Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலற்றைத் திறக்கச் சென்ற கண்காணிப்பாளர் மீது குண்டு

Featured Replies

BREAKING NEWS

Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak

[TamilNet, August 06, 2006 09:21 GMT]

Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks.

SLMM officials have taken cover on the ground from the attacks.

Further details are not available at the moment

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19092

  • Replies 55
  • Views 7.7k
  • Created
  • Last Reply

அரசாங்கத்துக்கு செருப்பால அடிச்சதுக்கு நிகரான செயல்....

அமியை கொண்டு திறக்க முடியும் எண்றவர்களுக்கு 3வாரமா தண்ணிகாட்டிய புலிகள் நோர்வேக்காறரை சந்தித்து அவர்கள் கேட்டத்துக்கு இணங்க திறந்து இருக்கிறார்கள் எண்றால் அரசாங்கத்துக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்...!

மனிதாபிமானத்தில் திரந்த கதவுகளை அடைக்க அரசாங்கம் பாடுபடுவது தெரிகின்றது...!

  • தொடங்கியவர்

சர்வதேசரீதிய சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இது மிகவும் பாரியதாக்கத்தை ஏற்படுத்தும்.மிக விரைவில் இவர்கள் தனிமைப்படுத்தப் படப் போகின்றனர், காலம் கனிந்து வருவதைத் தான் இது உணர்துகிறது....

அகங்காரமும் மிலேச்சனத் தனமும் கொண்ட அராஜக அரசின் இந்தச் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் சமாதானத்திற்காகவும் யுத்தநிறுத்தத்திற்காகவும் குரல் கொடுத்த கோபி அண்ணான் உள்ளிட்டோர் இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

கண்காணிப்புத் தலைவர் முன்பாகவே நடந்துள்ள யுத்தநிறுத்த மீறல் இது. ஏற்கனவே இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாரதூரமாய்கருதப்போவதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

எனவெ சமாதானம் மூலமாகப் பிரச்சினையைத் தீhக்க முடியாது எனப் புலிகள் உணாந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு இதுதான் நேரம்.

ஏனென்றால் தவறான நேரத்தில் எடுக்கப்படுகின்ற சரியான முடிவுகள் கூட தவறானதாகிவிடும்.

3 ஆம் இணைப்பு) மாவிலாற்றில் சிங்கள இராணுவம் விமானக் குண்டுவீச்சு: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார்!

மாவிலாற்றில் சிங்கள இராணுவம் இன்று நடத்திய திடீர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் உயிர் தப்பினார்.

மாவிலாற்று மதகுகளைத் திறப்பது தொடர்பாக கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சன், கண்காணிப்புக் குழுவின் ஓவ் ஜேன்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், பொதுமக்களின் பிரதிநிதிகள் அப்பகுதிக்கு இன்று சென்றனர்.

அப்போது சிறிலங்கா விமானப் படை விமானங்கள் குண்டு வீசின. சிறிலங்கா இராணுவம் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியது.

நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரிடம் தாக்குதல்களை நிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் உள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், நோர்வே அரசாங்கத்தை தொடர்பு கொண்டு தற்போதைய தாக்குதல் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார்.

முன்னதாக தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண நோர்வே அனுசரணையாளர்களுக்கு 4 வார கால அவகாசம் அளிப்பதாகவும் அதற்கு முன்னதாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாறு மதகுகள் திறக்கப்படும் என்று இன்று காலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

அதேபோல் தொடர்ந்து தாக்குதல் நடந்தால் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக கருதாமல் பரந்தளவிலான யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்து வெளியான சில மணிநேரங்களில் சிங்கள இராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் தற்போது மாவிலாறு மதகுகளைத் திறக்கும் பணி முடக்கப்பட்டுள்ளது.

புதினம்.

அன்று தாங்கள் இருந்த படகை விடுதலைப்புலிகள் தாக்க வந்தார்கள் எனகூறி, வந்தவர்கள் விடுதலைப்புலிகள் தானா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் தாக்குதல் நடத்தியவர்கள் கரை வந்து சேர முன்னர் யுத்தநிறுத்த மீறல் என அறிக்கைவிட்ட கண்காணிப்புக்குழு இன்று என்ன செய்யப் போகின்றது.

இதை எல்லாவற்றையும் விட புலிகள் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியை குடுத்து இருக்கிறார்கள்....

