Jump to content

வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..!


Recommended Posts

வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..!

web-cam.jpgஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள்.

அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

எல்லாமே லைட்டிங் தான்:

வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போன்றதுதான். இங்கே நகரும் ஆப்ஜெக்ட்களைப் படம் பிடிக்கிறோம். எனவே போட்டோ எடுப்பதில் என்ன என்ன அம்சங்களை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ ,அவற்றையே இங்கும் நாம் பின்பற்ற வேண்டும். இதில் முக்கியமானது லைட்டிங்.

கேமராவின் எல்லையில் வரும் பொருட்கள் மற்றும் ஆட்கள் நல்ல ஒளியில் இருக்க வேண்டியது மிக அவசியம். இதனால் இவற்றின் இமேஜ் நல்ல ஒளியுடனும் துல்லிதமாகவும் இருக்கும். எனவே கம்ப்யூட்டர் முன் அமர்ந்து உங்களை வெப் கேமரா மூலம் படம் எடுப்பதாக இருந்தால் உங்கள் மீது ஒளி விழும் வகையில் சிறிய டேபிள் லைட் ஒன்றை மானிட்டர் அருகே உங்கள் மீது ஒளி விழும் வகையில் அமைப்பது நல்லது.

இதிலும் கூட ஒளி நேரடியாக உங்கள் மீது விழாமல் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு உங்கள் மீது விழுந்தால் உங்களுக்கும் கூச்சம் இருக்காது. ஒளியும் சிறப்பான முறையில் அமையும்.

பேக் ரவுண்ட் லைட்:

உங்களுக்குப் பின்புலத்தில் இருக்கும் ஒளி எவ்வாறு அமைய வேண்டும் என்பதனையும் இங்கு கவனிக்க வேண்டும். உங்கள் மீது விழும் ஒளியைக் காட்டிலும் பின்புறத்தில் மிகவும் பிரகாசமாக ஒளி இருந்தால் கேமராவில் உங்களுடைய உருவம் தெளிவில்லாமல் பிசிறடித்த நிலையில் இருக்கும்.

எனவே உங்கள் முன்னால் இருக்கும் ஒளியைக் கூடுதலான நிலையிலும் பின்புற ஒளியை அதற்கும் குறைவானதாக அல்லது திரை வைத்து நீக்கப்பட்ட நிலையிலும் வைக்க வேண்டும்.

கேமரா அமரும் இடம்:

வெப் கேமரா பயன்பாட்டில் கேமரா அமரும் இடம் முக்கியமான அம்சமாகும். உங்கள் கண்களுக்கு இணையான இடத்தில் கேமரா இருப்பது சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் தெளிவாக வெளிப்படும். குறிப்பாக பிசினஸ் குறித்த வீடியோ கான்பரன்ஸில் நீங்கள் இருந்தால் இது உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டும்.

எனவே நேர் எதிரே இருக்கும் மானிட்டரில் கேமராவை உங்கள் முகத்திற்கு இணையான கோட்டில் வைத்திடவும். அதே நேரத்தில் வெப் கேமராவிற்கு மிக நெருக்கமாக நீங்கள் செல்லக் கூடாது.

மானிட்டர் செட்டிங்:

வெப் கேமரா பயன்படுத்தும் போது உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரை முறையாக செட்டிங் செய்திட வேன்டும். பிரைட் னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் ஆகிய இரு செட்டிங்குகளையும் கூடுமானவரையில் குறைத்தே அமைக்க வேண்டும். இதனால் மானிட்டரில் இருந்து வரும் ஒளி உங்கள் முகத்தில் அடிக்காமல் இருக்கும்.

வெப் கேமராவில் நீங்கள் பிடிக்கப்படுவதாக இருந்தால் வெள்ளை நிறத்தில் சட்டை அணிவது நல்லது. இதனால் நல்ல ஒயிட் பேலன்ஸ் கிடைக்கும். நீங்கள் எல்.சி.டி. மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால் மேலும் ஒரு கூடுதல் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வகை மானிட்டரில் போலரைசிங் லைட் வெளிப்படும். இதன் குவியல் படுகையில் உங்கள் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தால் அது பிரதிபலிக்கப்படும். எனவே கேமரா லென்ஸ் முன்னால் ஒரு போலரைசிங் பில்டர் பொருத்துவது அவசியம்.

பதியும் முன் பொறுமை:

தொடர்ந்து உங்களைப் படம் பிடித்து பதிவதாகவோ அல்லது உடனுடக்குடன் அனுப்புவதாகவோ இருந்தால் பதியத் தொடங்குமுன் சில விநாடிகள் காத்திருக்கவும். ஏனென்றால் வெப் கேமராவிற்கு போகஸ் செய்து பெறும் படத்தை அட்ஜஸ்ட் செய்திட சிறிது நேரம் தேவை.

