப்பு நிலையமோ, ஒளிபரப்புக்க் கூடமோ அல்லது கிளை நிறுவனமோ எதுவும் கிடையாது என்று சன் தொலைக்காட்சி நிறுவனம் இன்று சென்னையில் அறிவித்துள்ளது.

அதேவேளை சன் நிறுவனம் இலங்கையில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையத்துக்கும் சென்னை சன் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தகவலறிந்த வட்டாரங்களும் கூறுகின்றன.

பிபிசி தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெலோ இயக்கத்தினரால் வவுனியா பகுதிக்கு மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வ்ருகின்றது. அவ் நிலயத்தின் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்காலாம். அங்கே பலகாலமாக தானே நடக்கு இப்படியான தாக்குதல்.. அந்த நிலையத்துக்கு முன்னர் பலத்த பாதுகாப்பு இருந்தது ரெலோ இயக்கதினரால் .தற்போது எப்படியோ தெரியவில்லை.

புகழேந்தி: இந்தியாவிலிருந்து ஒரு கலைத்தூதர்.

Sunday, 05 June 2005

--------------------------------------------------------------------------------

எஸ்.வி.ஆர் என்று தமிழ் நாட்டிலும் இலங்கைத்தீவிலும் இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட எஸ்.வி.ராஜதுரை தமிழ் நாட்டிலுள்ள புத்திஜீவிகளில் வித்தியாசமாகத் துலங்கும் ஒருவர். முன்பு தமிழ் நாட்டில் ஈழப்போராட்டத்தை மிகத் தீவிரமாகத் ஆதரித்தவர்களில் ஒருவர். தொடர்ச்சியாக உயிர்த்துடிப்போடு செயற்பட்டும் எழுதியும் வருகின்ற ஒரு தீவிர இடதுசாரி; தலித்தியவாதி. தமிழ் நாட்டிலுள்ள நிறுவனம் சார் பாரம்பரிய புத்திஜீவிகள் சாதித்த வற்றை விடவும் அதிகம் சாதித்தவர்.

கடந்த மாவீரர் நாள் அன்று ராஜதுரை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்திருந்தார். “இந்நாளில் இங்கே நான் எதை கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று கேட்டார். “துயிலும் இல்லத்திற்கு போவோம்” என்றேன். எமது வாகனம் துயிலும் இல்லத்தை நோக்கி புறுப்பட்ட போது மாவீரர் நாள் உரையும் ஆரம்பமாகிவிட்டது. ஆளரவமற்ற தெருக்களின் வழியே மழைக்காக காத்திருந்த அந்த பின்மாலைப் பொழுதில் படுவேகமாக ஓடிய வாகனத்தில் இருந்த படி மாவீரார் நாள் உரையை அவர் கேட்டார்.

மாவீரர் நாள் உரை முடிய முன்பே நாம் துயிலுமில்லத்தை அடைந்து விட்டோம். அங்கு திரண்டிந்த சனத்திரளுள் நுழைந்த நாங்கள் நடுகற்களை நெருங்கிச் செல்லவும் மணியோசை எழவும் சரியாக இருந்தது.

குளிர்ந்த காற்றில் தேங்கி நின்ற மணியோசையும் சோகப்பாடலும் தீச்சுடர் கருகும் வாசமும் நடுகற்களின் முன்னே தமது விழிகளிலே தீச்சுடர் மினுங்க அழுதபடியிருந்த உறவினர்களுமாக அந்தச் சூழல் எஸ்.வி.ஆர் இற்கு முற்றிலும் புதியதாக இருந்தது. எல்லாவற்றையும் அவர் பிரமிப்போடு பார்த்தார். மாவீரர் நாள் உரை மிகவும் சமநிலையாக இருக்கிறது. ஒரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கு அது விசயங்களை தொகுத்தும் சுருங்கியும் தருகிறது என்று அதை அவர் மிகவும் புகழ்ந்தார். அவருக்குள் இருந்த எளிதில் விட்டுக்கொடுக்காத எதற்கும் சரணடையாத இறுக்கமான ஒரு புத்திஜீவி மெல்லக்கரைந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தமிழன் அவரிடத்தில் தோன்றினான்.

