Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதெப்படி இருக்கு: கள்ளக்காதலியுடன் வாழ்ந்த தம்பியை கொலை செய்த அக்கா கள்ளக்காதலனுடன் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் மாவட்டம், ஒட்டையூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், வயது-50. இவர் அந்தப்பகுதியில், ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் தன்னுடைய ஜாதகத்தை பார்க்கப்போன கரூர் ராவலூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி மணி என்ற வளர்மதி, வயது-45, இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

 

அதையடுத்து, கணவனை விட்டு பிரிந்து வந்த வளர்மதி, ரங்கநாதனுடன், நாமக்கல் மாவட்டம், மோக னூரை அடுத்த ஒருவந்தூரில் பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

 

இவர்கள், கடந்த ஜூன், 26-ம் தேதி, அவர்களுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து, மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., சுகுமாரன் முன்னிலையில், கொலையான ரங்க நாதனின் சகோதரி சந்திரா, அவருடைய கள்ளக்காதலன் சிவசெல்வராஜ் ஆகிய இருவரும் சரணடைந்தனர்.
 

சந்திரா கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,  ‘’என்னுடைய தம்பி ரங்கநாதன், வளர்மதி என்ற பெண்ணோடு இருந்து வந்தார். என்னுடைய கணவர் இறந்து விட்டார். காட்டுப்புத்தூரைச் சேர்ந்த “ரியல் எஸ்டேட் அதிபர் சிவசெல்வராஜ், வயது-50, என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
 

நாங்கள் இருவரும் இப்போது, ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், எனக்கு சேர வேண்டிய சொத்தை வழங்காமல், என்னுடைய தம்பி ரங்கநாதன் ஏமாற்றி வந்தார்.
 

இதனால், ஆத்திரமடைந்த நான், சிவசெல்வராஜ் துணையுடன், திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில்குமார், திருச்சியைச் சேர்ந்த மதன்குமார், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சையதுபாஷா ஆகிய மூன்று கூலிப்படையினரை வரவழைத்தோம்.  அவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தோம்.

கடந்த மாதம், 26-ம் தேதி வீட்டில், ரங்கநாதனும், அவருடன் வளர்மதியும் தனிமையில் இருந்தனர். அப்போது, கூலிப்படையினர் அவர்களை கழுத்து அறுத்து கொலை செய்தனர். தற்போது, போலீஸ் தேடுவ தை அறிந்து, காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., முன் நானும், சிவசெல்வராஜூம் ஆஜராகிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

ரங்கநாதனை கொலை செய்த கூலிப்படையினரை பிடிக்க, போலீஸார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=104203

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன அண்ணை, உங்கட கண்ணில மட்டும் இப்படியான செய்திகள் மாட்டுது! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனில போடுற எல்லாச் செய்திகளிலும் ஒரு கண்ணோட்டத்தை செலுத்துவது நம்ம நாளாந்தச் செயற்பாடுகளில் ஒன்று. இவை நக்கீரன் கண்களுக்குப் படுவதால்.. எங்கள் கண்களுக்கும் வந்து சேர்கின்றன. அவ்வளவே.. தங்கச்சி. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

செம காமடி.........

:D

அவரவர் பிரச்சனை அவரவர்க்கு :icon_mrgreen:

கள்ளக்காதலில இதெல்லாம் சகஜமப்பா ........ :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசியக்காரர் பத்து வருட ஜாலி வாழ்க்கையில் தங்களுடைய சாதகத்தைப்

பார்க்க மறந்து விட்டார்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.