Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தரப்பினரும் தமது இராணுவ நடடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும

Featured Replies

இரு தரப்பினரும் தமது இராணுவ நடடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்

திருமலைத் தாக்குதலை அடுத்து நோர்வேயில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இரு தப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த யுத்தமானது போர் நிறுத்தம் ஏற்றபட்ட பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மோசமான சம்பவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்திவிட்டு யுத்தம் ஏற்படுவற்கான காரணங்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து பேசித் தீர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டபோது எந்ததெந்த நிலைகளில் இரு தரப்பினரும் இருந்தார்களோ அந்த இடங்களுக்கு அனைவரும் செல்லவேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு.

  • தொடங்கியவர்

சிறிலங்கா தோத்து ஒடிச்சென்றால் வருவினம். தாக்குதலை நிப்பாட்டுங்க என்று மத்தியஸ்தம் செய்ய. சிறிலங்கா விமான, செல் தாக்குதல் நடத்தேக்க எங்கபோயாம் நித்திரை கொண்டவை. :twisted: :twisted:

தமிழ்மக்களின் இழப்பை இவர்களால் ஈடுசெய்யமுடியுமா? புலிகள் இதற்கெல்லாம் இணங்கமாட்டார்கள்

யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டபோது எந்ததெந்த நிலைகளில் இரு தரப்பினரும் இருந்தார்களோ அந்த இடங்களுக்கு அனைவரும் செல்லவேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

யோவ் எரிக்.. சும்மா நை நை என்று கொண்டு......... :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களுக்கு வேற வேலை இல்லை. கடமை உணர்ச்சி அதிகமா இருக்கிற மாதிரி சும்மா அறிக்கை விடுற.

தமிழர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது இவர்கள் எங்கிருந்தார்கள். சிங்களம் விமானத் தாக்குதலை நடாத்தும்போது கண்டித்திருக்கலாமே. அதன் பின் அணைக்கட்டைத் திறக்கிறோம் என்று போட்டு சிங்களம் தாக்கும் போது கண்டித்து தாக்குதலை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருக்கலாம்தானே? இதில் வேடிக்கை என்னவென்றால்

இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்திவிட்டு யுத்தம் ஏற்படுவற்கான காரணங்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து பேசித் தீர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரும்தானே பல பேச்சுவார்த்தை மேசைகளில் கலந்து கொண்டவர். சிங்களம் சொன்னதில் என்னத்தை நிறைவேற்றியது என்று இவருக்குத் தெரியும்தானே. அப்ப யார் என்ன செய்ய வேணும் எண்டு தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லரசு சொல்லியிருக்கும்.இனிமேல் அரசாங்கம் மூதுரை மீட்கமுடியாது என்று அவையளுக்கு தெரியும்தானே? இப்படியாவது இழந்த இடங்களை பெற்றுக்கொடுப்போம் என்று அவை நினைத்திருப்பினம். :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

மோதலை நிறுத்துமாறு எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள்

இலங்கையில் இருதரப்பும் மோதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கைக்கான நோர்வே அமைதித் தூதுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியிலிருந்து நீர் விநியோகம் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இருதரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய நிலைமையானது இனப்பிரச்சனை விடயத்தில் இராணுவ மோதலை உருவாக்கக் கூடும். இந்த நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

"இருதரப்பினரும் தற்போதைய போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுக்களுக்குத் திரும்ப வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நீர் விநியோகத்தைக் கண்டிப்பாக திறந்துவிட வேண்டும். இருதரப்பும் போரினை நிறுத்தி, தமது போருக்கு முன்னதான தத்தமது பழைய நிலைகளுக்கு திரும்ப வேண்டும்" என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இணைத்திருப்பதனால் டேனிஸ், பின்லாந்து மற்றும் சுவிடன் நாட்டு கண்காணிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் நோர்வேயின் சிறப்புத் து}துவர் ஜோன் ஹென்சன் பௌயர் நாளை 3ம் திகதி நோர்வேயிலிருந்து புறப்பட்டு, மறுதினம் வெள்ளிக்கிழமை (04.08.06) இலங்கை வருகை தருகிறார். இருதரப்பினருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

"கண்காணிப்புக் குழுவினரது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சு நடத்த நான் ஹன்சன் பௌயரை அனுப்பி வைத்துள்ளேன். மிகவும் சிக்கலான கட்டத்தில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே நாட்டினர் பாரிய பங்காற்றியுள்ளனர். தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இருதரப்பினரும் யுத்த நிறுத்தத்தை மதித்துச் செயற்படும் வகையிலனதாக இருக்கும்" என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என நோர்வே வெளிவிவகார அமைச்சு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

இருதரப்பும் போரினை நிறுத்தி, தமது போருக்கு முன்னதான தத்தமது பழைய நிலைகளுக்கு திரும்ப வேண்டும் என்று எரிக் சொல்கைம் சொல்கிறார். இராணுவம் பிடித்திருந்தால் சொல்லுவாரா?.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் எரிக்.. சும்மா நை நை என்று கொண்டு......... :evil: :evil:

வசி அண்ணா!

