Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

மாவீரர் நினைவும் இல்லை நாட்டில் இருக்கும் அகதிகளை பற்றியும் இல்லை இவர்கள் கரிசனம் .

தங்களை கேட்காமல் தங்கள் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடாத்தினால் தங்கள் நிலை என்னாவது என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் .இவ்வளவு காலமும் நாட்டமைகளை கேட்காமல் எதுவும் செய்யமுடியாத நிலை இருந்தது உண்மைதான் ,அவர்கள் அனுசரணை ,அவர்களுக்கு ஒரு பங்கு இல்லாவிட்டால் ஊதுகுழல்கள் மூலம் ஊதித்தள்ளி விடுவார்கள் இவர்கள் சிங்களவரின் ஆட்கள் என்று .காலம் காலமாக நடந்து வந்த ஒரு விஷயம் இப்போ கையை மீறிப் போக வந்த எதிர்ப்புத்தான் இவ்வளவும் .

அகப்பட்டதை சுருட்டுவம் என்று அனைத்து ஊது குழல்களும் விளம்பரத்தை வாங்கி நிகழ்ச்சிக்கு எதிர்கருத்து வைக்க கூடாது என சொல்லிவிட்டார்கள் .அமைப்புகளும் மெல்ல நிலைமையை நாடி பிடித்து பார்த்து நிகழ்ச்சிக்கு கை ஓங்குவதை அறிந்து அது நடத்தலாம் தவறில்லை என்ற ரீதியில் அறிக்கைகளை விட தொடங்கிவிட்டார்கள் .

அவசரப்பட்டு ஆடு அறுக்க முதல் அதற்கு நின்றவர்கள் துவங்கி விட்டோம் இனி பின் வாங்க கூடாது என்பதற்காக முக்கி முனகிக்கொண்டு நிற்கின்றார்கள் .

எல்லாமே பணமும் இருப்பும் தான்.

[size=1]சொல் ஒன்று நீக்கம்[/size]

Edited by நியானி

  • Replies 248
  • Views 19.9k
  • Created
  • Last Reply

1. இன்று நேரடியாகவே பல அமைப்புகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு பணம் அனுப்பும் வசதி இருக்கும் போது, இத்தகையை நிகழ்ச்சிகளின் மூலம் பணம் பெறப்படல் மூலம் எதனை பெரியளவில் சாதிக்க போகின்றனர். டிக்கெட் அடிப்பதற்கான செலவு, அரங்கத்துக்கான செலவு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான செலவு (அலங்கரித்தல், ஆடைகள், போக்குவரத்து என்ற இன்ன பிற) போன்றவை போக எவ்வளவு பணம் மிஞ்சப் போகின்றது? அதில் எத்தனை பங்கு ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லப் போகின்றது?

2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றுக்கு கொடுக்கும் பணத்தில் வெறுமனே 25 வீதம் கூட பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில்லை எனும் போது, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக இணைக்காமல் (நேசக்கரம் போன்று) ஏன் இப்படியான நிகழ்ச்சிகளின் மூலம் பெறப்படுகின்றது? கனடாவில் உள்ள பல ஊர்ச்சங்கங்கள் நேரடியாக நிதி சேகரித்து அங்குள்ள சனசமூகம். பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக நேரடியாக உதவி செய்யும் போது தமிழ் அவைக்கு ஏன் இப்படியான நிகழ்வுகள் அவசியமாகின்றன?

3. பணம் பெறப்பட்டு அது எவ்வாறு எவரின் ஊடாக ஈழத்துக்கு அனுப்பப்படும்? இலங்கை அரசின் அமைப்புகளின் ஊடாகவா அல்லது சர்வதேச நலன் அமைப்புகளின் ஊடாகவா? அது இலங்கை அரசின் அல்லது உளவுத் துறையின் கைகளில் வீழாது என்பதற்கான உத்தரவாதம் என்ன?

4. மிக முக்கியமாக இந்த நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைகின்றது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்?

5. இவ்வாறான நிகழ்வு வைக்க தமிழ் அவைக்கு எங்கிருந்து நிதி யாரால் எப்படித் தரப்படுகின்றது?

