Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழர்கள் இருப்பது போல சிங்களவர்கள் யாழில் குடியேற முடியாதா? - வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cv_vigneshwaran_seithy-20131004.jpg

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர்.

  

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பியே கொழும்பில் குடியேறியுள்ளனர் எனத் தெரிவித்தார். தற்போது இராணுவமும் அரசும் வடக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி வருகின்றது. யாழ்ப்பாண தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையிலும் 1983ம் ஆண்டு கொழும்பிலிருந்த தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் தான் பல தமிழ் மக்கள் தமது உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர். வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98754&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் கொடுத்துள்ளார் முதல்வர்..

இப்படிப்பட்ட கருத்தியலைத்தான் ஒரு பிரச்சாரமாக காலங்காலமாக சிங்களவர்கள் செய்து வந்துள்ளார்கள்.. வட மாகாணசபைத் தேர்தல் நடந்ததும் ஒரு வகைக்கு நல்லதுதான்.. அரசுபூர்வமான பதில்களை வழங்க தமிழ்த்தரப்புக்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.. :huh:

திட்டமிட்ட குடியேற்றத்திற்திற்கும் தன்னிச்சையான மக்களின் குடியேற்றத்திற்கும் இடையேயான வேறுபாட்டை மறைத்து இன் ஒடுக்குமுறையை சர்வதேச ரீதியில் நியாயப்படுத்த முனையும் அரச தரப் பினருக்கு தகுந்த பதில் வழங்கிய கெளரவ முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு நன்றி.

Edited by tulpen

இப்படிபட்ட விக்கியையும் நாங்கள் இந்தியாவின் பொம்மை..துரோகி என்று முத்திரை குத்துவோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிபட்ட விக்கியையும் நாங்கள் இந்தியாவின் பொம்மை..துரோகி என்று முத்திரை குத்துவோம்.....

ஏன் அப்படி முத்திரை குத்துறீங்கள்?? :unsure:

ஏன் அப்படி முத்திரை குத்துறீங்கள்?? :unsure:

எங்களுக்கு குத்த தான் தெரியும்....எப்போதும் "குத்துங்க எசமான் குத்துங்க" என்றே கேட்டு பழகி விட்டது :) :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு குத்த தான் தெரியும்....எப்போதும் "குத்துங்க எசமான் குத்துங்க" என்றே கேட்டு பழகி விட்டது :) :)

 

அது எல்லோருக்கும் தெரியும்!
அது ஏன் என்றுதான் மேலே அவர் கேட்கிறார்.

ஏன் அப்படி முத்திரை குத்துறீங்கள்?? :unsure:

இது இன்டிறேக்ட் முத்திரை குத்தல்.

பிடல் காஸ்ட்ரோ மக்களை சுதந்திரம் என்று ஒரு தீவுக்குள் அடைத்து விட்டு ராகுல் காஸ்ட்ரோ வெளிநாட்டு களியாட்டத்திற்கு போய் ஒபாமாவின் கையை குலுக்குவது போல்.

இந்த போலி சென்ச்சேனை யுக்திகள் பெரிய கொமெடி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிபட்ட விக்கியையும் நாங்கள் இந்தியாவின் பொம்மை..துரோகி என்று முத்திரை குத்துவோம்.....

ஆமாம் நான் இன்றும் சொல்கிறேன் அவர் இந்தியாவின் வால்பிடி. அவர் ஓட்டுபிச்சை கேட்டு வரும் போது மக்களுக்கு குடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று ? வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவேண் என்றவர் இன்று வலிகாமத்திற்க்கு போவதற்க்கு ஆமியிடம் கெஞ்சிகொண்டும் அழுதுகொண்டும் நிற்கிறார் மாவீரருக்கு கட்டிடங்கள் சொன்னவர் சிங்களம் விட்ட எச்சரிக்கையுடன் மூத்திர கோடிக்குள் மரம்நட்டுவிளையாடினார். இதுகளை விடுங்க இவ்வளவு செய்யும் சிங்களத்தை கமரூன் வரும்போது நேரடியாகவே விளக்கம் குடுத்தீர்களா? இல்லையே எல்லாம் போகட்டும் வோட்டு போட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளாவது தீர்க்கபட்டதா? சிங்கள குடியேற்றங்களாலும் நிலஅபகரிப்புகளாலும் தினமும் தாயகம் கண்ணுக்குமுன் பறிபோய்கொண்டிருப்பது தெரியவில்லையா? ஒப்புக்கும் சப்பானி தட்டி இரண்டு அறிக்கை ஒரு கண்டனத்திற்க்கு ஒரு கழுதையை முதல்வராக்கிஇருக்கலாம்.

