Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் மக்களே விழித்தெழுவது எப்போது?” மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

Featured Replies

அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே

விழித்தெழுவது எப்போது??” எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய

முஸ்லிம் இளைஞர் முன்னணி என D0020200002141421.jpgபெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில்

தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம்

மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களுக்கு இலங்கை

அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது.

கடந்த

ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம்

கேட்ட வாழ்வுப் பிச்சையின் காரணமாக அந்தப் பிரேரணையில் முஸ்லிம் நாடுகள்

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

ஆனால் இன்று எமது நிலை என்ன?

அரசாங்கத்தினாலும் பேரினவாதிகளாலும் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய

நாங்கள் காலின் கீழ் போட்டு மிதிக்க எத்தனிக்கப்படுவதுதான் வேதனையிலும்

வேதனையாக இருக்கின்றது.

இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியுமாக

இருந்தும் எமது சமூகத்தில் இருக்கும் எட்டப்பர்களான முஸ்லிம் அரசியல்

தலைவர்களின் செயல்களும் சிலரின் ஆழ்ந்த மௌனங்களும்தான் எம்மை எங்களை பெரும்

அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“16 பள்ளிவாசல்கள்

தாக்கப்பட்டிருக்கின்றன, இந்நாட்டின் இழி பிறவிகள் பன்றி உருவில் இறைவன்

பெயரை எழுதி பவனி வந்தார்கள், ஹலால் எனும் மார்க்கச் சட்டம்

முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது, ஹிஜாப் உடையும் காதி

நீதிமன்றமும் குறிவைக்கப்பட்டுள்ளது, வீடு புகுந்து தாக்கும் அளவிற்கு

நடுவீதியில் வைத்து நமது பெண்ணின் ஹிஜாபை கழற்ற முயற்சிக்கும் அளவுக்கு

நிலமை மோசமடைகின்றது, உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டு

இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுடன்

ஒட்டிக்கொண்டிருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு என மேடைகளில் முழங்கிய

அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களே!, எனக்கு தந்திருக்கும் பொருளாதார

பிரதியமைச்சு இந்நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்த கௌரவம் எனச் சொன்ன

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!, நோன்பு காலத்தில் கஞ்சிப் பானைக்குள்

சண்டை காட்டிய அமைச்சர் அதாவுல்லா அவர்களே!, மட்டக்களப்பு மாவட்டத்தின்

முதல் முஸ்லிம் முழு மந்திரி பஷீர் சேகுதாவூத் அவர்களே!, முஸ்லிம்

காங்கிரஸ் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என வீறாப்புப் பேசிய அகில

இலங்கை முஸ்லிம் காங்கிரஸை நிறுவிய அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே!

நீங்கள்

ஒரு முஸ்லிம் தாயின் வயிற்றில் பிறந்து கலிமாச் சொன்ன மறுமை பற்றிய பயம்

கொண்ட முஸ்லிம்களாக இருப்பீர்களேயானால் பிர்அவுன் முன்னிலையில் தைரியமாக

பேசிய மூஸா நபியை பாதுகாத்த அல்லாஹ் நம்மையும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை

உங்களுக்கு இருந்தால்,தற்காலிகமாகவேனும் இந்த அரசை விட்டு

வெளியேற்றுங்கள். உங்கள் அமானிதம் என்ன என்பதை முதலில் புரிந்து

கொள்ளுங்கள். கிழக்கு மாகாண சபையிலும் உங்கள் ஆதரவினை விலக்கிக்

கொள்ளுங்கள். அல்லாஹ்வை முன்னிருத்தி தைரியமாக சாத்வீகப் போராட்டத்தை

முன்னெடுங்கள். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு வாயைத் திறங்கள். தலைவர்

இறுதியாக எழுதிய புத்தகத்தை கொஞ்சம் தூசுதட்டிப் பாருங்கள். உள்ளிட்ட பல

விடயங்களை முன்வைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தேசிய முஸ்லிம் இளைஞர்

முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=3605

aleqm510.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இஸ்லாமிய சகோதரர்களைத் தூண்டிவிட்டு அடிவாங்கிக் கொடுக்க பிளான் பண்ணிவிட்டார்கள்..! :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம் சகோதரர்கள்தொடர்ந்தும் அமைதி காக்கவேண்டும், யாரும் வன்முறையை கையில் எடுக்க கூடாது இலங்கை இறையாண்மையை பாதிக்கும் செய்ல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது.