அந்த இடத்தில் அந்த நேரத்தில் அவர் ஒரு புத்திஜீவியாய் அல்ல மிகவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தமிழனாகவே தோன்றினார்.

ஆனால் எஸ்.வி.ஆர் முதலாவதாக ஒரு புத்திஜீவியும் செயற்பாட்டுக்காரரும் இரண்டாவதாக அவர் ஒரு கலைஞர் விமர்சகர்.

ஆனால் அண்மை நாட்களில் வன்னியில் வந்துநிற்கும் ஓவியர் புகழேந்தி ஒரு புத்திஜீவியல்ல. அவர் ஒரு முதலாவதாக ஒரு படைப்பாளி மிகவும் உணர்ச்சிவசப்படுகின்ற ஒரு ஓவியர். ஒரு உள்@ர் பத்திரிகைக்கு அவர் பேட்டி வழங்கிக்கொண்டிருந்த போது, தொடர்ச்சியாக இவ்வளவு காலமும் எப்படி ஈழப்போரோடு நிற்கமுடிகிறது என்று கேட்கப்பட்டபோது@ அவர் அழுதே விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அவரும் அவரையொத்த தமிழகத்து ஈழத்துப் படைப்பாளிகள் பலரும் கலையை ஒரு கருவியாகவே பார்க்கிறார்கள். அதாவது தமது அரசியல் கருத்துக்களை, இலட்சியங்களைய சனங்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகவே அவர்கள் கலையை பயன்படுத்துகிறார்கள். இன்று இப்பந்தி புகழேந்தியின் ஓவியங்களின் கலைத்தரத்தை மதிப்பீடு செய்யப்போவதில்லை. பதிலாக அவருடைய ஓவியங்களின் பின்னால் இருக்கும் அரசியலைப்பற்றிக் கதைப்பதே இன்று இப்பந்தியின் நோக்கம்.

புகழேந்தியின் ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவத்துக்கும், கவனிப்புக்கும் அவற்றின் அரசியல் உள்ளடக்கம் ஒரு முக்கிய காரணம் என்பதனாலும் அவருடைய ஓவியங்களின் அரசியலை கதைப்பது அதிகம் பொருத்தமானதாய் இருக்கும்.

கடந்த ஒரு தசாபடதற்கு மேலாக படிப்படியாக சிதைந்து வரும் தமிழக – தமிழீழ உறவின் பின்னணியில் அவருடைய இந்த ஓவிய அரசியலை பற்றிக் கதைப்பது மேலும் முக்கியத்துவமுடையதாகிறது.

1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்திலிருந்து சிதையத் தொடங்கிய தமிழக – தமிழீழ உறவு கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் யுத்தநிறுத்தச் சூழலிலும் பெருமளவுக்கு சீர்செய்யப்படவில்லை.

கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளை நோக்கி குறிப்பாக ஐரோப்பாவை நோக்கி ஈழத்தமிழர்கள் சாய்ந்து வரும் வேகத்துடன் ஒப்பிடுகையில் தமிழக – தமிழீழ உறவில் ஏற்பட்டிருக்கக் கூடிய புதிய மாற்றங்கள் எதுவும் ஓப்பீட்டளவில் மிகக்குறைவே.

தமிழ் நாட்டில் உள்ள பெரும் கட்சிகளும் பழமைபேண் இடதுசாரிக் கட்சிகளும் ஈழத்தமிழர்களை எப்பொழுதோ கைவிட்டு விட்டன. அல்லது சிலசமயம் காட்டிக் கொடுத்துமிருக்கின்றன. தற்சமயம் ஈழத்தமிழர்களிடத்தில் அக்கறையேர்டும் ஆர்வத்தோடும் காணப்படுவது அரசியல் அதிகாரம் குறைந்த சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித்திய இயக்கங்களும் தான்.