எனவே பதியும் பட்டனை அழுத்திய பின்னரும் சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்து பின் உங்கள் பாடலை ஆடலை வைத்துக் கொள்ளுங்கள்.

ஆடியோ பைல்கள்:

வெப் கேமரா பயன்படுத்துகையில் உங்கள் குரலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனைச் சார்ந்து இருக்க வேண்டாம். கிளிப் ஆன் மைக் அல்லது ஹெட்செட் மைக்ரோ போனைப் பயன்படுத்தவும்.

ஏனென்றால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனால் தெளிவாக ஒலியைப் பதிவுசெய்திட இயலாது.

மேலே சொன்ன டிப்ஸ்களுடன் தொடர்ந்து கேமரா பயன்படுத்துகையில் கிடைக்கும் அனுபவத்தினையும் இøணைத்து உங்கள் கற்பனையுடன் வெப் கேமராவினைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான ஒரு கேமரா மேனாக/பெண்ணாக நீங்கள் உருவாகலாம்.

 

 

http://thisaikaddi.com/2013/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப் கேமரா பயன்பாடு

 

 

இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விடயங்கள்:

  1. உங்கள் கணணியில் வெப்கேமரா தனியாக வாங்கி பொருத்தி இருந்தால், கேமார பயன்பாடு இல்லாதபோது அதன் இணைப்பை கணணியிடமிருந்து துண்டித்துவிடவும்.
  2. மடிகணணியாக இருந்தால், கணணியின் செட்டிங்கிற்கு (Device Manager) சென்று கேமராவை செயலிழக்கச் செய்துவிடவும். பின்னர் வேண்டுமெனில் இதே இடத்திற்கு வந்து மறுபடியும் செயல்பட செய்ய இயலும்.
  3. MSN, Yahoo, Skype, Gtalk போன்ற சாட்டிங் மென்பொருள்களில் உங்களுக்கு முன்பின் அறியாத யாரையும் (everyone) கேமெரா மூலம் பார்க்கும் வசதியை மாற்றி, உங்களுக்கு தெரிந்த, தொடர்பிலுள்ள, விரும்பும் நபரகள் மட்டுமே (Contacts only) கேமரா மூலம் உங்களைக் காண செட்டிங்-ஐ மாற்றியமைத்துக் கொள்ளவும்.
  4. உங்கள் கணணியில் உங்களுக்கே தெரியாமல் புலநாய்வு செய்யும் ஸ்பைவேர்(Spyware)மென்பொருட்கள் அமர்ந்து உங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கேமரா மூலம் மற்றவருக்கு அனுப்பும்படியாக இருக்கலாம். அடிக்கடி இவற்றை நீக்க உங்களின் கணணியினை முற்றிலுமாக் ஸ்கேன் (Scan) செய்து வைரஸ் மற்றும் ஸ்பைவேர் ஃப்ரீயாக (Spyware free) வைத்துக்கொள்ளவும்.
  5. மிக முக்கியமாக, உங்கள் கணணியினை உங்களின் படுக்கை அறையிலோ, ஒப்பனை செய்யும் அறையிலோ, குளியல் அறையிலோ எப்பொழுதும் பயன்படுத்தாதீர்கள். (அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் கேமராவை முற்றிலும் துண்டித்து செயலிழக்கச் செய்துவிட்டு பயன்படுத்தலாம்.)

 

ஆபத்து வருமுன், விழிப்புடனிருந்து தற்காத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெப் கேமரா பயன்பாடு

 

 

இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விடயங்கள்:

  1. உங்கள் கணணியில் வெப்கேமரா தனியாக வாங்கி பொருத்தி இருந்தால், கேமார பயன்பாடு இல்லாதபோது அதன் இணைப்பை கணணியிடமிருந்து துண்டித்துவிடவும்.

 

இணைப்பை துண்டித்து, மினக்கெடுவதிலும் பார்க்க... வெப்கமெராவை, ஒரு துவாய்த் துண்டால்... போர்த்தி விடலாம். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பை துண்டித்து, மினக்கெடுவதிலும் பார்க்க... வெப்கமெராவை, ஒரு துவாய்த் துண்டால்... போர்த்தி விடலாம். :D  :icon_idea:

 

அங்கதான் 'சிறி' நிக்கிறார்! :lol:

 

  1. துவாய் துண்டு நல்ல தடிமனாக இருக்க வேண்டும்.
  2. வேணுமென்டால் இரண்டு, மூன்று துவாய் துண்டால் மொத்தமாக போர்த்திக்கொள்ளவும்.(கேமராவை - உங்களை அல்ல!)