இது ஒரு வெறுமனே வர்த்தக நிகழ்வு என்றால் கண்டிப்பாக இப்படியான கேள்விகள் மனதில் எழாது, ஆனால் ஊர் மக்களுக்கு உதவுகின்றேன் என்று கூறுகின்றமையாலேயே நாம் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டிய தேவையை உணருகின்றோம்.

நன்றி

அது ...அது ....அது............அந்தக்கேள்வி, விழிப்புணர்வு, அவதானம் ...இதுதான் எமது ஒவ்வொரு விடயத்திலும் இருக்கவேண்டும் ........அன்று ...இது இல்லாமல்தான் எமக்கிடையே இன்று இவ்வளவு பிணக்குகளும் ..........இதன் ,இந்த மறை உண்மையின் nimiththame இந்த thiri இவ்வளவு நீண்டு போனது ............இதனை அர்த்தத்தை உணராதவர்களே ,புரியாதவர்களே

இளையராயா என்னும் மாபெரும் கலஞ்சனை இதற்குள் இழுத்தி தம் வாதங்கள் வெல்ல அவரை பாவித்தார்கள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.....

சொப்னா,

சிலோன் தமிழர் என்று எங்களை அழைப்பதை தவிருங்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம்.

உங்க ஆசைய மதிக்கிறேங்க சபேசன் அண்ணன் . ஆனா நீங்க ஒண்ண புரிஞ்சிக்கணும் , இப்போ றீசண்டாதான் மீடியாவில உள்ளவங்க உங்களைய " ஈழத்தமிழர்ன்னு " சொல்றாங்க . சாதாரண கிராமத்தாளுங்களுக்கு சிலோன் ஆளுங்கன்னாதான் புரியும் . இப்போ கூட குன்னூர்ல கொஞ்ச ஃபமிலி இருக்காங்க சிலோன் ஆகளுங்கன்னாதான் மத்தவங்களுக்கு புரியும் . உங்க ஃபீலிங்சை புரிஞ்சுகிட்டு இனிமே ஈழத்தமிழர்ன்னு சொல்றேங்க . ஓக்கேயா சபேசன் அண்ணன் :) :) .

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.
[/size]

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவை [/size][size=4]ஒரு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு. இதற்கு வாக்குகள் அளிக்காதவர்களும் அழித்தவர்களும் இவர்களின் தொடர்பு இலக்கத்தை அழைத்து தமது சந்தேகங்களை கேட்கலாம்.[/size]

[size=4]தனிப்பட்ட ரீதியில் இவர்கள் மீது பூரண நம்பிக்கை உள்ளது.[/size]

நீங்க என்ன வேண்டுமானாலுலும் எழுதுங்கள் சொப்னா.

இன்றையநிலையில் நாங்க திருப்பி ஏதும் உங்கள் மனம் புண்பண்ணும்படியாக எழுதமாட்டம்

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........???

நீங்க கூட சிலோன் தமிழர் என்று வரிக்கு வரி எங்களை ஈட்டியால குத்திபோதும் நாங்க நாங்க ராமர் தடியில் மிதிபட்ட தவக்கையாக மௌனமாகத்தான் இருக்கின்றோம்.

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........??? :( :( :(

என்னங்க விசுகண்ணன் இப்புடி இமோர்சன் ஆகிறீங்களே ?? நான் கிராமத்து பெண்ணுங்க . எங்களபோல யங்ஜெனரசேனோட தார்மீக ஆதரவு எப்போதுமே உங்களுக்கு இருக்குங்க . பட் றீசண்டா தமிழக மக்கள கேவலப்படுத்திற மாதிரி கருத்துங்க யாழ் கருத்துகளத்தில வந்திட்டு இருக்கு . தமிழ்நாட்டில யாழ் இணையத்துக்குன்னு ரெம்ப உயர்வான இடம் இருக்கு . அதை தமிழக விரோத கருத்துக்கள போட்டு உடைச்சிடாதிங்க அண்ணனுங்களா அக்காளுங்களா :( :( .

