Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்தவற்றின் தாக்கத்தில்...

Featured Replies

'கொற்றவை' வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தாக்கத்தில், நந்தன் இணைத்த 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ஐயா' பதிவையும் வாசித்தபோது இதைப் பதியத் தோன்றியது:
 
--
பிரக்ஞை தொடர்வதென்று பேச்சுண்டு.
ஆழத்தின் அதிர்வுகள் பண்டையனவென்று கருத்துண்டு,
நிறுவல் அசாத்தியம். ஆனால் உள்ளிற்குள் கரவொலி.
 
பறவைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
பொரித்த முட்டைகளிற்குள்ளால்,
உணரப்படாத, கடத்தப்பட்ட அனுபவங்கள் தேடப்படுகின்றன.
 
பேசப்படும் மொழி எதுவும் சட்டென்று தோன்றிற்றிலை.
சரித்திரம், பணம் பண்ணமுடியாப் பாடந்தான்,
இருப்பினும், இருப்பின் தடம் அதற்குள்தான்.
அகத்தியன் செய்த அற்புத பாடல்கள்,
மதுரை தாழ்கையில் சேர்ந்து தாழ்ந்தனவாம்,
பின்னொரு பொழுதில்,
தென்னவன் ஒருவன்,
சன்னதங் கொண்டு கக்கித்துப்பியதை,
அதிகம் கற்றவன் அல்லான் காகிதத்தில் எழுதிவைக்க,
அகத்தியன் தந்து நாம் தொலைத்ததில் பாடல்கள் 100 
ஆவணமாகக் காகிதந் தவண்டதாம்.
சன்னதங் கொண்டவன் பிரக்ஞையில் சரித்திரம் தொடர்ந்ததால்.
 
தமிழ் என்றபோது உணர்கின்ற இனிமை தமிழர்க்கு மட்டும்.
தமிழ் என்ற சொல்லை உணர்ந்த சரித்திரம் தமிழரது மட்டும்.
சொல் தோன்ற முன் தோன்றியது உணர்வு.
காட்சிகள் மருவிப் பிணைப்பில்லை இன்று.
மாறியகாட்சியாய்த் தொலைந்தவை ஏராளம்.
ஆனால்...
 
தொடர்கின்ற பிரக்ஞையில்,
மூலத்தின் விதை அப்பப்போ தட்டுப்படும்.
சாவி கிடைக்கும்.
அதைத் துழையில் போட்டால்,
கதவின் பின் கதவாக ஏராளம் கதவுகள்,
திறக்கத்திறக்க மாளாத கதவுகள் படையணி.
பின் காட்சி விரிய...
சமுத்திரத்தின் படுக்கையில்,
மீன்கள் நீந்திச் செல்ல,
நம் முன்னவர் கட்டித் தாழ்ந்துபோன நகரங்கள்.
அவர் வழிபட்ட சாமியர், 
இடிபட்ட சுவர்கள்,
நடைபயின்ற திண்ணைகள்,
பாசி படர்ந்து, சிப்பிகள் ஒட்டி,
ஆழத்தின் ஆழத்தில் கருமைக்குள் கிடந்தபடி,
மனதுக்குள் தூது வர,
காட்சி குவியப்பட,
நீந்திய மீனொன்று கல்படிந்த பாசியொன்றைக் கடித்துத்தின்ன,
கடலிற்குள் கிடந்த கல்லிற்குள் பாசிக்குள் ஒளித்திருந்த கண் ஒன்று திறந்து,
அது முன்னவர் தொழுத அன்னையின் சிலையென்றுணர்ந்து,
சன்னதம் பிறக்கையில்...
தமிழ் தொலைத்த வார்த்தைகள் வாயில் பிரளும்.
சரித்திரம் பணம்பண்ண முடியாப் பாடமானதால்,
சன்னதம் துப்பும் தொலைந்த சொற்கள்,
தொலைந்தனவாய்த் தொடரும்.
 
