Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாரதியின்றி பயணித்த ரயில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

train(29).jpg

ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று  பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து  இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி  பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த மேற்படி ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் இன்ஜின் சாரதியும் அவரது உதவியாளரும் உடனடியாகப் பணியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். (ரேகா தராங்கனி)

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92002-2013-12-05-03-39-10.html


photo0035.jpg
ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து  இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு தானாக  பயணித்த ரயிலின் புகைப்படத்தை இங்கு காணலாம். (படங்கள் - ரேகா தரங்கனி) 

photo0034.jpg
 

http://tamil.dailymirror.lk/--main/92022-2013-12-05-04-50-28.html


train(30).jpg

தெமட்டகொடை ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று  பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து தெமட்டகொடைரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் இரண்டு சாரதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெமட்டகொடை ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் நிலையத்தின் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92092-2013-12-05-10-01-04.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

300(516)(1).jpg

-ரேகா தரங்கனி

மாளிகாவத்தை ரயில் நிலையத்திலிருந்து இரத்மலானை வரை தானாகவே இயங்கிய ரயிலின் இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்று இது தொடர்பில் விசாரணை நடத்திய மூவரடங்கிய குழு அறிவித்துள்ளது. 

ரயில் சாரதி இல்லாமல் ரயில் இயந்திரமொன்று தானாகவே பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது.

மாளிகாவத்தையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து தானாகவே இயங்கி பயணித்த மேற்படி ரயில், கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் ரயில்வே அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் சாரதியும் அவரது உதவியாளரும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

இக்குழுவே தானாகவே இயங்கிய ரயிலின் இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்று தங்களது விசாரணையின் பின்னர் அறிவித்துள்ளனர். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92116-2013-12-05-12-05-40.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... நிண்ட ரயில் ஓடுது என்றால்,
ஆவிகளின் திருவிளையாடலாக இருக்குமோ.... :rolleyes:

சும்மா... நிண்ட ரயில் ஓடுது என்றால்,

ஆவிகளின் திருவிளையாடலாக இருக்குமோ.... :rolleyes:

ஐயோ அது ஆவியில்லை பேய் அண்ணா  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... நிண்ட ரயில் ஓடுது என்றால்,

ஆவிகளின் திருவிளையாடலாக இருக்குமோ.... :rolleyes:

ஐயோ ......, அது பேயும் இல்லை, ஆவியும் இல்லை அது முனி   :o  :D

ஐயோ அது ஆவியில்லை பேய் அண்ணா  :D

ஐயோ ......, அது பேயும் இல்லை, ஆவியும் இல்லை அது முனி   :o  :D

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தானாக இயங்கிச் சாதனை படைத்த  ரயிலுக்கு, இலங்கையின் அதியுயர்ந்த விருதான 'லங்கா விபூஷண' என்ற விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும்! :D

 

இதைப்பழக்கி எடுத்த சாரதிக்கு, லங்கா விற்பன்ன; என்ற விருது பரிந்துரைக்கப் படுகின்றது! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
train-081213-150.jpg

சாரதி இன்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சின் தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு சம்பவம் கொழும்பில் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 1.45 இற்கு இடம்பெற்றிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அன்று நடந்த சம்பவத்தை அப்போது மூன்று சதத்திற்கு விற்பனையான ‘தினமின’ பத்திரிகை முன்பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

  

ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் இந்தத் தகவல் புகையிரத சேவையைச் சேர்ந்த மூத்த ஊழியர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. 1913 ஆம் ஆண்டு சம்பவமானது, மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின் ஒன்று தானாக இயங்கி களனிவெலி ரயில் பாதையில் மாளிகாவத்தை, மருதானை, நிலையங்களைக் கடந்து கொழும்பு கோட்டை திசை நோக்கி சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் பயணித்து கப்பிதாவத்தை இந்து ஆலயம் வரை வந்து தரித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்திலும் எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை.