என்ன பேசுறிங்க அண்ணா இளையராஜா உட்பட அவளவு இசைக்குலினரையும் கொண்டு வரவே 100000 வந்திருக்கும் அவியல் hotel ல நிக்குறது உட்பட

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

[size=4]இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.[/size]

[size=4]இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?[/size]

[size=4]இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. [/size]

[size=4]அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.[/size]

[size=4]கனடாவின் [/size]The Globe and Mail இல் Oct 24 வந்தந்து..

[size=4]Fast-growing firms face office-space crunch[/size]

Three years ago, Dunstan Peter launched a business in the basement of his home in suburban Brampton, Ont.

Two moves to larger office spaces later, he has 120 employees and an aggressive expansion plan, and he’s negotiating to buy his own commercial building on the west side of Toronto.

“I never could have foreseen how fast we would be growing,” says Mr. Peter, president and chief executive officer of the green energy, automation and quality control company Trinity Tech Inc.

http://www.theglobeandmail.com/report-on-business/small-business/starting-out/fast-growing-firms-face-office-space-crunch/article4637888/

TVIஇல் வந்த பேட்டி.

நாமெல்லாம் இலங்கை தமிழராம்!

[size=4]கனடாவின் [/size]The Globe and Mail இல் Oct 24 வந்தந்து..

[size=4]Fast-growing firms face office-space crunch[/size]

Three years ago, Dunstan Peter launched a business in the basement of his home in suburban Brampton, Ont.

Two moves to larger office spaces later, he has 120 employees and an aggressive expansion plan, and he’s negotiating to buy his own commercial building on the west side of Toronto.

“I never could have foreseen how fast we would be growing,” says Mr. Peter, president and chief executive officer of the green energy, automation and quality control company Trinity Tech Inc.

http://www.theglobea...article4637888/

நாமெல்லாம் இலங்கை தமிழராம்!

[size=4]இங்கே இந்த செய்தியின் மூல காரணி ஒரு பெரிய விற்பனை முகவர் அமைப்பு - [size=5]Cushman & Wakefield. [size=4]சரிந்து வரும் பொருளாதார நிலையில் தமது வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை பயன்படுத்தி உள்ளார்கள்.[/size][/size][/size]

[size=4]அடுத்து இந்த 'தமிழர்' : டன்ச்டர் பீட்டர். இவரை தமிழ் சமூகம் முன் பின் அறிந்திருக்கவில்லை. அதேவேளை ஒரு நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, நூற்றி இருபது பேரளவில் வேலைக்கு அமர்த்தி இப்பொழுது தமக்கென ஒரு இடத்தையும் வேண்டுவது என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை.[/size]

[size=4]அதேவேளை இவர் எமது மக்களை அவர்கள் இசை விருப்பத்தை தனது சுய இலாபத்திற்கு பாவிப்பதுடன் சமூக வளர்ச்சிக்கும் உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.[/size]

[size=4]இங்கே இந்த செய்தியின் மூல காரணி ஒரு பெரிய விற்பனை முகவர் அமைப்பு - [size=5]Cushman & Wakefield. [size=4]சரிந்து வரும் பொருளாதார நிலையில் தமது வியாபாரம் அமோகமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை பயன்படுத்தி உள்ளார்கள்.[/size][/size][/size]

[size=4]அடுத்து இந்த 'தமிழர்' : டன்ச்டர் பீட்டர். இவரை தமிழ் சமூகம் முன் பின் அறிந்திருக்கவில்லை. அதேவேளை ஒரு நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, நூற்றி இருபது பேரளவில் வேலைக்கு அமர்த்தி இப்பொழுது தமக்கென ஒரு இடத்தையும் வேண்டுவது என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது எனது ஆசை.[/size]

[size=4]அதேவேளை இவர் எமது மக்களை அவர்கள் இசை விருப்பத்தை தனது சுய இலாபத்திற்கு பாவிப்பதுடன் சமூக வளர்ச்சிக்கும் உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.[/size]

இப்ப அவர் நடத்துறார் என்பது பிரச்சனையா இல்லை மாவீரர் மாதம் என்பது பிரச்சனையா?

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

அது கனடா நாட்டு அதிகாரிகளின் கவலை அதுக்கும் மாவீரர் மாதத்துக்கும் என்ன தொடர்பு?

