Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

Featured Replies

வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்!

 

Vazhai.jpg

 

செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும்.

 

நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற கழிவு நீரானது விரயமாகாத வண்ணம் கிணற்றடிக்கு அருகாக ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தினை வைத்திருப்பார்கள் எம்மவர்கள். இது இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கிணறு உள்ள வீடுகளில் பொதுவான ஓர் விடயமாகவும் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டத்தில் வாழை, கத்தரி,வெண்டிக்காய்,பயற்றங்காய், பூசணிக்காய், மரவள்ளி, பச்சைமிளகாய், பசளிக் கீரை ஆகியவற்றினை அதிகளவில் பயிரிடுவார்கள். வாழை மரம் குலை தள்ளியவுடன் பறவைகள் கொத்திடாதவாறு அடிக்கடி பார்த்துப் பார்த்து வாழையினைப் பரமாரிப்பார்கள்.
 
gggn3bfsbityq263i3i.jpg
 
வாழைக் குலையானது இயற்கையாகவே பழுக்கும் வரை காத்திருந்து வெட்டுவார்கள் அதிகளவானோர். ஆனால் இன்னும் சிலரோ, செயற்கையான உர வகைகளை இட்டு வாழைக் குலையினைப் பழுக்கச் செய்வார்கள். சுகாதாரப் பரிசோகர்களிடம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும் என்பதால் செயற்கையான முறையில் வாழைக் குலையினைப் பழுக்க வைக்க அதிகளவானோர் விரும்புவதில்லை. இயற்கையான முறையில் பழுக்க வைப்பது தொடர்பில் இரண்டு முறைகளைக் கையாள்வார்கள்.ஒன்று வாழைக் குலையானது முற்றி உண்பதற்கு ஏற்ற பருவத்தினை அடைந்ததும், உடனடியாக நிலத்தில் ஓர் கிடங்கினை வெட்டி, அந்தக் கிடங்கினுள் வாழைக் குலையினை போட்டு, வாழை மடல் போன்றவற்றால் சுற்றி மூடி விடுவார்கள்.பின்னர் கிடங்கின் ஓரத்தில் சாம்பிராணிக் குச்சிகள் சிலவற்றினை கொழுத்தி விடுவார்கள்.
 
இவ்வாறு சாம்பிராணிக் குச்சிகள் கொளுத்துவதற்கான காரணம், வாழைக் குலையானது பழுத்து வரும் வேளையில் வாழைப் பழத்துடன் சேர்ந்து கம கம என்ற சாம்பிராணித்துகள் வாசமும் மூக்கினைக் கவரும் வண்ணம் இருப்பதற்காகவே. ஊர்களில், கிராமங்களில் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து கலியாண வீடுகள் நடை பெறுகின்றது என்றால்; கலியாணத்திற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பதாக வாழைத் தோட்டத்திற்குச் சென்று உழவு இயந்திரத்திலோ அல்லது லாண்ட் மாஸ்டரிலோ வாழைக் குலையினை ஏற்றி வந்து இவ்வாறான முறையில் பழுக்க வைப்பார்கள். இதே போல இன்னோர் முறை பெரிய இரும்புத் தகரத்தினுள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பரலினுள் வாழைக் குலையினைப் போட்டு வாழை மடல் போன்றவற்றால் மூடி வைத்து சாம்பிராணித்துகள் இட்டுப் பழுக்க வைப்பார்கள்.
 
Vazhai+Kulai.jpg
 
முன்பு எல்லாம் கலியாண வீடுகள் நிகழப் போகின்றது என்றால் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். 2004ம் ஆண்டு வரை அதிகளவான திருமணங்கள் வட கிழக்கில் வீட்டுப் பந்தலில் தான் நடை பெற்றன. வீட்டு முற்றத்துப் பந்தலில் திருமணம் நிகழ்வதாயின்; பெண்கள் கூட்டத்தினர் திருமணப் பந்திக்குத் தேவையான பலகாரங்களை மும்முரமாகச் சுட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆண்கள் கூட்டத்தினர் கல கலப்புடன், சந்தோசக் களையில் வெளி அலங்கார வேலைகளைச் செய்யத் தொடங்கிடுவார்கள்.லான்ட் மாஸ்டர் இல்லையென்றால் உழவு இயந்திரத்தில் சென்று வாழைக் குலை, வாசலிலே நடுவதற்கு தேவையான வாழை மரம், மற்றும் சோடணைப் பொருட்களைப் பெற்று வருவதற்கு இளைஞர் கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு செல்லும். இன்றளவில் நகர மயமாக்கலின் விளைவினால் திருமண மண்டபங்களில் திருமண விழாக்கள் இடம் பெறுவதால் இந்தக் கல கலப்பெல்லாம் எம்மை விட்டுப் பறந்தோடிப் போய் விட்டது. 
 
