Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு புதிய முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...!

சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்கு அல்லது படத்துக்கு ஏற்றவாறு நீங்கள் கவிதை அமைக்க வேண்டும். இதில் சிறந்த கவிதைகளை ஆசிரியர் செல்வமுத்துவும் இரசிகையும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதை ஒரு பேப்பர்இ எரிமலை மற்றும் வேறு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் எரிமலை வெள்ளிவிழா கொண்டாட இருப்பதால் அதிலும் சில கவிதைகள் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தர முன்வந்த செல்லமுத்து அவர்களிற்கும் வேலை பழு மத்தியிலும் உதவ முன் வந்த ரசிகைக்கும் நன்றிகள்

நன்றி

இந்த மாதத்திற்கான் தலைப்பு இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

allai0419kx1ml.jpg

  • Replies 105
  • Views 37.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளின் கனவு

தாய்க்குருவி கண்ட கனவுதான் என்ன???

தந்தைக்குருவி தன்சுகமான சுமையை கண்ட கனவு என்ன??

இளம் குஞ்சும் அப்பாவின் நெஞ்சில் தூங்கிய போது கண்ட கனவுதான் என்ன??

பிஞ்சும் தன் தாயின் பாலை சுவைக்கக் கண்ட கனவுதான் என்ன??

அழகான இந்தக் கூட்டுக்குள் இருந்த குருவிகளின் கனவோ சொல்லில் அடங்காது.

அடங்காது அடங்காது அடங்காது.

குருவிகளின் கனவோ கனவாகிவிட்டது.

குருவிகள் ஆனந்தமாக தம் நித்திரைக்குச் சென்றன

அம்மாக்குருவியும் அப்பாக்குருவியும் தம் இறகுக்குள் நித்திரையாக்கின

ஐயகோ அரக்க மிருகங்கள் அழகான கூட்டை அழித்தது

சிதைத்தது குஞ்சுகளைக் கிழித்தது வதைத்தது

குஞ்சுகளின் கனவுகளோ கனவாகிவிட்டது. இது கனவாகிவிடாதா???

சிங்களதேசதில் தமிழர்களின் குருதி மலிவுவிற்பனையில்?

எட்டப்பர்களும் அதைப்பருகப் போட்டியாம்?

ஸ்ருதி

*************************

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

jananaayakanarapalicopy9ax.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

அந்த படத்துக்கு - என் முயற்சி!

இதோ......

முக்கி முனகி .....

மூச்சடக்கி ....

முதுகெலும்பு நோக

ஒருவரை ஒருவர் சுமந்து வாழ்ந்த .....

அழகான கூட்டின் மீது - அடி அல்ல.

இடி விழுந்து போனது!

இறப்பில் கூட இறுக அணைத்தபடி.......

இருக்கே பார் - இந்த

கொஞ்சி வாழ்ந்த குடும்பம் தலையில் ......

கொள்ளி பிறர் வைத்துபோக விட்டது

என் தவறா - உன் தவறா?

இடு காட்டில் இனி உன் சந்ததி ........

வாழ்வு என்றாகுமோ........

அவருடல் எரிந்த மீதிதான் ......

இனிவரும் உன் வாரிசுக்கு விளையாட்டு.......

பொருள் என்றாகுமோ?

நான்கு மாச குழந்தையின் உடலும்......

குண்டு சிதறல் கிழிக்க பார்த்திருக்கிறாய்..

முட்டாக்கு போட்டு முகம் மறைத்தால்.......

மொட்டைதலைகள் ஆட்சி - உன்னை விடுமா என்ன?

நீயும் செத்துபோக போகிறாய்- உண்மை!!

8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

ஓம் மணிவாசன். பாடலையும் இணையுங்கள். நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

அப்ப அழுங்கோ :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

மேலே இரண்டு கிழமைக்கு ஒருக்கா என்று போட்டுள்ளது. கீழே மாத்த மறந்துட்டன். இப்ப மாற்றியுள்ளேன்.

