Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் விரைவில் ஏலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்திரங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், மீன் பிடி இழுவை படகுகள் மற்றும் வங்கிகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை உறுதிபடுத்திய பிறகு கடந்த வாரம் பறிமுதல் செய்துள்ளோம்.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அரசு சார்பற்ற நிறுவனத்தினால் வாங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள், 3 மாடி குடியிருப்பு கட்டிடம், கொட்டாஞ்சேனையில் இருக்கும் அச்சகம், கட்டுநாயக்கவில் உள்ள நிலமும் அடங்கும்

இந்த நிலங்களை கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தவே அதன் அருகில் விடுதலைப் புலிகள் வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்"..

 

இதேபோல் இன்னும் உரிமை கோரப்படாத மற்றும் உரிமையாளர்களை அறிய முடியாத வங்கி வைப்புக் கணக்குகள் பல உள்ளது. அவையும் புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்ர்.

மேலும், வங்கிகளில் புலிகளுக்கு சொந்தமான ஒரு பில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவையும் விரைவில் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15658

 

 

 

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அரசு சார்பற்ற நிறுவனத்தினால் வாங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள், 3 மாடி குடியிருப்பு கட்டிடம், கொட்டாஞ்சேனையில் இருக்கும் அச்சகம், கட்டுநாயக்கவில் உள்ள நிலமும் அடங்கும்

இந்த நிலங்களை கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தவே அதன் அருகில் விடுதலைப் புலிகள் வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்"..

கொட்டாஞ்சேனைக்கு பக்கத்தில் இருக்கும் விமானத்தளம் எதுவாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்

 

சிறி லங்கா விரைவில் பணக்கார நாடக மாறப் போகின்றது :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க இருக்கிற சொத்து எல்லாத்தையும் மனேச்சர்மாரா இருந்தவை சுத்தி போட்டினம் ....

தலைவர் வந்தாப்புறகு குடுப்பம் எண்டு சொல்லுறவை குடுப்பினம் .... பாத்துக்கொண்டு இருங்கோ ....

அங்க புலியள் பறிச்சு எடுத்து முகாம் அமைச்ச  காணிகளையும் எடுத்திருந்தா சோக்கா இருந்திருக்கும் ....

புலியள் மக்களிட்ட பறிச்சு எடுத்து முகாம் அமைச்ச காணிகள குடுத்து கொண்டு வாறதா சொல்லுறாங்க ....

எவ்வளவு குடுக்கிராங்களோ  காலம் தான் பதில் சொல்லும் .... :icon_idea:
 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சாப்பாட்டிற்கு.. 5 ரூபா அறவிட்ட போது.. எம்மவரில் பலர்.. குத்தி முறிந்தார்கள். இப்ப கோடி கோடியா சிங்களவன் கொள்ளை அடிக்கேக்க.. கம்மென்று இருக்கிறார்கள்.

 

புலிகள் அரைப் பரப்பில.. காம் போட்டது.. தென்னை வைச்சது..பெரிசாத் தெரியுது. சிங்களவன் ஏக்கர் கணக்கில பிடிக்கிறது.. தூசா தெரியுது. இந்த மன நிலை உள்ள வரை தமிழருக்கு விடிவாவது.. மண்ணாங்கட்டியாவது..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியை சுத்தி உள்ள காணிகளை ஆமி தானே எடுத்து அதை இன்னும் விரிவாக்கி இருக்கும் சனத்தையும் கலைக்கிறான். மதி கெட்ட வித்துவான்கள் அதைப்பற்றி பேச்சை காணவில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுவன் காணியளும்  விடுபடேல்ல ....

இங்க உள்ள கோதாரி விழுவார் ....

புலிக்கொடி புடிச்சா அங்க விட்டிட்டு போவானோ ????

அங்க புடிச்சு வச்சிருக்கிறது இங்க பலருக்கு விருப்பம் ....

அதான் புலிக்கொடி இங்க பறக்குது .... :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
திருப்பி கொடுக்கிறது என்றால் என்ன என்றல்லோ டக்ளஸ் கேட்பார்?  :lol:
 
முன்பு: இழந்த காணிகளை பெற்று தருகிறேன் எனக்கு வாக்களியுங்கள்.
இப்போ: வாக்களியுங்கோ. காணிகளை பெற்று தருகிறேன்.என்னே சுத்துமாத்து. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.