     .

கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம் கேட்ட வாழ்வுப் பிச்சையின் காரணமாக அந்தப் பிரேரணையில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

ஆனால் இன்று எமது நிலை என்ன?

“16 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன,

ஹிஜாப் உடையும் காதி நீதிமன்றமும் குறிவைக்கப்பட்டுள்ளது

 

சிங்கள பௌத்த ------ மனிதாபிமான செயற்பாடுகள் இவை!

இவற்றை ஜெனீவா வரை ஆதரிக்க வேண்டியது முஸ்லிம்களின் ஹலால்! எதிர்த்தால் ஹராம்!

 

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

ஜின்னா கடைசிவரை வெள்ளையருடன் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு கடைசி நேரத்தில் தனிநாடுகேட்டு சுயநலமாக பெற்றதால்த்தான் பாகிஸ்த்தான் சுயநலம் கொண்டவர்களால் ஆளப்படுகிறது. பாகிஸ்தானின் ஆரம்பமே தனியார் சுயநலத்தால் தொடக்கி வைக்கப்பட்டது. சுதந்திரத்தை பிரதானமாக வைத்து, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகளினால் நடாத்தபட்ட அமெரிக்க சுதந்திர போர் சரித்திரம் காணாத ஒரு நவீன நாட்டை உருவாக்கியது. எனவே இலங்கை முஸ்லீம்களை எந்த பாதையில் வழி நடத்த வேண்டும் என்ற பொறுப்பை சந்தர்ப்பவாதம் வைத்து சுயநல அரசியல் செய்யும் முஸ்லீம் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். 

 

எவ்வளவு இளிவாக இன்றுவரை இலங்கையில் தமிழர்கள் நடத்தபட்டாலும் அகிம்சை போராட்டத்திலும், ஆயுத போராட்டத்திலும் அவர்களை வழி நடத்த அவர்களிடம் தலைவர்கள் தோன்றினார்கள். முஸ்லீம்களிடம் இருக்கும் இந்த குறைபாட்டை உணர்ந்து அவர்களின் தலைவர்கள் சுயநலத்தை விட்டு மக்களுக்காக உழைக்க முன் வரவேண்டும். 

 

அரசியல் தலைமையை மார்க்கத்தை பேண என்று ஆக்குவதால் தான் சுய நலஅரசியல் ஆரம்பமாகிறது. மார்க்கத்தை பேணுவதை முஸ்லீம் அரசியல் வாதிகள் மதத்தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும். மக்களை வழி நடத்துவதைத்தான் அவர்கள் தங்கள் கையில் எடுக்க வேண்டும். உண்மையில் அது மத தலைவர்களையும் வழி நடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.

 

மதத்தை பேண வரும் அரசியல் தலைமைகளுக்கு தமது பதவிகளை தக்க வைக்க அதிகாரத்தை மத வெறியர்களுக்கு சார்பாக வளைக்க வேண்டி வருகிறது. இல்லையேல் பதவி இல்லை என்றாகிறது. தனது மதம், தனது கிராமம், தனது குடும்பம், தான் என்று அவர்களின் அரசியல் சிந்தனை சுருங்கி போகிறது. இதைத்தான்  அரசிலிருந்து வெளியேறும் படி கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்த பின்னரும் கக்கீம் தொடர்ந்தும் அரசில் இருக்கும் உண்மை.காட்டுகிறது.