எரிக் சொல்கையும் சொல்வது சிறிலங்கா அரசை மட்டும் தான். புலிகள் மூதூர் நகருக்குள்ளேயே வரவில்லை என்றும், தாங்கள் எந்த இடத்தையும் இழக்கவில்லை என்று சிறிலங்கா அரசு சொல்கின்றபோது புலிகள், எந்த இடத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லையே! :wink:

எரிக் சொல்வது மாவிலாறு அணைக்கட்டை நோக்கி 300 மீற்றர் தூரம், 500 மீற்றர் தூரம் என அறிக்கை விடும் சிறிலங்கா அரசுக்காகத் தான்!

:idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த உடன்படிக்கையில சிங்கள ராணுவத்திர கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கிற தமிழ்ப் பிரதேசங்கள் எண்டுதான் மூது}ர் கணிக்கப்படுகிறது. கஸ்ரப்பட்டுப் பிடிச்ச தமிழர் பிரதேசத்தை விடச்சொல்லிக் கேட்கிறது என்ன நியாயம். அப்பிடிப் பார்த்தா உடன்படிக்கைக்குப் பிறகு விஸதரிக்கப்பட்ட பலாலி உட்பட்ட எல்லா ராணுவக் கேந்திர எல்லைகளில இருந்தும் அவங்களும் வாபஸ்பெறவேணுமெண்டு நாங்களும் கேட்கலாம்தானே. பழைய உடன்படிக்கையே நடைமுறைப்படுத்தப்பட இல்ல இதுக்குள்ள என்ன புதுசாச் செய்யிறது.

வசி அண்ணா!

எரிக் சொல்கையும் சொல்வது சிறிலங்கா அரசை மட்டும் தான். புலிகள் மூதூர் நகருக்குள்ளேயே வரவில்லை என்றும், தாங்கள் எந்த இடத்தையும் இழக்கவில்லை என்று சிறிலங்கா அரசு சொல்கின்றபோது புலிகள், எந்த இடத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லையே! :wink:

எரிக் சொல்வது மாவிலாறு அணைக்கட்டை நோக்கி 300 மீற்றர் தூரம், 500 மீற்றர் தூரம் என அறிக்கை விடும் சிறிலங்கா அரசுக்காகத் தான்!

:idea: :idea:

அப்ப என்ன சொல்ல வாறியள் ஆமிக்காறர் 5கிலோமீற்றரில 4500மீற்றர் மூவ் பண்ணினவை அவைதான் 4500மீற்றர் பின்னால போகவேணும் எண்டுறீங்களா..??? :wink: :P :P

இப்பிடி அடிமடியிலையே கையை வைச்சா எப்பிடி...?? :lol::lol::lol:

அது சரி அரசாங்கம் குண்டுவீசும்போது வராத குரல் எப்பிடியாம் உவர் சொல்கைமுக்கு வந்ததாம்....???

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அரசாங்கம் குண்டுவீசும்போது வராத குரல் எப்பிடியாம் உவர் சொல்கைமுக்கு வந்ததாம்....???

அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்! இப்ப தான் அவைகளுக்கு தீவிரம் விளங்கியிருக்கு ! மற்ற நாட்டுப் போராளிகள் போல, தமிழன் அடிவாங்கினால் காலைப்பிடிச்சு கெஞ்சுவான் என்று நினைத்தவர்கள் போல!

அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்! இப்ப தான் அவைகளுக்கு தீவிரம் விளங்கியிருக்கு ! மற்ற நாட்டுப் போராளிகள் போல, தமிழன் அடிவாங்கினால் காலைப்பிடிச்சு கெஞ்சுவான் என்று நினைத்தவர்கள் போல!

உந்த கருத்து பிபிசில வந்ததே....??? என்னது இல்லையா.??? பிறகெப்பிடி அதை நீங்கள் இங்கை சொல்லலாம்...??? :wink: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.