அதாவது என்னதான் அரசாங்கம் சண்டையை நடத்தினாலும் தங்களால் அதை கையாளவும், திசைதிருப்பவும், வேண்டிய நேரத்தில் நிறுத்தவும் முடியும் எண்று... இலங்கையில் மாற்றங்களையும் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கொடுக்ககூடிய ஒரே சக்தி புலிகள் என்பதுதான்...!

சர்வதேசத்தை புலிகள் எவ்வளவு தூரம் மதிப்பு கொடுத்து கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் சண்டை நிறுத்தமும் மடை திறப்பும் எடுத்து சொல்கிறது...!

அதாவது புலிகளினால் சர்வதேச வியாபார நலன்களுக்கோ அவர்களின் விருப்புகளுக்கோ புலிகள் எப்போதும் குறுக்கே நிக்கமாட்டார்கள் என்பதும்... புலிகளை தடை செய்தவர்களை வெளியேற்றியதின் மூலம் தங்களை உரிய முறையில் நடத்தாதவர்கள் தங்களின் நலன்களை பேணமுடியாது என்பதும்தான் அது...!

சர்வதேச கொள்கை வகுப்பு பண்டிதர்களால் இது புரிந்து கொள்ளப்பட முடியாதது அல்ல.... குறிப்பாக சுவீடனின் கண்கானிப்பு குழு ஜெனரலால் நன்கு உணரப்படும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chief Nordic truce monitor Maj. Gen. Ulf Henricsson was in the area when the artillery was fired, but was not hurt.

"(The government) have the information that the LTTE has made this offer," said Tommy Lekenmyr, chief of staff for the unarmed Sri Lanka Monitoring Mission. "They said if you have any personnel in the area, make sure that they leave because we are starting an operation.

"It is quite obvious they are not interested in water. They are interested in something else," he added. "We will blame this on the government."

http://news.yahoo.com/s/nm/20060806/wl_nm/.../srilanka_dc_54

இங்குதான் யாரோ..சர்வதேசம் என்றால் என்ன...அது நாங்கள் தான் என்று அளந்து கட்டினமாதிரி இருந்திச்சு..!

புலிகள் இராஜதந்திர நகர்வுக்காக சில செயற்திட்டங்களைச் செய்கின்ற போது மக்களுக்கு போதிய விளக்கம் அளிக்க வேண்டும். வெறுமனவே சர்வதேசத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்க முடியாது.

சர்வதேசத்துக்காக தண்ணீர் திறக்கவும்..யுத்தம் செய்யவும் என்ற நிலையில் மக்கள் பிள்ளைகளை..தங்களை..சொத்துக்கள

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆம் இணைப்பு) மாவிலாற்றை திறக்கச் சென்ற கண்காணிப்புக் குழுத் தலைவர்- எழிலன் குழுவினர் மீது எறிகணை வீச்சு

[ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 15:28 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்காப் படையினரது ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் மாவிலாற்றை திறக்கச்சென்ற இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் ஹென்றிக்சன், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் குழுவினர் தப்பியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சனைக்களுக்குத் தீர்வுகாண நோர்வே அனுசரணையாளர்களுக்கு நான்கு வாரகால அவகாசம் அளிப்பதாகவும் அதற்கு முன்னதாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாறு மதகுகள் திறக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே சிறப்புத் தூதுவரான ஜோன் ஹன்சன் பௌயர் இன்று காலை சந்தித்த போது இது தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிளிநொச்சியிலிருந்து திருகோணமலையில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவிலாற்றை திறக்க போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், கண்காணிப்புக் குழுவின் திருகோணமலை மாவட்ட தலைவர் ஓவே ஜேன்சன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், பொதுமக்களின் பிரதிநிதிகள் அப்பகுதிக்கு இன்று சென்றனர்.

அணைக்கட்டு மதகுகளுக்கு அண்மையில் அக்குழுவினர் சென்றபோது சிறிலங்காப் படையினர் ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். படையினரின் இந்த தாக்குதலில் அக்குழுவினர் சிறிய இடைவெளியில் உயிர் தப்பினர்.

