Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விரைவில் பிரதமர் மன்மோகன் சிங் யாழ் செல்வார்' : ப.சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chidambaram.jpg

விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என கருத்தரங்கம் சென்னையில், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ப.சிதம்பரம் பேசிய போது : 

பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, யாழ் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. விரைவில் பிரதமர் யாழ் செல்வார்.

இலங்கை இறையாண்மை கொண்ட நாடு என்பதால், இலங்கையை பிரித்து தனிநாடு உருவாக்க முடியாது. அதனல தான் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத் தரவேண்டும் என்ற ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்ததம் உருவாக்கப்பட்டது. 13வது சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கு இலங்கை அரசு முரண்டு பிடிக்கிறது. 

இதற்கிடையே இலங்கையின் இறுதிக் கட்டப் போர் நடந்து கொண்டிருந்த 2009 இல் இந்தியாவின் லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் மத்திய அரசு, வெளிநாட்டில் நடக்கும் போர் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. எனினும் அப்போது நாம் முன்வைத்த யோசனையை இலங்கை அரசோ விடுதலைப் புலிகளோ கேட்டிருந்தால் இன்று பிரபாகாரன் உயிருடன் இருந்திருக்க முடியும். 

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்காது புறக்கணித்தது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எமது வெளியுறவுத் துறை அமைச்சர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றதே விவேகமான செயல். இலங்கை நாம் முற்றாக எதிர்க்க முடியாது. இலங்கையை முற்றாக புறக்கணித்திருந்தால், இலங்கையுடன் தொடர்ந்து உறவைப் பேண முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 13வது அரசியல் அமைப்பு சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்தாக கூறப்படும் இனப்படுகொலைகளுக்கு நியாயமான, பக்கசார்பற்ற, முழுமையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இந்திய மத்திய அரசு ஓயாது.  

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக இந்தியா மேற்கொண்ட வீடமைப்பு, கல்வி மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான நிதியுதவிகள், பங்களாதேஷுக்கு இந்தியா செய்ததை விட அதிகமாகும். பாஜக இதே அளவு செய்வார்களா என்பது சந்தேகமே. இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அரசு பெரும் பணம் செலவழித்திருக்கிறது. அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது.  இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுத்திருக்கிறது எனவும அவர் தெரிவித்தார்.

http://www.4tamilmedia.com/newses/india/18996-2013-12-01-10-56-27?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப்போல் இறையாண்மை இல்லாத காரணத்தினால்தான் பாகிஸ்தானை பிரிக்க காரணமானார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செத்த வீட்டுக்கு வராத மனுசன், ஆட்டைத் திவசதுக்குச் சாப்பிட வாறது மாதிரித் தான் இதுவும்!

 

டில்லியிலேயே இருக்கிறது தான் அவருக்கு மரியாதை! :o

 

இவருக்குச் சனம் 'செருப்பு' மாலை தான் போடும்!

 

சிங்களவன் அதுக்கும் மேல போய், சப்பாத்து மாலையே, கொஞ்சம் கௌரவமாய், போடுவான்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அங்க போயும் இந்தால் மிக்சர்தான் சாப்பிடப்போகுது :D .அதை இந்தியாவிலேயே சாப்பிடலாம் :o:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப்போல் இறையாண்மை இல்லாத காரணத்தினால்தான் பாகிஸ்தானை பிரிக்க காரணமானார்கள்.

 

 

இசை, நன்றாகச் சொன்னீர்ர்கள். இதை யாரும் ஏன் சிதம்பரச் சக்கரத்திடம் கூட்டத்தில் கேட்கவில்லை என்று தெரியவில்லை. மனுசன் என்னத்தைச் சொல்லியிருப்பாரோ?? சிலவேளை ஒன்றுபட்ட பாக்கிஸ்த்தான் மிகப்பெரும் இந்திய எதிரி என்று சொல்லிச் சமாளிச்சிருக்கலாம். அல்லது ஈழத்தமிழர்களை நாம் இனி என்றுமே நண்பர்களாக ஆக்கமுடியாது, அந்தளவிற்கு அழித்துவிட்டோம் அதனால்த்தான், சிங்களவர்கள் சொல்வதுபோல ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்கிறோம் என்று உண்மையைச் சொல்லியிருப்பாரோ என்னவோ. 

