Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் முறியடி

Featured Replies

ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை

அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு.

மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால்

சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

பதிவு

  • தொடங்கியவர்

மாவிலாற்றில் அரசு மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை யுத்த நிறுத்த மீறல்-கண்காணிப்புக் குழு.

மாவிலாற்று அணைக்கட்டை திறப்பதற்கு சிறீலங்கா அரசு மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை முழுமையான யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மனிதபிமான அடிப்படையில் மாவிலாற்று நீரை திறந்து விடுவதற்கு முன் வந்த வேளையில் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது வலிந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் றொபினேர் ஒமன்சன் தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறீலங்கா அரசு விரும்பவில்லை எனவும் மக்களிற்கு நீர் கிடைப்பதை விட இந்த அணைக்கட்டு விவகாரம் மூலம் யுத்தம் செய்யவே சிறீலங்கா அரசு விரும்புவதாகவும் தெரிவித்த ஒமன்சன் தற்போதைய நிலைக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

பதிவு.

தமிழ்நெற் போன்றவர்கள் கண்காணிப்புக் குழுத் தலைவர் அல்லது பேச்சாளர் போன்றவர்களோடு மின்னஞ்சலூடாக ஆயினும் பொருத்தமான கேள்விகளை கேக்கலாமே "நேர்முகம்" போன்று.

கனடாவின் CMR & TVI Stockwell Day யோடு நடத்திய நேர்முகம் போன்று கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர், தலைவர் மற்றும் நேர்வே பிரதிநிதிகளை நேர்முகம் காண வேண்டிய முக்கியமான காலம் இது. செய்வார்களா?

தமிழ்நெற் போன்றவர்கள் கண்காணிப்புக் குழுத் தலைவர் அல்லது பேச்சாளர் போன்றவர்களோடு மின்னஞ்சலூடாக ஆயினும் பொருத்தமான கேள்விகளை கேக்கலாமே "நேர்முகம்" போன்று.

கனடாவின் CMR & TVI Stockwell Day யோடு நடத்திய நேர்முகம் போன்று கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர், தலைவர் மற்றும் நேர்வே பிரதிநிதிகளை நேர்முகம் காண வேண்டிய முக்கியமான காலம் இது. செய்வார்களா?

இவர்களை தமிழர் ஊடகங்களாவது ஆங்கிலத்தில் பேட்டி கண்டு

வெளியுலகுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது.

அதுவும் ஆங்கிலத்தில் செய்வதே சிறப்பு.

சர்வதேச ஊடகங்கள் கேள்விகளை கேக்கும் பொழுது தமிழர் தரப்பு நிலைப்பாட்டில் இருந்து பிரச்சனைகளை பார்த்து அனுபவித்து வந்த மனோநிலையிலிருந்து கேக்கப்படுவது போல் இருக்காது. ஒரு வெளியாரின் மேலோட்ட சிந்தனை மற்றும் கட்டுரைகள் புத்தகங்களை வாசித்து வந்த academic மனோநிலையில் இருந்து தான் விடையம் சம்பந்தப்பட்டதாக கேள்விகளை தயாரிக்கக் கூடியதாக இருக்கும். கொழும்பில் நின்று அங்குள்ள அதிகார கருத்தியல் வட்டங்களை அவதானித்த அளவிற்கு தமிழர் பிரதேசங்களில் நீண்ட காலங்கள் நின்ற அவதானித்த அனுபவம் இருக்காது.

அப்படியானவர்களால் தமிழர் தரப்பு நியாயங்கள், அவலங்கள், இழப்புகள் போன்றவற்றை எந்தளவிற்கு கண்காணிப்பு குழுவினர் உணர்ந்துள்ளனர், நோர்வே தரப்பு உணர்ந்துள்ளது என்றதை கேட்கப்படும் கேள்விகளிற்கான பதில்களாக பெற்றுக் கொள்ள வேண்டும் அவற்றை வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற தூண்டுதல் கடமையுணர்வு இருக்காது. ஆனால் அதை ஒரு நிதானமான தமிழ் ஊடகம் ஆங்கிலத்தில் செய்யும் பொழுது அந்த தகவல் சர்வதேச ஊடகங்களின் ஆய்வாளர்கள் செய்தியாளர்களின் கவனிப்பை பொறும். அவர்கள் அந்த தகவல்களை மைய்யமாக வைத்து மேற்கோள் காட்டி தமது ஆக்கங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிடுவார்கள்.

