Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல – கோத்தா ஆவேசம்

Featured Replies

சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல – கோத்தா ஆவேசம்

 

[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:19 GMT ] [ கார்வண்ணன் ]

 

gotabhaya-rajapakse.jpg

 

சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனியோ, அமெரிக்கத் தூதுவர் சிசன், அதிபர் ஒபாமாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுனரோ அல்ல என்று ஆவேசமாக கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. 

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் நிகழ்த்திய உரை குறித்து சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஇதழ் எழுப்பிய கேள்விக்கே அவர், இவ்வாறு கோபமாகப் பதிலளித்துள்ளார். 

“சிறிலங்காவில் இன்னொரு போர் வரும் என்று வெளிநாட்டு இராஜதந்திரி எதிர்வு கூறுவது சரியானதா? 

ஒரு தூதுவரின் கடமை இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே தவிர, அந்த நாட்டில் நல்லாட்சி குறித்து பாடம் எடுத்து உறவுகளை அழிப்பதல்ல. 

சிறிலங்கா ஒன்றும் அமெரிக்காவின் கொலனி அல்ல, அல்லது தூதுவர் சிசன் ஒன்றும் ஒபாமாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளுனரும் அல்ல. 

இந்த நாட்டு மக்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பாக உள்ளாரே தவிர, அமெரிக்கா அல்ல. 

அவரது அனைத்துலக கடப்பாடுகள் அவரது பொறுப்புகளின் ஒரு பகுதி தான். 

அவரது மிகப் பெரிய பொறுப்பு சிறிலங்கா மக்கள் தான்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130413108098

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?...... பாடல் இந்தியா

 

கழுத்திலிருந்தாலும் இரைதேட பாம்பு மண்ணில்தான் வந்து ஊரவேண்டும். கருடனுக்கும் அது தெரியும்!..... ஆடல் அமெரிக்கா.

கெஞ்சி கூத்தாடி ஆயுதம் தொழில்நுட்ப உதவிகள் வாங்கும் போது உந்த வரட்டு கவுரவம் வரவில்ல, இப்ப எல்லாம் முடிஞ்சு தானே இனிமேல் இவர்கள் என்னத்துக்கு என்று எண்ணுகிறார்கள் போதும். 

 



பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?...... பாடல் இந்தியா

 

கழுத்திலிருந்தாலும் இரைதேட பாம்பு மண்ணில்தான் வந்து ஊரவேண்டும். கருடனுக்கும் அது தெரியும்!..... ஆடல் அமெரிக்கா.

மிகச்சரியான வாக்கியம் நண்பரே

இவருடைய பேச்சில் லாஜிக் இல்லையே..

  • கருத்துக்கள உறவுகள்
இதை விமல் வீரவன்ச சொல்லலாம். அட நம்ம கருணா அம்மானும் சொல்லலாம்.
 
அமரிக்க சிட்டிசன் சொல்லி நாம அதை நம்புவோம் என்டால் கஷ்டம், கோத்தா மாமு.
  • தொடங்கியவர்

இதையே பொன்சேக்கா இந்தியாவுக்கு சொன்ன போது இந்தியா  பதில் நடவடிக்கை எடுக்காதா என்று நாம் ஏங்கியதுண்டு. பாகிஸ்த்தான், இத்தாலிய நேவி மீனவரை தாக்கினால் கடுமையாக நடந்து கொள்ளும் இந்தியா, இலங்கை  கணக்கில்லாத மீனவர்களை  அடித்து நொறுக்கியும், 550 மீனவரையும் கொலை செய்தபின்னரும் கேட்க முடியாமல் இருப்பதை அது தமிழ் மீனவர் என்பதால்தான் அப்படி செய்கிறது என்று நாம் தட்டிக்கழிக்கிறது. ஆனால்  இலங்கை மலையாள உபதூதுவரை இராணுவம் பலாலி முகாமை விட்டு வெளியே பொக சொன்ன பின்னரும் பின்னர் இந்தியாவால் அதை தட்டிகேடக முடியவில்லை. மெல்ல மெல்ல பின்னர் மனமோகன் சிங் "நாங்கள் சொல்ல  இலங்கை கேட்கவில்லை அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று கேட்டபின்தான் இந்தியாவுக்கு இலங்கை தூற்றும் போதோ அல்லது தாக்கும் அதை தட்டிக் கேட்பதில் சில சிக்கல் இருப்பதை தெரிந்து வைத்துதான் இலங்கை அப்படிச் செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். 

 

அமெரிக்காவுக்கு எது முடியும் முடியாது என்பதை வரும் காலங்களில் அவர்களும் வெளிவிடும் அறிக்கைகளை வைத்துத்துதான் சரியாகசொல்ல முடியும்.

