Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

ப்ரும். ப்ரும் ப்ரும்... ப்ருர்... .ர்ர்ர்... ர்... பீப் பீப் பீ....ப்ருர்... .ர்ர்ர்... ர்...

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அடுத்து வெண்ணிலா....

நிலவில் தூங்கும் நிகழ்கால லேடி அப்பப்போ எல்லோரையும் நொட்டிச் செல்லும் சின்னவெண்ணிலா.

லொலிபொப் கேட்டு அடம் பிடிக்கும் இவர் அண்மையில் அடர்அவைக் கவி மேகத்தால் வாழ்க்கையில் லொலிப்பொப் கேட்கவே மாட்டேன் என்ற சபதத்துடன் காணாமல் போயுள்ளார்.

இந்த நிலாப் பெண்ணைப் பற்றி தகவல் கிடைத்தால் அறிவிக்க வேண்டிய இடம்

வம்பர் ஆரியா

வால்த் தோட்டம்

moongirl_nc.jpg

  • தொடங்கியவர்

இவர் இரசிகை பார்த்தால் சாது

இயற்கையை இரசிப்பார.; இவர் இருக்குமிடத்தில் காகங்கள் சூழ்ந்து ஒப்பாரி வைக்கும் வேறொன்றுமில்லை இயற்கையை இரசிப்பது அளவு கடந்து இறக்கைகளைப் பிய்ப்பதுவரைபோயிருக்கிறது. இதில் வரும் நிழற்படத்தில் புறாக்களோடு நிற்கிறாரே புன்னகை அரசி என்று ஏமாந்து விடாதீர்கள். யாழ்க்களத்துப் புலிகேசி காகங்களைப் புறாக்களாகக் கிராபிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார்

காகங்கள் அழும் இடத்தில் கட்டாயம் இந்தப் பேர்வழி இருப்பார்.

யாரேனும் அறிந்தால் அறியத்தரவும்.

ரௌத்திuசபை

பிரளயபுரம்.

1140060134_CMyDocumentsDoveLady.jpg

யாழ்கள உறுப்பினர்களின் படங்களும் விளக்கங்களும் அருமை ஆதிவாசி

  • தொடங்கியவர்

இவர் பித்தன் ஓ.....ஸாரி புத்தன் எல்ஸின் பிய்ந்த தொப்பிதான்

வேண்டுமென்று களவாடி ஓடியவர்தான் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அண்மையில் சிட்னியில் உலவுகிறார் என்று கந்தப்பர் தகவல் தந்துள்ளார் சிட்னி வாசிகள் யாராவது இவரைக்கண்டால் உடனடியாக கட்டி வைத்துவிட்டு ஆதிக்குத் தகவல் அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

அடர்அவை மன்னன் ஆதிவாசி

காட்டுக்குட்டை

PoorGuy.gif

  • தொடங்கியவர்

யாழ்கள உறுப்பினர்களின் படங்களும் விளக்கங்களும் அருமை ஆதிவாசி

யாழ்க்களத்திற்குள்ளும் அடர்அவை உறவுகளய்யா இவர்கள்

ஆதியை அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்கள் ஆற்றாமையில் ஆதி அடர் அவையின் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காணாமல்ப் போனோர் அறிவிப்பை வரையவேண்டி இருக்கிறது. நீங்களும் இங்கு இப்போது ஒட்டப்பட்டு விட்டீர்கள் விபரங்களைத் தந்தால் பின்னாளில் உதவியாக இருக்கும்

  • தொடங்கியவர்

இவர் மாறா இளமையுடன் உலா வந்த முருகன்.

என்றைக்குத் தினைப்புனத்து வள்ளிமயிலைக் கண்டாரோ இப்படி ஆகிவிட்டார். பழுத்த தள்ளாமையால் பசுங்கிளியை வளைக்கத் திட்டமிட்டு ஆதியின் ஆசியுடன் கானகக்குயிலைத் தேடிச்சென்றவர்தான் எத்தகவலும் கொடுக்கவில்லை. யானை அடித்துவிட்டதா? புூனை அடித்துவிட்டதா? எதுவுமே தெரியவில்லை

பொல்லாத முதுமை உச்சமேறி எங்Nகுனும் பிதற்றித்திரிகிறாரா? என்பதும் தெரியவில்லை. கானகம் செல்லும் களத்து உறவுகள் யாரேனும் இம்முதியோனைக் கண்டால் எப்பாடுபட்டேனும் இவ்விடம் சேர்ப்பீராக.

