Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளும்மென் முப்பாட்டன் பாடல்......

Featured Replies

 

முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு
முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும்,
எனக்கு கேட்கிறது.

வேட்டையும் வேட்கையும் 
வேளாண்மையும் போதுமென,
கூடில்லாத கூட்டமாக நகர்ந்த
ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்...

அடங்காத வீரமும் 
திடங்கொண்ட தோள்களின் தீரமும்
முடங்கிக்கிடக்காத விவேகமும்
தடங்குலையாத வேகமும் கேட்கிறது.

சீரான காலடிகளும் 
குதிரைக் குளம்படி ஓசைகளும்
காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும்
ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும்
குருதி வழிந்து உயரும் வாள்களும்
பொருதி முடித்த களத்தே முனகும்
பேய்களும் நாய்களும் நரிகளும்
தெரிகிறது அடுத்தவன் பாடலில்,

பாடல் கேட்கிறது
மென்மையாக மெல்லியதாக
சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல.....
பாடல் கேட்கிறது........

பாடல் கேட்கிறது
ஒரே இராகத்தில் வேறு வேறு குரல்களில்
நீளமாகவும் கட்டையாகவும்
பாடல் கேட்கிறது.

அலையோசைகள் கேட்க
துடுப்போசைகளுக்கிடையில்
மீண்டும் தொடர்கிறது பாடல் உச்சஸ்தாயியில்.
கொற்றவையின் பூரிப்பில்
எல்லைமீறி கேட்கிறது.

விழி மூடிக்கேட்கிறேன் முப்பாட்டன் பாடலை.
விரிகிற கனவில் தெரிகிறது பெரும் களம்
கரவொலிகளும் காதல் கலப்போலிகளும்
உறவுகளின் உணர்வொலிகளும்
பக்திபண்சுமந்த இசையொலிகளும் கேட்கிறது.

உடுக்கையும் பறையும் சிலம்பும் கேட்கிறது
உடல் சிலிர்க்கும் குலவையும் கேட்கிறது
மதங்கொண்ட மார்புகள் மோதுமோலி கேட்கிறது
கொங்கையர் மோக சிணுங்கள் கேட்கிறது.

கடக்கிறது முப்பாட்டனின்
முந்தையோன் பாடல்

கொஞ்சம் கொஞ்சமாக.....
தொடர்கிறது
என் பாட்டனின் பாடலும் அப்பனின் பாடலும்.
வரலாற்றை மீட்ட 
பாட்டனும் அப்பனும் வரலாறாகிப்போக,
பாடல் மட்டும் தொடர்கிறது.

இதோ என் பாடல் கேட்கிறது...........

தலைகுனிந்து தளர்ந்த குரலில்
விலைபோய் இனம்விற்ற குரலில்
இடம் விட்டிடம் மாறி அலைந்த குரலில்
அழுதும் தொழுதும் விழுந்தும் தளதளத்தகுரலில்
முன்னெப்போதுமில்லா இழி குரலில்கேட்கிறது 

என் பாடல்
எனக்கான பாடல் 
என் காலத்துக்கான பாடல் 
கடந்து போகும்.-நாளை 
விடியலின் கீதத்தோடு 
என் மகனின் பாடல் வரும் 
அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் அவன் பாடலை.
ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதோ என் பாடல் கேட்கிறது...........

தலைகுனிந்து தளர்ந்த குரலில்

விலைபோய் இனம்விற்ற குரலில்

இடம் விட்டிடம் மாறி அலைந்த குரலில்

அழுதும் தொழுதும் விழுந்தும் தளதளத்தகுரலில்

முன்னெப்போதுமில்லா இழி குரலில்கேட்கிறது 

என் பாடல்

எனக்கான பாடல் 

என் காலத்துக்கான பாடல் 

கடந்து போகும்.-நாளை 

விடியலின் கீதத்தோடு 

என் மகனின் பாடல் வரும் 

அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் அவன் பாடலை.

ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

 

 

உங்கள் பாடலை வாசிக்க, ஜெயபாலன் எழுதிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகின்றது!

 

கவிதை மொழியில் நீங்கள் வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்பதற்கான அடையாளமே இது!

 

உங்கள் ஏக்கங்களின் முடிவில், நம்பிக்கையின் வெளிச்சக்கோடு தெரிவது, கவிதையின் சிறப்பு எனக் கருதுகின்றேன்!

 

எமது வருங்காலத் தலைமுறைகள், நிச்சயம் எமது முப்பாட்டன்களின் பாடல்களை நிச்சயம் ஒலிக்கும் என்ற நம்பிக்கை நிறையவே என்னிடம் உண்டு!

