Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நலமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் மருத்துவ பரிசோதனையின் பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் 24 மணிநேரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் நாளைய தினமே வீடு திரும்புவார் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

 

http://akkinikkunchu.com/new/index.php

 

நலம் பெற்று விரைவில் திரும்ப வாழ்த்துக்கள். 

 

(கொழும்பில் இருக்காமல்,முல்லைத்தீவு, கிளினொச்சி கிராமங்களில் நடந்து திரிய எல்லாம் பறந்திடும் :D )

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு வராத மாரடைப்பு இப்போதைய செய்திகளைப் பார்த்தால் இனி நிச்சயம் வரும்.....

கடந்த 22 ஆம் திகதி இரத்தப் பரிசோதனை செய்த முதல்வரை இன்றும் 30, 31 ஆம் திகதியும் வைத்தியசாலையில் வந்து அனுமதியாகுமாறும், முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன் பிரகாரம் முதலமைச்சர் இன்று வைத்தியசாலையில் அனுமதியானார்.

இதனை ஒரு இணைய ஊடகம் திரிபு படுத்தி செய்தி வெளியிட எல்லா ஊடகங்களும் கொப்பியடிதான்...

  • கருத்துக்கள உறவுகள்

அட... "ப்ளட் ரெஸ்ற்" பண்ணவும், ஆஸ்பத்திரிப் பக்கம் போக ஏலாமல் கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற்று விரைவில் திரும்ப வாழ்த்துக்கள். 

 

தமிழரின் இன்றைய  தெரிவு  இவர்

நீண்டஆயுளுடன் இருக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது அனுபவசாலிகள் பின்னால இருந்து ஆலோசனை வழங்கிக் கொண்டு இள இரத்தங்களை பதவில இருக்க விடனும் என்று. குறிப்பா எங்கட அன்ரன் அண்ணா இதில் நல்ல முன்மாதிரி. இன்றைய பிரிட்டனின் தலைவர்கள் எல்லோரும்.. ஆளும் தரப்பு எதிர்தரப்பு வெறும் 40ஐ தொட்டவர்கள். ஆனால் அதே.. இந்தியா.. சீனா.. சிறீலங்காவில் 60.. 70 ஐ தொட்டவர்கள்..! எந்த நாடுகள் ஓரளவுக்கு என்றாலும் ஆரோக்கியமாக உள்ளன என்று பார்த்தால் இளையோர் ஆட்சி நடக்கும் நாடுகளில் தான். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"அக்கினிகுஞ்சு" விக்னேஸ்வரனை பின் தொடர்ந்த படி தான். :D

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு வராத மாரடைப்பு இப்போதைய செய்திகளைப் பார்த்தால் இனி நிச்சயம் வரும்.....

கடந்த 22 ஆம் திகதி இரத்தப் பரிசோதனை செய்த முதல்வரை இன்றும் 30, 31 ஆம் திகதியும் வைத்தியசாலையில் வந்து அனுமதியாகுமாறும், முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன் பிரகாரம் முதலமைச்சர் இன்று வைத்தியசாலையில் அனுமதியானார்.

இதனை ஒரு இணைய ஊடகம் திரிபு படுத்தி செய்தி வெளியிட எல்லா ஊடகங்களும் கொப்பியடிதான்...

சுண்டல் மேலே சொல்வது தான் சரியான செய்தி. தமிழ் ஊததகங்கள் தொடர்ந்து ஊதி ஊதி பழகிப்போச்சு.  முதலமைச்சர் Double bypass செய்த ஒருவர் என்பதால் அவர் வருட மருத்துவ சோதனைக்கு போகவேண்டியிருந்தது. அது பலதடவை வேலை பளு காரணமாக பின்போதப்பட்டுவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் முதலமைச்சர் தான் ஊடகங்களின் நாயகன்
அவர் எங்கு சென்றாலும் பின்தொடரத்தான்  செய்வார்கள் :D
 

அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்கார்

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். அதில் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்குபற்றுவது வழமையாகும்.

இந்த அடிப்படையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் அமைச்சரவை கூட்டம் முதற் தடவையாக இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனாலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamilmirror

வீடு திரும்பினார் விக்னேஸ்வரன்

வியாழக்கிழமை, 31 ஒக்டோபர் 2013

 

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

24  மணித்தியால இதயத்துடிப்பு பரிசோதனைக்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை 12.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலமைச்சரின் மருத்துவ பரிசோதனைகள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடைந்துள்ளன. இதனால் அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் தனியார் வைத்தியசாலை செல்லும் நிலையில் இவர் ஏன் அரசு மருத்துவமனைக்குப் போனார் . :D

 

நலம் பெற்று விரைவில் திரும்ப வாழ்த்துக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.