Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ttn தொலைக்காட்சி கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

new%20ttn.JPGttn இணைய வலைத் தொலைக்காட்சி தற்போது அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் உள்ளதாகவும், அடுத்த கட்டமாக அதன் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்குடன் மக்களின் படைப்புக்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இளம் தொலைக்காட்சி கலைஞர்களை இனங்காணவும் அவர்களை வளர்த்தெடுக்கவும் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர்.

இணைய விரும்புவோர் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்

 

ttn%20camping.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்படவேண்டிய விடயம். இப்படியான பட்டறைகள் ஆர்வமுள்ளவர்களையும் நமக்குள் இருக்கும் தேர்ந்த கலைஞர்களையும் பொது வெளிக்குக் கொண்டு வரும். சிபார்சுகளாலும் வேண்டப்பட்டவர்களுக்குமாக மட்டுப்படுத்தப்படும் கலைக்கூடங்களில் பணியாற்றும் கலைஞர்களால் மக்களை ஈர்க்க முடியாது. நல்ல முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அறிவித்தல் மட்டும் பொதுமையாக இல்லாமல் செயல்வடிவங்களும் விரிவடைவதன் மூலம் ஆரோக்கியமான கலகலப்பான நம்மவர் தொலைக்காட்சியும் முத்திரை பதிக்கும். கனடாவிலும் 1-2-இப்போது மூன்றாவதும் முளை விட்டிருக்கிறது. விளம்பரங்களில் பெருந்தொகையான பொருளாதாரத்தைக்குவிக்கும் அதே நேரம் எம்முடைய கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சித் தயாரிப்புகள் அமைவதில்லை ஒரு வேளை அந்தக்கலைஞர்களுக்கு சனரஞ்சகமாக படைப்புகளை உருவாக்கத் தெரியாதோ என்னவோ.... என் வீட்டில் நம்மவரின் இரண்டு தொலைக்காட்சி சேவைகளும் உண்டு.... யாழில் மினக்கெடும் நேரத்தில் பத்துவீதம் கூட அந்தத் தொலைக்காட்சிகளைப் பார்க்கமுடிவதில்லை. நம்மவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவர்களுடைய சனல்கள் பிரத்தியேக பணம் கொடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்காத நிகழ்வுக்காக மாதாந்தம் ஒவ்வொரு சனலுக்கும் 25 டொலர்கள் வரையிலாக பணம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு தொலைக்காட்சிக்கும் என்னுடைய ஒருநாள் ஊதியத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கப்படுகிறது. என்னைப்போல் அங்கலாய்க்க இடம் விடாமல் ரிரிஎன் தரமான சுவார்சியமான நிகழ்வுகளை தயாரித்து மக்கள் மனங்களைக் கவர வாழ்த்துகள் :rolleyes:

அன்றொருநாள் நான் திண்ணையில் கூறியது போல் ...............இந்த பட்டறைக்கு எம் கள உறவு சுபேசும் .சுண்டலும் ,காதலும் [துளசி] போக வேண்டும் ....இவர்களுக்கு அந்த திறமை உண்டு .............முயரற்சியுங்கள் .சகோதர சகோதரிகளே ................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
வரவேற்கப்படவேண்டிய விடயம். இப்படியான பட்டறைகள் ஆர்வமுள்ளவர்களையும் நமக்குள் இருக்கும் தேர்ந்த கலைஞர்களையும் பொது வெளிக்குக் கொண்டு வரும். சிபார்சுகளாலும் வேண்டப்பட்டவர்களுக்குமாக மட்டுப்படுத்தப்படும் கலைக்கூடங்களில் பணியாற்றும் கலைஞர்களால் மக்களை ஈர்க்க முடியாது. நல்ல முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அறிவித்தல் மட்டும் பொதுமையாக இல்லாமல் செயல்வடிவங்களும் விரிவடைவதன் மூலம் ஆரோக்கியமான கலகலப்பான நம்மவர் தொலைக்காட்சியும் முத்திரை பதிக்கும். கனடாவிலும் 1-2-இப்போது மூன்றாவதும் முளை விட்டிருக்கிறது. விளம்பரங்களில் பெருந்தொகையான பொருளாதாரத்தைக்குவிக்கும் அதே நேரம் எம்முடைய கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சித் தயாரிப்புகள் அமைவதில்லை ஒரு வேளை அந்தக்கலைஞர்களுக்கு சனரஞ்சகமாக படைப்புகளை உருவாக்கத் தெரியாதோ என்னவோ.... என் வீட்டில் நம்மவரின் இரண்டு தொலைக்காட்சி சேவைகளும் உண்டு.... யாழில் மினக்கெடும் நேரத்தில் பத்துவீதம் கூட அந்தத் தொலைக்காட்சிகளைப் பார்க்கமுடிவதில்லை. நம்மவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவர்களுடைய சனல்கள் பிரத்தியேக பணம் கொடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்காத நிகழ்வுக்காக மாதாந்தம் ஒவ்வொரு சனலுக்கும் 25 டொலர்கள் வரையிலாக பணம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு தொலைக்காட்சிக்கும் என்னுடைய ஒருநாள் ஊதியத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கப்படுகிறது. என்னைப்போல் அங்கலாய்க்க இடம் விடாமல் ரிரிஎன் தரமான சுவார்சியமான நிகழ்வுகளை தயாரித்து மக்கள் மனங்களைக் கவர வாழ்த்துகள் :rolleyes:

