Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து!

Featured Replies

கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து!
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது.
பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது.
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10- இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

 

f

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் பயனுள்ள பதிவு இது. நான் சாப்பிடும்போது கருவேப்பிலையைத் தூக்கி வீசுவது இல்லை, அதையும் சேர்த்துத்தான் சாப்பிடுவேன்.

 

 

 

 

 

எழுத்துப் பிழை திருத்தப்பட்டது

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

கருவேப்பிலையை... கறி வாசத்துக்கு மட்டும், பயன்படுத்துவோம்...
கறிக்குள் இருக்கும்... கருவேப்பிலையை... சாப்பிட, ஒரு மாதிரி இருக்கும்.
அதனால்... கறிக்குள் இருக்கும் கருவேப்பிலை, குப்பைத் தொட்டிக்குப் போக... கோப்பையின் விழிம்பில் போய் இருப்பார்.


 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை


 

 

 

கருவேப்பிலையை... கறி வாசத்துக்கு மட்டும், பயன்படுத்துவோம்...
கறிக்குள் இருக்கும்... கருவேப்பிலையை... சாப்பிட, ஒரு மாதிரி இருக்கும்.
அதனால்... கறிக்குள் இருக்கும் கருவேப்பிலை, குப்பைத் தொட்டிக்குப் போக... கோப்பையின் விழிம்பில் போய் இருப்பார்.


 

 

இனிமேலாவது சமைக்கும்போது சிறிதாக வெட்டிச் சமையுங்கள் 

:D

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை

இனிமேலாவது சமைக்கும்போது சிறிதாக வேட்டிச் சமையுங்கள்  :D

 

கருவேப்பிலையை... வேட்டி கட்டிக் கொண்டு சமைப்பதா, வெட்டிச் சமைப்பதா வாத்தியார்.smiley-cooking-emoticon.gif

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கருவேப்பிலையை வெட்டிச் சிறியதாகச் சேர்த்துச் சமையுங்கள்


 

ஆனைக்கும் அடிசறுக்கும் தமிழ்சிறி அண்ணா

சுட்டிக்காட்டியதற்கு நன்றி

எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கருவேப்பிலையை வெட்டிச் சிறியதாகச் சேர்த்துச் சமையுங்கள்

 

ஆனைக்கும் அடிசறுக்கும் தமிழ்சிறி அண்ணா

சுட்டிக்காட்டியதற்கு நன்றி

எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது :)

 

வாத்தியார், சும்மா... சொல்லி கலாய்ப்பது தானே... நம் தொழில்.

நான் விடும், எழுத்துப் பிழைகளை.. ஒருவருமே... டுட்டிக் காட்டுகிறார்கல். இல்லையே... தான் என்பது எனது கவலை.

அல்லது, நான்.... சரியான தமிழில் எழுதுகின்றேன் போல கிடக்குது. :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருவேப்பிலை என்பதா? கறிவேப்பிலை என்பதா? சரி தமிழ்சிறி அண்ணா :D


நாங்களும் கலாய்ப்பமில்ல  

கறிவேப்பில்லையைச் சாப்பிட ஒரு மாதிரி தான் இருக்கும் ஆனால் சம்பல் அரைத்தும் சாப்பிடலாம் தானே! நாம் வழமையாக அரைக்கும் தேங்காய் சம்பல் மாதிரி கறிவேப்பிலையைக் கூடுதலாக வைத்துத் தேங்காய் பூவைக் குறைத்து வையுங்கோ!! அப்படி வல்லாரையையும் சம்பல் செய்யலாம். ம்.......... அந்த மாதிரி இருக்கும்!!!



கருவேப்பிலை என்பதா? கறிவேப்பிலை என்பதா? சரி தமிழ்சிறி அண்ணா :D


நாங்களும் கலாய்ப்பமில்ல  

 

 

 கறிவேப்பிலை - எழுத்துத் தமிழ்

 

 

கருவேப்பிலை - பேச்சுத் தமிழ்  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க முடியாது நீலப்பறவை நான் சிறுவயதிலிருந்தே உணவில் நன்றாகக் கருவேப்பிலை சேர்த்து உண்பேன்... குரல் மட்டும் இனிமையாக வரவில்லையே..... :(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க முடியாது நீலப்பறவை நான் சிறுவயதிலிருந்தே உணவில் நன்றாகக் கருவேப்பிலை சேர்த்து உண்பேன்... குரல் மட்டும் இனிமையாக வரவில்லையே..... :(:unsure:

 

அப்ப சாப்பிடாமலே விட்டிருந்தால் என்ன நிலைமை?? :(:unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சாப்பிடாமலே விட்டிருந்தால் என்ன நிலைமை?? :(:unsure:

 

Spoiler
:lol: :lol: :lol:

அசல் ஆணோட குரலைச் சந்திச்சிருப்பீங்கப்பா...என்று சொல்லுவேன் என்று பாக்கிறீங்களா?.... :icon_mrgreen:

 

நீலப்பறவை தந்த குறிப்பில் குரல் இனிமையாக மாறும் என்ற கருத்திற்கும் கருவேப்பிலைக்கும் தொடர்பே இல்லை என்கிறேன்...கி கி :D :D

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்ட சாமான் வாங்கும் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு கருவேப்பிலையை சாறாக பிழிந்து கொடுப்பாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
தினமும் எதோ விதத்தில் தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவேன் அதை விட இடையிடையே கறிவேப்பிலை சட்னி செய்தும் சாப்பிடுவேன் 
 
பதிவுக்கு நன்றி நிலப்பறவை.
  • கருத்துக்கள உறவுகள்

கருவேப்பிலையை... கறி வாசத்துக்கு மட்டும், பயன்படுத்துவோம்...

கறிக்குள் இருக்கும்... கருவேப்பிலையை... சாப்பிட, ஒரு மாதிரி இருக்கும்.

அதனால்... கறிக்குள் இருக்கும் கருவேப்பிலை, குப்பைத் தொட்டிக்குப் போக... கோப்பையின் விழிம்பில் போய் இருப்பார்.

 

 

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.