Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் சாப்பிடவேண்டும் - மீன் ( முன்னுரை )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது...

 

__________________________________________________________________________________

 

மீன் - என்றதும் அம்மச்சியின் நினைவு கிளர்ந்தெழுகிறது. மீன் சுவையை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது பாட்டி தான். மண் சட்டியில் வேக வைத்த மீன் குழம்பை சட்டியோடு ஒரு கை பார்ப்பது அலாதியான இன்பம். எந்த மீனை எந்த அளவுக்கு வேக வைக்க வேண்டும் என்பது ஒரு கலை ! அந்தக் கலை எப்படியோ பெண்களுக்கு வாய்த்து விடுகிறது ! அதனால் தான் எத்தனை முறை சமைத்தாலும், எத்தனை பேருக்குச் சமைத்தாலும் ஒரே சுவை என அவர்களால் அசத்த முடிகிறது !

அம்மாவின் கையால் மீன் சாப்பிடுவது பிறவிப் பயன் ! நான் ஊருக்குத் தலை காட்டும் போதெல்லாம் எங்கிருந்தோ மீன் எக்கச்சக்கமாக வந்து இறங்கும். பலவீனமான உடல் நிலையிலும் எல்லா வகை மீன்களையும் வகை வகையாய்ச் சமைத்துத் தருவார் அம்மா. சூரை மீனை தேங்காய்த் துருவல் போட்டு பொரித்துத் தருவதும், அதை அப்படியே அலேக்காக மீன் ஊறுகாயாக மாற்றுவதும் அம்மாவின் ஸ்பெஷல்.

வாழ்க்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்று மீன் சமைக்கத் தெரிந்த மனைவி வாய்ப்பது என்று சொல்லலாம். மனைவியின் மீன் சமையலுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சுவை இருக்கும் போல ! அது அவருடைய அம்மாவின் அட்டகாசமான கைப்பக்குவத்திலிருந்து வந்ததென்பதில் சந்தேகமில்லை. எனது சகோதரிகளுக்கு அம்மாவின் அக்மார்க் கைப்பக்குவம் வாய்த்தது போல, எனது மனைவிக்கு மாமியின் அசத்தல் கைப்பக்குவம் வாய்த்திருக்கிறது !

வாழையடி வாழையாக வளர்கின்ற இந்த மீன் வாரிசுகள் தான் கடந்த தலைமுறையின் சுவையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார்கள். மீன் சாப்பிடாமல் இருந்திருந்தால் வாழ்வின் ஒரு உன்னத சுவையை இழந்திருப்பேன் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை.

மீன் உணவு குறித்து ஒரு நூல் எழுதுங்கள் என நண்பரும், பதிப்பாசிரியரும், மீன் பிரியருமான யாணன் அவர்கள் சொன்னபோது வந்து நீந்திய ஆயிரக்கணக்கான நினைவு இழைகளின் ஒரு சில வரிகளே நான் இது வரை சொன்னது !

ஒரு நூல் எழுதுவது என்பது நூறு நூல்களைப் படிப்பதற்குச் சமம். இத்தனை வருடங்களாக மீனைச் சாப்பிட்டு வந்தாலும் அதில் அடுக்கடுக்காய் இத்தனைப் பயன்கள் உண்டு என்பது சத்தியமாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. படிக்கப் படிக்கப் பிரமிப்பாய் இருந்தது, வியப்பாய் இருந்தது, மகிழ்ச்சியாய் இருந்தது ! எல்லாவற்றுக்கும் மேலாக மன நிறைவாய் இருந்தது ! அதற்காகவே நண்பருக்கு நிச்சயம் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லியாக வேண்டும். 

மீன் குறித்த வரலாறுகளைப் படித்தபோது ஒரு காலத்தில் சாதி, மத, இன வேறுபாடு ஏதும் இல்லாமல் எல்லோருமே மீன் சாப்பிட்டிருக்கிறார்கள் எனும் உண்மை தெரிந்தபோது வியந்தேன். ஆசிய ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒரு விரிவான ஆய்வு இந்தியாவில் மீன் கலாச்சாரம் பற்றியது ! அதில் வேதங்கள் தொடங்கி சாதிகளின் அனைத்து பிரிவுகளும் அலசப்பட்டிருக்கிறது. எல்லோருமே மீனை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள், சமைத்திருக்கிறார்கள், மீன் சார்ந்து வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் !

மீன் ஒரு சுவை சார்ந்த உணவு என்பதைத் தாண்டி, கலாச்சார அடையாளமாகவும், ஆரோக்கிய அடையாளமாகவும், அறிவின் அடையாளமாகவும் இருப்பதை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் மீன் பிரியராகவோ, மீன் எதிரியாகவோ இருக்கலாம். ஆனால் மீனைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது விண்ணப்பம் !

இந்த நூல் உருவாக்கத்துக்கு உதவிய அனைத்து நபர்களுக்கும், எனது நாவுக்கு மீன் சுவையை ஏதோ ஒரு விதத்தில் பகிர்ந்தளித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தரமான நூல்களை வெளியிடும் ப்ளாக்ஹோல் மீடியா நண்பர்கள் யாணன், திரு பிலால் இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

கடலுக்கும் மீன் அழகு - நம்
உடலுக்கும் மீன் அழகு !

