Jump to content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14


Recommended Posts

பனங்காய் பணியாரம்

 

palmyrafruit.jpg

 

 

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .

 

பனங்களி செய்யிற பக்குவம் :

 

தேவையான சாமான் :

 

நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம்.

 

பக்குவம் :

 

sdc11230.jpg

 

 

நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை மணம் போக காச்சி எடுத்து ஆறவையுங்கோ.

 

தேவையான சாமானுகள்:

 

பனங்களி – 1 கப்
சீனி- ¼ கப்
எண்ணெய் – லீட்டர்.
வறுத்த உழுந்துமா – ¼ கப்
உப்பு தேவையான அளவு.

 

பக்குவம் :

 

காச்சின பனங்களியோடை உழுத்தம்மா உப்பு சேர்த்து கிளறி விடுங்கோ . தாச்சியிலை எண்ணையை விட்டு நல்லாய் கொதிக்க விடுங்கோ . மாவைக் கையில் எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாக எண்ணெயிலை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கோ.

 

படிமானம்:

 

panankaipaniyaram1.jpg

 

எண்ணை ஒத்தி எடுக்கிற பேப்பரிலை போட்டு எண்ணையை வடியவிட்டு , ஆற வைச்சுப்போட்டு ரெண்டு மூண்டு நாள் கழிய வைச்சி சாப்பிடுங்கோ. சொல்லிவேலையில்லை ஐஞ்சு நிமிசத்திலை பலகாரத்தட்டு உங்களைப் பாத்து சிரிக்கும்.

 

முன்னைய பக்குவங்கள்:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92131

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101593

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101652

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101897

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102110

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102279

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102377

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102733

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103010

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103540

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103853

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105065

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108263

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் இந்தப் பனங்களி போத்தலில் அடைத்து விக்கிறார்கள்..சிலநாட்களுக்கு முன்னர் வாங்கி வந்து பனங்காய்பனியாரம் சுட்டம்..அந்தமாதிரி இருந்தது...சாப்பிடும்போது ஊர் நினைவுகளும் வந்துபோனது...பனங்காய்பனியரம் சுட்ட எனக்கும் நண்பணுக்கும் இதைப்பற்றிய எந்த அனுபவமும் இருக்கவில்லை...ஒரு அக்காவை கோல் பண்ணி கேட்டு எப்படி செய்வது என்று அவ சொல்ல சொல்ல செய்தம்..ஆனால் அந்தமாதிரி வந்தது..நன்றி கோ அண்ணா பகிர்விற்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லாச்சப்பலில் இந்தப் பனங்களி போத்தலில் அடைத்து விக்கிறார்கள்..சிலநாட்களுக்கு முன்னர் வாங்கி வந்து பனங்காய்பனியாரம் சுட்டம்..அந்தமாதிரி இருந்தது...சாப்பிடும்போது ஊர் நினைவுகளும் வந்துபோனது...பனங்காய்பனியரம் சுட்ட எனக்கும் நண்பணுக்கும் இதைப்பற்றிய எந்த அனுபவமும் இருக்கவில்லை...ஒரு அக்காவை கோல் பண்ணி கேட்டு எப்படி செய்வது என்று அவ சொல்ல சொல்ல செய்தம்..ஆனால் அந்தமாதிரி வந்தது..நன்றி கோ அண்ணா பகிர்விற்கு..

 

வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

Link to comment
Share on other sites

லாச்சப்பலில் இந்தப் பனங்களி போத்தலில் அடைத்து விக்கிறார்கள்..சிலநாட்களுக்கு முன்னர் வாங்கி வந்து பனங்காய்பனியாரம் சுட்டம்..அந்தமாதிரி இருந்தது...சாப்பிடும்போது ஊர் நினைவுகளும் வந்துபோனது...பனங்காய்பனியரம் சுட்ட எனக்கும் நண்பணுக்கும் இதைப்பற்றிய எந்த அனுபவமும் இருக்கவில்லை...ஒரு அக்காவை கோல் பண்ணி கேட்டு எப்படி செய்வது என்று அவ சொல்ல சொல்ல செய்தம்..ஆனால் அந்தமாதிரி வந்தது..நன்றி கோ அண்ணா பகிர்விற்கு..

 

எவவா  :o  :o  நல்லது :lol: .

Link to comment
Share on other sites

எனக்கு இது ரொம்ப பிடிக்கும். அம்மம்மா அடிக்கடி செய்து தந்திருக்கிறார்.

