Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

[size=4]பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தாலும் இசைஞானி இளையராஜா கனடா வந்து சேர்ந்துள்ளார், அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.[/size]

[size=4]ஒரு ரசிகன் இருந்தாலே போதும் நான் எனது முழு இசை நிகழ்ச்சியையும் நடாத்துவேன் என்று கூறியுள்ளார்.[/size]

[size=4]கனடா ஊடகங்களுக்காக ஒரு ஊடக சந்திப்பையும் அவர் நடாத்தியுள்ளார், அத்தருணம் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே திருப்பத் திருப்ப பலரும் கேட்பதைக் காண முடிந்தது.[/size]

[size=4]எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் இசை என்னிடம் உண்டு என்று அவர் கூறினார்.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=116181[/size]

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply

வெரி குட் இளையறாஜா.வாழ்த்துக்கள்.அப்படியே அவுசுக்கும் ஜரோப்பாவுக்கும் வாங்க.

இணைப்பில் உள்ள காணொளிகள் பழையவை.

  • தொடங்கியவர்

[size=4]இந்த நிகழ்ச்சி கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் நடப்பதில் தனிப்பட்டரீதியில் ஆட்சேபணை இல்லை.[/size]

[size=4]இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள்? என்பதை மக்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. அதை குழப்பம் என சொல்லமுடியாது.[/size]

[size=5]http://www.trinitytechinc.ca/ [/size]

[size=4]இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது. [/size][size=4]இதை செய்பவர்கள் தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அதை நம்பமுடியுமா?[/size]

[size=4]இல்லை இவர்கள் பின்னால் யாரோ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வருகின்றது. [size=4]பொதுவாக இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது இலகுவான விடயம் இல்லை. முன் பின் அனுபவம் இல்லாதவர்கள் நடாத்த முடியாது.[/size]

[size=4]எனவே ஒரு பொறியியல் நிறுவனம் என்னென்று இசை நிகழ்ச்சியை நடக்க முனைந்தது? எவ்வாறு இது சாத்தியம் ஆகும்? [/size][size=4]அதாவது இந்த நிறுவனத்திற்கு பின்னால் ஒரு பலமான ஆதரவு இருக்கவேண்டும்.[/size][/size]

[size=4]அதை அவர்கள் தெளிவுபடுத்தினால் இன்னும் அதிக ஆதரவு கிடைக்கும். ஏனெனில் இவர்கள் பின்னால் சிங்கள அரசு இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான தமிழர்களின் அவா.[/size]

[size=4][size=4]பலம் பொருந்திய மிகவும் கெட்டித்தனமான சிங்கள எதிரிகள் எம்மை பிளவுபடுத்தக்கூடிய வகைகளை ஆராய்ந்தே திட்டம் தீட்டுவார்கள்.[/size][/size]

[size=4][size=4][size=4]இவ்வாறு அவர்கள் எம்மை பிரிக்க தேர்ந்து எடுத்த ஒன்றுதான் 'இசை'. இறுதியாக உன்னி கிருஷ்ணன் யாழ் சென்றதும், அங்கு டக்ளசால் பொன்னாடை போர்த்தப்பட்டதும், பின்னர் அவர் மன்னிப்பு கோர நாமும் மன்னித்ததும் சரித்திரம்.[/size][/size][/size]

அதுதான அகோதா.வெளிப்படைத்தன்மை இருக்கணும் ஏனெண்டால் இப்ப இந்த நிகழ்ச்சி அரசியலாக மாறிவிட்டதால் கட்டாயம் சம்பந்தப் பட்டவர்கள் வெளிவந்து தமது இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கத்துக்கு அரசியல் ரீதியான எந்த சம்பந்தமும் கிடையாத என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இல்லையென்றால் இவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் கட்டாயம் பின் நொக்கம் இருக்கும் என்று மக்கல் சந்தேகிப்பது தவிர்க்க முடியாதது.இது இனி இளையறாஜா மீதான சந்தேகமாகவும் மாறும் இளையறாஜ குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் தமது நோக்கம் அரசியல் கலக்காதது என்பதை நிரூபிக்கும் படி கேட்காவிட்டால்.