இத்தகையதொரு பின்னணியில் தமிழ்நாடு இனியும் ஈழப்போரின் பின்தளமாக இல்லை. என்று டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள். திருப்திப்படக்கூடும். சந்தேகப்படக்கூடும். ஆனால் கடந்த இரு தசாப்தகாலமாக ஈழத்தமிழர்கள் இந்தப்பிராந்தியத்தைக் கடந்து ஒரு அந்நியப்பிராந்தியத்தில் பதிவைக் கப்பட்டு வருவதும். அங்கெல்லாம் அவர்கள் ஏற்கனவே ஒரு நிதிப்பின்தளமாக உருவாகி விட்டிருப்பதும், இனிவரும் காலங்களில் அவர்கள் அரசியல் பின்தளமாக உருவாகப் போவதையும் மேற்படி டில்லியிருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் ஏனோ கண்டுகொள்ளவேயில்லை.

இதுவொரு அசாதாரண மாற்றம், நிச்சயமாக டில்லிருப்பவர்கள் இப்படியொரு மாற்றத்தை நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்து விட்டது. ஈழத்தமிழர்கள் அந்நியப்பிராந்தியத்தில் பதிவைக்கப்பட்டுவிட்டார்கள். ஐரோப்பா அவர்களை தத்தெடுக்கத் துடிக்கிறது. உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளை தன்வயப் படுத்துவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்புக்கள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன. அந்த இலக்கைநோக்கி அடிகளை எடுத்து வைக்கத் தொடங்கியும் விட்டன.

அமெரிக்காவிலுள்ள செல்வாக்குமிக்க ஐரிஸ் சமூகத்தைப்போலவே ஈழத்தமிழர்களும் ஒரு நாள் ஐரோப்பாவில் அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல அல்லது அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக உருவாகக்கூடிய வாய்புக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்தில் தன்னிடமிருந்து தூரமாகிச் செல்லும், தனது பிராந்தியத்தைச் சேர்ந்த, தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் “ஒரு கூறாகக்” காணப்படுகின்ற, சிறிய ஆனால் புரிந்துக்கொள்ளக் கடினமான, வீரம்மிக்க ஒரு சனத்திரளை தொடர்ந்தும் வன்மத்தோடும் “பெரிய இந்தியா” என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுக முயலும் அரசியல் சூழலில் புகழேந்தி தனது ஓவியங்களையும் காவிக்கொண்டு ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டு வன்னிக்கு வந்திருக்கிறார்கள்.

அவர் இதற்கு முன்பும் பலகலைப் பயணங்களச் செய்திருக்கிறார். ஆனால் இது மிகவும் வித்தியாசமானதும் உணர்ச்சியானதும் அவரை சிலசமயங்களில் அழவைப்பதாகவும் இருக்கிறது. நல்லூரில் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும் ஏனைய சில பெருமெடுப்பிலான படுகொலைகள் நிகழ்ந்த இடங்களிலும் பெரிய அளவிலான ஓவியங்களை வரைய விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்நியாவிலிருந்து இராஜதந்திரிகளும், ஏனைய பிரதானிகளும் வன்னிக்கு வருதல் என்பதை ஒரு துடக்காகக்கருதும் ஒரு அரசியல் சூழலில் இந்தியாவிலிருந்து முதன் முதலாக பிகிரங்கமாகவும் துணிச்சலாகவும் வந்திருக்கும் ஒரு கலைத்தூதுவர் அவர்.

ஏற்கனவே இலங்கதை;தீவிலிருந்து சுவாமி விபுலானந்தர், கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி, தனிநாயகம் அடிகள், நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற சில கலைத்தூதுவர்கள் காலத்துக்குக் காலம் இந்தியாவுக்கு போகிறார்கள். இம்முறை புகழேந்தி இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்.

பொடாச் சட்டத்துக்கு எதிராக திரு.வை.கோபாலசாமி முன்னெடுத்த வீரம் மிகுந்த ஒரு சாத்வீகப் போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகவும் இதை வியாக்கியானம் செய்யமுடியும்.

ஒரு ஆயுதமேந்திய இயக்கத்தை ஆதரித்ததாகக் கூறப்பட்டு பொடாவின் கீழ் வை.கோ சிறைவைக்கப்பட்டார். ஆனால் அந்தச் சிறைவாழ்வை அதன் வலிகளோடு அமைதியாக ஏற்றுக்கொண்டு அதில் தன்னை வருத்தி அதையே ஒரு சாத்வீகப்போராட்டமாக முன்னெடுத்த வை.கோ முடிவில் அதில் வெற்றியும் பெற்றார். அந்த வெற்றிகளின் விளைவாக தமிழ் நாட்டில் துளிர்ந்துவரும் புதிய நம்பிக்கைகளின் தூதுவராக முதலில் அடியெடுத்து வைத்திருப்பவர் புகழேந்தி எனலாம்.