நான் ஒருசில தடவை பிழிந்திருக்கிறேன். களி பட்டால் கை எல்லாம் வழுக்கிகொண்டிருக்கும்... ஆனால் நான் தண்ணி கூடுதலாக சேர்த்து பிழியிற அதுவும் வடிவா பிழிவதில்லை என்று என்னை பிறகு பிழிய விடுறேல்லை. :D எங்கள் வீட்டில் துணிக்கு பதில் சிறிய கண்ணுள்ள சிறிய அரிதட்டை பயன்படுத்தி வடிப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure:  எத்தனை தடவை வடிப்பார்கள் என்று தெரியவில்லை. 2,3 தடவையாக இருக்கலாம். :rolleyes:

ஆனால் பின்னர் என்னென்ன சேர்ப்பார்கள் என்று கவனித்ததில்லை. நான் நினைத்தேன் கோதுமை மா சேர்ப்பார்கள் என்று. :unsure:

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...
 

Link to comment
Share on other sites

மறந்து போன பனங்காய் பணியாரத்தை நினைவுபடுத்திப் போட்டியள். இங்கும் தமிழ் கடைகளில் போத்திலில் அடைத்து பனங்களி விற்கின்றார்கள். வாங்கிச் சுடவேணும்!! என்ன சுவையான பணியாரம்!! ம்ம்........நன்றி கோ!!

Link to comment
Share on other sites

பனங்காய் பணியாரம்

 

 

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .

 

எனக்கு மிகவும் பிடித்த பலகாரம். அடுத்த மாதம் ஊருக்குப் போகும் போது, அம்மாவிடம் செய்து தரச் சொல்லிக் கேட்டாப் போச்சு! :D

நினைவூட்டியமைக்கு  நன்றிகள் கோமகன் அண்ணா. :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14 வரை வந்து விட்டதா!

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிக்கடி பனங்காய் பணியாரம் செய்வேன் கோதுமை மா சேர்த்து. நீங்கள் உளுந்துமா சேர்க்கச்சொல்லிச் சொல்லுறியள்.  அதுதான் யோசனை. பிழைக்கட்டும் பிறகு இருக்கு. :D

Link to comment
Share on other sites

வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

 

இதெல்லாம் வெளீலை சொல்லுறதே அண்ணை  :lol: :lol:  ??? பப்பி சேம் :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனங்காய்ப் பனியாராம் சாப்பிட்டே எத்தனையோ வருசம்...தமிழ்க் கடைக்குப் போனால் பனங்களி வாங்கி வந்து செய்து சாப்பிட வேண்டும்...செய்முறைக்கு நன்றி கோமகன்...ஊரில் கோதுமை மா போட்டுத் தான் அம்மா செய்ததாக ஞாபகம் நீங்கள் உழுத்தம்மா போட்டது சத்துக்காக் இருக்கும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தை கலக்கிறமாதிரி ஒரு பீலிங்க் இன்னும் வரேல்லை? :mellow:

 

சம்பவம் நடந்து சிலபல நாட்களாகிவிட்டது..எதுவும் நடக்கவில்லை..ஆனல் இதை நீங்கள் எழுதி அதை நான் வாசிச்சபின்னர் லேசாக அடிவயுத்துக்குள் ஏதோ செய்வது போல இருக்கு..இப்படியா மனிசற்ற வயித்தை கலக்கிறது.... :D 

எவவா  :o  :o  நல்லது :lol: .

 

ஒரு நல்ல உதவும் உள்ளம் கொண்ட அக்கா... :D 

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...

 

 

அட நம்ம வீட்டை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்...எங்க வீட்டிலும் நான் சுடசுட அம்மம்மாக்கு பக்கத்தில இருந்து ஒன்றொன்றாய் வாய்க்குள் போட்டுவிடுவன்...சில நேரம் சுடுபணியாரம் வாயிலை சுட்டு ஜயோ அம்மா என்டு அலற ஆறமுன்னம் அகாவிலை சாப்பிட்டால் இப்பிடித்தான் வாயிலை சூடும் எண்டு அம்மம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கன்... :D 

Link to comment
Share on other sites

எனக்கு இது ரொம்ப பிடிக்கும். அம்மம்மா அடிக்கடி செய்து தந்திருக்கிறார்.

நான் ஒருசில தடவை பிழிந்திருக்கிறேன். களி பட்டால் கை எல்லாம் வழுக்கிகொண்டிருக்கும்... ஆனால் நான் தண்ணி கூடுதலாக சேர்த்து பிழியிற அதுவும் வடிவா பிழிவதில்லை என்று என்னை பிறகு பிழிய விடுறேல்லை. :D எங்கள் வீட்டில் துணிக்கு பதில் சிறிய கண்ணுள்ள சிறிய அரிதட்டை பயன்படுத்தி வடிப்பார்கள் என்று நினைக்கிறேன். :unsure:  எத்தனை தடவை வடிப்பார்கள் என்று தெரியவில்லை. 2,3 தடவையாக இருக்கலாம். :rolleyes:

ஆனால் பின்னர் என்னென்ன சேர்ப்பார்கள் என்று கவனித்ததில்லை. நான் நினைத்தேன் கோதுமை மா சேர்ப்பார்கள் என்று. :unsure:

முதல் தரம் சுட்டு இறக்கியதும் இரண்டாம் தரம் சுடுவது வர முன்னம் அதை சாப்பிட்டு விடுவோம். :icon_idea: பேச்சு விழ விழ சாப்பிடுற. ஆனால் உண்மையில் ஆறவைத்த பின்னர் தான் மிகவும் ருசியாக இருக்கும். :) ஆனால் சேர்க்கப்படும் மாவின் அளவு குறைந்தால் அல்லது சீனியின் அளவு குறைந்தால் பனங்காய் பணியாரம் கைக்கும். :)

நன்றி பகிர்வுக்கு...