சிறிலங்காப் படையினரின் 100 வரையிலான ஆட்டிலெறி எறிகணைகள் அப்பகுதியில் செறிவாக வீழ்ந்து வெடித்தன. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரிடம் தாக்குதல்களை நிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், நோர்வே அரசாங்கத்தை தொடர்பு கொண்டு தற்போதைய தாக்குதல் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

நல்லெண்ண நடவடிக்கையாக மாவிலாற்றை திறக்க உள்ளதாகக் கூறி அதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிங்களப் படையினர் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் தற்போது மாவிலாற்று மதகுகளைத் திறக்கும் பணி முடக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28020

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

சர்வதேசத்தையும் சிங்கள அரசுகளையும்... நம்பி மோசம் போனது காணாது என்று..விட்டிட்டு வந்து வாங்கிக் கட்டுங்கோ...! போராளிகளின் தியாகங்களை..மலினப்படுத்தும் செயலாகவே இதைக் கருத முடிகிறது..! எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் ஒரு போராளி போராடி...தன்னுயிரை துச்சமென மதித்து பெரும் நம்பிக்கையோடு மண்ணில் விழுகிறான்...! அவனை ஏமாற்றுதல் தான்...ஆகுமோ...?????!

சிங்களத்துக்கு..புலிகள் சர்வதேச ரீதியில் பலவீனப்பட்டுள்ளனர் என்பதையே..சர்வதேசத்துக்கு புலிகள் இன்னும் பயந்து கொண்டிருக்கும் நிலை காட்டுகிறது. ஜேவிபி..நோர்வையை வெளியேறக் கோருகிறது...! ஆனால் நோர்வே சிங்கள அரசுக்கு மில்லியன் கணக்கில் உதவியும் செய்து கொண்டு..தமிழ் மக்களின் கொலைகள் குறித்து ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடாமல்..தண்ணீர் பற்றிப் பேசிட்டுப் போக...இவர்கள் திறக்கப் போய் வாங்கிக் கட்டினம்..! மக்களை ஏமாற்றாதீர்கள்..இராஜதந்திரம் என்ற பெயரில்..! சரியான விளக்கங்களை மக்கள் முன் வையுங்கள்...உங்கள் நடவடிக்கைகள் எப்படி தமிழ் மக்களைப் சிங்களத்தின் பயங்கரவாதத்திடம் இருந்து உடனடியாக பாதுகாக்கப் போகின்றன என்று...!

சாத்திரி நாங்கள் அனுபத்தத் தேவையில்ல..********** :roll: :idea: :?: :evil:

******-யாழ்பாடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா நான் அப்படி சொல்ல மாட்டேன். ஒரு வேளை வேற சனமா இருக்கலாம் :lol:

சிறீலங்கா அரசின் இராணுவம்..அரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா...??! :roll: :?:

மங்கள சொல்கிறார் தாக்குதல் நடக்காது என்று...றம்புக்வெல சொல்கிறார்..மாவிலாறு நோக்கித் தாக்குதல் தொடரும் என்று...!

SLA fires MBRL rockets from Trincomalee to Muthur East

[TamilNet, August 06, 2006 10:44 GMT]

Sri Lanka Army (SLA) launched Multi-Barrel Rocket Launchers (MBRL) rockets at 4:00 p.m. Sunday from Trincomalee base. At least 6 artillery shells and three rounds of rockets were fired till 5:00 p.m.

Meanwhile, Colombo media quoted Sri Lankan Minister and Military Spokesman Keheliya Rambukwela as saying that Sri Lanka Army (SLA) resumed it's military operations to open the sluice gate at Maavil Aaru.

இதற்கு முன்னைய செய்தி இங்கு..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19092

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

Contact Details:

Mailing Address:

Peace Secretariat,

Liberation Tigers of Tamileelam,

A9 Road,

Kilinochci.

Phone: 0094212283960

Fax: 0094212283959

E-mail: mail@ltteps.org

அனுப்பியாச்சு மக்கள் தங்கள் நிலைப்பாடுகளை..பல வழிகளிலும்......தீர்வு சொல்லுவினமோ..இல்ல மெளனமாகிடுவினமோ...??! பார்ப்போம்..பொறுத்திருந்து..! :idea:

இங்குதான் யாரோ..சர்வதேசம் என்றால் என்ன...அது நாங்கள் தான் என்று அளந்து கட்டினமாதிரி இருந்திச்சு..!

புலிகள் இராஜதந்திர நகர்வுக்காக சில செயற்திட்டங்களைச் செய்கின்ற போது மக்களுக்கு போதிய விளக்கம் அளிக்க வேண்டும். வெறுமனவே சர்வதேசத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்க முடியாது.:

புலிகள் பிடித்த இடத்தை விட்டு வந்தார்கள் எண்றால் அதன் அர்த்தம் தங்களாம் மீண்டும் பிடிக்க முடியும் என்பதனால்த்தான்....!

