Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் தோல்வி

Featured Replies

காதல் என்பது

இனிய சுவாசம்

என்றாயே

பெண்ணே

உயிரும் உயிரும்

கலப்பதுதான் காதல்

என்று சொன்னாயே

பெண்ணே

நான் தான்

உன்னுடய முதல்

கவிதை என்றாயே

பெண்ணே

பொய்கள் உனக்கு

பிடிக்காது என்று

சொன்னாயே

பெண்ணே

என்னை வெறுப்பதாக

ஏன் பொய்

பேசுகின்றாய்

பெண்ணே

முற்களாக ஏன்

என்னை

குத்துகின்றாய்

பெண்ணே

உன் சொற்களாலே

ஏன் என்னை

கொல்கின்றாய்

பெண்ணே

உன் கண்களாலே

ஏன் என்னை

எரிக்கின்றாய்

பெண்ணே

நான் இங்கு மரித்து

விடுகிறேன் உன்

கைகளால் விசம்

கொடு பெண்ணே

ஆகா வந்தவுடனேயே பல கவிதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எல்லாவற்றுக்கும் இதிலே வாழ்த்துக்கள் சொல்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள்.

வந்த உடனே கவிதை மழை பொழிகிறது. பாராட்டுக்கள்

ஆனால் என்ன கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னீர்கள் என்றால் கருத்துச் சொல்ல வசதியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

ரமா நன்றி :lol: . இரசிகை உங்கள் கருத்துக்கு நன்றி :lol: உண்மைதான் :roll:

என்னை வெறுப்பதாக

முற்களாக

குத்துகின்றாய்

உன் சொற்களாலே

கொல்கின்றாய்

உன் கண்களாலே

எரிக்கின்றாய்

நான் மரித்து

விடுகிறேன் உன்

கைகளால் விசம்

கொடு

- இதற்குப் பிறகும் விசம் குடிக்கும் அளவு உயிருடன் இருக்கும் தைரிய சாலிதான் :lol::lol::lol: நீங்கள்....

-தொடர்ந்து எழுதுங்கள்.........

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் தோல்வி உங்களுக்குமா? பாவம்! அதுதான் கவிதை மழையாக களத்திலே கொட்டுகிறதோ?

விசம் இப்போது குடிக்கவேண்டாம். பல கவிதைகள் எழுதி முடிந்தபின்னர் விரும்பினால் குடியுங்கள்.

ரமா :lol: , இரசிகை :lol: , எல்லாளன் :lol: , நான் :lol:

இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு கற்பனை அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

மாகாராஜா அவசரப்படகூடாது அதுதான் கொஞ்சம் தைரியமாக இருக்கிறேன். திரு செல்வமுத்து உங்கள் கருத்துக்கு நன்றி.

காதல்

இல்லாமல்

வாழ்க்கையும்

இல்லை

மரணம்

இல்லாமல்

உயிரினம்

இல்லை

காதல்

இல்லாமல்

இதயமும்

இல்லை

சோகம்

இல்லாமல்

வாழ்க்கையும்

இல்லை

எதிர்ப்பு

இல்லாமல்

காதலும்

இல்லை

எதிர் நீச்சல்

போடாமல்

முன்னேற்றம்

இல்லை

ரனம்

இல்லாமல்

காதலும்

இல்லை

அலைகள்

இல்லாமல்

கடலும்

இல்லை

திருமணத்தில்

முடியாத காதல்

உண்மையான

காதலும் இல்லை

அது எப்படி சொல்லுறீங்கள் திருமணத்தில் முடியாதது எல்லாம் உண்மைக்காதல் இல்லை எண்டு ?? :evil: :evil: :evil:

காதல் எண்டால் என்னா? இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல். காதல் என்றால் நிச்சயம் புரிந்துணர்வு இருக்கும். சோ அவர்கள் சூழ்நிலையாலும் பிரிந்து (திருமணம் செய்யாமல்) இருக்கலாம் தானே?? :oops: :oops:

காதல் என்பது பெறுதல் அல்ல கொடுத்தல் கடசி துளி வரை கொடுத்தல் :roll: :roll:

அது எப்படி சொல்லுறீங்கள் திருமணத்தில் முடியாதது எல்லாம் உண்மைக்காதல் இல்லை எண்டு ?? :evil: :evil: :evil:

