Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதுவும் நடக்கவில்லை...! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

எங்கேயோ கேட்கிறது
அந்த முனகற் சந்தம்!
காரிருள் கவ்விய பொழுதில்...
ஈருடல் தழுவிய நிலையாய்...
யாருமறியாமல் நடக்கிறது கதகளி!
 

கையில் அகப்பட்டதையெல்லாம்
அள்ளியெடுக்கிறான் திருடன்!
மெய்யில் வசப்பட்டதையெல்லாம்
அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!
கன்னக்கோல் கன்னம் வைக்க
எண்ணம்போல் கன்னம் சொக்க,
கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!
கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!
 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்
எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,
சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!
தறிகெட்டுப்போன மனதுக்கும்
வெறி முற்றிப்போன உடலுக்கும்
விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...
பசியோடு காத்திருந்த பாலகன்போல்
மேலாடை விலக்கி அடம்பிடித்து,
கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!

 

 

வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட
நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து
தேன்குடிக்கிறது வண்டு!
உஷ்ணக் காற்றில்...
மூச்சிரைத்து மின்னுகின்றது,
மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே
விரிந்து கிடக்கும் புல்வெளியை
சத்தமின்றி நனைக்கின்றன...
மழைச்சாரல் துளிகள்!
தொடர்ந்து பெய்த மழையில்...
நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!

 

சத்தமாய்த் தொடங்கி...
சந்தமாய் நகர்ந்து...
மொத்தமும் அடங்க,
வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..
துகிலணிந்த உருவங்கள்!

 

எதுவுமே நடக்கவில்லையென,
வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...
காரிருள்!!!

Edited by கவிதை

எங்கேயோ கேட்கிறது

அந்த முனகற் சந்தம்!

காரிருள் கவ்விய பொழுதில்...

ஈருடல் தழுவிய நிலையாய்...

யாருமறியாமல் நடக்கிறது கதகளி!

 

கையில் அகப்பட்டதையெல்லாம்

அள்ளியெடுக்கிறான் திருடன்!

மெய்யில் வசப்பட்டதையெல்லாம்

அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!

கன்னக்கோல் கன்னம் வைக்க

எண்ணம்போல் கன்னம் சொக்க,

கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!

கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!

 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்

எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,

சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!

தறிகெட்டுப்போன மனதுக்கும்

வெறி முற்றிப்போன உடலுக்கும்

விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...

பசியோடு காத்திருந்த பாலகன்போல்

மேலாடை விலக்கி அடம்பிடித்து,

கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!

 

 

வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட

நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து

தேன்குடிக்கிறது வண்டு!

உஷ்ணக் காற்றில்...

மூச்சிரைத்து மின்னுகின்றது,

மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே

விரிந்து கிடக்கும் புல்வெளியை

சத்தமின்றி நனைக்கின்றன...

மழைச்சாரல் துளிகள்!

தொடர்ந்து பெய்த மழையில்...

நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!

 

சத்தமாய்த் தொடங்கி...

சந்தமாய் நகர்ந்து...

மொத்தமும் அடங்க,

வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..

துகிலணிந்த உருவங்கள்!

 

எதுவுமே நடக்கவில்லையென,

வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...

காரிருள்!!!

 

 

கலவை நன்றாகத்தான் உள்ளது , கவிதையில் :lol:  . வாழ்த்துக்கள் காமராசன் :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை விவரித்த விதம் அழகு.. என்றோ ஒருநாள் ஊரில் சென்று இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்போம் எனும் நம்பிக்கை உள்ளது.. :D

இயற்கையை விவரித்த விதம் அழகு.. என்றோ ஒருநாள் ஊரில் சென்று இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்போம் எனும் நம்பிக்கை உள்ளது.. :D

 

ஏன்ராசா உங்கை இந்த இயற்கையளை ரசிக்கேலாதோ :o :o :lol: :lol: ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஏன்ராசா உங்கை இந்த இயற்கையளை ரசிக்கேலாதோ :o :o :lol: :lol: ??

 

மனிசிக்காரி ஊரிலை போலை கிடக்கு? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை இயற்கையை வர்ணித்துத்தானே எழுதியிருக்கு? :unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சத்தமாய்த் தொடங்கி...

சந்தமாய் நகர்ந்து...

மொத்தமும் அடங்க,

வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..

துகிலணிந்த உருவங்கள்!

ம்ம்!!

face-surprise.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கேயோ கேட்கிறது

அந்த முனகற் சந்தம்!

காரிருள் கவ்விய பொழுதில்...

ஈருடல் தழுவிய நிலையாய்...

யாருமறியாமல் நடக்கிறது கதகளி!

 

கையில் அகப்பட்டதையெல்லாம்

அள்ளியெடுக்கிறான் திருடன்!

மெய்யில் வசப்பட்டதையெல்லாம்

அள்ளிக்கொடுக்கிறாள் திருடி!

கன்னக்கோல் கன்னம் வைக்க

எண்ணம்போல் கன்னம் சொக்க,

கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது!

கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது!

 

பின்னிப் பிணைந்த அரவங்கள் போல்

எண்ணித் துணியும் அவயவங்களுக்குள்,

சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்!

தறிகெட்டுப்போன மனதுக்கும்

வெறி முற்றிப்போன உடலுக்கும்

விடை கொடுக்கின்றன துகிலங்கள்!

பாலாடை நீக்கி பால்பருக...

பசியோடு காத்திருந்த பாலகன்போல்

மேலாடை விலக்கி அடம்பிடித்து,

கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்!

 

 

வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட

நட்சத்திரப் பூக்களில் உட்கார்ந்து

தேன்குடிக்கிறது வண்டு!

உஷ்ணக் காற்றில்...

மூச்சிரைத்து மின்னுகின்றது,

மூக்குத்தி நட்சத்திரம்!

பிரிந்து நிற்கும் காற்கொலுசுகளின் நடுவே

விரிந்து கிடக்கும் புல்வெளியை

சத்தமின்றி நனைக்கின்றன...

மழைச்சாரல் துளிகள்!

தொடர்ந்து பெய்த மழையில்...

நிரம்பி வழிகின்றன இடை வெளிகள்!

 

சத்தமாய்த் தொடங்கி...

சந்தமாய் நகர்ந்து...

மொத்தமும் அடங்க,

வெளிச்சத்தை நோக்கி நகர்கின்றன..

துகிலணிந்த உருவங்கள்!

 

எதுவுமே நடக்கவில்லையென,

வெளிச்சத்தின் மேல் சத்தியம் செய்கிறது...

காரிருள்!!!

 

கள்ளவேலி பாய்ந்த கடுவனின் அகோரப்பசி இது.....

எங்கேயோதானே கேட்கிறது ?????????????

 

யாருக்காசும் விளங்கியதா ?ஒளிச்சிருந்திருக்கிறான் போல ...............

 

  • தொடங்கியவர்

சில வேளைகளில்  இப்படியான காமரசம் ததும்பும் கவிதைகளை எழுத மனது உந்தும்.

அப்படியான தருணங்களில் எழுதுவதுதான் இப்படியான கவிதைகள்.

இவை 'விரசம்' என்ற எல்லையைத் தொட்டுவிடக் கூடாது என்பதில் கவனமெடுப்பேன். அதனை நீங்கள்தான் கூறவேண்டும்.
தங்களின் இரசனைக்கு உகந்ததாக இதுவும் இருந்திருக்கும் என நம்புகின்றேன்.

 

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள் பல. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இன்னும் வயசு வரலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனக்கு இன்னும் வயசு வரலை.

 

எதுக்கு இன்னும் வயசு வரலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.