 

நல்லதொரு கருத்து  ஊக்குவிப்பு

 

நநன்றி சகாரா

அத்துடன் ஊடகங்களை ஊக்குவிக்கணும் எமக்கு ஊடகங்கள் தேவை  என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு

வரவேற்கப்படவேண்டிய விடயம். இப்படியான பட்டறைகள் ஆர்வமுள்ளவர்களையும் நமக்குள் இருக்கும் தேர்ந்த கலைஞர்களையும் பொது வெளிக்குக் கொண்டு வரும். சிபார்சுகளாலும் வேண்டப்பட்டவர்களுக்குமாக மட்டுப்படுத்தப்படும் கலைக்கூடங்களில் பணியாற்றும் கலைஞர்களால் மக்களை ஈர்க்க முடியாது. நல்ல முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அறிவித்தல் மட்டும் பொதுமையாக இல்லாமல் செயல்வடிவங்களும் விரிவடைவதன் மூலம் ஆரோக்கியமான கலகலப்பான நம்மவர் தொலைக்காட்சியும் முத்திரை பதிக்கும். கனடாவிலும் 1-2-இப்போது மூன்றாவதும் முளை விட்டிருக்கிறது. விளம்பரங்களில் பெருந்தொகையான பொருளாதாரத்தைக்குவிக்கும் அதே நேரம் எம்முடைய கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சித் தயாரிப்புகள் அமைவதில்லை ஒரு வேளை அந்தக்கலைஞர்களுக்கு சனரஞ்சகமாக படைப்புகளை உருவாக்கத் தெரியாதோ என்னவோ.... என் வீட்டில் நம்மவரின் இரண்டு தொலைக்காட்சி சேவைகளும் உண்டு.... யாழில் மினக்கெடும் நேரத்தில் பத்துவீதம் கூட அந்தத் தொலைக்காட்சிகளைப் பார்க்கமுடிவதில்லை. நம்மவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக எங்கள் வீட்டில் அவர்களுடைய சனல்கள் பிரத்தியேக பணம் கொடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்காத நிகழ்வுக்காக மாதாந்தம் ஒவ்வொரு சனலுக்கும் 25 டொலர்கள் வரையிலாக பணம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு தொலைக்காட்சிக்கும் என்னுடைய ஒருநாள் ஊதியத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கப்படுகிறது. என்னைப்போல் அங்கலாய்க்க இடம் விடாமல் ரிரிஎன் தரமான சுவார்சியமான நிகழ்வுகளை தயாரித்து மக்கள் மனங்களைக் கவர வாழ்த்துகள் :rolleyes:

 

உண்மை அக்கா எம் கலைஞர்களின் திறைமைகள் எமது தொலைக்காட்சிகளில் பிரதிபலிப்பது குறைவு ......அது அந்த நிலைமை மாற வேண்டும் ............பல கட்டங்கள் பல கோணங்களில் மாறவேண்டும் .மாற்றப்படவேண்டும் ............சேர்ந்து பயணிப்போம் .......அந்த நிலை உருவாகும் வரை .........

மிகவும் நல்லதொரு விடயம். எமது கலைஞர்களின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவி நிற்க வேண்டும்.

 

அன்றொருநாள் நான் திண்ணையில் கூறியது போல் ...............இந்த பட்டறைக்கு எம் கள உறவு சுபேசும் .சுண்டலும் ,காதலும் [துளசி] போக வேண்டும் ....இவர்களுக்கு அந்த திறமை உண்டு .............முயரற்சியுங்கள் .சகோதர சகோதரிகளே ................

சுண்டல் அண்ணா மற்றும் சுபேஸ் அண்ணா ஆகியோர் பொருத்தமானவர்கள். அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால் இது பிரான்சில் நடைபெறுவதால் சுபேஸ் அண்ணா கலந்து கொள்ளலாம். அவருக்கு ஆர்வம் உள்ளதோ தெரியவில்லை. நேரம் இருக்குமோ என்றும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி துளசியும் கலந்து கொள்ளலாமே

அதே மாதிரி துளசியும் கலந்து கொள்ளலாமே

 

யாழ்கள உறவுகளை சாகடிச்சது, சாகடிச்சுக்கொண்டிருக்கிறது பத்தாதென்று ஒட்டுமொத்த உலக தமிழர்களையும் சாகடிக்க வேணுமா மச்சி? :D

 

தவிர இதற்கெல்லாம் தனி திறமை வேண்டும். எனக்கு திறமை இல்லை என்ற விடயம் மிக அதிகளவில் தெரிந்த யாழ்கள உறவு நீங்கள் தான். பிறகு இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?  :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்றொருநாள் நான் திண்ணையில் கூறியது போல் ...............இந்த பட்டறைக்கு எம் கள உறவு சுபேசும் .சுண்டலும் ,காதலும் [துளசி] போக வேண்டும் ....இவர்களுக்கு அந்த திறமை உண்டு .............முயரற்சியுங்கள் .சகோதர சகோதரிகளே ................