காதல் எண்டால் என்னா? இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல். காதல் என்றால் நிச்சயம் புரிந்துணர்வு இருக்கும். சோ அவர்கள் சூழ்நிலையாலும் பிரிந்து (திருமணம் செய்யாமல்) இருக்கலாம் தானே?? :oops: :oops:

காதல் என்பது பெறுதல் அல்ல கொடுத்தல் கடசி துளி வரை கொடுத்தல்

:roll: :roll: :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

இரசிகை நல்ல கேள்ளி பாராட்டுக்கள் :lol:

என்னுடய சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தகவிதை. காதல் என்பது புனிதமானது, தெய்வீகமானது என்று சொல்வார்கள். இந்தக்கலியுக காலத்தில் காதல் செய்யும் எல்லோரும் புனிதர்களா? காதல் செய்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிவது காதலின் வெற்றியா? அந்த காதல் உணர்வுகளை சாகடிப்பது உண்மையான காதலுக்கு அழகா? காதல் செய்யும் போது இருக்கின்ற துணிவு ஏன் திருமணம் என்கின்றபோது வருவது இல்லை. தமிழ் பண்பாட்டை மதிப்பவன் என்கின்ற கருத்திலும் காதல் என்கின்ற பெயரில் யாரும் ஏமாற்றப்படக்கூடாது என்கின்ற என் உணர்வை வெளிப்படுத்துவதற்காகத்தான் நான் அப்படிக்கூறினேன்.தவறுகள் இருப்பின் மண்ணிக்கவும்

  • தொடங்கியவர்

வணக்கம் நாரதர். உங்கள் கருத்துக்கு நன்றி.

பெண்ணுக்கு

பாதுகாப்புதான்

தாலி

காதலுக்கு

வேண்டாமா

திருமணம்

என்கின்றவேலி?

இலக்கியன் நீங்கள் உங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள் அதில் தப்பில்லையே அதற்கு ஏன் மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம். இந்தக் கலியுக காலத்தில் காதல் செய்பவர்கள் எல்லோரும் புனிதர்கள் இல்லைத் தான். பிரிந்து இருந்தாலும் அந்த இரு உள்ளங்களுக்கிடையே புரிதல் இருந்தது என்றால் நிச்சஜமாக அது உண்மைக்காதல் தான் இலக்கியன். உண்மைக்காதல் என்பது கட்டாயம் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்பதில்லை என்பது எனது கருத்து மட்டுமே. நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் சில பேர் காதலை சாக்கடை ஆக்குகிறார்கள் தான் இல்லை என்று கூறவில்லை இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் உண்மைக்காதல் என்பது திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெண்ணுக்கு

பாதுகாப்புதான்

தாலி

காதலுக்கு

வேண்டாமா

திருமணம்

என்கின்றவேலி?

காதலுக்கு எதற்கு வேலி?? :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

:roll: :roll: :roll: :roll: :roll:

அண்ணாச்சி என்ன முழுசல். :oops: :oops:

ஏதும் தப்பா சொல்லிட்டனோ? :roll: :roll:

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

இன்றய காதல் அலைபாயும் காதல் அதுதான் வேலிபோட சொன்னேன்

:lol:

இதயமும்

இதயமும்

கலந்தவர்கள்

தங்களை

தாங்களே

புரிந்து கொண்டவர்கள்

ஏன் திருமணம்

என்கின்ற பந்தத்தில்

ஏன்சேரக்கூடாது

காதலுக்கு

ஏன் அர்த்தம்

கொடுக்க கூடாது

காதலுக்கு

ஏன் வாழ்க்கை

கொடுக்கக்கூடாது

காதல் என்பது

காலத்தின்

கோலத்தால் கலைவதா

அயலவனின்

வசைபாடலால்

பிரிவதா

காதலனை

நினைத்து

ஏங்குவதுதான் காதலா?

அண்ணாச்சி என்ன முழுசல். :oops: :oops:

ஏதும் தப்பா சொல்லிட்டனோ? :roll: :roll:

அதென்ன கொடுத்தல் கடைசி வரை கொடுத்தல்?

