Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிக்காவின் சதிராட்டம்

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றை மறக்காதே - 4ம் பாகம் 15/07/06

துரோகிகளை அழித்தலுடன்

துவங்கிய இப்போராட்டம்

அநியாயப் படைகளுக்கும்

அடிகொடுக்கத் தொடங்கியது

சிங்களப் படைகள்

சிதறி ஓடியது

சிறிலங்கா அரசு

சிந்தை கலங்கியது

வெளிநாட்டு அமைச்சருக்கு

வெளிக்கிடவும் நேரமில்லை

விஸயத்தைச் சொல்வதற்காய்

விரைந்திட்டார் இந்தியாக்கு

போராட்ட நோக்கத்தைப்

பொருட்டே படுத்தாமல்

ஈழத்து நிலைமையினை

இந்தியாவும் பார்த்தது

தமிழீழம் அமைந்திட்டால்

தமிழினமே ஒன்றுபடும்

தமிழ்நாட்டு மக்களுக்கும்

தழைபோட முடியாது

தமிழர்படும் துயரை

தாங்கிவிட முடியவில்லை

விடிவைத் தருவதற்காய்

விரைந்தே வருவோமென்றார்

நல்லவர்போல் நடித்து

நம்மீழ நாட்டிற்குள்

நாசுக்காய் காலூன்றி

நயவஞ்சனை புரிந்தார்

ஆனாலும் எம்படையை

அடக்கிவிட முடியவில்லை

அழிக்கவென்று வந்தவர்கள்

அழிந்தே போனார்கள்

தளராத எம்படைகள்

தந்திட்ட தாக்குதலால்

தானாகப் பின்வாங்கி

தளர்வுடனே போய்ச்சேர்ந்தார்

தமிழர் எமக்கென்று

தனிக்குணங்கள் பலவுண்டு

குழுக்கள் பலசெய்து

குழப்புவதும் அதிலொன்று

சிதைப்போம் பகையையென்று

சீற்றமாய் எழுந்தசிலர்

பகைவர் கால்களினைப்

பற்றிய கதையுமுண்டு

தியாக உணர்வுடனே

திரண்ட பெருமலையை

சிறுகுச்சி கொண்டிவர்கள்

சிதைக்க முடிந்திடுமோ

உரசல்கள் அத்தனையும்

உதறித் தள்ளிவிட்டு

உணர்வாய்ப் போராட்டம்

உயிரூட்டம் பெற்றதுவே .............................

  • Replies 74
  • Views 8.9k
  • Created
  • Last Reply

உரசல்கள் அத்தனையும்

உதறித் தள்ளிவிட்டு

உணர்வாய்ப் போராட்டம்

உயிரூட்டம் பெற்றதுவே .............................

நிஜங்கள் தாங்கி வரும் கவிதை அருமை. தொடருங்கோ :lol:

தமிழர் எமக்கென்று

தனிக்குணங்கள் பலவுண்டு

குழுக்கள் பலசெய்து

குழப்புவதும் அதிலொன்று

சிறந்த கவிவரிகள். கவிதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் மணிவாசன்அண்ணா. :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் ரசிகை, சுஜிந்தன் :lol:

கருத்துக்களுக்கு நன்றிகள்

தொடர் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதை மிகவும் நன்றாகப் போகின்றது ... தொடர்ந்து தாருங்கள்

மணிவாசகன் வாசகங்களுக்குள் மணி புூட்டும் வித்தையை எங்கு

கற்றீர்கள்?

இங்கு லொடலொடத்தால் எல்லோரும் சேர்ந்து மொத்துமொத்தென்று

மொத்தி விடுவார்கள்......

பழக்கதோசம் கைகள் துருதுருக்கின்றன...

கட்டுப்படுத்தி எழுதக் கடினமாக இருக்கிறது....

அறிக்கை தராவிட்டாலும் அவதானிப்பு சிதறாமல்

விடயங்களை உள்வாங்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

வணக்கம் ரமா, கௌரிபாலன், அவதானம் சிதறாத ஆதிவாசி,

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வரலாற்றை மறப்போமா - பாகம் 5 (கதிர்காமரின் களிப்பு)

