Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு- சென்னையில் கருப்பு உடையுடன் 'டெசோ' கருணாநிதி போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக சென்னையில் திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் கருப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் சார்பில் கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடையில் குவிந்தனர். டெசோ அமைப்பை சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கருப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

 

08-karuna-protest4-600.jpg

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, சர்வதேச போர்க்குற்றவாளி எனப்படுகிற ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். திருச்சியில் நடைபெற்ற லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாபெரும் கூட்டத்தில் இன்று சொல்லும் கருத்துகளை விரிவாக விளக்கியிருக்கிறேன். அதிலே முக்கியமான ஒன்று தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம் பண்பாடு, மொழி அனைத்தையும் அழிக்கிற- கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்சே அரசு வெறியாட்டம் போடுகிறது என்பதை விளக்கியிருந்தேன்.

 

நாம் கண்போல் காத்த அருமைத் தமிழ் மொழியும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரிலான கிராமங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக ராஜபக்சேவின் கொடுங்கோலால் அழிக்கப்பட்டு மாற்றுப் பெயர் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்களில் எப்படி ஸ்ரீ என்ற வடமொழி எழுத்தைப் புகுத்தினார்களோ அவ்வாறு சிங்கள மொழியில் ஊர்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடியாது என்று கூறுகிற ராஜபக்சே அரசைப் பற்றி மத்திய அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

08-karuna-protest55-600.jpg

http://tamil.oneindia.in/news/2013/02/08/tamilnadu-karunanidhi-leads-protests-against-rajapaksa-169431.html

  • கருத்துக்கள உறவுகள்

மானமற்ற பிழைப்பு நடத்தும் பலர் இம்மேடையில் உள்ளார்கள்..!

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இவர்களுக்கு சார்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள்........... :(

  • கருத்துக்கள உறவுகள்

மானமற்ற பிழைப்பு நடத்தும் பல இம்மேடையில் உள்ளார்கள்..!

 

என்னத்தை சொல்ல சோத்துக்கை உப்பை போட்டு சாப்பிட்டா தானே உடம்பில் வெக்கம் ரொசம் மானம் கொஞ்சம் தன்னும் ஒட்டிட்டு இருக்கும்...இந்த கயவர் கூட்டத்துக்கு அது கொஞ்சமும் இல்லை...ஆறு மாதம் ஜேயிலில் இருந்துட்டு வந்தவா ஒன்றும் தெரியா பாப்பா மாரி இருக்கிறா...கள்ளனுக்கு பக்கத்திலை இன்னும் ஒரு ஆள் இருக்கிறார் அவர பற்றி சொல்லவே தேவை இல்லை...இந்த கள்ளக் கூட்டத்தாலை தானே அம்மட்டு உயிரும் போனது முள்ளி வாய்க்காலில்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடியாது என்று கூறுகிற ராஜபக்சே அரசைப் பற்றி மத்திய அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 

இந்தாள் வேற எப்ப பாரு காமடி பண்ணிட்டு ...!

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல சோத்துக்கை உப்பை போட்டு சாப்பிட்டா தானே உடம்பில் வெக்கம் ரொசம் மானம் கொஞ்சம் தன்னும் ஒட்டிட்டு இருக்கும்...இந்த கயவர் கூட்டத்துக்கு அது கொஞ்சமும் இல்லை...ஆறு மாதம் ஜேயிலில் இருந்துட்டு வந்தவா ஒன்றும் தெரியா பாப்பா மாரி இருக்கிறா...கள்ளனுக்கு பக்கத்திலை இன்னும் ஒரு ஆள் இருக்கிறார் அவர பற்றி சொல்லவே தேவை இல்லை...இந்த கள்ளக் கூட்டத்தாலை தானே அம்மட்டு உயிரும் போனது முள்ளி வாய்க்காலில்

கருணாநிதி என்னும் குடும்ப சுமைதாங்கி இருக்குவரை தமிழன் இடிதாங்கியாதான் இருக்கவேணும் தலை விதி ..! :( 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

 

அப்போது தான்  தங்கள் பதவிக்காக எல்லாத் திராவிடக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைச்சாட்டி வீதிக்கு வருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

 

அப்போது தான்  தங்கள் பதவிக்காக எல்லாத் திராவிடக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைச்சாட்டி வீதிக்கு வருவார்கள்

 

வாத்தியார்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வாறதைவிட நாம்பன் மாட்டில் பால்கறக்க சாத்தியம் அதிகம் இருக்கு.. :D

 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வாறதைவிட நாம்பம் மாட்டில் பால்கறக்க சாத்தியம் அதிகம் இருக்கு.. :D

 

நாம்பம் மாடு என்றால் என்ன இசைக்கலைஞன் அண்ணா..? 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இரண்டு மாட்டை வாங்கி..தமிழ்சிறி அண்ணைக்கு அனுப்பிவிடுங்கோ..அவர் பொழுதுபோகாமல் இலைஞான் அடிச்சுக்கொண்டு இருக்கிறார் ஜேர்மனியில்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நாம்பம் மாடு என்றால் என்ன இசைக்கலைஞன் அண்ணா..? 

 

நாம்பம் இல்லை.. நாம்பன்.. :D திருத்தி விட்டிருக்கு.. பனி கனக்க கொட்டுறதாலை கை விறைச்சுப் போகுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வாறதைவிட நாம்பன் மாட்டில் பால்கறக்க சாத்தியம் அதிகம் இருக்கு.. :D

 

இந்தியர்கள்  பிள்ளையார் சிலையிலிருந்தே  பால் கறந்தவர்கள்

நாம்பன் மாடு அவர்களுக்குச் சின்னப் பிரச்சனை :D  :lol:   

 பனி கனக்க கொட்டுறதாலை கை விறைச்சுப் போகுது.. :D

அதெல்லாம் சரி கையைக் கவனமாக வைத்திருங்கள்

நாம்பன் மாட்டில் பால் கறக்க வெளிக்கிட்டால் கை விறைக்கத்தான் செய்யும் :lol:

சிங்கள வெறியன் என்று சொன்னால் ராஜபக்சே கோபப்படுவார் . அதனால் மரியாதையோடு சிங்கள 'வெறியர்' என்று அன்போடு கண்டிக்கிறார் டெசோ நாடகக் குழு தலைவர் கருணாநிதி. 

'ஈழம்' என்று பெயரை இதே போல் ஒரு கூட்டத்திற்கு திருமா எழுதினார் . அந்த பொதுக் கூட்ட மேடையில் சென்று ஈழம் என்ற சொல்லை மட்டும் காவல் துறையை வைத்து அழித்தார் கருணாநிதி. இப்போது எதற்கு ஈழத் தமிழர் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர் கருணாநிதி அவர்களே. உங்கள் நாடகத்தை தமிழ் மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். 

மொள்ளமாறிக் கூட்டத்தில் சேர்ந்த அண்ணன் திருமா மன்னிக்கவும் , சேராத இடம் சேர்ந்து விட்டீர் .-FB

 

https://www.facebook.com/photo.php?fbid=599402486741272&set=a.143979972283528.27906.100000145796525&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.