கொடுத்தா வாங்கிக் கொண்டிருப்பினம், வாங்கிறவையும் கொடுக்கத் தானே வேணும்?

அதென்ன ஒராள் கொடுத்துக் கொண்டிருக்க இன்னொரு ஆள் வாங்கிக் கொண்டிருந்தா ,அதில் எங்க சமத்துவம்.

சமத்துவம் இல்லாத எதுவுமே நியாயமனாது இல்லைத் தானே? அப்ப காதால் என்று நீங்க சொல்லுறது நியாயமானதா? ஒருத்தர் இன்னொருவரைப் பாவிப்பது ஆகாதா?

காதல் என்பதே பம்மாத்து, அதுக்கு பல வரைவிலக்கணங்கள் வேற.

என்னைப் பொறுத்தவரை இரண்டு மனிதர்களின் அன்னியோன்யமான, சமத்துவமானா உறவு நிலை என்று சொல்லலாம்.இதில சமத்துவமும்,உண்மையும் இல்லாட்டி அது பம்மாத்து, பொழுதுபோக்கு. :idea:

மேலும் அன்னியமான ,சமத்துவமான அந்த உறவு நிலயை ,அனைவரும் அறியும் வண்ணம், சட்டரீதியாக அறிவிப்பதே திருமணம்.இது ஒருவகையில் அந்தக் காதலுக்கான , சமுதாயா அங்கீகாரம்.குடும்பம் என்ற சமூக அலகை அடிப்படையாக வைத்து குழந்தைகள் ,உறவினர் என்று அன்னியோன்யமான உறவு நிலை மேலும் வளர்கிறது, இவை எல்லாம் காதல் என்கின்ற உறவு நிலையின் புற வெளிப்பாடுகளே.

ஆகவே காதலிக்க துணிந்தவன் அது உண்மையான காதல் என்றால் சமுதாய அங்கீகாரத்தை , குடும்பம் என்ற பாதுகாப்பை அந்தக் காதல் உறவுக்கு வழங்க வேண்டும்.அது இல்லாமா சும்மா காதல் எண்டா அது பம்மாத்துத் தானே? இப்படியான காதால் வாங்குமே ஒழிய ஒண்டையும் திருப்பிக் குடுக்காது, அது சமத்துவம் இல்லாத , மிகவும் பலவீனமான உறவு நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைக் காதல் எல்லாமே திருமணத்தில் முடிவதில்லை. இரசிகையின் கருத்துகளை நான் ஆமோதிக்கின்றேன். பலருடைய காதல் தோல்வியிலே முடிந்திருக்கின்றன. தமிழிலே அம்பிகாபதி - அமராவதி காதலே இதற்கு ஓர் உதாரணம். இவர்கள் உண்மைக் காதலர்கள் இல்லையா?

இலக்கியன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எல்லோருடைய காதலும் திருமணத்தில் முடிந்தால் எனக்கும் சந்தேசம்தான், விடுவார்களா?

உண்மைக் காதல் எல்லாமே திருமணத்தில் முடிவதில்லை. இரசிகையின் கருத்துகளை நான் ஆமோதிக்கின்றேன். பலருடைய காதல் தோல்வியிலே முடிந்திருக்கின்றன. தமிழிலே அம்பிகாபதி - அமராவதி காதலே இதற்கு ஓர் உதாரணம். இவர்கள் உண்மைக் காதலர்கள் இல்லையா?

இலக்கியன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எல்லோருடைய காதலும் திருமணத்தில் முடிந்தால் எனக்கும் சந்தேசம்தான், விடுவார்களா?

ஆமாம் நண்பர் செல்வமுத்து நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்..... உண்மையில் எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லைதான்.......சில காதல் சமூகத்தின் கட்டுப்பாடால்( சாதி மதம் ) பிரிகின்றது...சில காதல் காலத்தின் நியதியால் பிரிகின்றது.....எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை இவை நான் கண்ட அனுபவங்களும் சில சோ இப்படியான ஒரு கட்டத்தை கண்டும் கடந்தும் வந்துள்ளேன்

" ஈருடல் ஓருயிர் " இது தான் உண்மைக் காதலர்

ஆனால் எல்லேரும் அப்படி இல்லை ......

