Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியச் சீனப் படையினர் தமது எல்லைகளுக்கு திரும்புகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர் தமது நிலைகளில் இருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு நிலவிய பதட்டம் தணிய ஆரம்பித்துள்ளது.

கடல் மட்டத்துக்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் இமாலய பனிப் பாலைவனப் பகுதியான டவுலட் பெக் ஒட்லி என்ற இடத்தில், சீன துருப்புக்கள் மூன்று வாரம் முன்பு அத்துமீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

 

சீனத் துருப்புக்கள் அங்கே தற்காலிக முகாம்களையும் அமைத்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு படையணியை சீனத் துருப்புக்களின் முகாமருகே இந்தியா நிலை நிறுத்தியது.

இந்த முறுகல் நிலை போரை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சங்கள் நிலவிவந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று இரு நாடுகளும் தத்தம் நிலைகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தன.

 

இந்திய சீன எல்லையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு எங்கே இருக்கிறது என்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே வேறுபட்ட கருத்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் கூட இந்திய எல்லைக்குள் தமது துருப்புக்கள் நுழையவில்லை என்றே சீனா கூறி வந்தது.

இராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், ராஜதந்திரிகள் மட்டத்திலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகே இந்த சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

 

சீனப் படையினர் தற்போது தமது கூடாரங்களை பிரித்து எடுத்து சென்று விட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் மே 9 ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பீஜிங் செல்லவுள்ளார்.

சமீபத்தில் பொறுப்பேற்ற சீனாவின் பிரதமர் லி கே கியாங் தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இரு வார காலத்தில் இந்தியா வரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருந்தாலும், இரு தரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130506_india_china_withdraw.shtml

  • கருத்துக்கள உறவுகள்

china-military-20130505-1.jpg

 

ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய – சீன படைகள் நேற்று ஒரே நேரத்தில் திடீரென திரும்பப் பெறப்பட்டன. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டதால் கடந்த 3 வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்தது.

இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள தெளலக் பெக் பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் 50 பேர் சுமார் 19 கி.மீ தூரத்துக்கு ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். சீனா தனது ஊடுருவலை கைவிட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது.

ஆனால் சீனா இதை நிராகரித்து தமது எல்லை பகுதியில்தான் ராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே 3 முறை கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று பிரிகேடியர் அதிகாரிகள் நிலையிலான கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனா தனது ராணுவத்தை திரும்பப் பெறப் போவதில்லை என மீண்டும் தெரிவித்தது. ஆனால் அடுத்த ஓரிரு மணி நேரத்திலேயே சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று மாலை இரு தரப்பினரும் மீண்டும் பேசியதில், உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, இந்திய – சீன படைகள் ஒரே நேரத்தில் திரும்பப் பெறப்பட்டன.


http://www.kathiravan.com/newsview.php?mid=35&id=12653

 


 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மாலை இரு தரப்பினரும் மீண்டும் பேசியதில், உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, இந்திய – சீன படைகள் ஒரே நேரத்தில் திரும்பப் பெறப்பட்டன.

 

லடாக்கில் உள்ள தண்ணீர் பிரச்சினையைப் பற்றி பேசியிருப்பார்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இராஜபக்ஸ தலையிட்டுத் தீர்த்துவைத்ததாக ஒரு தகவல்........

 

 

 

அப்பாடா ஒரு மாதிரி நாம வெள்ளைக்கொடி காட்டி சீனாக்காரனை போக வைச்சிட்டோம் . சண்டை இல்லாமல் ரத்தம் இல்லாமல் உயிர் பலி இல்லாமல் சீன ராணுவத்தை வெளியேற்ற காங்கிரசால் மட்டுமே முடியும் ஆகவே தேர்தலில் எல்லோரும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கோ. அப்பிடியே சீனாவுடன் புதிய ஒப்பந்தம் நாங்க கேட்கும் போதெல்லாம் இந்தியாவிற்குள் வாங்கோ அப்புறம் போங்கோ அப்பத்தான் நாங்க ஆட்சி அமைக்கலாம்- இதே முறைய பாகிஸ்தான் இராணுவத்துக்கும் செய்தால் நல்லது. வாழ்க ஜனநாயகம்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ம்கூம்... இதென்னவோ இந்த காணொளியில் 2.30 டூ 5.45 வருவதை போல கிடக்கு..

விவெக்: நீங்க அடிப்பீஙகன்னு தெரிஞ்சுதாண்டா வெள்ளை கொடியோட வந்தன்..

ரவுடிகள்: ஒரு தடவைக்கு காமிச்சா ஓக்கே.. இவன் கொடியோடவே சுத்துறான்

 

  • கருத்துக்கள உறவுகள்

பாத்து சூதானமாப் போங்கப்பா..இந்தியாவுக்குள்ளதான...ஒன்னும் அவசரமில்ல...

 

சீனா இப்போதைய நிலையில் இந்தியா தடுக்கா விட்டாலும் உள்ளே வர நிறைய ஒசித்தாக வேண்டும்.

 

1. சீனா உள்ளே வரும் பட்சத்தில் ஏற்படும் பொருளாதார வர்த்தக பாதிப்பு சினாவுக்கே மிக மிக அதிகம்

2. இரானின் ஒரு துறை முகத்தை இந்தியா கட்டமைக்க கடன் வழங்குகிறது அது சீனாவுக்கு 79+ km தொலைவில் உள்ளது

சீனா இப்போதைய நிலையில் இந்தியா தடுக்கா விட்டாலும் உள்ளே வர நிறைய ஒசித்தாக வேண்டும்.

 

1. சீனா உள்ளே வரும் பட்சத்தில் ஏற்படும் பொருளாதார வர்த்தக பாதிப்பு சினாவுக்கே மிக மிக அதிகம்

2. இரானின் ஒரு துறை முகத்தை இந்தியா கட்டமைக்க கடன் வழங்குகிறது அது சீனாவுக்கு 79+ km தொலைவில் உள்ளது

எந்த பக்கம் அளந்தாலும் ஈரானுக்கும் சினாவிட்கும் 79 கிலோமீட்டர் வராது ராசா

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பக்கம் அளந்தாலும் ஈரானுக்கும் சினாவிட்கும் 79 கிலோமீட்டர் வராது ராசா

 

அதானே.. :D இந்தச் செய்தி இன்னொரு இடத்தில் படித்ததாக ஞாபகம்.. எங்கேயென்று ஞாபகமிருக்கா அன்பு?

எந்த பக்கம் அளந்தாலும் ஈரானுக்கும் சினாவிட்கும் 79 கிலோமீட்டர் வராது ராசா

 

ஒரு ஆங்கில ஏட்டில் இடங்களைக் குறிப்பிட்டு சொல்லபட்டிருந்தது. ஆனால் இடம் சரியாக நியாபகம் வரவில்லை //

 

ஆப்கானிஸ்தான கணக்குல எடுக்காம சொல்லிப்பாங்க போல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.