வாழைக் குலையினை ஏன் மூடி வைத்து பழுக்க வைக்கிறார்கள் என்பதற்கான விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு வேளை வெய்யில் படாம மூடி வைத்தால் வாழைக் குலை பழுத்திடும் என்பதாலோ என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.
 
மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக ஈழவயலினூடே உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, 
உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்வது;
நேசமுடன்,
செ.நிரூபன்.
 

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி கோமகன். எண்ட வீட்டு வாழையும் இன்னும் குலை தள்ளாமல் கிடக்கு. ஏனென்டுதான் தெரியேல்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்

இப்பத்தான் மருதனா மடம் சந்தையாலை இறகினது கண்டியளோ :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

பழுக்க பழுக்க சாப்பிட்டு விட்டு அப்பாவி அணில்கள், கிளிகளை சாட்டியது பசுமை நிறைந்த நினைவுகள். :)  இணைப்புக்கு நன்றி, கோமகன்.

  • தொடங்கியவர்

பழுக்க பழுக்க சாப்பிட்டு விட்டு அப்பாவி அணில்கள், கிளிகளை சாட்டியது பசுமை நிறைந்த நினைவுகள். :)  இணைப்புக்கு நன்றி, கோமகன்.

 

அணில் கிளி வாழைப் பழத்தைக்  காந்தினால் அங்கையங்கை அடயாளங்கள் இருக்கும் . நீங்கள் அப்பிடிக்கூட விட்டு வைக்கவில்லையோ  :o :o :lol::D ??

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடத்தில் என்ன விசேசமெண்டாலும் நாலு நாட்களுக்கு முன்பே  நாங்கள் நீர்வேலிக்குச் சென்று  முத்திய   வாழைக் குலைகள், நல்ல மரத்துடன் சேர்த்து இரண்டு என எல்லாம் சேர்த்து தோட்டத்தில் கிடங்கு வெட்டி எல்லாவற்றையும் போட்டு இலை,தலைகளால் மூடி நல்லாப் புகை அடித்து விட்டு சுத்தமாய் மூடி விடுகிறது.பின் முதல் நாள் போய் லொறியில் ஏற்றி வந்து பந்தலில் கட்டுறது.  நல்லாய் முற்றிய குலைகள் எண்டால் புகையடிச்சாலும் உருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்காது. :D

 

அப்படியே செத்தவீடு எண்டால் சாம்பல் மொந்தன் வாழைக்காய் குலை மரத்துடன் வெட்டி வந்து (புகையடிக்காமல் ) கட்டுறது. :D

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்குலைகளை கோவில் திருவிழாக்களில் வேள்விக்கு தொங்க விடுவார்கள் சிறு வயதில் வேள்வி முடிய முன்னரே வாழைக்குலைகள் காணாமல் போனதையும் கண்டிருக்கின்றேன் :D:lol:

  • தொடங்கியவர்

எங்களிடத்தில் என்ன விசேசமெண்டாலும் நாலு நாட்களுக்கு முன்பே  நாங்கள் நீர்வேலிக்குச் சென்று  முத்திய   வாழைக் குலைகள், நல்ல மரத்துடன் சேர்த்து இரண்டு என எல்லாம் சேர்த்து தோட்டத்தில் கிடங்கு வெட்டி எல்லாவற்றையும் போட்டு இலை,தலைகளால் மூடி நல்லாப் புகை அடித்து விட்டு சுத்தமாய் மூடி விடுகிறது.பின் முதல் நாள் போய் லொறியில் ஏற்றி வந்து பந்தலில் கட்டுறது.  நல்லாய் முற்றிய குலைகள் எண்டால் புகையடிச்சாலும் உருசியில் அவ்வளவு வித்தியாசம் இருக்காது. :D

 

அப்படியே செத்தவீடு எண்டால் சாம்பல் மொந்தன் வாழைக்காய் குலை மரத்துடன் வெட்டி வந்து (புகையடிக்காமல் ) கட்டுறது. :D

 

நீர்வேலி வாழைக்குலையை அடிக்கேலாது :o சிலநேரம் நீளம் கூடி கிடங்கும் வெட்டி விடுறவை  :lol:  .

