Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசை 15 லட்சம் - மோகம் 30 நாள், காணாமற்போன கனடா மாப்பிள்ளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Canada-mappillai-200-news.jpg

கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ் - மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது.

  

இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் குறித்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இறுதியில் தான் கனடா செல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் புறப்பட்டுள்ளான். அதேவேளை குறித்த யுவதியை வெள்ளவத்தையிலுள்ள தனது பெற்றோருடன் விட்டுச் சென்றுள்ளான். இந்நிலையில் இளைஞனின் பெற்றோர் மேலும் 25 லட்சம் ரூபா உடனடியாக வைக்க வேண்டும். இல்லையேல் மகன் தொடர்பு கொள்ள மாட்டார் என மிரட்டியுள்ளனர்.

பணம் இல்லை என்றதும் காணியை விற்றாவது கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு குறித்த யுவதி மேலும் கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டனர். அதேவேளை குறித்த இளைஞனும் சகல தொடர்புகளையும் நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி தனது சொந்த ஊரான மல்லாகத்துக்குச் சென்று தனது பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். இதேவேளை தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தாம் வழங்கிய சீதனத் தொகையான 15 லட்சம் ரூபாவையேனும் உடன் திருப்பித் தருமாறும் கோரி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வந்து விவாகரத்தைப் பெற்றால் தாங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக தம்மிடம் தெரிவித்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார். பணம் பெறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டே குறித்த இளைஞனும் அவரது பெற்றோரும் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர் என்று கூறும் அவர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிக்கப்பட்டு விட்டதாகவும் மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100698&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில் புலம்பெயர் பெண்களை விசாவுக்காக திருமணம் செய்யும் ஊர் மாப்பிள்ளைகள் அதிகரித்துள்ளதுடன்.. திருமணம் செய்து இங்கு வந்தவுடன்.. அந்தப் பெண்களை ஏனோ தானோ என்று நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. எம்மவருக்கு திருமண வாழ்க்கை என்பது விசாவுக்கு காசுக்கு.. என்று ஆகிப்பேச்சுது. உதுகள் திருந்தாதுகள்.  :(  :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் விவாகரத்துச் செய்தால், அந்தத் தேவாங்கு இன்னொரு பெண்ணை ஏமாற்றக் கன காலம் எடுக்காது! 

 

எனவே போலீசார், அந்த ஆணை விவாகரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதுடன், சீதனததைத் திருப்பிக் கொடுப்பதுடன், ஆணிடமிருந்து ' தகுந்த நஷ்ட ஈடு' அந்தப் பெண்ணுக்குப் பெற்றுக்கொடுக்கப் பட வேண்டும்!

 

இதனால், அந்த ஆணுக்கும், அந்தப் பெற்றோருக்கும் ஒரு படிப்பினையாகவாவது இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில் புலம்பெயர் பெண்களை விசாவுக்காக திருமணம் செய்யும் ஊர் மாப்பிள்ளைகள் அதிகரித்துள்ளதுடன்.. திருமணம் செய்து இங்கு வந்தவுடன்.. அந்தப் பெண்களை ஏனோ தானோ என்று நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. எம்மவருக்கு திருமண வாழ்க்கை என்பது விசாவுக்கு காசுக்கு.. என்று ஆகிப்பேச்சுது. உதுகள் திருந்தாதுகள்.  :(  :rolleyes:

 

இதில் மாப்பிள்ளை தான் கனடாவைச் சேர்ந்தவர், அப் பெண் ஊரில் உள்ளவர்.

15 லட்ச ரூபாய்க்கு கனடா மாப்பிள்ளைக்கு வழி இல்லைப் போலுள்ளது.

பெண் வீட்டார் மாப்பிள்ளையின் படத்தை, இணையத்தில் போட்டு.... அவரை நாறடிக்க வேண்டும்.

இதில் மாப்பிள்ளை தான் கனடாவைச் சேர்ந்தவர், அப் பெண் ஊரில் உள்ளவர்.

15 லட்ச ரூபாய்க்கு கனடா மாப்பிள்ளைக்கு வழி இல்லைப் போலுள்ளது.

பெண் வீட்டார் மாப்பிள்ளையின் படத்தை, இணையத்தில் போட்டு.... அவரை நாறடிக்க வேண்டும்.

 

இந்த செய்தி எல்லா கனடிய/ஐரோப்பிய தமிழ் பத்திரிகைகளிலும் வரவேண்டும்...

