Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை

 

 

kenya_CI.jpg

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையில் ஆரம்பாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை விடுத்துள்ளது. அமர்வுகளை ஆபிரிக்க வலய நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென அமைதியான முறையில் கென்யா கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்ய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் n;தாடரப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பு கென்ய ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் காப்பாற்றத் தவறியுள்ளதாகவும், இந்த அமைப்பின் நிகழ்வுகளில் ஆபிரிக்க நாடுகள் பங்கேற்கக் கூடாது எனவும் கென்யா கோரியுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் அமர்வுகளை நடாத்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடா போன்ற நாடுகள் அமர்வுகளை புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன. இவ்வாறான ஓர் நிலையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளை எதிர்த்து மேலும் நாடுகள் அமர்வுகளை புறக்கணித்தால் பாதக நிலைமையை ஏற்படுத்தக் கூடுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு பல்வேறு சர்ச்சைகளையும் சவால்களையும் எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97941/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவும்... புறக்கணிக்கும் முடிவில் உள்ள நிலையில்,
இந்த மாநாடு... "சார்க் மாநாடு" மாதிரி.... ஆசிய நாடுகளுடன் நடந்தாலும் ஆச்சரியமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
kenya_flag-seithy-20131022.jpg

இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் தெ ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ஏற்கனவே உகண்டா, தான்சானியா, றுவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா ஆகிய நாடுகள் இலங்கை மாநாட்டில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன. கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  

கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கென்யா தமது ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதும் அதனை தடுக்கமுடியவில்லை.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95520&category=TamilNews&language=tamil

இதில் ஒரு அரசியல் முரண்பாடு இருக்கின்றது.

 

நாங்கள் இலங்கையை போர்க் குற்றத்தில் ஈடுபட்ட நாடாக கருதி, அதற்கு காரணமான மஹிந்தவில் இருந்து அனைவரையும்  தண்டிக்குமாறும் அதனால் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த விடக் கூடாது என்றும் மிச்ச நாடுகளை கோருகின்றோம். அத்துடன் பொதுநலவாய அமைப்பு மஹிந்தவை காப்பாற்ற முனைகின்றது என்றும் குற்றம் சாட்டுகின்றோம்.

 

ஆனால் கென்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்றச் சாட்டுகளுக்கும் விசாரணைக்கும் பொதுநலவாய அமைப்பு எதிப்புத் தெரிவிக்கவில்லை என்று கோரி பொதுநலவாய மாநாட்டை மிச்ச ஆபிரிக்க நாடுகள் எதிர்க்க கோருகின்றது. ஒரு வேளை ஆபிரிக்க நாடுகள் கென்யா சொல்வதைக் கேட்டால், நாளைக்கு ஒரு வேளை இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை வருமாயின், அதனையும் கூட்டாக எதிர்க்க முனையும்.

நாம் யாருடன் சேரவண்டும் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்தவின் ஆலோசனையாக  இருக்கும்......

வராதவன் எல்லோரம் அந்த பட்டியலில் வருவீர்கள் என்ற மறுதாக்கம்.......... :(

இதில் ஒரு அரசியல் முரண்பாடு இருக்கின்றது.

நாங்கள் இலங்கையை போர்க் குற்றத்தில் ஈடுபட்ட நாடாக கருதி, அதற்கு காரணமான மஹிந்தவில் இருந்து அனைவரையும் தண்டிக்குமாறும் அதனால் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த விடக் கூடாது என்றும் மிச்ச நாடுகளை கோருகின்றோம். அத்துடன் பொதுநலவாய அமைப்பு மஹிந்தவை காப்பாற்ற முனைகின்றது என்றும் குற்றம் சாட்டுகின்றோம்.

ஆனால் கென்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்றச் சாட்டுகளுக்கும் விசாரணைக்கும் பொதுநலவாய அமைப்பு எதிப்புத் தெரிவிக்கவில்லை என்று கோரி பொதுநலவாய மாநாட்டை மிச்ச ஆபிரிக்க நாடுகள் எதிர்க்க கோருகின்றது. ஒரு வேளை ஆபிரிக்க நாடுகள் கென்யா சொல்வதைக் கேட்டால், நாளைக்கு ஒரு வேளை இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை வருமாயின், அதனையும் கூட்டாக எதிர்க்க முனையும்.

காமன்வெல்த்தில் அதிக உறுப்பு நாடுகளை கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா, எனவே கென்யாவின் கோரிக்கையை சில பிராந்திய நாடுகள் ஏற்கலாம். ஆனால் இலங்கையின் போர்க்குற்ற விசாரனையை எதிர்க்க கென்யா நேச நாடல்ல. ஆப்பிரிக்காவில் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு வாக்களிக்கும் அதிகாரமும் இல்லை. இதனால் ஒன்றும் நஸ்டம் இல்லை நமக்கு...

கென்ய அரசாங்கம் மறுத்துள்ளது.

 

எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடம் கென்யா பிரசாரம் செய்வதாக வெளிவந்த செய்தியை கென்ய அரசாங்கம் மறுத்துள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க கென்யா தயாராகி வருவதாகவும் தாம் மிக உயர்மட்டத்தில் பங்கேற்பது உறுதி எனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுநலவாயத்தில் தனது அங்கத்துவத்தை கென்யா பெரிதும் மதிக்கின்றது எனவும் இந்த உறவை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் அது ஈடுபடாதெனவும் கென்ய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

கென்ய ஜனாதிபதி உகுறு கென்யாட்டா மற்றும் உப ஜனாதிபதி வில்லியம் றுட்டோ ஆகியோரை சர்வதேச குற்ற விசாரனை நீதிமன்றில் நிறுத்தியமைக்கு எதிராக தீர்க்கமான நிலைப்பாட்டை எட்ட பொதுநலவாயம் தவறியுள்ளதையிட்டு பொதுநலவாய மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு ஆபிரிக்க நாடுகளிடையே கென்யா பிரசாரம் செய்வதாக அந்த நாட்டு பத்திரிகையான ஸ்ரார் செய்தி வெளியிட்டிருந்தது.

இதை மறுத்து கென்ய அரசாங்கம் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

 

tamilmirror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.