வணக்கம்,

படத்திற்கான என்னுடைய கவிதையை இத்துடன் இணைக்கிறேன்

பாரே பார்

பாரே உந்தன் இதயம் உள்ள

பக்கம் கையை வைத்துப் பார்

வாயே பேச முடியாக் குழந்தை

பாயில் கிடக்கும் நிலையைப் பார்

அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர்

அல்லற் பட்டு மடிவதைப் பார்

அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி

அலைபவர் துயர முகத்தைப் பார்

பால்மணம் மாறாப் பாலகன் கூடப்

புலியாய் மாறிய புதினம் பார்

பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்

பகுத்து அறிந்து பதில்தரப் பார்

சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ

சினக்கும் மெத்தப் படித்தவர் நீர்

சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ

சிந்தித் தெமக்குப் பதில்தரப் பார்

வன்முறை செய்ய வேண்டாம் என்று

வக்கிர அரசைக் கேட்டுப் பார்

முடியா விட்டால் மூலையில் நின்று

மறவர் படையின் வீரம் பார்

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கு

வணக்கம் சாத்திரி

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

மேற்கோள்:

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

இப்படி இனியும் நாங்க இருக்கவேன்டியதை - தவிர்க்க சொல்லி படம் சொல்லுதோ என்னமோ?

யார் கண்டார் - இந்த முயற்சியும் - புலம்பெயர் தமிழர் பரப்புரையின் ஆரம்பத்துக்கு உதவலாமோ என்னமோ? 8)

அருமையான முயற்சி சாத்திரி. இனி கவிதைப்போட்டியும் தொடங்கியாச்சு. மட்டுநிறுத்தினார்களுடன் சொல்லி முதல் பக்கத்திலே நிற்க கூடியதாக செய்தால் தேடிபிடிக்கும் கஷ்டம் ஏற்படாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 4 பேர்தான் எழுதியுள்ளார்கள்.

திங்களுடன் முதல் சுற்று முடிவடைவதால் இன்னும் கவிதை அனுப்பாதவர்கள் அனுப்பவும்.

அல்லை அழுத கண்ணீர்....

---------------------------

அன்னை முலைப்பால் குருதியாய்

அருவி வெட்டி கடலில் வீழ்ந்ததோ?

அல்லை அழுத கண்ணீர்

கால்வாய் வழிந்து வாசல் நிறைத்ததோ?

காலனுக்கும் கலங்கா காற்று

ஓ வென்று கதறி அழுததோ?

ஓடும் நீராய் உறைந்த கடல்

உதிரத்தால் கழுவிக் கொண்டதோ?

விதிர்த்துப் போன விண்ணகமும்

செங்குழம்பாய் விறைத்துப் போனதோ?

நிஷ்டை கலைந்த புத்தனின் கண்கள்

நிற்காது பெருகிக் கொண்டதோ?

கரைதனை உதைத்துப்போன ஓடைபோல

மனந்தனை உதைத்துப் போனாரோ?

கால்தனை நனைத்துப் போன குருதியைக் கழுவ

கருணையோடு யார் வருவாரோ?

இரவின் சேலையை அவிழ்த்துப் போட

கிழக்கின் சூரியன் வந்தானோ?

இதயத்து வேதனையை அகற்றிப் போட

இறங்கி யார் வருவாரோ?

( அல்லைப் பிட்டியில் இறந்து போன மக்களுக்கு இதய அஞ்சலியுடன் )

-எல்லாள மஹாராஜா-

(என்னை எழுத வேண்டி யாசித்த இரசிகைக்கு யோசனையுடன்....)

அப்படியே கவிதை போட்டிக்கும் ஒரு கவிதை எழுதலாமே??

நட்புடன்

இரசிகை

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::lol::lol:

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

:lol: நன்றி ரசிகை செல்வமுது அத்துடன் சாத்திரிக்கும் மனமார்ந்த நன்றிகள் :lol:

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::D:D

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

வாழ்த்துக்களிற்கு நன்றி மகாராஜா...ஆதிவாசி கையில் வைத்திருந்ததனை அணிய வைத்துவிட்டீர்கள். இனி அவர் ஆட்டம் பார்க்க சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும், :lol:

அது சரி முருகன் எப்போது கள்ளியை மணம் முடித்தார்.. :?: :lol:

பாராட்டுக்கள் கெளரி-

பரிசு பெற்றது - கவிதை மட்டுமில்ல.......

உங்கள் - உணர்வுகளும்தான்! 8)

கௌரிபாலனுக்கு வாழ்த்துக்கள்.

எல்ஸ் கிழவா எங்கே? எப்படி?...

ஆதிவாசியை மாட்டலாம் என்று அலையிறது ஓவராப்போச்சு....

ஆதிவாசியின் குணம் தெரிந்தும் விளையாடுறீர்....!!!!!

டும்..டும்..டும்...

எல்லாளன் கட்டளைப்படி ஆதிவாசியை ஆடவைக்க வந்த

எல்லாளனின் அந்தப்புரத்து அழகிகளை வேர்கட்டி ஆடவிட்டு

au399230.jpg

ஆளை விடுடா சாமி என்று ஓட்டம் எடுக்கும் ஆதிவாசி

நன்றி வர்ணன் ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.