எனவே எமக்குத் தேவையான கண்ணோட்டத்தில் கருத்துக்களை முக்கிய பிரமுகரிகளிடம் இருந்து வெளிக்கொண்டுவரக் கூடிய நேர்முகங்களை கலந்துரையாடல்களை நடத்த வேண்டிய தேவை எமக்குத்தான் உண்டு. அதை தமிழர் தரப்பு ஊடகங்கள் தான் செய்ய வேண்டும்.

அது சரி ஏன் நாங்கள் கேள்விகளை எழுதி யாழ்க் களத்தின் ஆங்கிலக்கருதுக் களத்திற்கூடாக் கேட்கக் கூடாது?

சிங்கள இனவாதிகளின் தளமான லங்கா அக்டமிக்கில் இவ்வாறு கேள்விகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி அதில் சேரும் கேள்விகளை பிறகு ஒன்றாக்கி குறிப்பிட்ட நபரிடம் கேட்க்கிறர்கள். நாங்களும் இப்படிக் கேள்விகளைச் சேகரித்து மின்னஞ்சலூடாக யாழ் ஆங்கிலக் களத்தின் சார்பாக கேட்கலாம். யாழ்க் களமும் ஒரு ஊடகம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக நாரதர்!

யாழ்களம் ஒன்றும் இதற்கு சளைத்ததல்ல. மேலும், ஒரு ஊடகமாக அதற்கும் சிறந்த பங்கு உண்டு!

உண்மைதான் நாரதர் அண்ணா...???

கேள்வி கேக்க நான் தயார்....? அனுப்பிவைக்க நீங்கள் தயாரா..??

அது சரி ஏன் நாங்கள் கேள்விகளை எழுதி யாழ்க் களத்தின் ஆங்கிலக்கருதுக் களத்திற்கூடாக் கேட்கக் கூடாது?

சிங்கள இனவாதிகளின் தளமான லங்கா அக்டமிக்கில் இவ்வாறு கேள்விகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி அதில் சேரும் கேள்விகளை பிறகு ஒன்றாக்கி குறிப்பிட்ட நபரிடம் கேட்க்கிறர்கள். நாங்களும் இப்படிக் கேள்விகளைச் சேகரித்து மின்னஞ்சலூடாக யாழ் ஆங்கிலக் களத்தின் சார்பாக கேட்கலாம். யாழ்க் களமும் ஒரு ஊடகம் தானே?

நிச்சயமாக இது ஒரு சிறந்த முறையாக இருக்கும் என நினைக்கிறன். யாழ்களம் ஒரு சிறந்த ஊடகம் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரிய இடங்களிற்கு எடுத்த வீச்சுக்கு நாங்கள் அனுப்பினால் பதில் வருமோ எண்டு யோசிக்கிறன். தாதேகூ பாராளமன்ற உறுப்பினர்களில் ஆரம்பிப்பமோ என்று யோசிச்சனான். என்ன நினைக்கிறியள்?

TRF பக்கம் பெருசா கருத்துப் பதிவுகளை காணன். ஏல்லாரும் குருவிகளின் குறைபாடுகள் தெரிந்தும் அதையே உரசிக் கொண்டு நிக்கிறியள். TRF இல விறு விறுப்பாக பதிவுகள் பல தரப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தால் தான் சனம் பயனுள்ள தளம் என்று வரும் செய்தி பரவும் அது ஒரு ஊடகமாக வடிவம் பெறும்.

குருவேகளோட சண்டை பிடிக்கிறதுக்குத்தான் யாழ்களம் போல இப்ப கிடக்கு.

முந்தி குருவிகள் யாழ்களத்தின் கதாபாத்திரம் இப்ப கருப்பொருள் அவ்வளவு தான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பக்கம் வரத் தான் ஆசை! ஆனால் தமிழில் எழுத விடமாட்டேன் என்கின்றீர்களே! தமிழில் தான் எம்மால் காலாய்க்க முடியுமே தவிர, ஆங்கிலத்தில் யேஸ், நோ தான். ஆங்கில நாடுகளில் இருப்பவர்கள் தான் முழுமையாகக் கதைக்க முடியும்.

பெரிய இடங்களிற்கு எடுத்த வீச்சுக்கு நாங்கள் அனுப்பினால் பதில் வருமோ எண்டு யோசிக்கிறன். தாதேகூ பாராளமன்ற உறுப்பினர்களில் ஆரம்பிப்பமோ என்று யோசிச்சனான். என்ன நினைக்கிறியள்?