அண்ணன் மோதகவயிரோன்

கைலாசமலை

old-guy.gif

  • தொடங்கியவர்

என்னடாப்பா அறிவித்தல் போடப்போட வளர்ந்துகொண்டே போகிறது!!!!!!!

புண்ணியம் செய்த ஆத்மா அல்லிகா ஆதியின் கோலத்தை அலங்கோலம் செய்வதற்கே பிறவி எடுத்தவர்...... காணமல் போனவரை தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட முடியவில்லை பிறகு அவையில் ஆதிவாசி அல்லிகாவைக் கொன்றுவிட்டதாகக் கதைகட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காகவேணும் கட்டாயம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது புரிகிறதா புண்ணியம் செய்த ஆத்மா என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்று....

இவரின் mழகு கொழிக்கும் உருவம் இதுதான் கோமாளி மாதிரித் தெரிவார். கவனம் கூர்மையானதால் தாக்குவார்????? அதாங்க புத்தியையைச் சொல்கிறேன் எதிராளிகளை இலாவகமான வசைக்கத்தெரிந்தவர் மட்டுமல்ல வறுக்கவும் தெரிந்தவர் ஆதிவாசி அடிக்கடி வறுபட்ட அநுபவத்தால் கூறுகிறேன். சொல்ல மறந்து விட்டேன் இவரைப்பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டிய இடம்.

தசமத் தலையன்

இவர்தான் வெட்டுக்கொத்துக்குச் சரியான பேர்வழி

யாழ்க்களம்

el_vieux.jpg

  • தொடங்கியவர்

இவர் சயீவன் ஆளைக் கவனமாப் பாருங்கோ...

ஆதியின் வாலில் எப்போதுமே கண் வைத்துள்ளவர்.... ஒண்டுமில்லை ஆதியின் வாலை நறுக்கி ஆராய்ச்சி ஏதும் செய்து அதிசய சக்தி கிடைக்காதா? என்ற நப்பாசை இவருக்கு....

இப்பவெல்லாம் இவர் காணக்கிடைக்கிறதில்லை வேறை ஆருடைய வாலும் கிடைத்து விட்டதோ என்னவோ? காணவில்லைப் பட்டியலில் இவரைச் சேர்க்கிறதா விடுவதா? என்று யோசனையாக்கிடக்கு! திரும்ப வந்தாலும் இந்த வாலைத்தானே குறிவைப்பார்.... பார்வைக்கு பைத்தியம் மாதிரி விசர்குணத்தில் ஏதேனும் செய்தபடியே இருப்பார். எல்லாம் முடிஞ்ச பிறகு கேட்பார் என்ன நடக்குது என்று அறிய வெளிக்கிட்டு மாடிவீட்டுக்காரனுக்குத் தீனி போடுவார் இந்த மாதிரி குண இயல்போடும் அடையாளங்களோடும் யாரேனும் அகப்பட்டால் வாயைத் திறக்காமல் யாழ்க்களத்திற்கும் அங்கொடைக்கும் தகவல் கொடுக்கவும்

uhshawnmadscientist.JPG

  • தொடங்கியவர்

அடடா சின்னப்ஸ் வந்து விட்டார்....

எங்கே கோணி தேடிச்சென்ற சாத்திரியைக் காணோம்?

குருவே.... இந்தக் களத்தை சற்றுக்காலம் நீங்கள் கண்காணிக்க இயலுமா? ஒன்றுமில்லை ஆதிவாசியைக் கண்டாலே அலறி அடித்து ஓடுகிறார்கள்.........

வாலறுக்கத் தெரியாத வீரவான்கள்!!!!!!!