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது முகட்டை பார்க்க விடுங்கள்

கூரையால ஆரும் இறங்கிவந்தாலும் தெரியவரும்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
    • பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. “சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   சந்திரயான்-4 திட்டம் என்ன? சந்திரயான் -4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக, LMV-3 மற்றும் PSLV ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. விண்கலம் நிலவில் தரையிறங்கி, தேவையான மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஒரு பெட்டியில் அடைத்து, நிலவிலிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். அது வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் இந்தியாவை அடுத்த நிலைக்கு இந்த திட்டம் கொண்டு செல்லும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செய்ய, தனித்தனி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்றார். நிலவின் மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “சர்வதேச அளவில், நிலவு ஒப்பந்தத்தின் படி (Moon Treaty 1967) நிலவை தனி ஒரு நாடு சொந்தம் கொண்டாட முடியாது. நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், அந்த மாதிரிகளை ஆய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். காலாவதியாகவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, உலக நாடுகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாது. இந்நிலையில், இந்தியா தனது நிலவு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.   நிலவு மாதிரிகளை இதுவரை எடுத்த வந்த நாடுகள் எவை? நிலவை ஆராய்வது பல நாடுகளுக்கு முக்கியமான செயல். இது அறிவியல் ஆர்வத்தால், புதிய கண்டுபிடிப்புகளால், மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்ற எண்ணத்தால் செய்யப்படுகிறது. சில நாடுகள் நிலவின் மேற்பரப்பிலிருந்து மண் மாதிரிகளை சேகரித்து வந்துள்ளன. இது நிலவு எப்படி உருவானது, அதன் உள்ளே என்ன இருக்கிறது மற்றும் அதன் வரலாறு பற்றி நமக்கு முக்கியமான தகவல்களைத் தருகிறது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதில் முன்னோடிகள். அமெரிக்கா 1969 முதல் 1972 வரை நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நிறைய மண் மாதிரிகளை கொண்டு வந்தது. 1970களில் சோவியத் யூனியன் தனது லூனா திட்டங்கள் மூலம் ரோபோக்களை கொண்டு, நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தது. சமீபத்தில் 2020ல், Chang’e-5 என்ற விண்கலத்தைக் கொண்டு சீனா நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் விரைவில் நிலவிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நிலவைப் பற்றி மேலும் புரிதல்களைப் பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.   நிலவின் மண், நிலவைப் பற்றி என்ன சொல்கிறது? ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலவின் மண் மாதிரிகள் மூலம் நிலவின் வயது, அதன் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் மனிதர்களுக்கு தெரியவந்தன. நிலா ஒரு பெரிய மோதலால் உருவானது, அதில் எரிமலைகள் இருந்தன, அதன் துருவப் பகுதிகளில் உறைந்த நிலையில் நீர் இருக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல்கள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு மிகவும் முக்கியம். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அங்கே பயனுள்ள பொருட்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்கவும் உதவலாம். அமெரிக்காவின் நாசா பூமிக்கு கொண்டு வந்த மண், பாறை மாதிரிகள் நிலவின் மேற்பரப்புக்கு எத்தனை வயதாகிறது என்பதை கணிப்பதில் முக்கிய பங்காற்றின. அமெரிக்காவின் அப்பொலோ திட்டங்களின் மூலம் கிடைத்த மாதிரிகளை ஆராய்ந்த போது, நிலவில் இருக்கும் Basalt, (எரிமலை வெடிப்பின் காரணமாக உருவான கரும்பாறைகள்) 3.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39l1kmvp3vo
    • இந்த இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை. தமிழ்க் கல்வியை வலியுறுத்தாமல் தமிழராக எவ்வாறு ஒன்றிணைய முடியும்???
    • 21 SEP, 2024 | 06:04 AM மட்டக்களப்பு கல்லடி - உப்போடை பேச்சி அம்மன் ஆலயம்  வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி உப்போடையில் அமைந்துள்ள  சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில்  வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ பெரும் சுவாலையாக  பிரகாசமாக எரியத் தொடங்கியதைaடுத்து, அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் கோயில் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியது பேச்சி அம்மனின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில், தீ பற்றியதை  கேள்வியுற்ற அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து கோயிலை சூழ்ந்து கொண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கோயில் மூலஸ்தானம் தீபற்றியதை கண்டுற்ற பல பக்தர்கள் கத்தி கதறி அழுது புலம்பியும் பெரும் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/194224
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.