“மீன்” டும் சந்திப்போம்
பிரியங்களுடன்

by சேவியர்.
WriterXavier@gmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீனில் உள்ள தோலையும் அதன் கீழ் உள்ள கொழுப்பையும் விலத்தி சாப்பிட வேண்டும். அதில் தான் கூடுதலான அளவு, நச்சு பொருட்கள் சேமிக்கபடுகின்றன என்று அண்மையில் வாசித்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனில் உள்ள தோலையும் அதன் கீழ் உள்ள கொழுப்பையும் விலத்தி சாப்பிட வேண்டும். அதில் தான் கூடுதலான அளவு, நச்சு பொருட்கள் சேமிக்கபடுகின்றன என்று அண்மையில் வாசித்தேன்

எனக்கு மீனில் பிரச்சினையே அதுதான் அண்ணா..அந்த தோலை உரித்துவிட்டு அதன் கீழ் இருக்கும் கருப்பாய் இருக்கும் கொழுப்பையும் எடுத்துவிட்டுதந்தால் எந்தமீனும் நல்லாய்தான் இருக்கும்..அவை இரன்டும்தான் அருவருப்பாய் இருக்கும்..மணத்தையும் தருவது மீனில்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது...

 

__________________________________________________________________________________

 

இந்தமாதிரி மீன்களைத்தான் நாங்களும் சாப்பிடுறது..  :unsure:  இதுக்குள்ளை மீன் மணம் எண்டு பில்டப் வேறை..? :D யாருக்காக சார் இந்த பில்டப்பு? :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி மீன்களைத்தான் நாங்களும் சாப்பிடுறது..  :unsure:  இதுக்குள்ளை மீன் மணம் எண்டு பில்டப் வேறை..? :D யாருக்காக சார் இந்த பில்டப்பு? :lol:

 

 

யோவ்..இசை அண்ணா...சும்மய் இருங்கப்பா..நான் எதை எழுதினாலும்..யாருக்கோ எழுதுறன் எண்டு..உங்கடை தொல்லை தாங்க முடியலைப்பா :D ...சும்மா எனக்கு பிடிச்சதை சொல்லவும் யாழில வழி இல்லையப்பா..இது ஜனநாயக மறுப்பு..சொல்லீட்டன்..அடுத்து மோகன் அண்ணாவுக்கு கொம்ப்ளேன் பண்ணப்போறன்..இசை அண்ணாவின் நிழலி அண்ணாவின் டாச்சர் பற்றி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்..இசை அண்ணா...சும்மய் இருங்கப்பா..நான் எதை எழுதினாலும்..யாருக்கோ எழுதுறன் எண்டு..உங்கடை தொல்லை தாங்க முடியலைப்பா :D ...சும்மா எனக்கு பிடிச்சதை சொல்லவும் யாழில வழி இல்லையப்பா..இது ஜனநாயக மறுப்பு..சொல்லீட்டன்..அடுத்து மோகன் அண்ணாவுக்கு கொம்ப்ளேன் பண்ணப்போறன்..இசை அண்ணாவின் நிழலி அண்ணாவின் டாச்சர் பற்றி.. :D

 

சுபேஸ்.. உங்கட அம்மா, அப்பா விருப்பத்துக்கு இந்த பில்டப்போ எண்டு நினைச்சன்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. உங்கட அம்மா, அப்பா விருப்பத்துக்கு இந்த பில்டப்போ எண்டு நினைச்சன்.. :D

 

மோகன் அண்ணா எண்டதும்...சீ.டியை மாத்திப்போடுறியள்...அந்தப்பயம் இருக்கட்டும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் சுபேஸ் வரவர கொஞ்சம் எல்லாரையும் வெருட்டுறியள் பாவம் இசை. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி மீன்களைத்தான் நாங்களும் சாப்பிடுறது..  :unsure:  இதுக்குள்ளை மீன் மணம் எண்டு பில்டப் வேறை..? :D யாருக்காக சார் இந்த பில்டப்பு? :lol:

 

அது தானே, இசை?

 

நாங்க என்னமோ மீனைப் பச்சையாச் சாபிடற மாதிரியெல்லோ, இந்தப் பொடிசுகளின்ர கதை போகுது? :D

  • கருத்துக்கள உறவுகள்

மீன் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ஞாபக சக்தி இருக்குமாம்

  • கருத்துக்கள உறவுகள்

மீன் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ஞாபக சக்தி இருக்குமாம்

 

ஆறு கடலுடன் கடக்கும் இடம்வரை வந்து, மீன் சாப்பிடத் தொடங்கின பிறகு தான், மனுசருக்கு விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்யலாம் என்ற ஐடியாவே உதித்ததாம் எண்டும் ஒரு கதையிருக்கு வாத்தியார்! :D

 

அவ்வளவுக்கு ஒமேகா-3 யின் சிறப்பு இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீனில் பிரச்சினையே அதுதான் அண்ணா..அந்த தோலை உரித்துவிட்டு அதன் கீழ் இருக்கும் கருப்பாய் இருக்கும் கொழுப்பையும் எடுத்துவிட்டுதந்தால் எந்தமீனும் நல்லாய்தான் இருக்கும்..அவை இரன்டும்தான் அருவருப்பாய் இருக்கும்..மணத்தையும் தருவது மீனில்..

எனக்குக் கிடைத்தவளைப் போல்

மீன் முள் எடுக்க தோல் உரிக்க

உங்களுக்கும் ஒருத்தி வருவாள்

கவலை வேண்டாம் சுபேஸ் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.