TRF பக்கம் பெருசா கருத்துப் பதிவுகளை காணன். ஏல்லாரும் குருவிகளின் குறைபாடுகள் தெரிந்தும் அதையே உரசிக் கொண்டு நிக்கிறியள். TRF இல விறு விறுப்பாக பதிவுகள் பல தரப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தால் தான் சனம் பயனுள்ள தளம் என்று வரும் செய்தி பரவும் அது ஒரு ஊடகமாக வடிவம் பெறும்.

குருவேகளோட சண்டை பிடிக்கிறதுக்குத்தான் யாழ்களம் போல இப்ப கிடக்கு.

முந்தி குருவிகள் யாழ்களத்தின் கதாபாத்திரம் இப்ப கருப்பொருள் அவ்வளவு தான் வித்தியாசம்.

அவரின் கண்டு கொள்வது இல்லை எண்று முடிவெடுத்தாச்சு....! நிருவாகம் பெறுப்பெடுத்து எனக்கு எச்சரிக்கை எல்லாம் விடுகினம்... :wink:

நான் இப்ப ரெடி நீங்க ரெடியா... ஆனா முதல் கேள்வி நீங்கதான் கேக்க வேணும் சொல்லீட்டன்...!

கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கேட்கக் கேள்வி இருப்பதாகத் தெரியவில்லை,கண்காணிப்புக்கு

சரி நாரதர் அண்ணா யாரிடம் கேக்கலாம் என்பதை முடிவை இப்போ நீங்களே எடுங்கள் உங்கள் முடிவிற்க்கு நான் உடன் படுகிண்றேன்....! வேற யாராவது குறிப்பாக குறுக்ஸ் வேறுபட்டாலும் நான் உங்கள் பக்கம்...!

யாருக்கு எண்று சொன்னால் கேள்விகளை இணைக்க வசதியாக இருக்கும்....

TRF ல் மட்டும் அல்லாது யாழிலும் அதற்கான இணைப்பை கொடுத்தால் வசதியாக இருக்கும்.... இப்போதே அதுக்கான ஒரு பக்கத்தை எங்காவது(எல்லாரும் பார்க்க கூடிய ) ஆரம்பித்து விடுங்கள்....

தல உதை ஆங்கிலக் கருதுக்கள நிர்வாகம் தான் தீர்மானிக்க வேணும், நான் ஆலோசனைகளையே முன் வைக்கிறேன்.மிச்சம் வந்து கேள்வி எழுதப் போறவையப் பொறுத்தது.லங்கா அகடமிக்கில சொந்தப்பெயர் போட்டுத் தான் கேள்வி கேக்கிற மாதிரி வச்சிருக்காங்கள்.எரிக் சோல்கைம் முதல் பலர் பதில் எழுதி இருக்கிறார்கள்.

பிரச்சினை இல்லை நான் எனது பெயரை இதுக்காக மாற்றா விட்டால்லும் செந்த பெயரை கேள்விகள் கேட்க்க பயன் படுத்துகிண்றேன்.

ஆனால் TRF ல் என்னை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை.

பெரிய இடங்களிற்கு எடுத்த வீச்சுக்கு நாங்கள் அனுப்பினால் பதில் வருமோ எண்டு யோசிக்கிறன். தாதேகூ பாராளமன்ற உறுப்பினர்களில் ஆரம்பிப்பமோ என்று யோசிச்சனான். என்ன நினைக்கிறியள்?

TRF பக்கம் பெருசா கருத்துப் பதிவுகளை காணன். ஏல்லாரும் குருவிகளின் குறைபாடுகள் தெரிந்தும் அதையே உரசிக் கொண்டு நிக்கிறியள். TRF இல விறு விறுப்பாக பதிவுகள் பல தரப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தால் தான் சனம் பயனுள்ள தளம் என்று வரும் செய்தி பரவும் அது ஒரு ஊடகமாக வடிவம் பெறும்.

குருவேகளோட சண்டை பிடிக்கிறதுக்குத்தான் யாழ்களம் போல இப்ப கிடக்கு.

முந்தி குருவிகள் யாழ்களத்தின் கதாபாத்திரம் இப்ப கருப்பொருள் அவ்வளவு தான் வித்தியாசம்.

அங்கால போங்கோ..அப்பதான் புத்தி வரும்..! எதிர்க் கேள்வி கேட்பாங்கள்..பதில் சொல்லத் திராணியை வளர்த்துக் கொள்ளுங்கோ..அங்கால கொஞ்சம் இன்ரநஷ்னல் லோப் படிச்ச சனம் இருக்குது. அப்பதான் கதாவா..கருவா...என்று தீர்மானிக்கலாம்.இங்க மாதிரி கதை அளந்திட்டு..வீராப்புக் காட்ட ஏலாது..! நடவுங்கோ..கொஞ்சம் அகலக் கால் வைச்சு..! அப்பதான் ஈழத்துக்கான விரைவு படுத்தலின் பரிமாணங்களை உணர தெளிய முடியும்..! :wink: :idea:

யாழ்களத்தில இருக்கிறவை இல்லை தமிழர் எல்லாம் படிக்காத அறிவற்ற கூட்டம் எண்டுறாரா இவர்.

