Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரமாக திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.(படங்கள்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mu2.jpg

 

mu1.jpg

 



 

mu.jpg

 

 

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது.
 
இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது.

 

இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், புதன்கிழமை காலை 11 மணிக்கு பழ.நெடுமாறனை வைத்து திறந்தனர். விழாவில் எம்.நடராஜன், பெ.மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பிரமாண்டமாக நடக்க வேண்டிய திறப்பு விழா ரகசியமாக திறக்கப்பட்டுவிட்டது உலகத் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த திறப்பு விழாவிற்காக மாணவர்கள் சுடர் ஏந்தி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
- செம்பருத்தி

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110662

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்காக
அவர்களின் துயரத்தின் நினைவாக இந்தச் சேவையைச்

செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடந்ததென்றால்.....

இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமை செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாயாக சுற்றினார்கள்.

நேற்று உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதி மன்றத்திற்கு போகும் முடிவை போலீஸ் எடுத்தது. அதன் பேரில் ‘மேற்கொண்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். மேல்முறையீட்டிற்கு போகிறோம்’ என சொல்லாமல் வேறு வேறு காரணங்களை கூறி அங்கு நடக்கும் வேலைகளை நிறுத்த முனைந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ள அந்த நிலத்தில் ஒரு பிரச்சனை என்று, வேறு போலி நபர்களின் பேயரில் ஒரு மனுவைகொடுத்து, அதன் மூலம் தடுத்து நிறுத்தும் வேலை நடத்தது. இன்னும் சிலதை இங்கே சொல்ல முடியாது. நடப்பவை அனைத்தையும் ‘அறிந்து’கொண்டு அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்னிரவு நேரத்திற்குள்ளாக தகவலை ரகசியமாககொண்டுசென்று, அருகில் இருந்த முக்கிய நபர்களையும், அனைத்துகட்சி நிர்வாகிகளையும் ‘முக்கிய கூட்டம்’ என்ற பெயரில் வரவழைத்துவிட்டார்கள்.

நேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற விஷயமாக இருக்கும் என்று அங்கே சுற்றியிருந்த மத்திய உளவு நிறுவன ஆட்களும், ஒட்டு கேட்புகளும் சாதாரணமாக இருந்துள்ளனர். இப்படியாக....அவசரக்கூட்டம் என்றுகூடி, அங்கேயே விஷயத்தை போட்டுடைத்து பட்டென்று திறப்பு விழா என நடத்தி முடித்துவிட்டார்கள்.

எல்லாமும் சரி. மத்திய சோனியா அரசுக்கு ஏன் இவ்வளவு வேகம். ஒன்றுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பது சரியில்லை. சர்ச்சையை உருவாக்கும். அதுவரை தடுக்க வேண்டும். அல்லது தாமதப்படுத்த வேண்டும் என சிங்கள அரசு வேண்டிக்கொண்டது. வேண்டுதல் என்ன? மிரட்டியது. அதை சோனியா கும்பல் நிறைவேற்ற பார்த்தது. இதுதான் ரகசிய விளையாட்டு.

இப்போதைக்கு இது போதும். மற்றபடி 8,9,10.தேதிகளில் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி நடக்கும்...

1012764_711495672195794_1906274243_n.jpg
பிடிக்கவில்லை ·  · பகிர்க · 588
மூலம் ................முகப்புத்தகத்தில் இருந்து 
 
 
தமிழன்டா நாங்க................
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை செய்தார்கள்.. நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் நாம் செயாததை அவர்களாவது ஒழுங்காகச் செய்ததற்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள் நாம் .

  • கருத்துக்கள உறவுகள்

mullivaikkala_muttam_008.jpg

 

 

நல்ல விடயம்.
திறப்பு விழாவை திட்டமிட்டபடி... நவம்பர் 8 வரை காத்திருந்தால், மத்திய அரசு ஏதாவது ஒரு தடை கொண்டு வந்து, திறப்புவிழாவை முடக்கியிருக்கும். இவர்களின் சமயோதித புத்திக்கு, பாரட்டுக்கள்.
இது உருவாக கடுமையாக உழைத்த நெடுமாறன் ஐயாவும், எம். நடராஜனும் நேரடியாகக் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
நாளை... மற்றைய தமிழ் உணர்வாளர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பிக்கட்டும்.

 

 

ஏமாத்தி கொலைசெய்த குற்றமனப்பான்மை பொறுக்கமுடியாமல் துடுகெமுனு எல்லாளனுக்கு சமாதி கட்டினது நினைவுக்கு வருதுங்கோ.,

  • கருத்துக்கள உறவுகள்

திறந்தது மட்டும்தான் முன்னர். மற்ற அனைத்தும் திட்டமிட்டபடி 8,9,10 ம் திகதிகளில் நடைபெறவே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழனின் படைப்பானது, முள்ளி வாய்க்காலின் நினைவுகள் சுமந்து, நாளைய தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லட்டும்!

 

தமிழனின் பெருமைக்கு சான்றாகி நிற்கும், ஆவுடையார் கோவில் ஒரு புறம்!

தமிழனின் அழிவுக்குச் சான்றாகி நிற்கும் முள்ளி வாய்கால் சமாதி மறுபுறம்!

 

எமது விதியைத் திரும்ப எழுதும் நாள் விரைந்து வரட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

1rqq.jpg

"முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் "- திறப்பு நிகழ்ச்சிக்கு தடையில்லை -மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.