அம்புட்டு சத்தமாவா கேட்குது ...........மண் வெயிஸ் :icon_idea:

கட்டாயம் வர வேண்டும். ஆனால் அங்கு போய், கமருன் நடந்து கொண்டது மாதிரி அரசியல்வாதிகளுக்குரிய மிடுக்கோடு நடந்துகொள்ள வேண்டும்.

 

தமிழர்களுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நடக்கலாம். அது வேறு. ஆனால் கடந்த தடவை மகிந்தாவுக்கு தேர்தல் என்று  தபால் கொடுத்து இந்திய நாட்டின் இத்தாலிய அடிமையாக நடந்து கொண்டது அவமானம். தமிழ் நாடு தடுத்து இலங்கை போகாவிட்டால் அதை மானத்துடன் தமிழ்நாட்டு மக்களின் மனதை முறிக்க முடியவில்லை என்று எழுதி ஒரு கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தால் அவருக்கு ஒரு இக்கட்டான நிலைமை என்பதை சிங்கள அர்சாங்கம் கூட புரிந்திருக்கலாம். துணிச்சல் பற்றி யாரும் பேச முடிந்திருக்காது. ஆனால் பள்ளிக்குட பொடியல் படிக்கேலை என்று அடுத்த நாள் அடிவிழ போகுது என்றால்,  சுகமில்லை என்று வாத்தியாருக்கு தபால் எழுதுவது மாதிரி தேர்தலை காட்டி எழுதியமையை பார்த்த எல்லோரும் மன்மோகன் சிங்கிற்கு மகிந்தா மீது இருக்கும் பீதியை புட்டுவைத்தமையை முடிமறைக்க முயலாமை அவமானம்.

 

இனிதன்னும் விக்கினேஸ்வரன் அழைத்ததால் போவத்தக கூறி முதல் அமைச்சர் விக்கினேஸ்வரனை காட்டிக்கொடுக்காமல், "இலங்கை அரசிடன் அனுமதி கேட்டு வடக்கு தேர்தலை நிகழ்த்துவித்ததால் தேர்தலின் பின்னர் வடக்கு மக்களின் கஸ்ட நட்ட நட்டங்களை பார்க்க போவதாக" தைரியமாக சொல்ல வேண்டும். கமருன் மாதிரியே சொந்த வாகன ஏற்பாடுகளுடன் சொந்த பயணமாக வைக்க வேண்டும். சீனா காரன் போடும் நெடுஞ்சாலையை பார்த்து சீனா தொழில் வளத்துக்கு சாடிபிக்கேட கொடுத்து வடக்கு முன்னேறியிருக்கு என்று சொல்வதாயின் கமருனின் பயணத்தால் வந்த நல்லவற்றை அங்கு போய்க  கெடுக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பான் கி முன் 2009ல் வன்னிக்கு சென்று வந்தது போல இவரின் விஜயம் இருக்கும்.

வந்தால் வாங்கோ என்று விக்கி சொல்ல, இல்லை இல்லை கட்டாயம் வருவேன் எண்டு இவர் அடம்பிடிப்பாராக்கும்.

 

 

 

 

வந்து போனதும் இலங்கையில் தமிழர் நல்ல நிலையில் (கமரூண் வந்து போன பின்னர்) இருக்கிறார்கள் எண்று மறக்காமல் அறிக்கை தருவார்...

இது ஏதோ இண்டைக்கு நேற்று நடக்கிற விடயமா...?? காலம் காலமாக நடக்கிற ஒண்று தானே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.