Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாகரத்து.. உண்மையில் ஒரு நாடகம் தானே..!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏற்கனவே காதலித்து பிரிந்தவள் தான். எனக்கு திருமணம் செய்ய ஆர்வமில்லை. :rolleyes: ஆனால் திருமணம் செய்யாமல் இருக்க வீட்டில் விட மாட்டார்கள் போலிருக்கு. :(

நான் திருமணம் செய்வதாக இருப்பின் முன்னர் காதலித்தது பற்றி சொல்வேன் - திருமணத்தின் பின்னர் அதை பற்றி கதைக்க கூடாது என்ற கோரிக்கையுடன். (சொல்வதால் வரும் பின் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும்.... :))

 

திருமணத்தின் பின்னரும் அதையே நோண்டிக்கொண்டிருந்தால் நானாகவே அவனை விவாகரத்து எடுக்கப்போவதாக கேட்க தான் plan... :D:)

 

இன்றைய மனித வாழ்வியலில் ஆண் பெண் சகஜமான பழகும் சூழலில்.. காதலிப்பது.. பிரிவது.. சாதாரண செயற்பாடுகள்.

 

ஆண்களுக்கு பிடிக்காத முக்கிய விடயம்.. காதலித்துப் பிரிவதல்ல. திருமணமான பின் கணவனிடம்.. காதலித்தவனை உதாரணம் காட்டுவது. "அவனைக் கட்டி இருந்தால்.. நான் இப்ப நல்லா இருப்பன்.. உன்னைக் கட்டி.. இதைத் தானே கண்டன்".. என்று வார்த்தைகளால்.. இகழும் போது.. அன்பைக் கடந்து ஆக்கத்தைக் கடந்து.. ஆத்திரமே பல இடங்களில் பொங்கக் காண்கிறோம்..! அவை விவாகரத்துக்கள் வரை இழுபடுவதும் நிஜத்தில்.. நடக்கிறது. ஆண்கள் பெண்களிடம் இப்படிச் சொல்வது குறைவு. பெண்கள் ஆண்களை மற்றை ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது அதிகம். அது ஒரு வகையில் தப்பும் கூட. அந்த ஆணின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதில்.. தாழ்த்தவே அது செய்யும்.

 

படைப்பிலும் அதுதான் சொல்லப்பட்டிருக்குது.

 

 

இது தான் விசுகு அண்ணாவிற்கும் சொல்லப்படுகின்ற பதில்.

 

நன்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட.. சுவி அண்ணா.. விசுகு அண்ணா.. துளசிக்கு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏற்கனவே காதலித்து பிரிந்தவள் தான். எனக்கு திருமணம் செய்ய ஆர்வமில்லை. :rolleyes: ஆனால் திருமணம் செய்யாமல் இருக்க வீட்டில் விட மாட்டார்கள் போலிருக்கு. :(

நான் திருமணம் செய்வதாக இருப்பின் முன்னர் காதலித்தது பற்றி சொல்வேன் - திருமணத்தின் பின்னர் அதை பற்றி கதைக்க கூடாது என்ற கோரிக்கையுடன். (சொல்வதால் வரும் பின் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும்.... :))

 

திருமணத்தின் பின்னரும் அதையே நோண்டிக்கொண்டிருந்தால் நானாகவே அவனை விவாகரத்து எடுக்கப்போவதாக கேட்க தான் plan... :D:)

 

சகோதரி உந்த உதவாககரை  எண்ணங்களை அப்படியே குப்பையில போடுங்கோ. உங்களை மணமுடிக்கப்   போறவரும் ஒன்றும் குழந்தையில்லை. உண்மையாகவே நீங்கள் யாரையும் விரும்பாமல் இருந்தாலும் கூட அவர் 100 வீதம் நம்பப் போறதில்லை. சிலசமயம் அட, யாருமே சைட் அடிக்காத ஒருத்தியா எனக்கு மனைவி என்று மாத்தி யோசிச்சார் எண்டால் இன்னும் கேவலம். அதுபோல அவரையும் நீங்கள் எத்தனை  பேரைக் காதலிச்சீன்கள்  என்றெல்லாம் கேட்டுத் தொன தொனக்கக் கூடாது. எண்டாலும் பாவம் தானே அவரும்.