புலிகள் வெறுமனே பிரதேசத்தை கைப்பற்றத்தான் ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று நினைத்துக்கொள்ள ஈழத்தில் இருக்கும் மக்களோ இடம்பெயர்ந்த மக்களோ மாங்காய் மடையர்கள் அல்ல...! அதை புலிகள் சோல்லித்தான் அறிந்து கொள்ளும் வெத்து வேட்டுக்களும் இல்லை அப்படி நீர் நினைத்துக்கொள்வதால் ஒருவேளை நீர் அந்த நிலையில் இருப்பவராக இருக்கலாம்...

ஆனையிறவில் 600 போராளிகளை 1991ல் இளந்தபோது பலவீனப்படாத புலிகள் இப்போது பலவீனப்பட்டு விட்டார்களா...???? அப்படி எண்ண தமிழன் எல்லாரும் உம்மைபோல சோப்பிணாங்கிகளா...???

மூதூர் பிரதேசத்தில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டப்புலிகள் அதை தக்க வைக்க அகல கால்வைத்தல் முறையில் பார்த்தால் எவ்வளவு பணத்தை செலவளிக்க வேண்டும் எவ்வளவு போராளிகளை ஈடுபடுத்தவேண்டும் என அறிந்த ஒரு முட்டாள் கூட உம்மைபோல பினாத்த மாட்டான்....!

புலிகள் இந்த தாக்குதலை தங்களின் பலத்த நிரூபிக்க தான் செய்தார்கள் என்பது தெளிவாக தெரிந்தாலும் இதை யுத்த பிரகடனமாக முனையவில்லை... அதன்மூலம் புலிகள் சில அரசியல் லாபங்களையும் பலன்களையும் எதிர்பார்கிறார்கள் என்பது தெளிவாக பாமரனுக்கும் தெரியும் போது உமக்கு தெரியாதது வியப்பல்ல... விளங்கிக்கொள்ள அறிவு கொஞ்சம் வேண்டும்...!

அதோடு எந்த ஒரு அரசாங்கமோ இல்லை படை தரப்போ தங்களின் வெளிப்படையான நோக்கங்களை வெளிவிடுவதில்லை... அறிவார்த்தமாக மற்றவர்கள் ஊகித்து கொள்வதுதான்.... அது உம்மால் முடியவில்லை...! :idea:

குருவிகள் உங்கள் கருத்துகளை தயவுசெய்து நேரடியாகவே தமிழீழ தலைமைக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பி விடுங்கள் அது உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களால் எடுக்கமுடியும் சும்மா சும்மா வந்து இங்கு குழப்பம் விழைவிக்கிற கருத்துகளை வைக்கிறதை குறையுங்கள் நீங்கள் புத்திமதி சொல்லி புலிகள் போராட்டம் நடத்திற நிலைமைக்கு இன்னமும் வரவில்லையென்று நினைக்கிறேன் என்றாலும் உங்கள் கருத்துகளை தலைமை பீடத்திற்கும் அனுப்புங்கள் கருத்தில் எடுத்து

இப்பிடியான விளக்கம் குறைந்த கூட்டத்துக்கு எல்லாம் தலைமை விளக்கம் கூற புறப்பட்டால் உருப்பட்ட மாதிரித்தான்....! :wink: :P

இப்படியே ஊகிச்சு ஊகிச்சுத்தான் மக்கள் தினமும் இறந்து கொண்டிருக்கினம். 15 தமிழ் மனித நேய பணியாளர்கள் தலையில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது போக..பல பகுதிகளிலும்...மக்கள் இன்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆனால் புலிகள் மக்களுக்குச் சொல்வது போல..எதுவும் நடத்தப்படவில்லை..சிறீலங்கா அரசால்..! அப்போ எப்படி மக்கள் புலிகளை..நம்புவினம்..???!

மக்கள் மீதான் கொலைகள் தொடருகின்ற போதிலும்... புலிகள் மட்டும் ஒப்பந்தப்படி..நடக்கினமாம்..! ஒப்பந்தம் மக்களுக்கா..இல்ல புலிகளுக்கு மட்டுமானதா...??!

போராளிகளின் இழப்புக்களை..ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களே... அநியாயமாக...இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையில் உயிர்நீத்த போராளிகளின் மக்களின் தொகை என்ன..??!