 

வாழ்த்துக்கள், நேற்கொழுதாசன்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று கவிவடிக்க முடியவில்லையே என பொறாமையாக இருக்கு நேற்கொழுதாசன். எம்மையும் எங்கவைத்துவிட்டது உங்கள் கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

என் பாடல்

எனக்கான பாடல் 

என் காலத்துக்கான பாடல் 

கடந்து போகும்.-நாளை 

விடியலின் கீதத்தோடு 

என் மகனின் பாடல் வரும் 

அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் அவன் பாடலை.

ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

 

 

வாழ்த்துக்கள் கவிஞா, காலம் இடங்களை (Time and space ) கடந்து நிற்கிற முயற்சியில் வெற்றி பெறுங்கள்

 

 

  • தொடங்கியவர்

உங்கள் பாடலை வாசிக்க, ஜெயபாலன் எழுதிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகின்றது!

 

கவிதை மொழியில் நீங்கள் வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்பதற்கான அடையாளமே இது!

 

உங்கள் ஏக்கங்களின் முடிவில், நம்பிக்கையின் வெளிச்சக்கோடு தெரிவது, கவிதையின் சிறப்பு எனக் கருதுகின்றேன்!

 

எமது வருங்காலத் தலைமுறைகள், நிச்சயம் எமது முப்பாட்டன்களின் பாடல்களை நிச்சயம் ஒலிக்கும் என்ற நம்பிக்கை நிறையவே என்னிடம் உண்டு!

 

வாழ்த்துக்கள், நேற்கொழுதாசன்!

நன்றிகள் புங்கை. 

 

எனக்கான அடையாளம் ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறேன். அதன் வழியில் என்னை தொடரச்செய்வது உங்களைப் போன்றவர்களின் விமர்சிப்புக்களும் ஆதரவுகளுமே. 

 

ஆளுமை மிக்க கவியொன்றின் நினைவுகளை மீட்டெடுக்க என் எழுத்துக்களும் உதவி இருப்பதை நினைக்கையில் மகிழ்வாய் தான் இருக்கிறது.

 

எங்கள் தலைமுறைகளளாவது இலக்குகளை வென்றவர்களாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. 

 

என் அன்புநிறைந்த நன்றிகள் புங்கை 

நல்ல விதமாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.

நன்றிகள் வந்தியத்தேவன்.

  • தொடங்கியவர்

உங்களைப் போன்று கவிவடிக்க முடியவில்லையே என பொறாமையாக இருக்கு நேற்கொழுதாசன். எம்மையும் எங்கவைத்துவிட்டது உங்கள் கவிதை.

நன்றிகள் அம்மா. எதோ ஒருவகையில் எனது எழுத்துக்களும் உங்கள் மனதினை தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன். நானெல்லாம் நிமிர்ந்து பார்க்கும் இடத்தில் இருக்கும் நீங்கள் என்னில பொறாமைப்படுவதா ? :(

  • தொடங்கியவர்

 

என் பாடல்

எனக்கான பாடல் 

என் காலத்துக்கான பாடல் 

கடந்து போகும்.-நாளை 

விடியலின் கீதத்தோடு 

என் மகனின் பாடல் வரும் 

அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் அவன் பாடலை.

ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

 

 

வாழ்த்துக்கள் கவிஞா, காலம் இடங்களை (Time and space ) கடந்து நிற்கிற முயற்சியில் வெற்றி பெறுங்கள்

 

 

ஐயா. உங்களின் வாழ்த்துக்களும் விமர்சிப்புக்களும்  என் இருத்தலுக்கான முயற்சியை  வாழவைக்கும்.

 

படைப்பியலின் ஆழங்களை அனுபவித்த உங்களின் கருத்துரைப்புக்கு என் அன்புகலந்த நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களை கடந்துபோய் காட்சிகளை கடத்திவர கவிஞனின்பேனாவால் மட்டுமே முடியும்.. வரலாற்று கதைகளில் கேட்ட குதிரைக்குழம்படி ஓசைகள் போல வார்த்தைகள் திமிருகின்றன உங்கள் ஒவ்வொரு கவிதைகளிலும்.. முட்டிமோதித்தெறிக்கின்றன முத்துக்களாய் தமிழ்... கள்ளுக்கு கட்டுண்டு கிடக்கும் வண்டுபோல உங்கள் கவிதைகளில் மனம் கிறங்கி நிற்கிறது..வாழ்த்துக்கள் கவிஞா...என் அண்ணா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.