Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தால் அழியா கனவுக் கலைஞர்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

இவரும்  கிட்டத்தட்ட  ரங்கராவ் போல

ஆனால் கொஞ்சம் முரட்டு முகம் இருக்கும்..

அற்புதமான நடிகர்

தொடருங்கள்......

உணமைதான் விசு..

 

தமிழ் படங்களில், தந்தை கதாபாத்திரத்திற்கு ஒரு கெளரவமான தகுதியை ஏற்படுத்தி, அன்றைய காலகட்டத்தின் கூட்டுக் குடும்ப முறையினை பாசப்பிணைப்போடு திரையில் காட்டிய மிக முக்கியமானவர்களில் ரங்காராவ், சக்ஸ்ரநாமம், நாகையா, மற்றும் எஸ்.வி.சுப்பையா போன்றோர். ஒவ்வொருவராக பார்ப்போமே?

இணையத்தில் அவர்கள் நடித்த பல படங்களின் புகைப்படங்களை தேடியெடுப்பதில் சற்று நேரம் கூடிய கடினமான வேலை. அதனால் தாமதமாகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி(1955) படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம்

 

nqobva.jpg

 

16awuue.jpg

 

2la8qb6.jpg

 

2wr2c6e.jpg

 

 

சுவரொட்டி

f8a0d774-a5cf-4404-882a-9c4febc084a1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞர், இவர் யாரென்று தெரிகிறதா?

 

KR_Ramasamy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1954ல் வெளியான "சுகம் எங்கே?" என்ற படத்தில் வரும் இந்த அருமையான பாடலை சொந்தக் குரலில் ஜிக்கியுடன் பாடி சாவித்திரியுடன் தோன்றியுள்ளார்..

 

பாடலை ரசியுங்கள்..! One of the best golden song!

 

இலங்கை வானொலியில், மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகும் "மகளிர் கேட்டவை" நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

 

http://youtu.be/4xgvAsM2U-0

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே..
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே!
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில்!...
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே ? அடிமை வாழ்வில்..

இல்லை என்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா?
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


மனிதர் வாழ்வை, மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா?
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா ?
இனியும் நாட்டில் ஏழை, செல்வன் பேதம் யாவும் வாடுமா?

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே !

 

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2qaoj7p.jpg

 

கே.ஆர்.ராமசாமி

 

கே.ஆர்.ராமசாமி, தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி" திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914ம் ஆண்டு ஏப்ரல் 14ந்தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார்.

 

பெற்றோர்கள் ராமபத்ர செட்டியார் , குப்பம்மாள். சிறு வயதிலேயே படிப்பை விட நடிப்பே அவரை அதிகம் கவர்ந்தது. 7 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு 6 ஆண்டுகள் நடித்தார். பின்னர் அங்கிருந்து விலகி, டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் "குமாஸ்தாவின் பெண்" என்ற நாடகம், 1935ல் திரைப்படமாகியது.

 

அதில் கே.ஆர். ராமசாமி சிறு வேடத்தில் நடித்தார். அவருடைய முதல் படம் இதுதான்.   "குமாஸ்தாவின் பெண்" படத்தின் துணை இயக்குனர்களாகவும், எடிட்டர்களாகவும் இருந்த கிருஷ்ணன், பஞ்சு இரட்டையர்கள், "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்தனர்.

 

அவர்களுடைய சிபாரிசின் பேரில் இந்தப் படத்தின் கதாநாயகன் வேடம் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. கதாநாயகியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, "தெய்வநீதி", "கிருஷ்ண பக்தி", "கங்கணம்" ஆகிய படங்களில் நடித்தார்.

 

"கிருஷ்ணன் நாடக சபா" என்ற பெயரில் சொந்தத்தில் நாடக குழுவை தொடங்கினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது பேரன்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அதனால், தன் நாடகக் குழுவுக்கு அவர் பெயரை வைத்தார். திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்றார்.

 

கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, "வேலைக்காரி", "ஓர் இரவு" ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன. புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார்.   நாடகமாக வெற்றி பெற்ற "வேலைக்காரி"யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.

 

திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார். படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர்.   

வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர். அவர் செய்த கொடுமையால் ஆனந்தனின் (கே.ஆர். ராமசாமி) தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குப் பழி வாங்க, ஆனந்தன் ஆள் மாறாட்டம் செய்து, வேதாசலத்தின் மகள் சரசாவை (வி.என்.ஜானகி) மணக்கிறான். அவளை கொடுமை செய்கிறான்.

 

பல திருப்பங்களுடன் கதை செல்கிறது. வேலைக்காரியை (எம்.வி.ராஜம்மா) காதலிக்கும் மூர்த்தி (எம்.என்.நம்பியார்) ஒரு போலிச்சாமியாரின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறான். போலிச்சாமியார் கொலை செய்யப்படுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்படும் மூர்த்தியை, வக்கீலாக வாதாடி விடுவிக்கிறான், ஆனந்தன். வேதாசல முதலியாரின் ஆணவம் அழிகிறது.  