மணமுடித்து அந்தப் பிரமையெல்லாம் நீங்கித்  திரும்பிப் பார்க்கும்போது இடுப்பளவு ஆழத்துக்குள் இருப்பீர்கள் ,ஒரு குழந்தையும் பிறந்தால் கழுத்தளவு.பிறகு எதைப் பற்றியும் யோசிக்க அவகாசம் கிடைக்காது.

ஆரம்பத்திலேயே  சுய வாக்குமூலம் கொடுத்து மாட்டுப் பட்டீங்களோ பெரும்பாலும் வாழ்க்கையே நரகமாயிடும். பிறகு திருப்பியும் எடுக்கேலாது.

பாருங்கள் உங்களுக்கு லக் இருக்கு, பச்சை கூட தவறி விழுந்திட்டுது. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ர  ஆத்தாடி

ஆரம்பித்தாச்சா?? :lol:  :D  :D

 

வந்திட்டோமில்ல.  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒத்து வாழ்வோம் என்றுதான் திருமண பந்தத்தில் இணைகின்றார்கள். ஆனால் மனங்களில் பிரிவுகள் வந்து இணைந்திருப்பதைவிட பிரிந்திருப்பது நல்லது என்ற நிலை வந்தால் பிரிந்து செல்லலாம் என்பதனால்தான் விவாகரத்து சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

விவாகரத்து அதிகரிப்பதற்கு பெண்கள் ஆண்களில் தங்கியிருப்பது குறைந்திருக்கின்றது ஒரு காரணமாகச் சொல்லப்படலாம். ஆண்களில் தங்கியிருக்காவிட்டால் அந்தக்காலத்திலும் பெண்கள் விவாகரத்தை அதிகம் நாடியிருப்பார்கள். பெண்களை நன்றாகப் படித்து முன்னேறவிடாமல், நல்ல வேலைக்குப் போகவிடாமல் பார்த்துக்கொள்வதனால் விவாகரத்தைக் குறைக்கலாம் என்ற சிந்தனையுள்ளவர்கள் இன்னமும் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

 

 

அருமையான கவிதை நெடுக்ஸ் வாழ்த்துக்கள் ...........உங்கள் திருமணம் வெகு விரைவில சிறப்புடன் நடை பெற வாழ்த்துகிறேன் .
 
மேலும் காதல் ,திருமணம் இந்த இரண்டிற்கும் வேறுபாடு உண்டு காதல் என்பது அன்பு ,திருமணம் என்பது பொறுப்பு ............திருமணத்திற்குள் காதல் உண்டு காதலுக்குள் திருமணம் இல்லை ..............ஒரே குழப்பமாய் இருக்கா எனக்கும்தான் .............குறுக்கு கேள்வி கேட்கப்படாது . :D  :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒத்து வாழ்வோம் என்றுதான் திருமண பந்தத்தில் இணைகின்றார்கள். ஆனால் மனங்களில் பிரிவுகள் வந்து இணைந்திருப்பதைவிட பிரிந்திருப்பது நல்லது என்ற நிலை வந்தால் பிரிந்து செல்லலாம் என்பதனால்தான் விவாகரத்து சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

விவாகரத்து அதிகரிப்பதற்கு பெண்கள் ஆண்களில் தங்கியிருப்பது குறைந்திருக்கின்றது ஒரு காரணமாகச் சொல்லப்படலாம். ஆண்களில் தங்கியிருக்காவிட்டால் அந்தக்காலத்திலும் பெண்கள் விவாகரத்தை அதிகம் நாடியிருப்பார்கள். பெண்களை நன்றாகப் படித்து முன்னேறவிடாமல், நல்ல வேலைக்குப் போகவிடாமல் பார்த்துக்கொள்வதனால் விவாகரத்தைக் குறைக்கலாம் என்ற சிந்தனையுள்ளவர்கள் இன்னமும் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

 

 

இன்றைய மனிதப் பொருண்மியம்.. பெரும்பாலும் தற்சார்பு நிலையில் தான் உள்ளது. அந்த வகையில்.. பெண்களோ.. ஆண்களோ படிக்க வேண்டியதும்.. வேலை செய்ய வேண்டியதும் கட்டாயமும் கூட.

