Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னான பொன்னாங்கண்ணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னான பொன்னாங்கண்ணி  ht1127.jpg

*தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.

*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம்.

*இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம்.

1.ரத்த சுத்ததிற்கு

ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். 

2.ஞாபக மறதி குணமாக

சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.

3.கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். 

4.பித்தத்தைக் குறைக்க

பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

5.பொன்னாங்கண்ணி தைலம்

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

6.தோல் வியாதிகள் குணமாக

சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

 

http://thachankurichymail.blogspot.in/2012/05/blog-post_11.html

ஒவ்வொரு உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் பொழுது வேறு வேறான மருத்துவக் குணம் தருவதாகக் கூறுகிறார்கள். உதாரணமாக பருப்புடன் சேர்த்துச் சமைக்கும் பொழுது ஒரு வித மருத்துவ பலனும், மிளகுடன் சேர்த்துச் சமைக்கும் பொழுது வேறு விதமான மருத்துவ குணமும் கொடுப்பதாகக் கூறுகிறார்கள்.

 

அதிகமாக வளர்வதால் அமெரிக்காவின் ஒரு பகுதியில் பொன்னாங்கண்ணி கீரையை களையாக

 தரம் பிரித்துள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஓரளவு கவனம் தேவை! அவுஸ்திரேலியாவின்,வடமாநிலத்து நதிகளிலும், நதிக்கரைகளிலும், 'Alligator Weed' என்று ஒரு விதமான் 'களை' உள்ளது. இதுவும் 'பொன்னாங்காணி' மாதிரித்தான் இருக்கும்! ஆனால், பூக்கள் கொஞ்சம் பெரிதானவை. இவற்றை, வீடுகளில் வைத்தால் இலகுவில் அழிக்கமுடியாது!

 

இவற்றில் ' மெர்க்குரி' அதிகம் உள்ளதால், மூளையைப் பாதிக்கும் தன்மை கொண்டது!

 

இதை ஏன் எழுதுகிறேன் எனில், எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நம்ம தேசத்து மனிதர்! அவர் இதை வைச்சுச் சாப்பிட்டுட்டு, வீட்டையும் வித்திட்டுப் போட்டார்! அவர் வைச்ச இந்தப் பொன்னான காணி மட்டும், வேலிக்குள்ளால பூந்து என்ர வளவுக்குள்ள வந்திட்டிது!

 

மனுசிக்கோ, தெய்வம் கூரையைப் பிச்சு என்னத்தையோ தந்துவிட்டது மாதிரித் தலைகால் புரியாத சந்தோசம்!

 

பிறகு, இதை நான் அறிவிச்சு, விவசாயத் திணைக்களம் வந்த மாதிரியையும், அவங்கள் கொண்டுவந்த சாமான்களையும், பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் கேட்டது, என்ன வீட்டில கஞ்சா வளத்தனீங்களோ எண்டு! :o

  • கருத்துக்கள உறவுகள்

-------

 

இதை ஏன் எழுதுகிறேன் எனில், எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நம்ம தேசத்து மனிதர்! அவர் இதை வைச்சுச் சாப்பிட்டுட்டு, வீட்டையும் வித்திட்டுப் போட்டார்! அவர் வைச்ச இந்தப் பொன்னான காணி மட்டும், வேலிக்குள்ளால பூந்து என்ர வளவுக்குள்ள வந்திட்டிது!

 

மனுசிக்கோ, தெய்வம் கூரையைப் பிச்சு என்னத்தையோ தந்துவிட்டது மாதிரித் தலைகால் புரியாத சந்தோசம்!

 

பிறகு, இதை நான் அறிவிச்சு, விவசாயத் திணைக்களம் வந்த மாதிரியையும், அவங்கள் கொண்டுவந்த சாமான்களையும், பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரன் என்னிடம் கேட்டது, என்ன வீட்டில கஞ்சா வளத்தனீங்களோ எண்டு! :o

 

புங்க்ஸ்... உங்களது பக்கத்து வீட்டுக்காரர், திரும்பவும்.... எங்கடை ஊர் ஆக்களுக்கா, பொன்னாங்காணியோடை வீட்டை வித்தவர். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்க்ஸ்... உங்களது பக்கத்து வீட்டுக்காரர், திரும்பவும்.... எங்கடை ஊர் ஆக்களுக்கா, பொன்னாங்காணியோடை வீட்டை வித்தவர். :D  :lol:

வித்ததும், தமிழ் ஆக்களுக்குத் தான்!

 

அதுமட்டுமில்லாமல், மனுசன் கருவப்பிலையில இருந்து, பொன்னாங்காணி வரை கிளப்பிக்கொண்டு தான் போனது! :D

 

விவசாயத் திணைக்களம், அங்கயும் போனதெண்டும், அவங்கள் என்னெண்டு இடத்தைப் பிடிச்சாங்கள் எண்டும், இன்னும் அவருக்குத் தெளிவில்லை!

 

இனிமேல், இப்படியான தாவரங்களை வளர்த்தால், கையில காப்புப் போடுவம், எண்டு சொன்னதாயும் கேள்வி! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வித்ததும், தமிழ் ஆக்களுக்குத் தான்!

 

அதுமட்டுமில்லாமல், மனுசன் கருவப்பிலையில இருந்து, பொன்னாங்காணி வரை கிளப்பிக்கொண்டு தான் போனது! :D

 

விவசாயத் திணைக்களம், அங்கயும் போனதெண்டும், அவங்கள் என்னெண்டு இடத்தைப் பிடிச்சாங்கள் எண்டும், இன்னும் அவருக்குத் தெளிவில்லை!

 

இனிமேல், இப்படியான தாவரங்களை வளர்த்தால், கையில காப்புப் போடுவம், எண்டு சொன்னதாயும் கேள்வி! :icon_idea:

 

அந்த மனுசன், கிணறு காவின ஏழாலையையைச் சேர்ந்தவராக இருப்பார்... என்று, என் உள்மனம் சொல்லுது.tongue.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனுசன், கிணறு காவின ஏழாலையையைச் சேர்ந்தவராக இருப்பார்... என்று, என் உள்மனம் சொல்லுது.tongue.gif

 

 

எனது பக்கத்து ஊரை இப்படியா நக்கலடிப்பது

  • கருத்துக்கள உறவுகள்

எனது பக்கத்து ஊரை இப்படியா நக்கலடிப்பது

 

ஏழாலைக்குப் பக்கத்தில் மல்லாகம், குரும்பசிட்டி தானே... உடையார்.

நீங்கள்...  மூளாய், சித்தங்கேணி பகுதியை சேர்ந்தவர் என, மனதில் நினைத்திருந்தேன். :)

ஏழாலைக்குப் பக்கத்தில் மல்லாகம், குரும்பசிட்டி தானே... உடையார்.

நீங்கள்...  மூளாய், சித்தங்கேணி பகுதியை சேர்ந்தவர் என, மனதில் நினைத்திருந்தேன். :)

 

 

வட்டுக்கோட்டை எண்ட மாதிரிக் கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை எண்ட மாதிரிக் கிடக்கு

 

வட்டுக்கோட்டை தொகுதிக்குள்.....  எல்லாம், வருது போலை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் பொன்னாங்கண்ணி மாதிரி இல்லையே.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாலைக்குப் பக்கத்தில் மல்லாகம், குரும்பசிட்டி தானே... உடையார்.

நீங்கள்...  மூளாய், சித்தங்கேணி பகுதியை சேர்ந்தவர் என, மனதில் நினைத்திருந்தேன். :)

 

சிறி நீங்க சொன்னது சரி, என்றாலும் அங்கு போய் வருகின்றானன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.