யாழ்க்களகிழவிகளிடம்

நாளை எனக்கு விடுமுறை நாள்....பதில்கள் வரும்...எதிர்பார்த்துக்காத்த

  • கருத்துக்கள உறவுகள்

வரவர ஆதிவாசிக்கு வாய்க் கொழுப்பு அதிகமாகி வருகிறது. தூயா முடிந்தால் என் சார்பிலும் கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்.

ஆதிவாசி காதல்வாசியான கதை எல்லோரும் அறிந்தது. ஆனால் இப்பொழுது ஒரு புதுக்கதை. அதாவது ஆதிவாசியை அவரது காதலி ( காதுல அலியென்று விழுந்தால் நான் பொறுப்பல்ல :lol::D

) அறுத்துவிட்டுட்டா (வாலை அல்ல காதலை). :D:D அதனால் இப்பொழுது ஆதிவாசி இப்படிப் பாடிக்கொண்டு திரிகின்றார். அவரின் கூட்டாளிகளும் அவருக்கு ஆதர(வாய் குரல்) கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆதி : புன்னகைகள் பூத்ததடி உன்முகத்திலே - அது

என்னகத்தைப் புண்ணாக்கிப் போனதென்னடி.

கூட்டு: அண்ணன் ஒரு குரங்கு! நீ அவரைப் பார்த்து இரங்கு!!

ஆதி: கண்ணடித்துப் போன உந்தன் கட்டழகிலே - நான்

கள்ளடித்த கருங்குரங்காய் ஆனேனடி.

கூட்டு:அண்ணன் இப்போ மப்பு! அதைத் தொடரவிட்டால் தப்பு!!

ஆதி: கொப்புக்கொப்பாய் தாவுவது என்னினமன்று - ஆனால்

கொப்புக்கொப்பாய் தாவுவது என்மனம்மின்று.

கூட்டு:பாரு இதைக் கந்தா! எம் அண்ணன் என்ன பந்தா!!

ஆதி: உன் பார்வைபட்டால் என்னிடையில் ஆடையும் உடுப்பேன் - கண்

பார்வைவிட்டால் மூன்றெண்ணிடையில் பாடையில் படுப்பேன்.

கூட்டு:அண்ணன் ஆயுள் நூறு! அதையழிப்பதென்ன கூறு!!

ஆதி: உந்தன்விரல் என்னில் பட்டால் கிடைக்கும் சொர்க்கம் - மாறி

எந்தன் விரல் உன்னைத்தொட்டால் வளரும் வர்க்கம்.

கூட்டு:பாரு இவரின் பாட்டை! விட்டால் கூடிவிடும் சேட்டை!!

ஆதி: வாலைக்கட்டி உன்னைவைத்துத் தேரிழுக்கவா? - இல்லை

வாலைவெட்டி எந்தன் காதல் புரியவைக்கவா?

கூட்டு:வாலு அவரின் உறுப்பு! அதைக் காப்பதுனது பொறுப்பு!!

ஆதி: மெளனம் உந்தன் மொழியென்று வாய்திறக்கவில்லையா - அப்ப

மரணம் எந்தன் வழியென்று நான் உயிர்துறக்கவா?

கூட்டு:ஐயோ இது பாவம்! காணும் உனது கோவம்!!

பாட்டு முடிகின்றது. ஆதி அழுகின்றது. :cry: :cry:

ஆதியின் உண்மை நிலமையை நன்றாக உணர்ந்து பாடல் படைத்த சுயீந்தனுக்கு நன்றிகள். அடப் பாவாம் ஆதிட நிலமை வர வர ரொம்ப மோசாமாகப் போகுது :lol: :cry:

  • தொடங்கியவர்

அப்பனே சுயிந்தா காதல்காட்டி வாலறுப்பா?

முடியாது.... ஆதி என்ன அலைஞ்ச பேர்வழியா?

பிரம்மச்சரியம் காக்கும் வாயுபத்திரனின் சகோதரனப்பா!

