Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நாட்டை அமைப்பதற்கா யாழ். செல்கிறார் மன்மோகன்? நாடாளுமன்றில் ஐ.தே.க. நேற்றுப் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

john.jpg

வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது.

 
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. 
 
இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். 
 
நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
 
"வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்லப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் நாம் அறிய விரும்புகிறோம். 
 
விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்தாலோ, யாழ்ப் பாணம் சென்றாலோ அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பில்லாமல் மன்மோகன் சிங் இலங்கை வரமுடியாது. 
 
பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 
 
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வராத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இப்போது மட்டும் இங்கு வருவதேன்? இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்?
 
எமக்கும் அரசுக்குமிடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டின்மீது எமக்கும் பற்று இருக்கிறது. அந்தவகையில், வடமாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதை நாம் அனுமதிக்கமாட்டோம். எனவே, இந்தியப் பிரதமரின் யாழ். விஜயம் குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்" என்றார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=112072484603566870

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:  :icon_idea:  :icon_idea:

நல்ல  செய்தி

.


பொதுநலவாய மாநாட்டுக்கு எமது ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்து மாநாட்டைப் புறக்கணித்த இந்தியப் பிரதமர், வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இங்கு வருவதை எம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

 

அது தானே...... :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்துப் பார்த்தார் ரணில். மகிந்தவை மிஞ்சிய இனவாதம் இன்றி சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவது.. சாத்தியமில்லை என்று கண்டதும்.. தருணம் பார்த்து வறுத்துக் குத்துகிறார்.

 

ஐ.தே.க கட்சியோடு கூட்டுச் சேர முனையும் சம்பந்தன் போன்ற குறுசிந்தனை அரசியல்வாதிகள் மாற்றி யோசிக்கச் சிந்திக்க வேண்டிய வேளை இது. எந்தச் சிங்களக் கட்சியும் தமிழர்களின் நலனில் கிஞ்சிதமும் அக்கறை செய்யப் போவதில்லை விட்டுக் கொடுப்புக்கு முன்வரப் போவதும் இல்லை.

 

எந்தச் சர்வதேசம் இணைத்தலைமை என்று ஒன்றை உருவாக்கி எங்களைக் கருவறுத்திச்சோ.. அவர்கள் தான் எங்களுக்கு இன்று பதில் சொல்ல வேண்டியவர்கள்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.கவின் மேற்க்கு நாடுகளையும் இந்தியாவையும் பிரத்தாளும் தந்திரம் பெரிதாக எடுபடப்போவதில்லை.

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தை கையில் தூக்காமல் ஐக்கிய தேசிய கட்சி சிங்கள வாக்குகளை ஜெயிக்க முடியாது காலம் காலமாக மகிந்த குடும்பம் தான் ஆட்சியில் இருக்கும் அது தான் இப்ப இதுகள கையில் எடுத்து இருக்கினம்

Edited by SUNDHAL

இனவாதத்தை எடுப்பது நல்லது தானே...எங்களது சுதந்திரம் விரைவில் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாட்டை அமைப்பதற்கா யாழ். செல்கிறார் மன்மோகன்?
தனிநாட்டை அமைப்பதற்கல்ல ...இந்தியாவின் புதிய மாகாணத்தை அமைக்க...... விதி யாரை விட்டு வைச்சுது குரங்கின் கையில் பூமாலை கிடைச்சபடியால்தான் இந்த நிலை.....அதாவது சிலோனை வெள்ளைக்காரன் கொடுத்த கை பிழை

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.