  • கருத்துக்கள உறவுகள்
tamil-movies-ilayaraja-in-canada-arrival-press-meet-rogers-centre-visit-photos14.jpgtamil-movies-ilayaraja-in-canada-arrival-press-meet-rogers-centre-visit-photos01.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

[size=4]எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் இசை என்னிடம் உண்டு என்று அவர் கூறினார். [/size]

[size=4]அரசியல்வாதி தன்னிடம் அரசியல் தீர்வு உள்ளாதாக கூறுவான்.[/size]

[size=4]பணக்காரன் தன்னிடம் பொருளாதார தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4]மனித உரிமை ஆர்வலன் தன்னிடம் மனித உரிமைக்கான தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4].....[/size]

[size=4]ஆனால் எமக்கோ உண்மைகள் தெரியும்.[/size]

தமிழ்நாட்டு இணைய ஊடகங்கள் அவர் இன்னும் புறப்படவில்லை என்று சொல்கின்றன. ஆனால் இங்கே பழைய படங்கள், விடீயோக்களைப் போட்டு அவர் வந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.

[size=4]அரசியல்வாதி தன்னிடம் அரசியல் தீர்வு உள்ளாதாக கூறுவான்.[/size]

[size=4]பணக்காரன் தன்னிடம் பொருளாதார தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4]மனித உரிமை ஆர்வலன் தன்னிடம் மனித உரிமைக்கான தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4].....[/size]

[size=4]ஆனால் எமக்கோ உண்மைகள் தெரியும்.[/size]

அரசியல்வாதி தீரு இருக்கு என்று சொல்வான் ஆனால் தீர்வை தரமாட்டான்.

பணக்காரன் பணம் இருக்கு என்று சொல்வான் ஆனால் பணம் தரமாட்டான்.

மனித உரிமை ஆரவலர் தன்னிடம் மனித உரிமைக்கான தீர்வு இருக்கு என்று கூறுவான் ஆனால் கொடுக்க மாட்டான்.

இசைமைப்பாளர் இசை இருக்கு என்று சொல்வான் ஆனால் எதிர்பாத்ததை விட அள்ளிக் கொடுப்பான் அது தான் நிஜம்.

இந்த திரியில் சிலர் பந்தி பந்தியாக எதிர்த்து எழுதினார்கள் ஏன் என்றால் அது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும் ஆனால் வேர நல்ல வேலைகள் செய்யக் கூடிய அகோதாவும் இந்த திரியில் மினக்கெடுவது அகோதாவின் மறுபக்கத்தை காட்டுவது போல் இருக்கு.

இதை விட மாவீரர் நாளைக் கேவலபடுத்தமுடியாது.

இசைஞானியின் நிகழ்வுக்கு அனேகமான நுழைவுச்சீட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் எனக்கு அல்லது என் போன்ற சிலருக்கு ஒரு சில கேள்விகள் உண்டு. இவ்வளவு காலமும் நாட்டு நிலையை வைத்துகொண்டு இப்படியான பெரு நிகழ்வுகளை நடத்தி பணம் சம்பாதித்தவர்களுக்கு இப்போ வேறு ஒருவரின் கைக்கு மாறுவதென்பது மனதுக்கு ஏலாத காரியம் அதுவும் உண்மையானதுதான்.அப்போ ஒட்டு மொத்த தமிழினமும் ஒருவர் பின்னால் நின்றது.இப்போ அந்த நிலை மாறி விட்டது.வெளி நாடுகளில் எல்லாரும் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள் தான்.அவர்களுக்கும் நாம் வழி விட வேண்டும்.இந்த நிகழ்வுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை பொய் பிரச்சாரம் ஏதும் மேற்கொண்டார்களா? இல்லை என்றே கூறலாம். எமது காலத்தில் மற்றவர்களுக்கு நம்பிக்கையாக நடந்திருந்தால் தான் நாம் சொல்வதை மக்கள் ஏற்றுகொள்வார்கள்.தமிழ் வண் தொலைக்காட்சி பல இன்னல்களின் மத்தியில் வளர்ந்து வரும் நிறுவனம்.அது ஆரம்பத்தில் எவ்வளவு சட்ட சிக்கல்களைச் சந்தித்தது.அதை ஏற்படுத்தியவர்கள் யார்? வெட்கத்துடன் நாணி கோணி நாம் என்கிறேன், அந்த நிறுவனத்தை விளம்பரத்துக்காக அவர்கள் பயன் படுத்துகிறார்கள். நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் ரி வி ஐ தொலைக்காட்சியையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.அப்படியொன்று நடந்திருந்தால் எதிர்பு பிரசாரம் வேகம் பெற்றிருக்காது என்பது எனது கருத்து.இதிலொரு வேடிக்கை என்ன தெரியுமா?இது ரகுமானின் நிகழ்வாகவிருந்தால் யாரும் தடுத்திருப்பார்களா? இல்லை என்பது தான் என் பதில் காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாஞ்சாப் மொழி பேசும் சர்தாரிகள்.அங்கு எங்களின் அறிக்கைகள் செல்லு படியற்றதாகிவிடும்.தமிழர்களை ஈழத்தமிழர்,இந்தியத்தமிழர்,அதிலும் ஈழ ஆதரவுத்தமிழர்,புலி எதிர்ப்புத்தமிழர்.இப்படித்தான் "றோ"விடம் கோப்புகள் உண்டு.ஆனால் இதுவரைகோப்புகள் வெறுமையாகத்தான் உண்டு அது நிரம்புவதற்கு நாமே காரண கர்த்தாவாக இல்லாமல் இருப்போமாக. இனிவரும் காலங்களில் இப்படி நடக்காது பார்த்து கொள்வோமாக.

