Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு வங்கத்தில் இளம்பெண் 13 பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம்! வாழ்க இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண் ஒருவர், பஞ்சாயத்து தீர்ப்பு காரணமாக 13 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், ஒருவர் அந்த பகுதியில் உள்ள வேறுசாதி வாலிபரை காதலித்தார். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப் பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தார்  ரூ.2,000  அபராதம் விதித்தனர்

அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டு மானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கிராமத் தலைவர் கூறினார். அதை தொடர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.  ஊர் பஞ்சாயத்தார் உள்பட 13 பேர் சேர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

 

 

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் குற்றவாளிகள் 13 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

 

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள மேற்குவங்க மாநில மகளிர் ஆணையம், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23651

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்காளக் கோஷ்டிதான் இலங்கையிலும் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த பெண்ணை யார் வேண்டு மானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கிராமத் தலைவர் கூறினார்"

அட பாவிகளா ...
என்னா ஒரு தீர்ப்பு ..
இவனுகள நாடு ரோட்டில வச்சு அம்மணமாக்கி டயர் போட்டு எரிக்கணும் ..அது வரையிலும் இந்தியா வெறும் நொண்டியா...

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையே விளங்கவில்லை

கிராமத்தலைவருக்கு பொண்ணு மேல முதலிலே ஒரு கண் இருந்திருக்கு போல அதான் இப்படி ஒரு தீர்ப்பு குடுத்திருக்கார்

இந்த கிழடுகளின் தொல்லை தாங்க முடியலடா சாமி

அன்றைக்கொரு கிழட்டு முதேவி சொல்லுது அவங்களுக்கெல்லாம் 60 இற்கு பிறகு தான் வேகமெடுக்குதாம்

எண்ணையை நன்றாக பழுக்க காய்ச்சி ஊற்றினால் தெரியும் வேகம் போற இடம் கிழட்டு கபோதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்காளக் கோஷ்டிதான் இலங்கையிலும் இருக்கு..

தேசம் மாறினாலும் அடிப்படை புத்தி மாறவில்லை ....

ஆத்திலே போற தண்ணி தானே..அண்ணை குடி..தம்பி குடி என்று இறங்கிட்டாங்கள்..போல இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

vhzr.jpg

இது  சம்பந்தமாக

இன்று பிரான்சில் வெளிவந்த சிறு செய்தி  ஒன்று.

 

ஒரு கிராமசபையின் உத்தரவுக்கமைய  கூட்டு வன்புணர்வு.

13 ஆண்கள் கைது.  காவல்துறை தெரிவிப்பு.

வேறு ஒரு சமூகத்தைச்சேர்ந்த ஆணை இந்த 20 வயது இளம்பெண் காதலித்தார் என்ற காரணத்துக்காக 

இந்த தண்டனையை  இவர்கள் வழங்கினர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் குறுக்கால போகுது....

நீ  என்ன  ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை

எதிரியே  தீர்மானிக்கின்றான்.... :lol:  :D

 

அதைத்தான் பின்பற்றியிருப்பார்களோ.... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
காதலித்த இளம்பெண்ணை 13 பேரைக் கொண்டு கற்பழித்த ஊர் பஞ்சாயத்து! – அதிரடி நடவடிக்கையில் இறங்கியது சுப்ரீம் கோர்ட். 
[Friday, 2014-01-24 17:55:42]
 
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் சுபல்பூர் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண் வேறு சாதி வாலிபரை காதலித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டி அதில் இளம் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராத தொகையை பெண்ணின் குடும்பத்தினர் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டனர். அவர்களால் அபராத தொகையை செலுத்த முடியாததால் அந்த பெண்ணை கற்பழிக்குமாறு பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இதையடுத்து 13 பேர் சேர்ந்து பெண்ணை கற்பழித்தனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  
இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடவடிக்கை எடுத்து 13 பேரையும் கைது செய்தனர். காதலனும் கைது செய்யப்பட்டார். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.தலைமை நீதிபதி பி.சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தாமாகவே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
 
அப்போது இந்த சம்பவம் பற்றி நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். பின்னர் பிர்பும் மாவட்ட நீதிபதியை சம்பவ இடத்துக்கு நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.மேலும் பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
20 வயது பெண்ணை 13 பேர் கற்பழித்த சம்பவம் கடந்த 21–ந்தேதி நடந்தது. போலீசார் 13 பேரை கைது செய்த பின்புதான் வெளி உலகுக்கு தெரியவந்தது. 13 பேர் கற்பழித்ததால் இளம்பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். சூரி என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.