Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேன் நிலவு ~ காமரசம்

Featured Replies

moon-angel-313212.jpg

 

பாற்கடலில் பாவை குளிக்க
அதைப்பார்த்துக் கண்கள் களிக்க
நனைந்த தேகத்தில் அங்கங்கே
மின்னிச்  சிரிக்கின்றன மொட்டுக்கள்!

மெல்ல மெல்லப் பாலாடை விலக
சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற
முழுதான நிர்வாணத்தின் அழகில்
சொக்கிப்போகிறது மனசு!

பாவையவள் பார்வையாலே
எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்!
ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட
இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே!

கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி
தன் அவசரத்தைக் காட்டுகிறாள்!
ஜன்னலைத்  திறந்துவைத்தால்
என்  கட்டில் வரை வருவாள்!

காலையில்,    அவள் கணவன் வரும்வரைக்கும்
என் இரவு.... இவளோடு கழியும்!
அழகான,    இவள் தேகம் புணர்வதினால்
என்  இதயம்.... இதமாகக் களிக்கும்!

காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை
காலையில் பார்க்கும்போது...
நேற்றைய இரவை அவளோடு களித்ததும்
நீங்காமல் நினைவில்வரும்!

மீண்டுமவளைப் புணர்வதற்கு...
இன்னுமொரு பெளர்ணமி இரவுக்காய்
காத்துக்கிடக்கின்றன கண்கள்!

 

 

 

 

( எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது )

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா கவிதை இப்பிடி ஆயிட்டுதே என்று ஒரு குழப்பத்தோடு வாசித்து முடித்துத்தான் தலைப்பைப் பார்த்தேன். குழந்தாய் நன்றாக உங்களுக்கு எழுத வருகிறது. தொடருங்கள்.


பச்சை இல்லைப் போட :D

  • கருத்துக்கள உறவுகள்

 கவிதையில்  ஊறுவது  காமரசமா, கருத்தழிக்கும்  தேனா!

 

நன்று கவிதை!!

வாழ்த்துக்கள் கவிதை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, கற்பனையின் உச்சத்தைத் தொடுகின்றது!

 

பாவையவள் பார்வையாலே
எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்!
ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட
இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே!

 

 

பனை மரத்தை, உதாரணம் காட்டியிருக்கலாம்! :D

  • தொடங்கியவர்

என்னடா கவிதை இப்பிடி ஆயிட்டுதே என்று ஒரு குழப்பத்தோடு வாசித்து முடித்துத்தான் தலைப்பைப் பார்த்தேன். குழந்தாய் நன்றாக உங்களுக்கு எழுத வருகிறது. தொடருங்கள்.

பச்சை இல்லைப் போட :D

 

சுமே அக்கா...! இக்கவிதையை மேலோட்டமாகப் படித்தால், என்னடா இவன்..! பச்சை பச்சையா எழுதியிருக்கிறான் என்று தோன்றும். :wub::D கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால்தான்....   

 

நிலவு இங்கு பெண்ணாகவும், வெண்மேகங்கள் பாற்கடலாகவும் , மின்னும் நட்சத்திரங்கள் மொட்டுக்களாகவும், இருள் என்பது அந்தரங்கம் என்றும் சூரியன் ~  அப்பெண்ணின் கணவனாகவும்  மொத்தத்தில் பெளர்ணமி இரவொன்றில் நிலவை இரசிப்பதே இக்கவிதை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

சும்மா ஒரு சேஞ்சுக்காக எழுதினது. இப்பிடியான கவிதைகளை எழுதும்போது மனசுக்கும் கொஞ்சம் சுகமா இருக்கு.! :wub::D

  • தொடங்கியவர்

 கவிதையில்  ஊறுவது  காமரசமா, கருத்தழிக்கும்  தேனா!

 

நன்று கவிதை!!

 

ரெண்டுமே ஊறணும் என்று எழுதினதுதான்...! ஆனால் வாசிக்கும்போது என்ன ஊறிச்சு என்று வாசிச்ச நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும் சுவி அண்ணா! ;) :wub::lol:

 

மிக்க நன்றி சுவி அண்ணா! :)

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கவிதை. 

 

மிக்க நன்றி நேற்கொழுதாசன்......! :)

  • தொடங்கியவர்

கவிதை, கற்பனையின் உச்சத்தைத் தொடுகின்றது!

 

 

பனை மரத்தை, உதாரணம் காட்டியிருக்கலாம்! :D

 

பனை மரம் என்று போட்டிருக்கலாம்தான். ஆனால் அது தென்னை மரத்தைவிட ரொம்ம்ம்ம்ம்பக் கறுப்பு. :lol:  தென்னை மரம் பிறவுண் கலர் அதான்! :wub::rolleyes::lol:

 

மிக்க நன்றி புங்கை! :)

காமத்தை ரசமாக்கி இறுதியில் இயற்கையை  ரசமாக்கிப் பிழிந்ததிற்க்கு மனங்கனிந்த பாராட்டுக்கள் கவிதை :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.