ஆமாம் நான் இன்றும் சொல்கிறேன் அவர் இந்தியாவின் வால்பிடி. அவர் ஓட்டுபிச்சை கேட்டு வரும் போது மக்களுக்கு குடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று ? வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவேண் என்றவர் இன்று வலிகாமத்திற்க்கு போவதற்க்கு ஆமியிடம் கெஞ்சிகொண்டும் அழுதுகொண்டும் நிற்கிறார் மாவீரருக்கு கட்டிடங்கள் சொன்னவர் சிங்களம் விட்ட எச்சரிக்கையுடன் மூத்திர கோடிக்குள் மரம்நட்டுவிளையாடினார். இதுகளை விடுங்க இவ்வளவு செய்யும் சிங்களத்தை கமரூன் வரும்போது நேரடியாகவே விளக்கம் குடுத்தீர்களா? இல்லையே எல்லாம் போகட்டும் வோட்டு போட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளாவது தீர்க்கபட்டதா? சிங்கள குடியேற்றங்களாலும் நிலஅபகரிப்புகளாலும் தினமும் தாயகம் கண்ணுக்குமுன் பறிபோய்கொண்டிருப்பது தெரியவில்லையா? ஒப்புக்கும் சப்பானி தட்டி இரண்டு அறிக்கை ஒரு கண்டனத்திற்க்கு ஒரு கழுதையை முதல்வராக்கிஇருக்கலாம்.

அந்த நாட்டில் அவர் அதை தான் இப்போ செய்யலாம்.  ஒருவராலும் முடியாது  30 வருசத்தால் முடியாதது வெறும் 3 மாதத்தில் பகற்கனவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இருக்கலாமே ...., நேர்மையாக நிலத்தை வாங்கி வீட்டை கட்டி அதாவது கொழும்பில் தமிழர்கள் இருப்பதுபோல அதைவிட்டுவிட்டு அடாவடித்தனமாக ஆமியின் உதவியோட ஆக்கிரமிக்கிறது கூடாது. :o  :icon_mrgreen:  
 
காணி வாங்கி வீடு கட்ட நிறைய பணாம் வேண்டும் அதெங்க சிங்களவனிடம் இருக்கு ?  அதோட கொழும்பில இருக்கிற தமிழர்கள் நாடு பிரிந்து தமிழ் ஈழம் கிடைத்தால் அவர்கள் தானாக தமிழ் ஈழத்துக்கு சென்று விடுவார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்டில் அவர் அதை தான் இப்போ செய்யலாம்.  ஒருவராலும் முடியாது  30 வருசத்தால் முடியாதது வெறும் 3 மாதத்தில் பகற்கனவு

உங்களுக்கு தெரியுது, முன்னால் நீதிபதி  வடக்கில் இருந்து ராணுவத்தை எடுப்பன் என்று தெரிஞ்சே மக்களை ஏமாத்தினாரா?இனிமேலும் உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா ? முடியாத காரியம் ஏனெனில் அவர்கள் வந்ததே தமிழனை அரசியல் தற்கொலை பன்னவைக்கத்தான் இவர்கள் வந்தபின்தான் அதிவேகமாக நிலபறிப்பு ,கருத்தடை,தமிழர் பகுதியில் வலாத்கார சிங்கள குடியேற்றம் உண்டா இல்லையா சொல்லுங்கள் .முடியாவிடின் முடியாது என்று

 உண்மையை உலகிற்க்கு சொல்ல வேண்டியதுதானே யாரை காப்பாற்ற சப்பானி ஆட்டம் ஆடுகினம் ? 

  • கருத்துக்கள உறவுகள்

மிதவாதத்துடன் உலகம் பேசும் என்று சம்மந்தன் கனவு கண்டு கொண்டிருக்க ஒரு தமிழனும் மிஞ்சபோவதில்லை கடந்த 50 வருஷத்தில்  சிங்களம் தமிழனுக்கு ஏதாவது விட்டு கொடுப்பு செய்திருக்கா? 

மிதவாதம் மீதானா கருணைபார்வை தினமும் இரு இளம் பெண்களுடன் நிர்வாணமாக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காந்தியுடன் செத்துவிட்டது.