எல்லாம் சீனா கொடுக்கிற தயவுதான் கோத்தாவை இப்படி எல்லாம் பேச வைக்கிறது

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனின் இராஜதந்திரமே சிறீலங்கனை சீனனின் கழுத்தில் ஏற்றிவைத்தது. இனி அதனை இறக்கவேண்டும் என்றால் இந்தியன் பெரும் விலை கொடுக்கவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
 
சீனாவின் கொலனி என்பது சரியான பதில்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புல் container கரன்சி நோட்டு செய்த வேலை.... அதாலதான் இவ்வளவோ பேச்சு....

சரத்த விட்ட மாதிரி ரனில விட்டிருக்கலாம்...

கரன்சி  ஆசை யாரை விட்டுது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புல் container கரன்சி நோட்டு செய்த வேலை.... அதாலதான் இவ்வளவோ பேச்சு....

சரத்த விட்ட மாதிரி ரனில விட்டிருக்கலாம்...

கரன்சி  ஆசை யாரை விட்டுது.

 

 

ரனில் வந்திருந்தால் தங்க தட்டில் பினாட்டு வைத்து தீத்தியும் விட்டிருப்பார் என்கிறீர்களா?? :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஒரு புல் container கரன்சி நோட்டு செய்த வேலை.... அதாலதான் இவ்வளவோ பேச்சு....

சரத்த விட்ட மாதிரி ரனில விட்டிருக்கலாம்...

கரன்சி  ஆசை யாரை விட்டுது.

ரனில் என்றால் கருணாவிற்கு கொடுத்த full container இஞ்சையும் கொடுத்திருப்பார். கோத்தா கொடுக்கிறதிலும் கறார், கொடுக்கிற கொஞ்சத்தையும் சவுக்காலை போட்டு போட்டுத்தான் கொடுக்குக்கிறார். வாங்கி வாங்கி முதுகு நோகுது. அதலைதான்....

  • தொடங்கியவர்

வேண்டுறத்து பயந்து வாலை முறுக்கிவிட்ட மாடுமாதிரி நாங்கள் ஓடுவதில்லை. கொடுத்துச் சிவந்தது எங்கள் கை. 

 

மகிந்தாவை விட்டால் தஞ்சம் இல்லாத அப்பாவிகளை கண்டிருக்கின்றோம்.

 

ஆனால் சரத்தை விட்டால் கருத்துக்கு தஞ்சம் இல்லாதவர்களை  இன்று வரை கண்டதில்லை. இன்று அது நிறைவேறியது.  சரத்தின் கதை எப்பவோ தேர்தல் நேரம் கூட்டமைப்பின் எதிரிகளால் கொழுத்தபட்ட வாணம். பல அரசியல் குழந்தைகள் வாணம் கொழுத்துவதாக எடுத்து எறிந்து விளையாடி உருவமே கெட்டுபோவிட்ட கொளுத்திய வாணகட்டை அந்த கதை. இன்றைய நாள் முழுவதும் இந்த குழந்தை அதை வைத்து விளையடுவதைப் பார்க்க பரிதாமாக இருக்கிறது. 

 

அரசு பணம் கொடுப்பதே புதுப்புது கற்பனைக்கதைகளை அவிட்டுவிட.  "கருத்து" என்ற சொல்லு வந்தால், யாழில் எல்லோரும் தன் தன் தனித்துவத்தை நிருபிப்பவர்கள். இந்த நிலை தொடர்ந்தால் போர்டித்து  யாழை இனி எந்த யாழின் ரசிகரும் வாசிக்க வரமாட்டார்கள். இவ்வளவு வங்குறொத்தென்றால் தயவு செய்த்து யாழின் அங்கத்துவத்தை காலி பண்ணலாம். அது யாழைக் காப்பாற்றும்  :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புல் container கரன்சி நோட்டு செய்த வேலை.... அதாலதான் இவ்வளவோ பேச்சு....

சரத்த விட்ட மாதிரி ரனில விட்டிருக்கலாம்...

கரன்சி  ஆசை யாரை விட்டுது.

 

அண்ணா திரும்பி வந்திட்டீங்களா?

நலமா இருகிறீங்களா?
 
என்னண்ணா இப்படி இடையிலே போய்விட்டீர்கள்?
இந்த புலிபினாமிகளின் கையில் தனியாக நான் மட்டும் மாட்டிவிட்டேன்.
இனி நீங்கள் வந்து விட்டீர்கள் இனிதான் அவர்களுக்கு இருக்கிறது பதிலடி.
 