http://www.theglobea...article4637888/

http://www.trinitytechinc.ca/

trinity-events-logo.png

Toll Free:

[

[size=4]
aboutuslogo.jpg

Trinity Events

Trinity Events Inc is a subsidiary of TRINITY TECH INC, which is a leadingToronto based Engineering company, providing services to many fortune 500companies in Canada, USA , Mexico and India. Trinity Events focus in multimillion dollar production of "World Class", "High Quality", "Good Value"entertainment events targeting South Asian & Multicultural audience in USAand Canada.

Trinity Events have event partnerships with major local multicultural televisionchannels, Indian television channels, local and international businesses. Ourgoal is to deliver each and every event to exceed our patron's expectation andhelp our event partners exceed their financial and advertisement goals.

"We are committed to providing a memorable unique experience for ourevent patrons, participating artist & business partners"
[/size]

[size=4] “Fast-growing firms face office-space crunch- The Globe & Mail”[/size]

[size=4][size=3][size=3] startswithone00sr3.JPG

Fast-growing firms face office-space crunch[/size][/size][/size]

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அரசியல்வாதி தன்னிடம் அரசியல் தீர்வு உள்ளாதாக கூறுவான்.[/size]

[size=4]பணக்காரன் தன்னிடம் பொருளாதார தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4]மனித உரிமை ஆர்வலன் தன்னிடம் மனித உரிமைக்கான தீர்வு உள்ளதாக கூறுவான்.[/size]

[size=4].....[/size]

[size=4]ஆனால் எமக்கோ உண்மைகள் தெரியும்.[/size]

என்னென்ன உண்மைகள் இத்திரி சம்பந்தமாக உங்களுக்கு தெரியும் என எங்களுடன் பகிர்ந்தால் தானே எங்களுக்கும் என்னென்ன உண்மைகள் உங்களுக்கு தெரியும் என எங்களுக்கு தெரியும். :) :)

[size=4]

Canadian-Tamil-congress-150x140-60x60.jpg[/size]

[size=4]

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் மாவீரர் நாள் சர்ச்சை தொடர்பாக கனேடியத் தமிழ்ர பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு,[/size][size=4]

கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும் பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.[/size][size=4]

இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர் மாதமாககடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.[/size][size=4]

கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம் முழுவதும் நினைவு வாரமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக் கூடாதெனகேட்டுக் கொள்கின்றது.[/size][size=4]

ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கனடா நாட்டின் குடிமக்களாகிய நாம் அதற்கு முரணான அபிப்பிராயங்களை மக்கள் மீது வலிந்து திணிப்பதும் அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதும்மிரட்டும் பாணியில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதும் தங்கள் கருத்துடன் முரண்படுபவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்கள் என்றும் முத்திரை குத்துவதும் அதே ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானது என்று கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.[/size][size=4]

ஆதலால் எம் அன்பான உறவுகளே! இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து எல்லோரினதும் ஜனநாயக உரிமைகளையும் தனிநபர்சுதந்திரத்தையும் மதித்து அனைவரும் நடந்து கொள்ளவேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]குழப்பாதீங்க, முதலில் இதை தெளிவு படுத்துங்க![/size]

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து

[size=3]

சென்னை: இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size][size=3]

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.[/size][size=3]

ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வேறு மாதத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறி வந்தனர்.[/size][size=3]

ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என இளையராஜாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூறினர்.[/size][size=3]

இதற்கிடையில், அமெரிக்காவை புரட்டிப் போட்ட சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கனடாவிலும் தட்பவெப்பம் சாதகமாக இல்லை.[/size][size=3]

இதைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாம். இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.[/size][size=3]

ஆனால் இளையராஜா தரப்பில் இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.[/size][size=3]

http://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraaja-s-canada-concert-cancelled-163910.htmlhttp://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraaja-s-canada-concert-cancelled-163910.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]Toll Free: 1-855-554-4554 [size=4]என்ற இலக்கத்தை அழைத்து நேரடியாக கேட்கலாம். [/size][/size]

[size=5][size=4]http://www.trinityeventsonline.com/[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]குழப்பாதீங்க, முதலில் இதை தெளிவு படுத்துங்க![/size]

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து

[size=3]சென்னை: இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size]

யார் சொன்னார்கள் என்ற எதுவித ஆதாரமுமற்ற செய்தி என்பதால் இது நிச்சயம் வதந்தியாகத்தான் இருக்கவேண்டும்.

எப்பாடுபட்டாவது நிகழ்ச்சியைக் குழப்பவேண்டும் என்று நினைக்கும் ஒருதரப்பு இப்படியான செய்திகளைப் போடச் செய்வது பெரியவேலையா?

பெட்டிசம் போட்டே வளர்ந்த பரம்பரைதானே தமிழர் பரம்பரை.. முந்தி ஒரு பெட்டிசம் கந்தசாமி.. இப்ப இன்னொரு சாமி <_<

[size=5]Toll Free: 1-855-554-4554 [size=4]என்ற இலக்கத்தை அழைத்து நேரடியாக கேட்கலாம். [/size][/size]

[size=5][size=4]http://www.trinityeventsonline.com/[/size][/size]

முக்கியமான முடிவுகள் என்றால் அவர்களது இணையத்தளத்தில் கட்டாயம் வந்திருக்கும். எனவே ரத்து என்பது ஆதாரமற்ற வதந்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

இது வதந்தியா, குழப்புகின்ற வேலையா என்பது வேறு விடயம்.

டிக்கெட் வாங்கிவிட்ட எமக்கு இது கவலை தான். ஏனெனில் செய்தி தமிழக ஊடகத்தில் வந்துள்ளது.

http://tamil.oneindia.in/movies/news/2012/10/ilayaraaja-s-canada-concert-cancelled-163910.html

இதனை தெளிவு படுத்த வேண்டியது நிகழ்ச்சி நடத்துபவர்கள் கடமை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

இது வதந்தியா, குழப்புகின்ற வேலையா என்பது வேறு விடயம்.

டிக்கெட் வாங்கிவிட்ட எமக்கு இது கவலை தான். ஏனெனில் செய்தி தமிழக ஊடகத்தில் வந்துள்ளது.

http://tamil.oneindi...led-163910.html

இதனை தெளிவு படுத்த வேண்டியது நிகழ்ச்சி நடத்துபவர்கள் கடமை.

நீங்கள் கனடாவில் இருப்பவராக இருந்தால் அங்குள்ள தமிழ் ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, இணையத்தளம்) ஒன்றில் இருந்தது என்று சொல்லலாமே. அங்குள்ளவர்கள் எல்லாம் உண்மை/பொய்களை அறிய நம்பகத்தன்மை இல்லாத இந்தியத் தளங்களையா நம்பியிருக்கின்றார்கள்.

டிக்கெட் வாங்கிவிட்ட நீங்கள் கட்டாயம் அகூதா தந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு எது உண்மை/பொய் என்று இங்கு வந்து பதியலாமே.

இங்கிலாந்தில் இருப்பதால் கனடிய இலக்கத்திற்கு நான் தொடர்பு கொள்ளப் போவதில்லை.. என்றாலும் எது பொய் எது உண்மை என்பதைக் காரண காரியங்களை வைத்துப் பகுத்தறியும் புத்தி கொஞ்சம் உள்ளது. அத்தோடு யார் யாருக்கு குழப்பங்களை உருவாக்கவேண்டிய தேவை இருக்கின்றது என்பதும் தெரிகின்றது.

  • தொடங்கியவர்

[size=5]http://ticketmaster.ca/ [/size]

[size=4]இதிலும் வாங்கலாம் என கூறி இருந்தார்கள். இது இயங்கவில்லை :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நானும் இங்கிலாந்திலிருந்து கனடா வந்து உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்ல பல டிக்கெட் வாங்கி வைத்துளேன்.

மிக அதிகமாகக் பணம் செலவழித்த கவலையில் உள்ள என்னை நீங்கள் வேறு மிக அதிகமாக குழப்ப முனைகின்றீர்கள். உங்களால் உதவ முடியாவிடில் விட்டு விடுங்கள். எனக்கு புரியாத அரசியல் பேசுகின்றீர்கள்.