மாத்துக்கருத்துக்கள் அரசிடம்தான் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் பெருமாளோ தமிழ்நெட்டிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்.

 

சுத்த அநியாயம் ஐயா. இனி த்மிழ் நெட்டுக்காக இனாமக எழுதுங்கள். அவர்களும் தமிழர்கள் இல்லையா?

உங்களுக்கு தெரியுது, முன்னால் நீதிபதி  வடக்கில் இருந்து ராணுவத்தை எடுப்பன் என்று தெரிஞ்சே மக்களை ஏமாத்தினாரா?இனிமேலும் உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா ? முடியாத காரியம் ஏனெனில் அவர்கள் வந்ததே தமிழனை அரசியல் தற்கொலை பன்னவைக்கத்தான் இவர்கள் வந்தபின்தான் அதிவேகமாக நிலபறிப்பு ,கருத்தடை,தமிழர் பகுதியில் வலாத்கார சிங்கள குடியேற்றம் உண்டா இல்லையா சொல்லுங்கள் .முடியாவிடின் முடியாது என்று

 உண்மையை உலகிற்க்கு சொல்ல வேண்டியதுதானே யாரை காப்பாற்ற சப்பானி ஆட்டம் ஆடுகினம் ?

சரி அப்படியாதல்  அரசியல் செய்யாவிட்டால்  கருனாவிடமோ, டக்கிளசிடமோ முழு தமிழினத்தையும்  அடகு வைப்பதா?

 

ஏதோ ஒரு வகையில் தன்னால் ஆனதை தர்க்க  ரீதியான கருத்துக்களாக முன் வைக்கின்றார்.

 அதன் ஒரு எதிரொலி தான்  பிரித்தானிய பிரதமரே  நேரே யாழ் சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்படியாதல்  அரசியல் செய்யாவிட்டால்  கருனாவிடமோ, டக்கிளசிடமோ முழு தமிழினத்தையும்  அடகு வைப்பதா?

 

ஏதோ ஒரு வகையில் தன்னால் ஆனதை தர்க்க  ரீதியான கருத்துக்களாக முன் வைக்கின்றார்.

 அதன் ஒரு எதிரொலி தான்  பிரித்தானிய பிரதமரே  நேரே யாழ் சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

பொறுத்திருப்போம்.

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் அந்த மூண்றும் ஏதாவது வாயை திறந்து கேட்டதுகளா? 

இல்லை பத்திரிகையாளர் மாநாடாவது வைத்தார்களா?  

கருணா,டக்ளஸின் ஆட்ச்சிக்கும் இப்போதுள்ள ஆட்ச்சிக்கும் உள்ள வேற்றுமைகளை கூறுங்கள் பார்க்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்

மாத்துக்கருத்துக்கள் அரசிடம்தான் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் பெருமாளோ தமிழ்நெட்டிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்.

 

சுத்த அநியாயம் ஐயா. இனி த்மிழ் நெட்டுக்காக இனாமக எழுதுங்கள். அவர்களும் தமிழர்கள் இல்லையா?

மல்லை அய்யா ஐந்தாம் வகுப்பு தாண்டாதவணை தமிழ்நெற் காசு கொடுத்து எழுதவைக்குது என்று என்னை கௌரவப்படுத்தியதுக்கு நன்றி. அப்படி பார்த்தால் உங்கள் பார்வையில் தமிழ்நெற் துரோகத்தனமாய் எழுதுகின்றதா? நல்லா இருக்குய்யா உங்க உடுக்கடி தழைச்சவனுக்கு ஒரு பெண்டில் இழைச்சவனுக்கு ஏழு பெண்டில் கதையாய் இருக்கு உங்க கதை.

 

மற்றும்படி கூத்தமைப்புக்கு வால்பிடிக்கா விட்டால் கருத்துக்களத்தின் அரசன் நீங்கள்தான் அந்த மூன்று பேருக்காக களத்தில் பலபேருடன் கருத்துமுரண்படுவது நல்லதா? சிந்திக்கவும். 

 

மல்லை உங்களுடன் கருத்தாடலில் நீங்கள்  வலுவிழக்கும் சமயங்களில் ஒன்று விழங்கியும் விழங்காமலும் ஒரு பக்க கட்டுரை எழுதுவது இல்லாவிடின் அந்த திரிபக்கமே தலைவைச்சு படுப்பதில்லை இதுதான் உங்கள் கொள்கை எனில் என்னால் உங்களுடன் கருத்தாடமுடியாது மன்னிக்கவும்.

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.