காமாலைக் கண்ணனுக்கு

கண்டதெல்லாம் மஞ்சள்

பைத்தியக் காரனுக்கோ

பாரிலுள்ளோர் பைத்தியங்கள்

பயங்கர வாதியாக

பவனிவரும் அமரிக்கா

பரிசளித்த தெங்களுக்கு

பயங்கரவாதி பட்டம்

அமரிக்க சொல்வதற்கு

ஆமாம் போட்டுநிற்கும்

அவர்தம் நண்பர்களும்

அவ்வழியே நின்றிட்டார்

கதையை முடித்துவிட்டேன்

கதையை முடித்துவிட்டேன்

கள்ளச் சிரிப்புடனே

கதிர்காமர் துள்ளிநின்றார்

இத்துடனே முடிந்தது

இவர்களது போராட்டம்

சந்திரிக்கா அம்மாக்குச்

சரியான சந்தோசம்

அடங்காத் தமிழனுக்கு

இவையெல்லாம் பொருட்டல்ல

அடுத்தகட்டத் தாக்குதலில்

அம்மாக்கு விளங்கியது

ஆனாலும் அகம்பாவம்

அவரை விடவில்லை

அழிப்பேன் புலியையென்றார்

அழிந்ததுவோ அவராட்சி

சமாதானம் காணாமல்

சாயமாட்டேன் எனச்சொல்லி

ரம்மியமாய் பேசுநிற்கும்

ரணிலாரும் வந்திட்டார்

எதிரியுடன் பேசி

எமதுரிமை கிடைக்குமென்றால்

எங்கேயும் பேச

எப்போதும் தமிழர்தயார்

நாம்ஆண்ட மண்ணையும்

நமக்குரிய உரிமையையும்

நட்புடனே தருவரென்றால்

நாம்ஏன்உயிர் விடவேண்டும்

சமாதானச் சத்தங்கள்

சரமாரியாய்க் கேட்க

சர்வ தேசமெல்லாம்

சமாதானப் பேச்சுவாhத்தை

இனவாத மந்திரங்கள்

இத்துடனே செத்திடுமோ

இரணியனின் வாரீசாய்

இருப்பவளும் சிந்தித்தாள் ..........(சந்திப்போம்)

மணிவாசகன் கவிதை நன்றாகவுள்ளது .... வாழ்த்துக்கள் 8)

அடுத்த பாகத்தையும் கவியாக வடித்திருப்பதை வாசித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. இன்னும் பலவிடயங்களை உங்கள் கவிதைகளில் இனிவரும் காலங்களில் உள்ளடக்கவேண்டும். எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். :lol: :arrow:

பாகம் 5 கவிதையும் நன்றாக உள்ளது. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம். :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் பாலன், சுஜிந்தன் ரசிகை

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

பழைய வரலாற்றை தெரிந்துகொள்ள உதவுகின்ற கவிதைக்கு வாழ்த்துக்கள். மிகுதியையும் தொடருங்கள்

தொடரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் மணிவாசகன்.

கவிதை நன்று தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

  • தொடங்கியவர்

வணக்கம் மூதேசி, ரமா, இலக்கியன்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

சந்திரிக்காவின் சதிராட்டம்

வரலாற்றை மறப்போமா - பாகம் 6

அதிகார வெறிபிடித்த

அம்மணிக்குப் பொறுக்காமல்

அரசைக் கவிழ்க்கின்ற

அடுக்காத செயல்செய்தாள்

நியாயங்கள் இப்பொழுது

நித்திரையில் இருப்பதனால்

நீசச் செயலென்று

நிந்திக்க யாருமில்லை

சமாதானப் புறாவிற்கு

சாவுமணி அடிப்பதற்காய்

சதுரங்கம் ஆடுதற்கு

சந்திரிக்கா தயாரானாள்

எங்கள் படையினிலே

எட்டப்பர் இல்லையென்று

இறுமாந்த எம்தலையில்

இடியொன்று இறங்கியது

தமிழர் குரலெல்லாம்

தழுதழுத்துப் போயிற்று

தமக்குள் கலங்காத

தமிழரில்லை இம்மண்ணில்

கதியில்லை இனியென்று

கவலையுடன் நாமிருக்க

கதையே முடிந்ததென்று

களித்திருந்தார் சந்திரிக்கா

பனிங்காட்டு நரிக்காநீர்

பாச்சா காட்டுகிறீர்

பாறை எனநினைக்க

பனியென்று ஊதிவிட்டார்

அஸ்திரங்கள் அத்தனையும்

அவள்கையை மீறியதால்

அமைதிப் பேச்சென்று

ஆடிநின்றாள் மறுஆட்டம் ...................

கவிதைத் தொடர் நன்றாகப் போகின்றது.... :lol:

இந்தப் பாகமும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

அடுத்த பாகமும் நன்றாக உள்ளது. தொடருங்கள் மணிவாசன். :lol: :arrow:

  • தொடங்கியவர்

வணக்கம் பாலன், காவியா, சுஜிந்தன்,

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

சந்திரிக்காவின் சதிராட்டம்

வரலாற்றை மறப்போமா - பாகம் 6

அதிகார வெறிபிடித்த

அம்மணிக்குப் பொறுக்காமல்

அரசைக் கவிழ்க்கின்ற

அடுக்காத செயல்செய்தாள்

நியாயங்கள் இப்பொழுது

நித்திரையில் இருப்பதனால்

நீசச் செயலென்று

நிந்திக்க யாருமில்லை

...........

அருமையான வரிகள் பாராட்டுக்கள். மேலும் தொடர்க

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இப்பகுதிக்கு மீள வருவதில் மகிழ்ச்சி,

பளுமேல் பளுவும் அடிமேல் அடியும் ஒவ்வொரு நாளும் எம்மை வந்தடையும் சந்தோசமில்லாத செய்திகளும் இப்பகுதியல் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

இதுவரையில் இந்தத் தொடரின் பகுதிகளை வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனிமடல் மூலமாகத் தொடர்புகொண்டு திருத்தங்களையும் கருத்தங்களையும் சொன்னவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

மிக விரைவில் இதன் அடுத்த பகுதியைத் தருகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

அடடடடா இவ்வளவு ஆட்டங்களா? :evil:

நல்லாக ஆட்டம் பார்த்திருக்கிறீங்க மணிவாசகன்

ம்ம் ஆட்டம் தொடர வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.