விசுகும், சாத்திரியும்... இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ்கள உறவுகளை சாகடிச்சது, சாகடிச்சுக்கொண்டிருக்கிறது பத்தாதென்று ஒட்டுமொத்த உலக தமிழர்களையும் சாகடிக்க வேணுமா மச்சி? :D

 

தவிர இதற்கெல்லாம் தனி திறமை வேண்டும். எனக்கு திறமை இல்லை என்ற விடயம் மிக அதிகளவில் தெரிந்த யாழ்கள உறவு நீங்கள் தான். பிறகு இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?  :D

 

என் அடிமனதில் சிறியதொரு நிம்மதி... வாழ்க வையகம்...இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க..... :lol:  :D

என் அடிமனதில் சிறியதொரு நிம்மதி... வாழ்க வையகம்...இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க..... :lol:  :D

 

பயப்படாதீர்கள். இப்படிப்பட்ட விடயங்களில் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே உங்களுக்கு நிம்மதி தான் கு.சா தாத்தா :D

இந்தttn நந்தகோபன் மேத்தா கூட்டால் இயக்கப்படுகிறது
 
*நந்தகோபன் கருணாவால் அனுப்பபட்ட ஒருவர்.
*நந்தகோபனுடன் ஒன்றாக நாட்டைவிட்டு வெளியேறிய அறிவே இதற்கு சாட்சி.
*அறிவு இந்த உண்மைகள் தெரிந்ததால் விலகி ஒதுங்கி கனடாவில் இருக்கிறார்.
*பரிதி கொலைக்கு சில நாட்களின் முன்னரே கருணா தனது சகாக்களுடன் பிரான்ஸ் வந்து போயிருந்தார் என்பது அனைவரும் அறிந்தது.
*அந்த நேரம் நந்தகோபன் கருணாவை சந்தித்திருந்தார்.
*நந்தகோபன் தற்பொழுதும் அடிக்கடி கொழும்பு போய்வரும் ஒருவர்.
*நந்தகோபன் வெளிநாடு வந்ததும் கருணாவுக்கு உறுதி அளித்ததைப்போலவே பதிவு,சங்கதி,ஊடக இல்லம்(ஈழமுரசு) போன்றவற்றை திட்டமிட்டபடி பிரித்தெடுத்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தார்.
*தற்பொழுது ttn என்ற பேரில் பிரான்சில் தொலைக்காட்சிக்கு தடை இருக்கிறது.யாரும் திறக்கமுடியாது அப்படி இருக்க இவர்கள் இதை அந்த பெயரில் பதிவு செய்து இயக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக இதன் பிண்ணணியில் பிரென்சு அரசாங்கம் இலங்கை அரசாங்கம் போன்ற பெருங்கைகள் பலமாக இருக்கவேண்டும்.
*தற்பொழுது இலங்கை அரசாங்கத்துக்கு தலைவலியாக இருப்பது துடிப்புள்ள எழுத்து மற்றும் ஊடகப்பிண்ணணி கொண்ட இளைஞர்கள் மற்றும் பத்திரிகைக்காரர்களே.
*ஈழத்தில் இருந்து வெளியேறிய ஊடகதுறையினர் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று அறியும் பெரும்தேவை மற்றும் இலங்கை அரசுக்கெதிரான ஊடக எழுத்துலகை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை இணங்காணும் பெரும் தேவை இலங்கை அரசுக்கு இருக்கிறது.
*இப்படியான விளம்பரங்களின் மூலம் இலகுவாக இந்த துறையில் இருப்பவர்களின் தகவல்கள் இலங்கை அரசின் கைகளுக்கு போய் சேரும்.
எனவே எதையும் தீர விசாரிக்காமல் இந்த துறையில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் அவசரப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்காதீர்கள்.

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போலாம் தமிழன் எதை புதிதாக செய்ய வெளிக்கிட்டாலும் அதற்குள் குழுக்களையும் பிரிவினைகளையும் கொண்டுவந்து புகுத்துவதே வேலையாக போய் விட்டது :( :( :( போட்டிகளை தவிர்க்க தமிழன் எதை எதை எல்லாம் கையில் எடுக்கின்றான்

தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்ப்பட்டால் அதனை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிப்பார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து

அதை விட்டுவிட்டு தொடங்க முதலே ஒரு விடையத்தை வசைபாடுவது என்பது புதிய முயற்சிகளை மழுங்கடிக்கும் செயலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.