Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவுக்குக் கூட அஞ்சாதவர் மஹிந்த; மார் தட்டுகின்றார் டியூ குணசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main.jpg

"இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி, எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அன்று ஜனாதிபதி தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தளர்ந்திருப்பாரானால் அமெரிக்கர்கள் பிரபாகரனை மீட்டுக் கொண்டு சென்றிருப்பர்" - இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரகசியத் தகவலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், அமைச்சருமான டியூ குணசேகர வெளிப்படுத்தியுள்ளார்.
 
காலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,
 
"எமக்குச் சர்வதேச ரீதியில் சவால்கள் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி வாரம் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 19ஆம் திகதி அனைவரும் வெளியில் கொண்டுவரப்பட்டனர். 
 
இதன்போது நான் அறிந்த சில விடயங்களைக் கூறவேண்டும். ஏனெனில் அந்தச் சந்தர்ப்பங்களில் இவற்றைக் கூறவில்லை. தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறவேண்டும். வரலாற்றில் இவை அறிக்கைப்படுத்தப்படவேண்டும்.
 
அப்போது இருந்த நிலைமை என்ன? அந்த இறுதி 5 தினங்களில் என்ன நடந்து என்று எனக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, எமது ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார். இல்லையேல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவோம் எனக் குறிப்பிட்டார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் போரை நிறுத்துமாறு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கூறினார். கனேடியப் பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோரும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கூறினர்.
 
எனக்கு ஞாபகம் இருக்கிறது. மே 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. அன்று காலை ஜனாதிபதி ஜோர்தான் நாட்டுக்குச் சென்றிருந்தார். நான் வரும்வரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் இதைத் தொடருங்கள். எவருக்கும் அடிபணிய இடமளிக்க வேண்டாம் என்று கூறினார்.
 
இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன். அன்று ஜனாதிபதி தமது உறுதியிலிருந்து தளர்ந்திருந்தால், அமெரிக்கர்கள் வந்து பிரபாகரனை மீட்க்கொண்டு சென்றிருப்பர். அவ்வாறானநிலை ஏற்பட இடமளிக்கப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
 
அன்று போரை முடிவுக்குக் கொண்டுவந்ததே இன்று சர்வ தேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பிரதான காரணமாக உள்ளது. அதைவிடுத்து, தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை - எனத் தெரிவித்துள்ளார். - எனக்கு ஞாபகம் இருக்கிறது.
 
மே 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன்.
 
 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=689992573614539246

கம்மியூனிஸிய புளுகு.

நினைப்புதான் பிழைப்பை கெடுத்ததாம் 

லெனின், ஸ்ரலின், குர்ஸ்ஹெவ், பிர்ஸ்நோவ், புட்கின், காஸ்ரோவ் எல்லோரும் அமெரிக்காவை எதிர்த்து முடிந்துவிட்டது. இப்போ இவர் காட்டுகிறார் கொடி.

இவங்கள் எல்லாம் அந்த மனிசனை உசுப்பேத்தி உசுப்பேத்தி தூக்கு மேடைக்கு அனுப்பத்தான் திட்டம்.   :) 

 

பழியை தமிழர்கள் மேல் போடாமல் விட்டால் சரிதான். 

இதையெல்லாம் தாங்கிக் கொள்வதற்கு நல்ல மனப்பக்குவம் நமக்குத் தேவை. அதை யோகா மூலமோ தியானம் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

சிறி லங்கன் வெற்றி களியாட்ட பீலாவை தாங்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள்  நினைத்துக்கொள்வார்

ஒபாமாவுக்கு  கோபத்தை ஏற்றி

மகிந்தவை  ஏதாவது செய்தால் தான்

இனி  இங்கு நாம் தலையெடுக்கமுடியும்............

 

இல்லாது போனால்

பரம்பரை பரம்பரையாக 

அவர்கள் ஆளுவார்கள்

நாம் இப்படியே

சலாம் போட்டுக்கொண்டிருக்கவேண்டியது தான்........