"தம்பி உடையான் சண்டைக்கு அஞ்சான்" என்று ஒரு பழ மொழி உண்டு. நீங்க தாகுங்கோ அண்ணா என்னுடைய உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு.
 
கரன்சி நோட்டை கொண்டு சென்று பிரபாகரனுக்கு சுவிமிங் பூல் கட்டிய கதை அவிட்டு விடுங்கோ அண்ணா.
அப்பத்தான் இவர்கள் வாயை அடக்க முடியும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அண்ணா திரும்பி வந்திட்டீங்களா?

நலமா இருகிறீங்களா?
 
என்னண்ணா இப்படி இடையிலே போய்விட்டீர்கள்?
இந்த புலிபினாமிகளின் கையில் தனியாக நான் மட்டும் மாட்டிவிட்டேன்.
இனி நீங்கள் வந்து விட்டீர்கள் இனிதான் அவர்களுக்கு இருக்கிறது பதிலடி.
 
"தம்பி உடையான் சண்டைக்கு அஞ்சான்" என்று ஒரு பழ மொழி உண்டு. நீங்க தாகுங்கோ அண்ணா என்னுடைய உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு.
 
கரன்சி நோட்டை கொண்டு சென்று பிரபாகரனுக்கு சுவிமிங் பூல் கட்டிய கதை அவிட்டு விடுங்கோ அண்ணா.
அப்பத்தான் இவர்கள் வாயை அடக்க முடியும்.

 

ம் ம் ம் ம்  இருக்கிறன்   நீங்களும் மட்டி யோ ... அந்த சுவிமிங் பூல இன்னும் கண்டு புடிக்கலயாம் எண்டு ஒரு செய்தியையும் நேற்று வாசிச்சன் ... உண்மையோ ??

 

நான் எங்க போனன் ..... பூட்டினாங்க .. திறந்தாங்க ..

நீங்களும் அமேரிக்காவில தானே இருக்கிறீங்க .. உங்களுக்கும் மேலே எழுதி இருக்கிறது பொருந்துகிறதா பாருங்க.... :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தாவின்றை சிற்ரிசன் சிப் பச்சை. நம்முடையது சிவப்பா. அமெரிக்காவில் அப்படி ஒரு பாகுபாடு இருக்கா?

 

எழுத யாழ் கிடைதத் படியால் எழுதுகிறீர்கள். கோத்தாவின் ஊர் என்றால் எழுதி தந்ததை மட்டும்தான் கூற  முடியும். கருத்து சுதந்திரம் உள்ள நாடு இது. இது கோத்தாவின் கலனி அல்ல. நாம் விரும்பிய கையெழுத்து. நாம் விரும்பிய கருத்துபதை புரிய உங்களுக்கு சில கஸ்டம் இருப்பது கோத்தாவின் கருத்தை விட்டு மாறும் போது ஒவ்வொருதடவையும் முதுகில் விழுவதால் போலிருக்கு. 

 

 

சே குவோர என்னத்துக்காக போராடினான் என்பது தெரிந்திருந்தால் இப்படியான கருத்து வந்திருக்காது. அதுவும் அமெரிக்கா சார்பாக .... :lol: :lol:

 

கோத்தாவை யாழ் மக்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் .... ராஜபக்ஸ வுக்கு 43000 கூட்டமைப்புக்கு 65000 சரத்துக்கு 113000 போட்ட அவர்களுக்கு ....சரி பிழை தெரியும் ... :)

 

  • தொடங்கியவர்

சே குவோர என்னத்துக்காக போராடினான் என்பது தெரிந்திருந்தால் இப்படியான கருத்து வந்திருக்காது. அதுவும் அமெரிக்கா சார்பாக .... :lol: :lol:

 

கோத்தாவை யாழ் மக்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் .... ராஜபக்ஸ வுக்கு 43000 கூட்டமைப்புக்கு 65000 சரத்துக்கு 113000 போட்ட அவர்களுக்கு ....சரி பிழை தெரியும் ... :)

 

சேகுவாரா போராடியது பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பல முகங்களுக்குள் ஒழியும் PhD மனம் செய்த்துவைத்துக்கொள்ளும் விடயம். ஆனால் கோத்தாவின் தமிழ் கூலிகளுக்கு தமிழர் ஏன் போராடுகிரார்கள் என்பது தெரியாது. அது நகைப்பிற்கிடம். அது தெரிந்தால் இப்படி எழுத மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே சனம் கேட்குது துணிவிருந்தால் தேர்த்தலை வைக்கும் படி கொதிவதனம்.சா மதிவதனங்.  :D :D

 

  • தொடங்கியவர்

 

 

கோத்தாவை யாழ் மக்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் .... 

 

நம்பிக்கை இருந்தால் சரி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.