ஆதி----

புன்னகைகள் புூத்திருக்கு என் அகத்தில

பித்தமெல்லாம் கலைஞ்சு போஞ்சு அவ சிலிர்ப்பில

கண்ணடித்து போனதில்லை

கட்டழகில் சாய்ந்ததில்லை

கள்ளடித்து போதையேற்ற

கன்னி அவள் கவிதையில்லை

கோரஸ்--

ஆமாங்கண்ணோய்...!

ஆமாங்கண்ணோய்!.. நீங்க

பித்தங்கலைஞ்ச ஆதிங்கண்ணோய்!

ஆதி-----

கொப்புக் கொப்பாய் தாவினாலும்

கொள்கை மாற்றமில்லை

அற்பனென்று ஆட்டி வைத்தால்

ஆதி பெரும் தொல்லை

கோரஸ்---

ஆமாங்கண்ணோய்..!

ஆமாங்கண்ணோய்!.. நீங்க

பித்தங்கலைஞ்ச ஆதிங்கண்ணோய்!

ஆதி----

பார்வை பட்டு ஆடைகட்ட

ஆதிவாசி பேடையில்லை

கோத்து மாறும் விழிகளுக்காய்

பாடை ஏற மூடன் இல்லை

புன்னகைகள் புூத்திருக்கு என் அகத்தில

பித்தமெல்லாம் கலைஞ்சு போஞ்சு அவ சிலிர்ப்பில

கோரஸ்---

ஆமாங்கண்ணோய்..!

ஆமாங்கண்ணோய்!.. நீங்க

பித்தங்கலைஞ்ச ஆதிங்கண்ணோய்!

ஆதி----

விரல்கள் பட்டுத் தாபங்கொள்ள

வெள்ளி பார்க்கும் ஆதியா?

வினையறுக்க வேதம் செய்யும்

வீரக்குடி சாதியா?

கோரஸ்---

ஆமாங்கண்ணோய்..!

ஆமாங்கண்ணோய்!.. நீங்க

வீரக்குடிப் பிறப்புங்கண்ணோய்!

ஆதி----

நான் வாலைக்கட்டி தேரிழுக்க

அவள்.... அன்னை சக்தியா?

என் வாலை வெட்டி வாதையாக்கும்

இந்தக்..... காதல் தேவையா?

கோரஸ்---

வேண்டாங்கண்ணோய்..!

வேண்டாங்கண்ணோய்!..

ஆதி----

வாலை இழக்கும் காதல் இங்கு

வாழும் வரைக்கும் தேவையில்லை

பேழைக்குள்ளே ஒளிந்து வாழ

ஆதியிங்கு பேதையில்லை

கோரஸ்--

தேவையில்லை... தேவையில்லை

வாலை இழந்த காதல் வாழ்வு

அது ஆதி வாழ்வில் தாழ்வு!

தேவையில்லை.... தேவையில்லை

காதல் என்றும் தேவையில்லை

காதல் சொல்லி ஆதி வாலில்

கையை வைக்கும் எண்ணம்

ஆதி சபைச் சுயிந்தனுக்கு ஆருரைத்தது?

  • தொடங்கியவர்

நாளை எனக்கு விடுமுறை நாள்....பதில்கள் வரும்...எதிர்பார்த்துக்காத்த

  • தொடங்கியவர்

வரவர ஆதிவாசிக்கு வாய்க் கொழுப்பு அதிகமாகி வருகிறது. தூயா முடிந்தால் என் சார்பிலும் கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்.

அது என்னா கொழுப்பு?

  • தொடங்கியவர்

ஆதியின் உண்மை நிலமையை நன்றாக உணர்ந்து பாடல் படைத்த சுயீந்தனுக்கு நன்றிகள். அடப் பாவாம் ஆதிட நிலமை வர வர ரொம்ப மோசாமாகப் போகுது :( :cry:

எதிர்ப்பாட்டைக் கேட்டுச் சொல்லுங்க இரசிகையம்மா!

  • கருத்துக்கள உறவுகள்
கொழுப்பு கடையில விற்பினமே அதேதான்
  • தொடங்கியவர்

கொழுப்பு கடையில விற்பினமே அதேதான்

:(:lol::lol:

கிலோ என்னா விலைங்க?

வாய்க் கொழுப்பையும் வித்துப் பிழைக்கலாம்!!!!