[size=4]

[/size]

[size=4]இந்த நிகழ்ச்சி கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் நடப்பதில் தனிப்பட்டரீதியில் ஆட்சேபணை இல்லை.

இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.

http://www.trinitytechinc.ca/

இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது. இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?

இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. பொதுவாக இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது இலகுவான விடயம் இல்லை. முன் பின் அனுபவம் இல்லாதவர்கள் நடாத்த முடியாது.

எனவே ஒரு பொறியியல் நிறுவனம் என்னென்று இசை நிகழ்ச்சியை நடக்க முனைந்தது? எவ்வாறு இது சாத்தியம் ஆகும்? அதாவது இந்த நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பலமான ஆதரவு இருக்கவேண்டும்.

அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.

பலம் பொருந்திய மிகவும் கெட்டித்தனமான சிங்கள எதிரிகள் எம்மை பிளவுபடுத்தக்கூடிய வகைகளை ஆராய்ந்தே திட்டம் தீட்டுவார்கள்.

இவ்வாறு அவர்கள் எம்மை பிரிக்க தேர்ந்து எடுத்த ஒன்றுதான் 'இசை'. இறுதியாக உன்னி கிருஷ்ணன் யாழ் சென்றதும், அங்கு டக்ளசால் பொன்னாடை போர்த்தப்பட்டதும், பின்னர் அவர் மன்னிப்பு கோர நாமும் மன்னித்ததும் சரித்திரம்.

[/size]
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணங்கள் இதில் விளையாடி 'நல்ல பணமாக' மாறக்கூடும் :icon_idea: [/size]

அப்படியென்றால் கனடாவில் நிறையக் கறுப்புப் பணங்கள் புழங்குகின்றது! போராட்ட காலத்தில் அதிகம் பணம் சேர்த்தவர்கள் அதனை "நல்ல பணமாக" மாற்றுவதற்கான பேர முயற்சி தோல்வியால்தான் திரி இத்தனை தூரம் நீண்டிருக்கின்றதோ?

நிழச்சி ரத்து, இளையராஜா வந்துவிட்டார்/வரவில்லை என்று நிறையக் குழப்பங்களை ஏற்படுத்தி எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்ற நிலைக்கு இறங்கிவந்தாயிற்று. ஆட்டத்தை தொடருங்கள். ^_^

[size=4]கருப்பு பணம் இந்தியாவிலும் இருந்தும் இல்லை சிங்களத்தில் இருந்தும் வரலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணம் இந்தியாவிலும் இருந்தும் இல்லை சிங்களத்தில் இருந்தும் வரலாம்.[/size]

அதாவது இந்த நிகழ்ச்சி இந்திய-இலங்கைக் கூட்டுச் சதி என்று ஒரு குச்சியைக் கொளுத்திப் போடுகின்றீர்கள்.. இன்னும் நிறைய கொளுத்திப் போடுங்கள்..

----------

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

--------------

[size=4]யாவும் கருத்து சுதந்திரமே [/size]

[size=4]இதை ஏற்றே இங்கே இணைந்துள்ளோம்[/size]

[size=4]இந்தப்பழம் புளிக்க கூடாது![/size]

[size=4]கருப்பு பணம் இந்தியாவில் இல்லை சிங்களத்தில் வராது என முடிந்தால் நிரூபியுங்கள் :D [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருப்பு பணம் இந்தியாவில் இல்லை சிங்களத்தில் வராது என முடிந்தால் நிரூபியுங்கள் :D [/size]

என்ன சொல்லுகின்றீர்கள்? ஒரு குடும்ப உறுப்பினரை ஸ்பொன்ஸர் செய்யவே சரியான ஆதாரத்தோடு பணம் உள்ளதைக் காட்டவேண்டும். நூற்றுக்கு மேற்பட்ட குழுவினரை வரவழைக்க ஸ்பொன்ஸர் கனடாவில் இல்லாமல் இந்தியா/இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகின்றது என்று சொல்லமுடியுமோ?

இல்லையென்றால், இந்தியா/இலங்கையிலிருந்து கறுப்புப் பணத்தை கனடாவுக்கு அனுப்பி வெள்ளையாக்க முயல்கின்றார்கள் என்று சொல்லுகின்றீர்களா?