அந்த பெண்ணுக்கு உதவ யாரவது முன்வந்தால்... கனடிய போலீசில் முறையிட்டு பார்க்கலாம் (திருமணத்திற்கும் அதற்க்கு பின்னும் பணம் கேட்டு கொடுமை படுத்தியது...என்று)

அப்படியோ அந்த நாயின் விபரங்கள் அப்பெண்ணிடம் இருக்கும் என்று நினைகின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மாப்பிள்ளை தான் கனடாவைச் சேர்ந்தவர், அப் பெண் ஊரில் உள்ளவர்.

15 லட்ச ரூபாய்க்கு கனடா மாப்பிள்ளைக்கு வழி இல்லைப் போலுள்ளது.

பெண் வீட்டார் மாப்பிள்ளையின் படத்தை, இணையத்தில் போட்டு.... அவரை நாறடிக்க வேண்டும்.

உந்த வெளிநாட்டு மாப்பிள்ளை மார் ஏமாத்திறது புதிதல்ல. இது எப்போது எம்மவர்கள் வெளிநாட்டுக்கு இடம்பெயரத் தொடங்கினார்களோ.. அப்ப இருந்தே நடக்குது. இதில கலியாணம் செய்த பலரும்.. ஊரில மாப்பிள்ளை வெளிநாட்டில "வேலை" என்று சொல்லித்தான் கட்டினவை. என்ன வேலை என்று சொன்னது கிடையாது. அந்த லிஸ்டை போட்டா.. யாழிலும் பலர் அம்பிடுவார்கள். ஆனால்.. அண்மைய நாட்களில் இங்கு பிறந்து வளரும் பெண்பிள்ளைகளை ஊர் காட்டக் கூட்டிக் கொண்டு போய்.. அங்க வைச்சு.. சொந்தக்காரப் பொடியள் வெளிநாட்டுக்கு வர.. அவையை மாப்பிள்ளையா காட்டி.. கட்டி வைக்கிறதும்.. அதுகள் இங்க ஒட்டும் இல்லாமல்.. உறவும் இல்லாமல் வாழுறதும் நடக்குது. நாங்கள் அறிய கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 திருமணங்கள் அப்படி நடந்துள்ளன. இதில் 3 இப்போ.. குடும்பத்தகராற்றில் உள்ளது. குறிப்பாக பேஸ்புக்கில்.. நண்பர்கள்.. நீ அவளை.. விசாவுக்குத்தானேடா கட்டின்னு என்று சொல்லி நக்கல் அடித்து.. அவை பெரிய பிரச்சனைகள் ஆகியும் உள்ளன.  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
அந்த மாப்பிள்ளைக்கு கனடாவில காதல் கலியாண குடும்பம் கட்டாயம் இருக்கும்.
 
கனடா போன ஏஜென்சி காசு குடுக்க, இந்த, கிலிசு கேட்ட வேலையை குடும்பத்தோட பார்த்து இருக்குது போல.
 
தமிழ் சிறி சொன்ன மாதிரி படம் போட்டு நாறப் பண்ண வேண்டும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரையில் 30 நாட்கள் குடும்பம் நடத்திய கனடா மாப்பிளை அந்த பெண்ணுக்கு தண்டப்பணமாக ஒரு தொகையினை அவரின் வாழ்நாள் முழுவதும் செலுத்தவேண்டும்.  

என்னை பொறுத்தவரையில் 30 நாட்கள் குடும்பம் நடத்திய கனடா மாப்பிளை அந்த பெண்ணுக்கு தண்டப்பணமாக ஒரு தொகையினை அவரின் வாழ்நாள் முழுவதும் செலுத்தவேண்டும்.

கனடாவில் மனைவி ஓடி போய் நீங்கள் விவாகரத்து செய்தாலும் குறைந்தது மாதம் $1300 கொடுக்கவேண்டும். பின் தங்கும் செலவும் மருத்துவ செலவும் கொடுக்கவேண்டும்.

பிள்ளைகள் இருந்தால் இன்னும் கூட குடுக்கவேண்டும்.

மற்றும் நிறைய சீதன ஏமாற்று விளையாட்டு சிறி லங்கா மாப்பிள்ளைகள் கோடிகளில் செய்கிறார்கள்.

இந்த செய்தி கனடிய தமிழரை திட்ட தயாரிக்கபட்ட செய்தி. பாவம் சிறி லங்கா மாட்டுகருத்தாளருக்கு ராதிகா செய்தி கலக்கி போட்டுது.

Edited by விவசாயி விக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.