கோரஸ்--

தேவையில்லை... தேவையில்லை

வாலை இழந்த காதல் வாழ்வு

அது ஆதி வாழ்வில் தாழ்வு!

தேவையில்லை.... தேவையில்லை

காதல் என்றும் தேவையில்லை

காதல் சொல்லி ஆதி வாலில்

கையை வைக்கும் எண்ணம்

ஆதி சபைச் சுயிந்தனுக்கு ஆருரைத்தது?

அட ஆதியும் தான் சளைச்சவர் இல்லை எண்டு பாடிக் காட்டிப் போட்டார். சூப்பர் ஆதி. அதுதான் அவக்காக உங்கட வாலை இழக்க முடியுமா என்னா??

  • தொடங்கியவர்

அப்படிப் போடு!... போடு இரசிகையம்மா

சுயிந்தன் வாளெடுத்தா..... சுள்ளான் வாளெடுத்தா....

ஆதி ஒண்ணுக்கும் அசையாது......

அப்பனே சுயிந்தா காதல்காட்டி வாலறுப்பா?

முடியாது.... ஆதி என்ன அலைஞ்ச பேர்வழியா?

பிரம்மச்சரியம் காக்கும் வாயுபத்திரனின் சகோதரனப்பா!

பிரமச்சாரியம் காத்தது வாயுபுத்திரன். அவரின் உடன்பிறப்பின் கைவரிசை யாரறிவார்? ஒருவேளை வாரிசைக் கேட்டுப்பார்த்தால் தெரியவரும். :(:lol:

நிலத்தில் ஆதி விழுந்தாலும்

வாலில் மண்ணு ஒட்டாது

களத்தில் ஏறி புழுகினாலும்

நாட்கள் பல நிற்காது

பித்தம் கலைந்துவிட்டதென்று

புத்தன் போல கத்தினாலும்

உண்மை என்றும் மறையாது

காட்டில் மாறித் தொலையாது

கொள்கை மாற்றம் இல்லை - அவளைக்

கைபிடிக்கும் கொள்கை

ஆதி பெரும் தொல்லை - பிறர்

கைபிடிக்கும் வேளை

உள்ளதைச் சொல்ல ஆதி சின்னப்

பிள்ளை இல்லை - இதில்

உள்ளத்தைச் சொல்லும் என்ற நினைப்பில்

நியாயம் இல்லை

கத்தரிக்காய் மலிந்தால் சந்தை

வந்து சேரவேண்டும்

காதல் கனிந்து வருங்கால் களம்

கண்டு தீரவேண்டும்

காதல் சொல்லி ஆதி வாலில்

கையை வைக்கும் எண்ணம்

ஆதி சபைச் சுயிந்தனுக்கு ஆருரைத்தது?

அன்று புருசுலீக்கு நடந்நது. :lol::lol: இன்று எமக்கு நடந்தது. :lol::lol: இரண்டையும் இணைத்து ஒரு புதுப்பாதை போட்டேன். ஆனால் அதிர்ச்சிகரமாக அதில் சென்ற வண்டி தடம் பிரண்டுவிட்டது. எனினும் விடமாட்டேன். :lol::lol:

சற்றும் மனம் தளராத சுயிந்தன். :lol::lol:

இந்த நேரம் பார்த்து எனக்கு விடுமுறை வருதில்லை....இருப்பினும் ஆதி உமக்கு ஒரு சாபம்..

வம்பிழுக்க ஆளில்லாமல் நீர் காலம் முழுவதும் தனியாக புலம்ப கடவாய்!!

நீங்கள் ஏன் ஆதியின்ரை அல்பத்திற்குள்ளை படம் களவெடுத்தனீங்கள்

(அப்பா மாதிரி வடிவான பிள்ளைகள்)

அதூங்களுக்கு எப்படி தெரியும் அவற்ற அல்பம் எண்டு அப்ப நீங்களும் இவரின் குடும்பம் போல இருக்கு அப்படியா

ஆதி உங்கள் வரிசுகளையும் கொண்டுவாரீங்க் போல நடத்துங்க நடத்துங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.