 

ஆனால் குடும்பம் என்ற அலகினுள்.. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பொறுப்புக்களைப் பகிர்ந்து சார்ந்திருப்பது குடும்ப அமைப்பை பலப்படுத்துவதோடு.. விவாகரத்துக்களையும் குறைக்கும். இதனை நோக்கிய.. ஒரு புரிந்துணர்வை இன்றைய இளைய சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

போட்டி போட்டுக் கொண்டிருந்த Ebay கூட..Argos கூட்டு வைக்குது. அதற்காக இரண்டு நிறுவனங்களும்.. தனித்துவத்தை இழக்கவில்லை. ஆனால் ஒன்று மற்றையதன் வளத் தேவையை வரையறையோடு பாவித்து முன்னேற முற்படுகின்றது. இது குடும்பங்களுக்கும் பொருந்தும்.

 

அதைவிடுத்து பெண்களுக்கோ.. ஆண்களுக்கோ கல்வி.. வேலை வாய்ப்பு.. வாழ்வுரிமைகளை மறுத்து.. அடிமைகளாக்கி வீட்டுக்குள் வைத்திருப்பது என்பது.. இன்றைய உலகில்.. சாத்தியம் இல்லை. அது அவ்வளவு இலகுவும் அல்ல..! :icon_idea::)

 

அருமையான கவிதை நெடுக்ஸ் வாழ்த்துக்கள் ...........உங்கள் திருமணம் வெகு விரைவில சிறப்புடன் நடை பெற வாழ்த்துகிறேன் .
 
மேலும் காதல் ,திருமணம் இந்த இரண்டிற்கும் வேறுபாடு உண்டு காதல் என்பது அன்பு ,திருமணம் என்பது பொறுப்பு ............திருமணத்திற்குள் காதல் உண்டு காதலுக்குள் திருமணம் இல்லை ..............ஒரே குழப்பமாய் இருக்கா எனக்கும்தான் .............குறுக்கு கேள்வி கேட்கப்படாது . :D  :D

 

 

என்னைப் பொறுத்தவரை.. நீங்கள் சொன்னது போல.. திருமணம் என்பதை ஒரு மிகையான சுமை அல்லது பொறுப்பாகவே உணர்கிறேன். அதுவும் தமிழ் பெண்களை (பொதுவாக) திருமணம் செய்தால்.. இந்தச் சுமைகள் கொஞ்சம் அதிகம்..! இன்னும் அந்தச் சுமையை.. பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லை எனலாம். கூடிய அளவு சுதந்திரமாக.. தற்துணிவோடு வாழ்வதையே விரும்புகிறேன்.  அந்த வகையில்... திருமணம்.. ஒரு கோப்பை ரீக்கு.. ஒரு தேயிலை தோட்டத்தை பராமரிப்பது போன்றது. நமக்கேன் அந்த வேண்டாத வேலை..!

 

எதையும் செய்ய முதல் பிளான் போட்டுச் செய்யனும். செய்திட்டு முழிக்க... சமாளிக்கக் கூடாதில்ல..! :lol::icon_idea:

 

நன்றி அண்ணா.. உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

 

நுணாவிற்கும் நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் நெடுக்ஸ் அண்ணை,

 

எந்தப்பிரிவுமே ‘தாங்கவொண்ணாதது தான். ‘ஏனோ அதிகம் நேசிப்பைச்சுமப்பவர்களிடமே ‘சுமைகள் ‘தங்கிவிடுகின்றன.

 

 

”உ” வில் தொடங்கிய உங்கள் கவி வரிகள் ‘உ”ள்ளத்தின் ‘உ’யரம் தொட்டு விட்டதே!.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கச்சி. உங்கள் வரவிற்கும் கருத்திற்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.