 

 

 

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் துளசி . பொதுவாக கோதுமை மாவில் பனங்காய்பணியாரம் செய்வதற்கு முக்கிய காரணம் அது மென்மையாக வரும் என்பதற்கே . மாறாக வறுத்த உளுத்தம் மாவில் செய்யும் பொழுது சிறிது கடினமாகவும் , உடலுக்கு சத்துடன் வாசமாகவும் இருக்கும் என்பதற்காக உளுத்தம் மாவைச் சேர்ப்பார்கள் . கோதுமை மாவிலும் செய்யலாம் தடையேதும் இல்லை.

Link to comment
Share on other sites

மறந்து போன பனங்காய் பணியாரத்தை நினைவுபடுத்திப் போட்டியள். இங்கும் தமிழ் கடைகளில் போத்திலில் அடைத்து பனங்களி விற்கின்றார்கள். வாங்கிச் சுடவேணும்!! என்ன சுவையான பணியாரம்!! ம்ம்........நன்றி கோ!!

 

 

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அலைமகள் .

எனக்கு மிகவும் பிடித்த பலகாரம். அடுத்த மாதம் ஊருக்குப் போகும் போது, அம்மாவிடம் செய்து தரச் சொல்லிக் கேட்டாப் போச்சு! :D

நினைவூட்டியமைக்கு  நன்றிகள் கோமகன் அண்ணா. :)

 

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு மல்லிகைவாசம் . உங்களுக்கு எப்படியொரு வாசம் உள்ளதோ அதுபோலவே இதற்கும் ஒரு வாசம் உண்டு . அதுதான் மண்வாசம் :D .

Link to comment
Share on other sites

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14 வரை வந்து விட்டதா!

தொடருங்கள்.

 

ஓ ........ வந்திட்டுதே  :D . உங்கடை வசதிக்காக எல்லா லிங்கையும் குடுத்திருக்கிறன் கப்பி .  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ........ வந்திட்டுதே  :D . உங்கடை வசதிக்காக எல்லா லிங்கையும் குடுத்திருக்கிறன் கப்பி .  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :) .

நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

நான் அடிக்கடி பனங்காய் பணியாரம் செய்வேன் கோதுமை மா சேர்த்து. நீங்கள் உளுந்துமா சேர்க்கச்சொல்லிச் சொல்லுறியள்.  அதுதான் யோசனை. பிழைக்கட்டும் பிறகு இருக்கு. :D

 

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுமே . நான் துளசிக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும் :) :) .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் பனங்காய்ப் பனியாராம் சாப்பிட்டே எத்தனையோ வருசம்...தமிழ்க் கடைக்குப் போனால் பனங்களி வாங்கி வந்து செய்து சாப்பிட வேண்டும்...செய்முறைக்கு நன்றி கோமகன்...ஊரில் கோதுமை மா போட்டுத் தான் அம்மா செய்ததாக ஞாபகம் நீங்கள் உழுத்தம்மா போட்டது சத்துக்காக் இருக்கும் என நினைக்கிறேன்

 

வாயிலை போட்டால் கரையிறமாதிரி சாப்பிடிறதை விட்டுட்டு , உடம்புக்கு சத்துவாறமாதிரியும் சாப்பிடிறது நல்லது தானே அக்கை . வரவிற்கும் கருத்திற்கும் நன்றி  :)  :)  .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டாயம் இப்படி நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. சிம் அட்டைகள் திருடப்பட்டு அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் இலங்கையில் நடக்கின்றது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒருமுறை சம்பந்தமே இல்லாத அழைப்புக்கள் சிங்கள மொழியில் எனது கைது தொலைபேசிக்கு வந்தன அட்டை வாங்கியது யாழ்ப்பாணத்தில்.... ஒரு முறை சிங்களத்தில் போலீஸ் கூட அழைத்தது.... அத்துடன் அந்த அட்டையை மாற்றிவிட்டேன்.....
    • சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுடன் ஏ.ஏ.எல். ஜயரத்னராஜா சந்தேக நபருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். திருடனுக்கு ..திருடன் உதவி....நல்லாயிருக்கு..
    • சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39     இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.   இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது.   மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].   தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது.   கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) ( அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.   நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.   [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra]   மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 40 தொடரும்            
    • மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........!   👍
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.