அவர் இதற்கு முன்பும் (சில மாதங்களுக்கு முன்பு) இலங்கைக்கு வந்துபோனவர்தான். கவிஞர் அறிவுமதி, தங்கபச்சான், பேராசிரியர் அரசு, எஸ்.வி.ராஜதுரை, பாலுமகேந்திரா சக்சபோன் கலைஞர் சியாம் சரண் போன்றோர் அதிகம் பரபரப்பின்றி வந்துபோன ஒரு பின்னணியில் பகிரங்கமாக ஒரு கலைத்தூதுவராக முதலில் வரத்துணிந்தவர் புகழேந்தி எனலாம்.

தமிழக – தமிழீழ உறவில் இன்னமும் அறுந்துவிடாதிருக்கும் நுண்ணிய மெல்லிழைகளில் அவரும் ஒருவர். அவர் கொண்டு வந்திருக்கும் கலைத்தூதைப் பின்பற்றி மேலும் மேலும் இந்தியர்கள் இங்கே வரவேண்டும்.

புதுடில்லியிலுள்ள கொள்கைவகுப்பாளர்கள் புலிகளை மட்டும் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக கருதவில்லை. மாறாக, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழர்களையும் கூட தடைசெய்யப்பட்ட மக்களாகவே பார்ப்பது தெரிகிறது.

ஆனால் இது விசயத்தில் ஈழத்தமிழர்கள் வித்தியாசமாகவும், நிதானமாகவும், நடந்துகொள்ளவேண்டியிருக்கிற

We would like to say just one thing. We are today strong enough to face the enemy and defeat it. We have weapons to attack the enemy that is not visible to the eyes and 15 Kilometers away. But we are not ready for war. We want to live together. The feelings of the students must be clearly understood

When we lost ten cadres we took on a superpower, today after loosing 100 cadres we are still patient

Commander Suresh from Batticaloa-Amparai

http://www.ltteps.org/

வேறு ஒருதலைப்பில் துவங்கி இருக்கலாம் தராகி அருமையான ஆளமான கட்டுரை 8)

நன்றி: சூரியன் & தராகி

  • தொடங்கியவர்

ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா!

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளாதாகவும் அவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயினும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக தொடரந்தும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியை சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து கடந்த தேர்தலில் போட்டியிட வைப்பதற்கும் இருகட்சிகளும் இணைந்து செயற்படவும் முன்னின்று செயற்பட்டவர் அமைச்சர் மங்கள சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதிக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் ஏற்பட்ட உச்சக்கட்ட அரசியல் முறுகலில் ஜே.வி.பியின் பக்கம் நின்று ஜனாதிபதியிடம் பரிந்து பேசி வந்ததால் இவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஊடக அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீரவுக்கே தெரியப்படுத்தாமல் ஜனாதிபதி அண்மையில் ரூபவாகினியில் ஜே.வி.பியினரை தாக்கி வழங்கிய பேட்டிஇ ஜனாதிபதியின் கடந்த இந்திய விஜயத்தின் போது மங்களவை அழைத்துச் செல்லாதமை போன்றவை மங்களவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முறுகலை எடுத்துக்காட்டியிருந்தன.

பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மங்கள ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் ஜனாதிபதிக்கு எதிராக அமைச்சர்கள் அணியொன்று மங்கள தலைமையில் திரள்கிறது என்றும் கடந்த வாரம் தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை தொகுதி எம்.பியாக அரசியலில் புகுந்த அமைச்சர் மங்கள - ஒரு காலத்தில் எஸ்.பி.திஸநாயக்க இருந்தது போல் - ஜனாதிபதியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகவும் விசுவாசியாகவும் இருந்து வந்தவர் ஆவார்

puthinam

  • 2 months later...
  • தொடங்கியவர்

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா கொடி பலவந்தமாக இறக்கப்பட்டது