தொடரும் பிரக்ஞையின் அதிர்வுகள் அர்த்தம்பெற,
மூதாதை தேசத்தில் மூழ்க்கிக் கிடப்பது பத்தியம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

கல்கியினதோ சான்டில்யனதோ சரித்திரக்கதைகள் வாசிக்கும்போது இதே உணர்வுகளில் கட்டுண்டு இந்த உலகத்துள் சஞ்சரித்திருக்கிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு 

தொடர்கின்ற பிரக்ஞையில்,
மூலத்தின் விதை அப்பப்போ தட்டுப்படும்.
சாவி கிடைக்கும்.
அதைத் துழையில் போட்டால்,
கதவின் பின் கதவாக ஏராளம் கதவுகள்,
திறக்கத்திறக்க மாளாத கதவுகள் படையணி.
பின் காட்சி விரிய...
சமுத்திரத்தின் படுக்கையில்,
மீன்கள் நீந்திச் செல்ல,
நம் முன்னவர் கட்டித் தாழ்ந்துபோன நகரங்கள்.
அவர் வழிபட்ட சாமியர், 
இடிபட்ட சுவர்கள்,
நடைபயின்ற திண்ணைகள்,
பாசி படர்ந்து, சிப்பிகள் ஒட்டி,
ஆழத்தின் ஆழத்தில் கருமைக்குள் கிடந்தபடி,
மனதுக்குள் தூது வர,
காட்சி குவியப்பட,
நீந்திய மீனொன்று கல்படிந்த பாசியொன்றைக் கடித்துத்தின்ன,
கடலிற்குள் கிடந்த கல்லிற்குள் பாசிக்குள் ஒளித்திருந்த கண் ஒன்று திறந்து, ////
 
ஜானகிராமனின் கதை ஒன்று சிறுவயதில் படித்தேன் . அதில் நீர் இல்லாத கடலின் தோற்றத்தை வர்ணித்திருப்பார் . அப்படியொரு வர்ணனையை பின்பு நான் படித்ததில்ல . ஆனால் அதனையொத்த ஓர் வர்ணனையை இன்று நான் வாசிக்கநேரிட்டது . இன்னுமருவன் தத்துவார்த்த உரையாடல்கள் மட்டுமல்ல , ஓர் சிறந்த கவிவளம் உள்ளவர் என்பதனையும் இந்தக்கவிதை எடுத்துக்காட்டுகின்றது . உங்களுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் இன்னமொருவன் .
  • தொடங்கியவர்
தப்பிலி, சுபேஸ், கோமகன் மற்றும் லியோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
 
கோமகன் உங்கள் கனிவான வார்த்தைகளிற்கு நன்றிகள். இது முழுக்க முழுக்க நான் வாசித்துக்கொண்டிருக்கும் 'கொற்றவை' என்ற நூலின் தாக்கமும் அதிர்வும் இன்றி நானாகச் சுயமாகச் சிந்ததல்ல. அப்பப்போ கேள்விப்பட்டுக் கொண்டிருந்த விடயங்களைக் கோர்வையாக்கி அதிர்ந்து உலுக்கப்பண்ணியது அந்த நூல் தான். (அதோடு நந்தனின் பதிவும்). அது போட்ட விதைககள் தூதுவந்து காட்சி குவியப்பட்டதும் வார்த்தை கோர்வையானதும் மட்டும் தான் மட்டும் தான் எனக்குள் நடந்தது, எனது பங்கு.
 
நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்
தொடர்கின்ற பிரக்ஞையில்,
மூலத்தின் விதை அப்பப்போ தட்டுப்படும்.
சாவி கிடைக்கும்.
அதைத் துழையில் போட்டால்,
கதவின் பின் கதவாக ஏராளம் கதவுகள்,

 

 

அருமையான, யதார்த்த நிலையை, எடுத்துக்காட்டும் ஒரு கவிதை!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் வாசிப்பதை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், இன்னுமொருவன்!

 

 

 

  • தொடங்கியவர்

கிருபன், சுமேரியர், புங்கையூரான் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

I like it....

  • தொடங்கியவர்

நன்றி புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.