அது சரிசெத்த வீட்டுக்கு ஏன் சாம்பல் மொந்தன் வாழைக்குலை கட்டுறவை ?? அதுவும் பொத்தியோடை .  ஏதாவது காரணம் இருக்கோ ??

 

  • தொடங்கியவர்

பகிர்தலுக்கு நன்றி கோமகன். எண்ட வீட்டு வாழையும் இன்னும் குலை தள்ளாமல் கிடக்கு. ஏனென்டுதான் தெரியேல்லை.

 

இந்த விளையாடுக்கு நான் வரேலை :lol: :lol: :icon_idea: . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமே :) :) .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்தலுக்கு நன்றி கோமகன். எண்ட வீட்டு வாழையும் இன்னும் குலை தள்ளாமல் கிடக்கு. ஏனென்டுதான் தெரியேல்லை.

மணிவாழைக்கு குலையெல்லாம் தள்ளாது கண்டியளோ.........குலைதள்ளோணுமெண்டுட்டு கண்டகண்ட மருந்துகளை வாங்கி காசை கரியாக்காதேங்கோ..... :D
 
 
வாழைக்குலை புகையடிக்காமல் பழுக்க வைக்கிறதுக்கு இன்னொரு மணிச்சாமான் இருக்கு! அதுதான் அஸ்பிரின் குளிசை!!!!! இரண்டுகுளிசையை வாழைத்தண்டுக்கை இறுக்கி விட்டால் ஒரு இரவிலை எல்லாக்காயும் பொன்னிறத்துக்கு வரும். :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்
வாழைக்குலை புகையடிக்காமல் பழுக்க வைக்கிறதுக்கு இன்னொரு மணிச்சாமான் இருக்கு! அதுதான் அஸ்பிரின் குளிசை!!!!! இரண்டுகுளிசையை வாழைத்தண்டுக்கை இறுக்கி விட்டால் ஒரு இரவிலை எல்லாக்காயும் பொன்னிறத்துக்கு வரும்.  :icon_idea:

 

இது புதிசாக இருக்கே.  தகவலுக்கு நன்றி அண்ணா.

 

 

வாழைக்குலை புகையடிக்காமல் பழுக்க வைக்கிறதுக்கு இன்னொரு மணிச்சாமான் இருக்கு! அதுதான் அஸ்பிரின் குளிசை!!!!! இரண்டுகுளிசையை வாழைத்தண்டுக்கை இறுக்கி விட்டால் ஒரு இரவிலை எல்லாக்காயும் பொன்னிறத்துக்கு வரும். :icon_idea:

 

அப்ப இதை ஊரில குடிச்சவையின்ரை கதி :D  பழுத்திருக்குமோ :unsure::(

 

:D

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் .....புகையடிச்சும் பழு வைக்கிறவையள்

  • தொடங்கியவர்

வாழைக்குலைகளை கோவில் திருவிழாக்களில் வேள்விக்கு தொங்க விடுவார்கள் சிறு வயதில் வேள்வி முடிய முன்னரே வாழைக்குலைகள் காணாமல் போனதையும் கண்டிருக்கின்றேன் :D:lol:

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாத்தியார் :) :) .

 

  • தொடங்கியவர்

 

மணிவாழைக்கு குலையெல்லாம் தள்ளாது கண்டியளோ.........குலைதள்ளோணுமெண்டுட்டு கண்டகண்ட மருந்துகளை வாங்கி காசை கரியாக்காதேங்கோ..... :D
 
 
வாழைக்குலை புகையடிக்காமல் பழுக்க வைக்கிறதுக்கு இன்னொரு மணிச்சாமான் இருக்கு! அதுதான் அஸ்பிரின் குளிசை!!!!! இரண்டுகுளிசையை வாழைத்தண்டுக்கை இறுக்கி விட்டால் ஒரு இரவிலை எல்லாக்காயும் பொன்னிறத்துக்கு வரும். :icon_idea:

 

 

இந்த விளையாட்டைக் கடைக்காறார் எல்லோ செய்யிறது குமாரசாமி அண்ணை  :D  :D  ?? வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.