Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ

Featured Replies

“”எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ”   எனக் கேட்டார் ஒரு முதியவர். 

ஏன் என நினைகிறீர்கள்? 

பல முதியவர்கள் இவ்வாறு கேட்கும் நிலையில் தான் அவர்களை எமது சமூகம் வைத்திருக்கிறது.

 

“”"”"  வயசு போட்டுது, நடப்பு ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளையே வழவழக்கினம்”

 

 

 

“உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது”

 

 

 

“வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்”   

 

 

oldmananddaughter.jpg?w=300

 

வயசானவர்களை இவ்வாறெல்லாம் எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.

 

பெற்றோர்களையும் முதியோர்களையும் தெய்வமாக மதித்த எமது சமூகத்தில் இன்று இவ்வாறு பேசுவதைக் காண்பது சகஜமாகிவிட்டது..

 

வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுக்காது  வயதானவர்களை அவமதிப்பமதுடன், உதாசீனப்படுத்தவும் செய்கிறார்கள்.

 

இதனை நீங்களும் பல் வேறு சந்தர்ப்பங்களில்ம் கண்டிருக்கக் கூடும்.

 

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்றும்,

 

‘தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’

 

என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்று அதே மரியாதையை மூத்தோர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டதா?

 

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல நடந்து கொள்கிறார்கள். குருத்தோலைகள் காவோலைகளாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

 

சில வேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடூர மனோபாவத்துடன் நடப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

 

“வயது போனால் செத்துத் துலையிறதுக்கு ஏன் இன்னும் இருந்து கழுத்தறுக்கிறியள்..”

 

என்று தமது பெற்றோரைப் பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.

 

வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!

 

அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வுகளும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

 

பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் சோகம் தோய்ந்த முகத்துடன் இருந்தார்.

 

“தலைச்சுத்து, எழும்பி நடக்க முடியாமல் விழுத்தப் பாக்குது, கை, கால் உழைவு, நடந்தால்  இளைப்புக் களைப்பு…”

 

வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக்கொண்டிருந்தார்.

 

திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி,

 

“பிள்ளை பேர்சை பையோடை வெளியிலை விட்டிட்டின், ஒருக்கால் போய்ப் பார் மேனை” 

 

என்றார்.

 

அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனிமையில் பேசும் ஆதங்கம்.

 

மருத்துவனால் செய்ய முடியாததைதக் கோரினார்.

 

மகள் வெளியேறிய மறுகணமே, - 

 

“எனக்குச் சாக ஏதும் மருந்துதாங்கோ”

 

என்று பரிதாபமாகக் கேட்டார். கேட்கவே மனது துடிக்கிறது.

உள்ளத்தில் துயரம்  மூடியிருந்தால் மட்டுமே இத்தகைய வாரத்தைகள் எழுந்திருக்கும்.

 

“ஏன் அப்பு ?”

 

 

 

“என்னாலை ஒரு வேலையும் செய்ய முடியுதில்லை. 

எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு, 

கிணத்திலை அள்ள ஏலாது… 

மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா. 

அவவுக்கும் சரியான வேலை…

 

… நான் குளிச்சுப் பத்து நாளாய்ப் போச்சுதெண்டால் பாருங்களேன்… 

செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை, 

மற்றவையளுக்கும் கரைச்சல் இல்லை”

என்றார்.

 

தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளுக்கு அவசியமான, அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரா?

மகளில் குற்றம் சாட்டாது, அவளது வேலைப் பொறுப்புகளையும் உணர்ந்த அதே நேரம் தன் பிரச்சனையையும் முன் வைத்தார்.

 

இருந்தபோதும்  இன்னும் பல விடயங்கள் அவர் மனத்தை அழுத்தியிருக்கும். இல்லையேல் இத்தகைய வார்த்தைகள் வந்திராது.

வெளியாரான எனக்குச் சொல்வதில் உள்ள தயக்கம் வாயைக் கட்டிப் போட்டிருக்கும்.

 

மனதிற்குள் அழுது கொண்டேன்.

 

வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும்.

தூக்கம் வரும்.

குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.

அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!

 

எமக்குத் ‘தலைநிறைய வேலை’ இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?

 

முடியாவிட்டால் வயோதிபர் இல்லத்தில் விட்டுவிடுங்கள் எனச் சொல்லலாம்.

ஆனால் அப்படி விட்டால் ஊர் என்ன சொல்லும் என்ற போலிக் கௌரவம் பலருக்கு.

 

எவ்வாறு உரைப்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய இந்தச் சமூகத்தின் பெருமையை?

 

http://hainalama.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்  :( அதுபோல இன்றைய சமுதாயம்.

எமது பொற்றோரை நாம் கவனிக்காமல் விட்டால் எமது பிள்ளைகளும் எம்மை கவனிக்க மாட்டார்கள்  :(

 

 

பகிர்விற்கு நன்றிகள்!

பகிர்விற்கு நன்றி

உண்மைதான் இப்ப வயோதிபரின் நிலைமை ரொம்ப கவலைக்கிடம்- பாவம் அதுகள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்குதுகள் -  இப்ப எல்லோருக்கும் பணமே இலக்கு பாசம் அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மை.கொஞ்ச காசுபணம் இருந்தால் அல்லது பென்சன் வந் தால் அதைக் கறக்க கொஞ்சம்

 

வேண்டா வெறுப்பா  பார்ப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புக்கு நன்றி வந்தி. வளர்ந்த நாடுகளில் வயோதிபர்களை பராமரிக்கவாவது இடங்கள் உண்டு. பல வசதிகளும் உள்ளது.இலங்கையில் வாழும் வயோதிபர்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.
 
குடும்பத்தவர்கள் வெறுத்து ஒதுக்குவது மிகவும் மனக்கஸ்டமான ஒன்று.கனடா போன்ற நாடுகளில் வயோதிபர்களுக்கு வரும் பணத்தை கறக்க உறவினர்கள் ஆடும் நாடகங்களை என்னவென்பது??
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுவதும் பேசுவதும் மிகமிக  சுலபம்.

எமது தலைமுறையுடன் இவை  அனைத்தும் விடை பெற்றுவிடும்.

இந்த தலைமுறைதான்  பலவற்றிற்கும் விடை கொடுக்கும் தலைமுறை  அத்துடன் எம்மை தாங்க எவரும் இருக்கப்போவதில்லை.   இதை உணர்ந்து அதற்கான வழிகளை  தேடுவதுடன் அதற்கு இப்பொழுதே எம்மை நாம் மனதளவில் தயாராக்கவும்  வேண்டும் 

 

முக்கியமாக

யாழ் கள  உறவுகள் அனைவரும் எமது பெற்றோரை கண் கலங்காது கடைசிவரை காப்போமாக......

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு வேண்டியதை செய்யாமல் அவர்கள் இறந்தபின்பு அதிக பணம் செலவழித்து பத்திரிகையில் போடுவதும் - வானொலியில் அறிவிப்பதும் - புத்தகம் அடிப்பதும் - அழுது ஆர்ப்பாட்டம் செய்வதும் - ஆடம்பரமாக இறுதி கிரிகைகள் செய்வதும் மன வேதனையான விடயம்.

இந்த வெளிப்பகட்டு எதற்காக என்று புரிவதில்லை. பெற்றோரை இறுதி வரை எம்மோடு வைத்து அன்போடு பராமரிக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்...அந்த வரம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.