20050804133809un203.jpg

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 60 பேர் கொண்ட குழுவொன்று அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கொடியை பலவந்தமாக இறக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான கண்டனத்தினை ஐக்கிய நாடுகள் சபை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனித நேய நடவடிக்கைகளுக்கான இணைப்பாளருமான மிக்கேல் பேர்மியோவ் சார்பில் பேசவல்ல அதிகாரியான பெரெனன் ஜோண்ஸ் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்களுக்கான நிதியம், ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் இந்த வளாகத்தினுள் செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் நலனுக்காக இவை அங்கு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய துக்கதினம் அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்த போதே இந்த கும்பல் அங்கு சென்று அதனை பலவந்தமாக இறக்கியதாக ஜோண்ஸ் குறிப்பிட்டார்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும், உடமைகளும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் புலிகளின் கட்டுப்பாட்டில் நடந்துள்ளது என்பதால் அது குறித்து புலிகளுக்கு முறையான கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் ஜோண்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான ஐ.நாவின் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதை விடுதலைப்புலிகளின் சார்பில் பேசவல்ல தயா மாஸ்டர் உறுதி செய்துள்ளார்.

BBC Tamil

முன்னாள் ஐநா செயலர் பூட்டோஸ் பூட்டோஸ் காலி 95 இடம்பெயர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்கு சர்வதேச உதவி கோரி விடுத்த கருத்துக்கு அவரை அவமதிக்கும் விதமாக பதில் அளித்த போது கதிர்காமர் பற்றி அலட்டிக் கொள்ளாத ஐநா இப்போ.. கொடிக்கு கொடி பிடிக்கிறது ஏனாம்...??! :shock: :roll: :idea:

ஒரு மனிதரின் கருத்தை அவமதிப்பதென்பது வேறு,

ஒரு தேசத்தின் கொடியை அவமதிப்பதென்பது வேறு

ஒருவரின் கருத்துகள் பிடிக்காத போது அதை எதிர்த்து எதையாவது சொல்வது அல்லது தர்க்கம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடை முறை.

ஆனால் ஒரு தேசியக் கொடியையோ அல்லது பல தேசங்களின் கூட்டுச் சின்னத்தையோ அவமதிப்பது என்பது முழு சமூகத்தையே அவமதிப்பதாக கருதுகிறார்கள்.

இங்கே ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியம், ஐ.நா கொடியை அகற்றியது என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதற்கு அனைத்து தமிழர்களும் பொறுப்பேற்க முடியாது.

இப்படியான சட்டம் ஒழுங்கு சம்பத்தமான பிரச்சனைகளை விசாரிக்கத்தான் தமிழீழ போலிசும், நீதிமன்றமும் இருக்கு.ஐ நா அதிகாரிகள் எங்கு சென்று தமது முறைப் பாட்டை தெருவித்தனரா?அதற்கான விசாரணைகள் நடை பெற்றதா?

நடை பெற்ற சம்பவங்களுக்கும் ,விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பத்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நா சொல்லுற கதையை கேக்கிற நேரம் நி***ம்.நெட் சொல்லுற மெகா காமெடிகளை கேட்டால் சிரிச்சுக்கொண்டு தன்னும் இருக்கலாம்..(என்ன நெடுகலும் கேட்டால் கோமா ஆக்கிடும்) :wink: :lol:

உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட்

எப்பிடி டண் விளம்பரம் சரியா..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட்

எப்பிடி டண் விளம்பரம் சரியா..................

:lol::lol:

விளம்பர யுக்தி அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆயுளைக் கூட்ட வேண்டுமா இன்றே வாசியுங்கள் நி***ம்.நெட்

எப்பிடி டண் விளம்பரம் சரியா..................

முகத்தாரா கொக்கா... :P :wink: (இப்படி செய்யலாம் விளம்பரத்தை)

வாய்விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் ஆகவே, நாடுங்கள் உங்களின் அபிமானம் பெற்ற 7 அறிவு காமெடி டாக்டர்களை.. மேலதிக விபரங்களுக்கு எமது www.N****M.Net/elumputhundu/comedyvithagarkal. (நி***ம்.நெட்/எலும்புத்துண்டு/காமெடிவித்தகர்கள்.) :idea:

24மணி நேர காமெடிச்சேவைகள்... :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.