காதல்

இல்லாமல்

இதயமும்

இல்லை

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க காதல் இல்லாமல் இதயம் இல்லையா :roll:

இதயம் இல்லாட்டி மனிதனே இல்லை. காதலிக்கிறத்துக்கு முதல்ல மனிதன் இருக்கணும் (இதில மனிதர்களை மட்டுமே பேசுறீங்க எண்டு நினைக்கிறன் :wink: ) மனிதர் இருக்கிறத்துக்கு இதயம் இருக்கோணும். இதயம் இருந்தாப் பிறகு தான் காதல் எண்டததே உருவாகும். அப்ப எப்பிடி காதல் இல்லாமல் இதயம் இல்லை எண்டு சொல்லலாம். :roll: :wink:

  • தொடங்கியவர்

காதல் இல்லாத இதயமும் இல்லை என்றுவரவேண்டும் தவறை சுட்டிகாடிய அருவிக்கு பாரட்டுக்கள் :lol:

  • தொடங்கியவர்

ஆமாம் நண்பர் செல்வமுத்து நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்..... உண்மையில் எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லைதான்.......சில காதல் சமூகத்தின் கட்டுப்பாடால்( சாதி மதம் ) பிரிகின்றது...சில காதல் காலத்தின் நியதியால் பிரிகின்றது.....எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை இவை நான் கண்ட அனுபவங்களும் சில சோ இப்படியான ஒரு கட்டத்தை கண்டும் கடந்தும் வந்துள்ளேன்

" ஈருடல் ஓருயிர் " இது தான் உண்மைக் காதலர்

ஆனால் எல்லேரும் அப்படி இல்லை ......

உண்மையான காதலாக இருந்தால் ஏன் இருவரும் திருமணம் என்கின்ற பந்தத்தில் சேருவது இல்லை. இந்த ச்முகக்கட்டுபாடுகள் தெரிந்துதானே காதலிகிறார்கள். என்னைப்பொறுத்தவரை ஆணிலே அல்லது பெண்ணிலோ உள்ள காதல் பலவீனம்தான் காதல் முறிவதுக்கு காரணம். இங்கு சிலர் கூறுகின்றார்கள் காதல் செய்து பிரிந்தவர்கள் பின்னர் வருந்துவதாக. அது கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது. அவளுடன் வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்ந்து இருந்தால் சந்தோசமாக வாழ்ந்து இருக்கலாம் என்ற அற்ப ஆசைதான் அது. என்னுடய கருத்து காதலின் வெற்றி தான் திருமணம். திருமணம் என்கின்ற அந்தஸ்து பெறாதவை காதலே இல்லை உண்மையான காதல் அல்ல

காதலின் வெற்றி என்பது இரண்டு மனங்களின் சங்கமம் என்றால் அது எப்பவும் வெற்றி பெற்ற படிதான் உள்ளது. காதலின் வெற்றி என்பது மனங்களையும் தாண்டி மனிதர்களின் சங்கமம் (நான் நீ என்ற வேறுபாடில்லாத நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்) எனும் போதே சந்தர்ப்பவாதிகள் மனங்களையும் மரிக்கவிட்டு விடுகின்றனர். அவர்கள்தான் காதல் துரோகிகள்..! :P :idea:

எனக்கு கவிதை எழுதவராது என்ற பொறாமையாகவும் இருக்கலாம், இருந்தாலும் ஒரு சந்தேகம் :?

உலகத்திலோயே கவிதை எழுதி பொழுதைப் போக்காட்டும் முன்னணி இனமாக தமிழ் இனம் இருக்கக்கூடுமா? இணையத்தில் சினிமா குப்பைகளுக்கு அடுத்த நிலையை ஆக்கிரமிப்பது கவிதைகள். பத்திரிகை சஞ்சிகைகளிலும் கிட்டத்தட்ட அந்த நிலைதான்.

பால் வயது வேறுபாடின்றி இது காணப்படுகிறது. வேறு இனங்களில் இந்தளவிற்கு கவனித்திருக்கிறீர்களா?

தமிழ்மொழியின் தனித்துவமான சொல் இலக்கண இலக்கிய வளம் தான் இதற்கு காரணமா இல்லை வேறு எதாவது? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.