மேலே உள்ள இளையராஜா படங்கள் கனடாவில் இன்று எடுத்த படங்கள் போல் தெரியவில்லை.

எனது கவலை எந்த செய்தி உண்மை என்பது தான்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நானும் இங்கிலாந்திலிருந்து கனடா வந்து உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்ல பல டிக்கெட் வாங்கி வைத்துளேன்.

மிக அதிகமாகக் பணம் செலவழித்த கவலையில் உள்ள என்னை நீங்கள் வேறு மிக அதிகமாக குழப்ப முனைகின்றீர்கள். உங்களால் உதவ முடியாவிடில் விட்டு விடுங்கள். எனக்கு புரியாத அரசியல் பேசுகின்றீர்கள்.

மேலே உள்ள இளையராஜா படங்கள் கனடாவில் இன்று எடுத்த படங்கள் போல் தெரியவில்லை.

எனது கவலை எந்த செய்தி உண்மை என்பது தான்!

நாதமுனி மன்னிக்க.. கனடாவில் இருப்பவர் என்று நினைத்தேன்.

தற்போது இந்த நிகழ்வைக் குழப்ப நினைப்பவர்கள் எதுவும் செய்யத் துணிவார்கள். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் நிகழ்ச்சி நடக்கும் கனடிய ஊடகங்களில் எதுவித அறிவித்தலையும் விடுக்காதவரை இப்படியான செய்திகளை கருத்தில் எடுப்பது நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]அமெரிக்காவை கலக்கிய சாண்டி 'நிலம்" என பெயர்மாறி தமிழகத்தையும் கலக்கியது - இசைஞானி இழையராஜாவின் நிகழ்வும் பிற்போடப்பட்டது! [/size][/size]

[size=4]Rajah-toronto-150news.jpg[/size]

[size=4]கடந்த இரு நாட்களாக அமெரிக்கா கனடாவை உலுக்கிய சாண்டி புயல் தற்போது தமிழகம் மற்றும் ஆந்திர கேரளா பிரதேசங்களை அடுத்து வரும் 48 மணிநேரத்தில் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் விமானப்பறப்புகள் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் ரொறன்ரோவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த இசை நிகழ்வுக்கு இசைஞானி இழையராஜா குழுவினர் வரமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் எமது தமிழக செய்தியாளர் உறுதிசெய்துள்ளார்.[/size] [size=4][/size][size=4] [/size]

[size=4]தமிழகத்திற்க்கு அருகே 240Km தொலைவில் நிலம் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பின்னரான எவ்வேளையிலும் சென்னை, புதுச்சேரிக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும் இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளநிலையில் அடுத்துவரும் இரு நாட்களுக்கு அனைத்து விமானப்பறப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது![/size]

[size=4]விரிவான செய்திகள் தொடரும்..[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=69353&category=TamilNews&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]http://ticketmaster.ca/ [/size]

[size=4]இதிலும் வாங்கலாம் என கூறி இருந்தார்கள். இது இயங்கவில்லை :( [/size]

https://www.ticketmaster.ca/checkout/order?v=Gib6n-1Rl-7SiMcUvkV3L-eJEq9AwoK0vZlSDOJmNgX3CMhmDcuO9Xk_CuMEbahR-Y7AJFtno-43ynzgOwvzQcUeJ9MofExKwlNWmv_CFlsVoc1skSjdE05TqfiGrmPbdg

இயங்குகிறதே !!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி 4இல் இசைஞானி ரொரண்டோ வந்த போது

http://youtu.be/yuoSijtlKnk

  • தொடங்கியவர்

[size=4]

கடந்த இரு நாட்களாக அமெரிக்கா கனடாவை உலுக்கிய சாண்டி புயல் தற்போது தமிழகம் மற்றும் ஆந்திர கேரளா பிரதேசங்களை அடுத்து வரும் 48 மணிநேரத்தில் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் விமானப்பறப்புகள் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் ரொறன்ரோவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த இசை நிகழ்வுக்கு இசைஞானி இழையராஜா குழுவினர் வரமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் எமது தமிழக செய்தியாளர் உறுதிசெய்துள்ளார்.

[/size]

[size=4]அந்தப்புயல் வேறு இந்தப்புயல் வேறு.[/size]

[size=4]ஆனால் இரண்டும் ஒரே நோக்கத்தையே கொண்டவை. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.