 

முஸ்லீம் மக்கள் கேட்டது தங்களுக்கு மதத்தை பின்பற்ற சுதந்திரம். ஆனால் கக்கீமின் படி அவர் செய்ய வெளிக்கிட்டிருப்பது முஸ்லீம் மக்களுக்கு நன்மை. சுயநலமியான அவருக்கு இந்த கருத்துக்களுக்கிடையில் எப்படி அவரது அரசியல் வானம் சுருங்கியது என்பதை கண்டு கொள்வது கஸ்டம். முஸ்லீம் மக்களுக்கு தங்கள் மதத்தை பின் பற்ற சுதந்திரம் கிடைக்கும் போது அதன் தாக்கம், மற்றைய மதங்களுக்கும் கிடைக்கிறது, மற்றைய ஒதுக்கல் தளங்களான பெண்கள், மொழி, சாதி, பால் பாகு பாடு போன்ற கருத்துகள் எல்லாவற்றிலும் விழிப்பை அது கொண்டுவருகிறது. ஆனால் நன்மை செய்ய வெளிக்கிடும் கக்கிம் இப்போது மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில், முன்னேற்றங்களை தனக்கும், தனது வாக்காளர்களுக்குமிடையில் "முஸ்லீம்மக்களுக்கு நன்மை" என்ற அடிபடையில் சுய நலமாக பங்கிட்டுக்கொள்கிறார்.

 

இதனால் நாட்டின் பொது வளர்ச்சியாக இருக்க வேண்டிய பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களில் இருந்து விலத்தி நாடு செல்ல தனது பங்களிப்பை செய்கிறார். அதே நேரம் தனது அதிகாரத்தை தக்க வைக்க கக்கீம் அரசை இரந்து  சிறுபான்மை முஸ்லீம்களுக்கு நன்மை செய்வதாக காட்டும் நாடகத்தை ஆடும் பொது, அதே  அரசு தனது அதிகாரத்தை தக்க வைக்க தனது பெரும்பான்மை மக்களாகிய பௌத்தர்களுக்கும் நன்மை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதை மறந்து போகிறார். இதனால் தான் பள்ளிவாசல்களை இடித்து அந்த நிலங்களை பௌத்தர்களுக்கு கொடுத்துவிட்டு மதம் சாராமல் தனது வாக்காளார்களுக்கு தொழில் பெற்றுக்கொடுக்கிறார். 

 

இன்னும் காலம் தாழவில்லை. கக்கீம் இன்னொரு மியன்மார், இன்னொரு பாகிஸ்த்தான் தோன்றாமல் இன்னொரு சிங்கபூர், இன்னொரு அமெரிக்கா இலங்கையில் தோன்ற வேண்டுமாயின் தனது சுத்து மாத்து சுயநலத்தை மறந்து மக்களுக்காக உழைக்க முன் வரவேண்டும். கள்ளம் வைத்து தமிழரை நம்ம வைத்து ஏமாற்றலாம் என்ற சிங்கள அரசு பாதையில் போகாமல் இருக்கட்டும். தன் கையில் இருக்கும் ஏதுக்களை திறமையாகவும் புத்திக்கூர்மையுடனும் உபயோகப்படுத்தட்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கான சரியான தலைமை தேவை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.தற்போதைய தலைவர்கள் ஏமாற்று வித்தைக்காரர்கள் என்பதையும் உணர்ந்துள்ளார்கள். தனித்து நின்று சிங்களவர்களுடன் போராடி வெல்ல முடியாது என்பதை உணரும் நாள் வர வேண்டும்.

இவர்களால் என்னதான் செய்ய முடியும்? இராணுவம் ஆயுதமும் பின்புலப் பாதுகாப்பும் கொடுத்து தமிழர்களை அழிக்கச் சொன்னதைப்போல் இப்போது தயவுகளில்லை. முடிந்தால் இந்தியாவிற்குச் சென்று பயிற்சி பெற்று தமது பிரதேசங்களில் ஆயுதப் போராட்டங்களை நிகழ்த்தட்டும். தற்போது அரசாங்கத்துடனிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசை விட்டு விலகுவது அரசாங்கத்திற்கு ஒன்றும் பாதிப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் இலங்கையில் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது இஸ்லாமியத் தமிழர்களின் தலமையிலே தான் சாத்தியம். பெரும்பான்மைச் சிங்கள இனம் அதற்கு அடுத்த நிலையில் இருக்கப்போவது இஸ்லாமியத் தமிழர்கள். இவ்வாறான ஒரு சூழல் தவி்ர்க்க முடியாதது அதே நேரம் மிக ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விழிப்புணர்வு....முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் உங்கள் அடிவருடிகளை துடைத்தெறிய வேண்டியதே...

இது ஒரு வருடம் பழம் கதை இது பிறகு கக்கிம் 12 முறை கட்சி மாறிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.