களத்தவரை தூண்டி விட்டு பதில் உரைக்க வெளிக்கிட ஓடிப்போய் ஒளியும் இவர் எங்களை அறி வற்றவை எண்டுறாரா.?

முட்டாள் எங்கு போனாலும் பதில் அளிக்க மாட்டான்.! அப்படி அவரின் அனுபவத்தை இங்கு எல்லோரினது அனுபவமாய் காட்ட முனையும் நோக்கம் என்ன.?

கள நிர்வாகம் என்ன நாங்கள் செய்யவேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டும். இவரின் கொட்டத்தை அடக்குவதா இல்லையா.?

யார்ப்பா அது கண்டறியாத ஆங்கில கருத்துக்கள நிர்வாகம். எல்லாரும் சேர்ந்து தீர்மானியுங்கோ யாரிடம் முதல் நேர்காணலை தொடங்குவது என்று.

நான் நினைத்தது என்ன வென்றால் முதலே அந்த நபரை அணுகி இப்படி ஒன்று செய்ய விரும்புகிறம், பங்கு பற்றுவீர்களா அதற்கா அவரிடம் இருக்கும் நிபந்தனைகள் என்ன போன்றவற்றை அறிந்த பின்னர் அதை களத்தில் தொடக்கி அவருக்கான கேள்விகளை சேர்க்கலாம். செந்த பெயரில் கேக்க வேண்டும் என்று இல்லை இறுதியில் கள நிர்வாகம் வேண்டிய தணிக்கைள் மாற்றங்களை செய்து தொகுத்து அனுப்பலாம் கேள்விகளை எதிர்கொள்ள உடன்பட்டவரிடம்.

நாங்கள் தான்தோன்றித்தனமாக கேள்விகளை கேட்கப்பட வேண்டியவரின் அனுமதி இன்றி சேர்த்துவிட்டு பின்னர் அவர் பதிலளிக்காவிட்டால் அது தோல்வியாகி விடும்.

ஆரம்பத்தில் எம்மை விளங்கிக் கொண்டவர்கள், அணுகக்கூடியவர்களில் ஆரம்பித்து அவற்றை வெற்றிகளாக உதாரணங்களாக கொண்டும் வெளி இடங்களை அடுத்த கட்டத்தில் அணுகலாம்.

உதாரணமாக:

பேராசிரியர் சிவதம்பி

தாதேகூ ப உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

புனர்வாழ்வுகளக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே பி றெஜி

விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் திரு வி உருத்திரகுமாரன்

சமாதானச் செயலகம்

சட்டத்துறை

நிர்வாகத்துறை

காவல்துறை

வானிலை ஆய்வு மன்றம்

பொருண்மிய மேம்பாட்டுத் துறை

தமிழீழ வைப்பகம்

தமிழ்த் தேசிய தொலைக் காட்சி

தமிழ்த் தேசிய வானொலி

..

...

தமிழர்களோடு தமிழ் களத்தில் செய்யலாம். ஆங்கிலத்தில் கேட்டுப் பெறும் அனுபவங்கள் தான் சர்வதேசத்தோடு உறவாட வலுச்சேர்க்கும்.

பேராசிரியர் சிவத்தம்பியிடம் கேக்கலாம்...

தல உதை ஆங்கிலக் கருதுக்கள நிர்வாகம் தான் தீர்மானிக்க வேணும், நான் ஆலோசனைகளையே முன் வைக்கிறேன்.மிச்சம் வந்து கேள்வி எழுதப் போறவையப் பொறுத்தது.லங்கா அகடமிக்கில சொந்தப்பெயர் போட்டுத் தான் கேள்வி கேக்கிற மாதிரி வச்சிருக்காங்கள்.எரிக் சோல்கைம் முதல் பலர் பதில் எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு சொந்த பேர் போடுவதில் எந்த தடையும் இல்லை..... கேள்விகளை யாரிடம் கேட்ப்பது சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டி உள்ளது..... மேலதிகமாக மோகன் அண்ணாவின் உதவியை கேட்க்கலாம்.....!

ஈழவேந்தன் அய்யாவையும் கேக்கலாம். அவருடனான கலந்துரையாடல் இன்று தமிழ் ஒழி இணையத்தில் போட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.