ஏன் இந்தப் பேச்சு வார்த்தையை நோர்வேயோ..இல்ல சர்வதேச சமூகமோ..ஆரம்பத்தில் நடத்த புலிகள் வற்புறுத்தவில்லை..! அரசுதான் அசட்டை செய்தது என்றால்..புலிகள்..தவிர்த்திரு

இப்படியே ஊகிச்சு ஊகிச்சுத்தான் மக்கள் தினமும் இறந்து கொண்டிருக்கினம். 15 தமிழ் மனித நேய பணியாளர்கள் தலையில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது போக..பல பகுதிகளிலும்...மக்கள் இன்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆனால் புலிகள் மக்களுக்குச் சொல்வது போல..எதுவும் நடத்தப்படவில்லை..சிறீலங்கா அரசால்..! அப்போ எப்படி மக்கள் புலிகளை..நம்புவினம்..???!

மக்கள் மீதான் கொலைகள் தொடருகின்ற போதிலும்... புலிகள் மட்டும் ஒப்பந்தப்படி..நடக்கினமாம்..! ஒப்பந்தம் மக்களுக்கா..இல்ல புலிகளுக்கு மட்டுமானதா...??!

போராளிகளின் இழப்புக்களை..ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களே... அநியாயமாக...இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையில் உயிர்நீத்த போராளிகளின் மக்களின் தொகை என்ன..??!

ஏன் இந்தப் பேச்சு வார்த்தையை நோர்வேயோ..இல்ல சர்வதேச சமூகமோ..ஆரம்பத்தில் நடத்த புலிகள் வற்புறுத்தவில்லை..! அரசுதான் அசட்டை செய்தது என்றால்..புலிகள்..தவிர்த்திரு

புலிகள் பிடித்த இடத்தை விட்டு வந்தார்கள் எண்றால் அதன் அர்த்தம் தங்களாம் மீண்டும் பிடிக்க முடியும் என்பதனால்த்தான்....!

புலிகள் வெறுமனே பிரதேசத்தை கைப்பற்றத்தான் ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று நினைத்துக்கொள்ள ஈழத்தில் இருக்கும் மக்களோ இடம்பெயர்ந்த மக்களோ மாங்காய் மடையர்கள் அல்ல...! அதை புலிகள் சோல்லித்தான் அறிந்து கொள்ளும் வெத்து வேட்டுக்களும் இல்லை அப்படி நீர் நினைத்துக்கொள்வதால் ஒருவேளை நீர் அந்த நிலையில் இருப்பவராக இருக்கலாம்...

ஆனையிறவில் 600 போராளிகளை 1991ல் இளந்தபோது பலவீனப்படாத புலிகள் இப்போது பலவீனப்பட்டு விட்டார்களா...???? அப்படி எண்ண தமிழன் எல்லாரும் உம்மைபோல சோப்பிணாங்கிகளா...???

மூதூர் பிரதேசத்தில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டப்புலிகள் அதை தக்க வைக்க அகல கால்வைத்தல் முறையில் பார்த்தால் எவ்வளவு பணத்தை செலவளிக்க வேண்டும் எவ்வளவு போராளிகளை ஈடுபடுத்தவேண்டும் என அறிந்த ஒரு முட்டாள் கூட உம்மைபோல பினாத்த மாட்டான்....!

புலிகள் இந்த தாக்குதலை தங்களின் பலத்த நிரூபிக்க தான் செய்தார்கள் என்பது தெளிவாக தெரிந்தாலும் இதை யுத்த பிரகடனமாக முனையவில்லை... அதன்மூலம் புலிகள் சில அரசியல் லாபங்களையும் பலன்களையும் எதிர்பார்கிறார்கள் என்பது தெளிவாக பாமரனுக்கும் தெரியும் போது உமக்கு தெரியாதது வியப்பல்ல... விளங்கிக்கொள்ள அறிவு கொஞ்சம் வேண்டும்...!

அதோடு எந்த ஒரு அரசாங்கமோ இல்லை படை தரப்போ தங்களின் வெளிப்படையான நோக்கங்களை வெளிவிடுவதில்லை... அறிவார்த்தமாக மற்றவர்கள் ஊகித்து கொள்வதுதான்.... அது உம்மால் முடியவில்லை...! :idea:

பிடிக்க முடியும்..ஆனால்..மீள ஒரு பேரிழப்போடு. ஏன் பிடித்த பகுதியை வைச்சு...தண்ணீர் பிரச்சனையில்...தமிழ் மக்களின் சார்பில்..பேரம் பேசலுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் தானே..! சிங்கள அரசும் பயந்திருக்கும்..சர்வதேசமும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.