ஒரு சின்ன முதலீட்டுக்கே சொற்ப பணம் அனுப்பும்போது கனடாக்காரர் அந்தப் பணம் எப்படி வந்தது என்று சில்லுக் கழட்டுகின்றார்க்ள்....

தமிழ் மக்களை எப்போதும் சொந்தமாகத் சிந்திக்கமுடியாத மந்தைக் கூட்டம் என்று நினைக்கும் மேய்ப்பர் குணம் இருப்பதால் எழுந்தமானத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்று நினைக்ககூடாது.. :)

பலரது உண்மை முகங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க கூடியதாகிவிட்டது .

பலரது உண்மை முகங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க கூடியதாகிவிட்டது .

:D விழுந்து விழுந்து சிரிக்கிறேன் :D ...............

Trinity Events - http://www.facebook....212526588875765

Trinity Events regretfully informs that due to very recent unforeseen severe weather conditions in Chennai (India) and North America , the “Engeyum Eppothum Raja” scheduled for November 3rd has been postponed. The postponement comes as a result of severe impact on the travel arrangements and to ensure the safety of the entire crew coming to attend the show.

“We are sincerely apologetic to the fans for any inconvenience caused and we are doing everything we can to announce the new date as soon as possible".

Official Press release from Trinity Events will be held tonight and further details will be provided in regards to ticket purchases.

Thank you for your co-operation and stay tuned for more updates.

Edited by பூச்சாண்டி

[size=4]நன்றி பூச்சாண்டி. [/size][size=4]இதை உத்தியோகபூர்வ செய்தியாக எடுக்கலாம். [/size]

[size=4]இயற்கை அன்னை வட அமெரிக்காவிலும் தமிழகத்திலும்/தமிழீழத்திலும் ஒரே நேரத்தில் சீற்றமாக இருக்கின்றாள். அவளை யாரும் வெல்ல முடியாது.[/size]

Trinity Events regretfully informs that due to very recent unforeseen severe weather conditions in Chennai (India) and North America , the “Engeyum Eppothum Raja” scheduled for November 3rd has been postponed.

அப்படி நடந்தால் இயற்கைக்கு நன்றி சொல்வேன்.... :D

எனக்கு ஒரு விசையம் விளங்கேலை .......... ஒருக்கால் இந்த அறிவு குறைஞ்சவனுக்கு விளக்குவியளோ ?????? என்னண்டால் இந்த இயற்கை அன்னை 2009 மே மாசம் எங்கை போனவள் ????? எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கேக்கை!!!!!

Edited by கோமகன்

எனக்கு ஒரு விசையம் விளங்கேலை .......... ஒருக்கால் இந்த அறிவு குறைஞ்சவனுக்கு விளக்குவியளோ ?????? என்னண்டால் இந்த இயற்கை அன்னை 2007 மே மாசம் எங்கை போனவள் ????? எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கேக்கை!!!!!

எல்லாரும் ரவுண்டு கட்டி அடித்தது 2009 மே மாசம் என்பது மறந்துவிட்டது போலிருக்கு. :) இயற்கை அன்னை அப்ப விட்ட பிழையை இனியாவது திருத்திக்கொள்ளட்டும்... :)

எல்லாரும் ரவுண்டு கட்டி அடித்தது 2009 மே மாசம் என்பது மறந்துவிட்டது போலிருக்கு. :) இயற்கை அன்னை அப்ப விட்ட பிழையை இனியாவது திருத்திக்கொள்ளட்டும்... :)

மிக்க நன்றி திருத்தம் செய்யப்பட்டுள்ளது :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நிகழ்ச்சி நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஒரேயொரு ரசிகர் இருந்தாலும் கச்சேரி நடத்துவேன் என்றார் இளையராஜா.

இந்த நிலையில், அமெரிக்காவின் சாண்டி புயல் தீவிரமடைந்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டதால் இளையராஜாவின் கனடா பயணம் ரத்து செய்யப்பட்டது. இசைக் கலைஞர்களும் போகவில்லை.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "சான்டி புயல் பாதிப்பு காரணமாக, எனது பயணம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை வேறு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாமல் வந்து எப்போதும் போல ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

இசை நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

That's Tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.