இவர் கூறுவது முழுமையான தவறான தகவல் அல்ல.

 

அண்மைக்கால சிங்களத் தலைமைகளில் மகிந்த பிரேமதாசாவை விடத் துணிவானவர் தான். பல முடிவுகளை சர்வதேசத்தரப்பிற்கு அஞ்சாமல் எடுத்து வருகிறார் என்பதும் உண்மை.

 

ஆனால் அது சிங்கள தேசத்தின் ஆக்கத்திற்கா அழிவிற்கா என்பதற்கு காலம் தான் பதில் தர வேண்டும்....

 

ஆனால் அது சிங்கள தேசத்தின் ஆக்கத்திற்கா அழிவிற்கா என்பதற்கு காலம் தான் பதில் தர வேண்டும்....

அதற்கு காலத்திற்கு பொறுத்திருக்க வேண்டியதில்லை. மத்திய வங்கியின் பொருளாதார புள்ளிவிபரம் பொய் என சொல்லப்படுகிறது. பள்ளிகளின் நிலை அது. நாட்டில் குற்றவியல் கண்கானிப்பின் நிலை அது. மக்களாள் தெரியப்பட்ட பிரதேச சபை தலைவர், அவர் சம்மந்தப்பட்டிருந்த கொலை விசாரணையின் பின்னர் காணவில்லை. தலை மறைவா அல்லது உள்ளக கொலையா? 

 

எனக்கு ஒரு சகோதரம் கிறிஸ்தவர். அப்படி எத்தனை புத்த சிங்கள உறவுகள் இருக்கிறாகளோ நேற்று தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் வணங்குபவர்களுக்கு?

 

இவர் உண்மையை சொல்லுகிறார். அதில் இரண்டு நிலைப்பாடு இல்லை. மற்ற்வர்கள் சொன்னது தான் பொய் என்பதும் உண்மை. ஆனால் அதை அமெரிக்காவை எதிர்ப்பதற்காக  சொல்லுகிறார். உண்மையில் இலங்கையில் ஒழுங்கான இடதுசாரி ஆட்சி ஒன்று இருந்தால் அப்போது" இவரின் கதைக்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்" என்று கூறலாம். இதை சர்வதேச விசாரணைகள் நிச்சயமாக முதல் சொல்லியிருந்தால், அரசு சர்வதேச ஆலோசனைக்கு எதிராகத்தான் செல்கிறது என்பதை அன்றைய எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்திருக்கும்.(குறைந்தபட்சம் நம்ம தமிழ் நெட்டுக்காவது சொல்லியிருந்திருக்கலாம். அது கொஞ்சம் கூலாக இருந்திருக்கும் :D ). மேலும் இன்று அவர் சொல்வது ஒன்றும் புதியதும் அல்ல பொய்யும் அல்ல என்பதற்கு நிரூபணங்கள் இருக்கு. அமெரிக்கா பிளேன் கோண்டு வந்து புலத்தலைமைகளைக் காப்பாற்ற முயன்றது என்று பலதவைகள் பல மந்திரிகள் பேசியிருந்தார்கள். அதனை யாரும் சந்தேகிக்கவில்லை. KP பிரபாகரன் சமாதானத்துக்கு ஒத்துவரவில்லை என்று சொல்லியிருந்தார் எல்லோராலும் சந்தேகிக்கபட்ட விடையம். எனவே கடைசி நேரத்தில் மேற்கு நாடுகள் செய்த முயற்சியை இலங்கையும் இந்தியாவும் குழப்பிவிட்டு பிரபாகரன் போர் நிறுத்ததிற்கு மறுத்தாக கூறிவிட்டார்கள். துணிவிருந்தால் சிதம்பரம் இந்த மந்திரியை ஒரு பகிரங்க விவததிற்கு அழைப்பார?

 

சிங்கள இனம் தங்களைத் தாங்கள் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.