Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சாவூரில் அதிநவீன சுகோய் போர் விமானங்களை நிறுத்துகிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SUKHOI-SU-30.jpg

இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. 

வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். 

சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. 

இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. 

தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களின் தரிப்பிடமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இங்கு சுகோய் போர் விமானங்களை நிறுத்துவதன் மூலம் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட வங்காள விரிகுடா முழுவதும், அவற்றின் கட்டுப்பாட்டில் வரும். 

அதேவேளை, இந்தியா நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களிலும்-சீன மற்றும் பாகிஸ்தானை அண்டிய பகுதிகளில் மேலும் சுகோய் விமான அணிகளை இந்தியா நிறுத்தவுள்ளது. 

ரஸ்யாவிடம் 272 சுகோய் போர் விமானங்களை வாங்க உடன்பாடு செய்து கொண்ட இந்தியா 170இற்கும் அதிகமான போர் விமானங்களை இதுவரை பெற்றுள்ளது. 

ஏற்கனவே மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயிலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரெய்லியிலும் தலா இரண்டு ஸ்குவாட்ரன் சுகோய் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. 

அசாமில் உள்ள தேஜ்பூர் மற்றும் சபுவா, பஞ்சாபில் உள்ள ஹல்வாரா, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சுகோய் ஸ்குவாட்ரன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

ஹரியானாவில் உள்ள சிர்சாவில் இன்னொரு ஸ்குவாட்ரனும், தேஜ்பூர், சபுவா, ஜோத்பூர், ஹல்வாரா ஆகிய தளங்களில் மேலும் ஒரு ஸ்குவாட்ரனையும் இந்தியா நிறுத்தவுள்ளது. 

இறுதி ஸ்குவாட்ரன் தஞ்சாவூரில் 2018இல் நிறுத்தப்படும். 

சீனாவின் வான் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் தேஜ்பூர், சபுவா, பரெய்லி ஆகிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக திபெத் பிரதேசத்தில் 8 நடவடிக்கை விமான தளங்களை நிறுவியுள்ள சீனா அவற்றில் 21 ஸ்குவாட்ரன் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. 

சீனா அண்மையில் ஜே-10, சுகோய் - 27 யுபிகே, சுகோய் - 30எம்கேகே போர் விமானங்களுடன் திபெத் பிரதேசத்தில் ஒத்திகைகளில் ஈடுபட்டது. 

ஹல்வாரா, சிர்சா, ஜோத்பூரில் உள்ள சுகோய் ஸ்குவாட்ரன்கள் பாகிஸ்தானின் எந்தத் தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் எவ்-16, சீனாவின் ஜேஎவ்-17, எவ்-7 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை கொண்டுள்ளது. 

காலம் கடந்த மிக் போர் விமானங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய விமானப்படையின் பலம் 34 ஸ்குவாட்ரன்களாக குறைந்துள்ளது. 

இதனால் இன்னும் அதிக போர் விமான அணிகள் தேவை என்றும், நவீன போரில் விமானப்படை பலம் மிக முக்கியமானது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய அடுத்த பத்தாண்டுகளில் 44 - 45 ஸ்குவாட்ரன்களை செயற்படுத்தத்தக்க வகையில், பிரான்சிடம் இருந்து 126 நடுத்தர பலநோக்கு போர் விமானங்களை 20 பில்லியன் டொலர் செலவில் இந்தியா வாங்கவுள்ளது. 

இதன்படி 18 போர் விமானங்களை பிரான்ஸ் தயாரித்து வழங்கும், ஏனைய 108 விமானங்கள் பிரெஞ்சுத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130514108260

 

இதில் தமிழ் நாட்டில் அமெரிக்கா கால் பதித்துவிடக்கூடாது என்ற முக்கியத்துவம் தான் காணப்படுகிறது. இலங்கையில் சீனா கால்பதிக்க கூடாது என்ற கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

SUKHOI-SU-30.jpg

------

இதற்கமைய அடுத்த பத்தாண்டுகளில் 44 - 45 ஸ்குவாட்ரன்களை செயற்படுத்தத்தக்க வகையில், பிரான்சிடம் இருந்து 126 நடுத்தர பலநோக்கு போர் விமானங்களை 20 பில்லியன் டொலர் செலவில் இந்தியா வாங்கவுள்ளது. 

-----

 

இதில் எத்தனை பில்லியன் டொலர் அரசியல்வாதிகளின், சுவிஸ் வங்கிக்கு போகுதோ.... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதைப்பற்றி யாரும் பெருசா அலட்டிக்கொள்ள தேவையில்லை ஏனெனில் யாரும் சண்டைக்கு வந்தால் இந்தியா சமாதானமாக பேசி முடித்து விடும்.  :D
சில வேளை இப்படி இருக்கலாம் சிறிலங்காமீது யாராவது போர் தொடுத்தால் மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம். :icon_mrgreen:   
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. 

http://www.puthinappalakai.com/view.php?20130514108260

 

கட்டேக்க நல்ல சிமெந்தை  போட்டு கட்டுங்கோ..அடுத்த புயலில் கழண்டு கொட்டிண்டாம..அடுத்த புயலுக்கு சிங்களவன் பிரபாகரன் என்று பெரும் வைக்கிற பிளானில் இருக்கிரதாக கேள்வி..

  • கருத்துக்கள உறவுகள்

கட்டேக்க நல்ல சிமெந்தை  போட்டு கட்டுங்கோ..அடுத்த புயலில் கழண்டு கொட்டிண்டாம..

 

அடுத்த புயலுக்கு சிங்களவன் பிரபாகரன் என்று பெரும் வைக்கிற பிளானில் இருக்கிரதாக கேள்வி..

 

எதிரி  என்றாலும் சிங்களவனின் முன் யோசனையை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் நிறுத்துவது எல்லாம் ஓக்கே.. தஞ்சாவூர் ஏற்கனவே பெரிய கோயிலை  பெற்றோரோடு  பார்க்க வரும் இஸ்கூல் பிள்ளைகள் ஏராளம்.. போகிற வழியில் அந்த விமானத்தை பார்த்து

" டாடி... எனக்கு அந்த பொம்மை  வேணும் ..டாடி..."


என்றால் என்ன செய்யமுடியும்?   கிந்தயன் கவர்மெண்டு அதை விலைக்கு கொடுக்க ஒப்புகொள்ளுமா..?

 

ரெல் மீ...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.