முதன்முதலாக சாரதி இல்லாமல் சென்ற ரயில் சுமார் 3.5 மைல் பிரயாணம் செய்திருக்கின்றது. கடந்த வாரம் சாரதி இல்லாமல் பிரயாணித்த ரயில் சுமார் 15 கிலோ மீற்றர் வரை பயணித்திருக்கின்றது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த ஆச்சரியத்தக்க சம்பவம் நடைபெற்றிருப்பதாவது சகலரையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98560&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சாரதியுடன் போகும் புகைவண்டில்கள்தான்  விபத்துக்குள்ளாகின்றன ! :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ்சிறி ஏற்கனவே சொன்னதுபோல ஆவிகளின் வேலைதான்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அன்று கடுமையாக இருட்டி போய் இருந்த மண்டபத்தில் ஆவிகள் எல்லாம் ஓன்று கூடினவாம்..... ஆவிகளின் தலைவர் மகளுக்கு சுயம்வரமாம் 1000 மேற்பட்ட கட்டிளம் உடல்களை கொண்ட ஆண் ஆவிகள் அதில் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வதை பார்த்த ஆவிகளின் உலக இளவரசி அவர்களுக்கு ஒரு போட்டி நடாத்த நினைத்தாவாம் யாரு இந்த ரயிலு என்ஜினை விளாடி விளாடி உருட்டிக்கொண்டு போகின்றார்களோ அம்புட்டு தூரத்துக்கும் அவர்களயே நான் கட்டிப்பேன் என்று ..... ஆவிகளும் போட்டி போட்டுக்கொண்டு உருட்ட யாராலும் முடியலையாம் ஒரே ஒரு ஆவி மட்டும் உருட்டிட்டு போய் அது ஆவி உலக இளவரசியை கைபிடிச்சிசாம்

அது எப்புடி?

அது நீராவியா மாறி ரயில் இஞ்சின இயக்கிசாம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சுண்டல்.. :D உண்மையாகவும் இருக்கலாம்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
train-111213-150.jpg

இயங்கிய நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜின் ஒன்று சாரதி இல்லாமல், திடீரென பயணித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார். குறித்த என்ஜினின் சாவி சம்பவம் இடம்பெற்ற போது பாதுகாப்பான வைப்பில் இருந்துள்ள போதிலும் அதனை மறித்து நிறுத்திய போது அதிலிருந்து மற்றுமொரு சாவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை போன்ற திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  

இந்தச் சம்பவம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரால் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவை தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10 நாட்களுக்குள் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவுடன் அதன் உண்மை நிலைமை தொடர்பில் தகவல்கள் வெளியிட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் குமார வெல்கம மேலும் தெரிவிக்கையில்:மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன. அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பில் பல விடயங்களை விரிவாக தெரிவிக்க முடியும். குறித்த என்ஜின் பிரதான தண்டவாளத்திற்குள் பிரவேசித்த உடனே சாரதியின்றி சென்றுள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாட்டு அறையிலும் பதிந்துள்ளது.எனினும் அந்த என்ஜினை இடைநடுவில் மறித்திருந்தால் தண்டவாளம் புரண்டிருக்கும். அவ்வாறு புரழும் பட்சத்தில் அன்றைய தினம் காலை அந்த தண்டவாளத்தில் பயணிக்க பட்டியலிடப்பட்டிருக்கும் ரயில் போக்குவரத்தில் பெரும் தாமதம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும்.

இதனை தவிர்க்கும் வகையிலேயே இரத்மலானை வரை அனுப்பி வைக்கப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் மூன்று அதிகாரிகள் சென்று பாய்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். என்ஜினை நிறுத்தும் போது அதன் வாயில் சாவி தொங்கிய வண்ணம் இருந்துள்ளது. எனினும் என்ஜினுக்குரிய சாவி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்துள்ளது. பழைமையான என்ஜின் என்பதால் இதற்கு சகல சாவிகளையும் பயன்படுத்த முடியும் எஸ் – 11 ரக சாவியே தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளது.

குறித்த என்ஜின் பயணித்த போது சகல ரயில் கடவைகளும் தானாக மூடப்பட்டுள்ளது. ஏனெனில் அது தன்னியக்க முறையில் செயற்படும் ஒன்றாகும். குறித்த கடவைக்கு சாரதி உள்ளாரா இல்லையா என்பதை பார்க்காது தண்டவாளத்திற்குள் வந்தால் அது செயற்படும்.என்றாலும் இது நாசகாரிகளின் செயலா இயந்திர கோளாறா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதேபோன்று அலவ்வை பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தின் போது அதன் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த ரயிலின் சாவி காணாமல் போயிருந்தது. அது இன்னும் கிடைக்கவில்லை. சிலநேரம் அந்த சாவிதான் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியாத புதிராக உள்ளது. அதேபோன்று பேயின் செயலாகவும் கூறப்படுகிறது. இதனையும் மறுக்கவோ தட்டிக் கழிக்கவோ முடியாது என்றார்.சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் எவரும் இல்லாததால் வாக்குமூலம் பெறுவதில் விசாரணைக் குழுவினர் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ. ஏ. பீ. ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே குறித்த என்ஜினை மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு வந்து இயக்கி மீண்டும் பயிற்சித்து பார்க்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98794&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.