Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு அதிரடிப்படை - சிறை அதிகாரிகள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

welikada%20massacare.jpg

[size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கடைசிக் கைதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

“சனிக்கிழமை அதிகாலை 2 – 3 மணியளவில் கலவரத்தை சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அதையடுத்து கைதிகள் தமது கூண்டுகளுக்குள் சென்றனர்.

அதன்பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் பெயர்ப் பட்டியல் ஒன்றுடன் வந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.

இவ்வாறு வெளியே அழைக்கப்பட்டவர்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.” என்றார் அந்தப் பணியாளர்.

“ஒரு கைதி காலில் வீழ்ந்து தன்னை விட்டு விடும்படி கதறினார்.

ஐயா எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்று அழுதார் அவர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் தமது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அச்சமான சூழல் நிலவுகிறது. இந்தச் சம்பம்பவத்தின் பின்னர் தகவல்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தாம் பயமுறுத்தப்படுவதாக” மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20121118107306[/size]

தமிழர்களுக்கு எதிராக இத்தகைய குற்றங்கள் நடந்த பொழுது சிங்கள மக்கள் அவற்றுக்கு எதிராக போராடியிருந்தால், இன்றைக்கு அந்தத் துப்பாக்கிகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பியிராது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பயங்கரவாதத்திற்கு முடிவு என்பது இல்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது சிங்கள ஊடகங்கள் வாயை மூடி மௌனியாகின. இன்று சிங்கள மக்கள் கொல்லப்படும் போது என்ன செய்யப்போகிறார்கள்?

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர், முஸ்லிம்,சிங்களவர் என்று பாரபட்சம் பாராமல் தொடரும். மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்து எழாதவரை....

தமிழர்களுக்கு எதிராக இத்தகைய குற்றங்கள் நடந்த பொழுது சிங்கள மக்கள் அவற்றுக்கு எதிராக போராடியிருந்தால், இன்றைக்கு அந்தத் துப்பாக்கிகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பியிராது.

சிங்கள வெகுசனத்தின் பிரதிபலிப்பு இந்த படுகொலைகளுக்கு சார்பாகத்தான் இருப்பதை சிங்கள mainstream ஊடகங்களும், blogs களும் கூறுகின்றன. பாதாள உலகக் கோஷ்டிகளை அடக்குவதற்கும் கொலைக் குற்றவாளிகளை இல்லாமல் செய்வதற்கும் இதனை விட சிறந்த செயல் இல்லை என்றே அவர்களது விவாதங்கள் தொடர்கின்றன. தமிழர் அழிப்புக்கு கொடுத்த சிங்கள் வெகுசன ஆதரவை ஒத்த ஆதரவு தான் இங்கும்.

மிக திட்டமிடப்பட்ட கொலைகள் தான் சிறைக்குள் நடந்தவை .

சேகுவேரா (ஜே வி பி ) கலவரத்தில் எத்தனையோ சிங்கள இளைஞர்களை இந்திய உதவியுடன் கொலை செய்தார்கள் .சீனா வின் கை அதில் இருக்கு என்று சந்தேகப்பட்டார்கள்.சிறிமா -இந்திரா மிக நெருக்கமானதும் அதன் பின்னர்தான் .

தமக்கு என்று வரும் போது எந்த அரசும் எந்த அநியாயத்தையும் செய்யும் .பிரேமதாசவும் தாரளமாக சிங்களவர்களை கொன்று தள்ளினார் .

எமக்கு நடந்தது மிக மிக கொடுமை அதை நாங்கள் தான் ஏற்படுத்தி கொடுத்தோம் .

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நடந்தது மிக மிக கொடுமை அதை நாங்கள் தான் ஏற்படுத்தி கொடுத்தோம் .

ஒத்துக்கொள்ளத்தான் வெண்டும்.. :(

Spoiler
புளொட்டைத்தானே சொன்னனீங்கள்..? :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போது வேடிக்கை பார்த்தீர்கள் இப்போது அனுபவிக்கின்றீர்கள் .......... இது தொடக்கம்தான் இத்துடன் நின்றுவிடாது தொடரப்போகின்றது பட்டாத்தான் புரியும்.

தன் இனத்தையே கொலை செய்ய தயாங்காத சிங்களவன் மத்தியில் தமிழர்களின் நிலை மிகவும் கொடுரமானது.

அது மட்டுமல்ல, நமில் சிலருக்கு, நம்மவர்களுக்கு நடந்தை கேள்விப்பட்ட போது வர மறுத அந்த துளிர்க்கண்ணீர், இன்று சிங்களவர்களுக்கு நடந்ததை கேட்டு தாரை தாரையாக ஊறெடுத்துப் பாயுது. மனதை குடையுது. அதை எதிர்த்து இரண்டு வசனம் விசைப்பலகையில் தட்டினால்த்தான் விறுவிறுப்பு குறையும்.

எந்த திரியிலும், சிறையில் உள்ள நம்மவர்கள் வதை பட்டு கோமா மயக்கமாகி இறந்த போது தன்னும், "இலங்கை அரசு ஈழத்தமிழர்களை கொன்றார்கள் என்று ஒரு வசனம் எழுதி இல்லையே!

மனித உடம்புகள் படும் இந்த வேதனைகளை வைத்து வியாபாரம். உணர்வில்லாத மரக்கட்டைகளின் கும்பல்லை கோவிந்தா கோசம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.