Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஆடி அமாவாசை

Featured Replies

இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் விரதம் இருக்கிறதாம்

ஆடி அமாவாசை பற்றி வீக்பீடியாவிலிருந்து.....

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.

நன்றி ரசி அக்கா தகவலுக்கு .....ம் சிவாலயத்துக்கும் தீர்த்தமாடவும் எங்க போறது?? நிறைய கறியும் சோறும் சமைச்சிருக்கு ஒரு பிடி பிடிக்கலாம் இண்டைக்கு.

இணைப்பிற்கு நன்றி ரசிகை

  • தொடங்கியவர்

நன்றி ரசி அக்கா தகவலுக்கு .....ம் சிவாலயத்துக்கும் தீர்த்தமாடவும் எங்க போறது?? நிறைய கறியும் சோறும் சமைச்சிருக்கு ஒரு பிடி பிடிக்கலாம் இண்டைக்கு.

எங்க தீர்த்தமாட வோஸ்ரூம் சிங்கில தான் :oops: :oops: :oops:

ம்ம் எங்க வீட்டை அப்பா விரதம் அதால நிறைய கறி சோறு. :P :P

இரண்டு பேரும் தின்னுறதிலேயே இருங்கோ. :evil: என்னைப் போலவே. :oops:

.....ம் சிவாலயத்துக்கும் தீர்த்தமாடவும் எங்க போறது??

சின்னப்புட்டை கேட்டா வடிவா பாதையையும் சொல்லுவார்தானே (குறிப்பு : தீத்தமாட போகும் போது வழித்துணையுடன் போகவும் )

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோர்களை நினைவு கொள்ளும் ஆடி அமாவாசை தினம் இன்று

-கா.சிவபாலன்-

சைவ மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்று அமாவாசை விரதம் ஆகும். ஆயினும் ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது. எமது வானசாஸ்திர கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ரேகையில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆத்ம காரகன் ஞான காரகன். இவர் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்தல் வேண்டும்.

"பிதிரு" என்பது தந்தையாரையும் "மாதுரு" என்பது தாயையும் குறிக்கும் சொற்களாகும். மாதந்தோறும் அமாவாசை விரதம் வருகின்றது. எனினும் தை அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புப் பெறுகின்றது. தட்ஷணாயன புண்ணிய காலத்தில் ஆடி அமாவாசை சாயரட்சையாக அமைகின்றது. இக் காலம் தேவர்களுக்கு எல்லாம் சாயரட்சை காலம்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடுதல் வேண்டும். பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது நம்பிக்கை ஆகும். யாழ்ப்பாணத்து மக்களுக்கு புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் உள்ள கண்டகி தீர்த்தம் புனிதம் பெறுகின்றது. மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் "அமிர்தகழி" தீர்த்தம் புனிதம் பெறுகின்றது. திருகோணமலை வாழ் மக்களுக்கு கேணேஸ்வரர் ஆலய தீர்த்தம் மகிமையைத் தருகின்றது. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுவதால் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.

நம்மவர்கள் அமாவாசையை சுபகருமங்களுக்கு ஒதுக்கி விட்டு விடுவார்கள். ஆயினும் இந்திய மக்கள் அமாவாசையை சுபகருமங்களுக்குப் பயன்படுத்தி செயற்படுவார்கள். ஆடி அமாவாசை அன்று சைவ மக்கள் தவறாது காத்த வெட்டியங்காய் பொரியல் செய்து உணவாகக் கொள்ளல் வேண்டும். இதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் உண்டு.

எனவே சைவ மக்கள் அனைவரும் ஆடி அமாவாசை தினத்தை முறையாக விரதம் அனுஷ்டித்து நமது இறந்த முன்னோர்களின் நல்லாசியையும் அருளையும் பெற்றுக் கொள்ள முற்படுவோமாக.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை , கந்தப்பு இருவருக்கும் நன்றியுங்கோ. அது சரி என்ன இரண்டு பேரும் ஒரெசெய்தியை கொப்பி பன்னியிருக்கிறிங்கள்.அது என்னது இந்து இருக்கிறடத்தில சைவத்தை பொட்ட வேற செய்தியோ.........

  • தொடங்கியவர்

ரசிகை , கந்தப்பு இருவருக்கும் நன்றியுங்கோ. அது சரி என்ன இரண்டு பேரும் ஒரெசெய்தியை கொப்பி பன்னியிருக்கிறிங்கள்.அது என்னது இந்து இருக்கிறடத்தில சைவத்தை பொட்ட வேற செய்தியோ.........

புத்தன் நான் வீக் பீடியாவில இருந்ததைத்தான் போட்டன். கந்தப்பு போட்டது பேப்பருல வந்ததாம். பேப்பருல போட்ட ஆள் அதைக் கொப்பி பண்ணி இருக்கிறார் போல :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.