 

25-02-1949ல் வெளியான "வேலைக்காரி" பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. குறிப்பாக, கோர்ட்டில் வக்கீலாக ஆஜராகி, "சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" என்று வாதாடும் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

 

பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த "காஞ்சனா"வில் (எழுத்தாளர் லட்சுமியின் நாவல்) கதாநாயகனாக நடித்தார். அவருடைய மனைவியாக லலிதாவும், காதலியாக பத்மினியும் நடித்தனர். 1954ல் வெளிவந்த "சொர்க்கவாசல்" படத்தின் கதை, வசனத்தை அண்ணா எழுதினார். கதாநாயகனாக கே.ஆர்.ராமசாமியும், வில்லனாக சிவாஜிகணேசனும் நடித்தனர்.

 

கே.ஆர். ராமசாமிக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய "எங்கே சொர்க்கம்", "ஆகும் நெறி எது ஆகா நெறி எது", "கன்னித் தமிழ்ச் சாலை ஓரம்" முதலிய பாடல்கள் "ஹிட்"டாக அமைந்தன. ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சுகம் எங்கே?" படத்தில் கே.ஆர்.ராமசாமியும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர்.

 

fa3e548a-b8d1-47e1-ac0b-66228d4e7ab2_S_s

 

இது வெற்றிப்படம். "தென்றல் அடிக்குது, என்னை மயக்குது" என்று கே.ஆர்.ராமசாமி பாடிய பாடலில் தென்றல் வீசியது. ஏ.வி.எம். தயாரித்த "ஓர் இரவு", "செல்லப்பிள்ளை" ஆகிய படங்களில் ராமசாமி கதாநாயகனாக நடித்தார். "ஓர் இரவு" கதை,வசனத்தை அண்ணா எழுதினார். நாடகம் அடைந்த வெற்றியை திரைப்படம் அடையவில்லை.

 

"செல்லப்பிள்ளை" சுமார் ரகம். இதில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி சாவித்திரி. "நீதிபதி" என்ற படத்தில் கே.ஆர். ராமசாமியுடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். பின்னர் எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "அவன் அமரன்" என்ற படத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்தார். அவர் குரல் வளம் பாதிக்கப்பட்டதால், சீர்காழி கோவிந்தராஜன் பின்னணியில் பாடினார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி ராஜசுலோசனா.

 

கே.ஆர்.ராமசாமி கடைசியாக நடித்த படம் "நம் நாடு". எம்.ஜி.ஆர். நடித்த இப்படத்தில் கவுரவ வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.   1960ல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.ஆர். ராமசாமி. நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக, சங்கீத நாடக சங்கத்தின் (இயல்,இசை, நாடக மன்றம்) விருது பெற்றார்.    

 

57வது வயதில் கே.ஆர்.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் சதை வளர்ச்சி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில காலம் சிகிச்சை பெற்றார். பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 

05-08-1971 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. நள்ளிரவு 12 மணிக்கு மரணம் அடைந்தார்.   கே.ஆர்.ராமசாமியின் மனைவி பெயர் கே.ஆர்.கல்யாணி. இவர் பிற்காலத்தில் வாரிய தலைவராக இருந்தவர். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள்.

 

Thanks: Malaimalar.

 

 

இனி அவரின் திரைப்படங்களிலிருந்து பாடல்களும், படங்களும் இணைக்கிறேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/VBI1Ijd_DF8

"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே"

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1955ல் வெளியான "செல்லப் பிள்ளை" படத்தில் சுதர்சனம் இசையில் வெளியான இப்பாடல், அக்காலத்தில் மிகப் பிரபலம்.. கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாகவும், சாவித்திரி வில்லியாகவும் நடித்திருப்பார்கள், டி.எஸ் பாலையா பாடலுக்கு டான்ஸ் ஆடி பார்த்ததுண்டா? :o

 

துப்பாக்கி முனையில், "ஆடு..ஆடு" என்று சாவித்திரியை மிரட்டி, கே.ஆர்.ராமசாமி வசனம் பேசி  ஆடவைப்பதை அக்கால இளசுகள் மிகவும் ரசித்துப் பார்த்தனர்.

 

நடித்திருக்கும் நடிகர்களின் இளமையான முகத்தை இதில் பார்க்கலாம்.

 

http://youtu.be/UHe09uIZJtI

 

மதனா எழில் ராஜா நீ வாராயோ..
பருவமிதே.. பயனிதுவே.. இன்பம் தாராயோ
என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ

 

பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

 

மின்னல் இடை அழகும்
அன்ன நடை அழகும் கண்டும் மறப்பதேனோ
உனையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழுகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
மதனா எழில் ராஜா...

Edited by ராசவன்னியன்

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு ,முழுவதையும் வாசித்துவிட்டு கருத்து எழுதுகின்றேன் .

நீங்கள் தொடருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு..

 

நன்றி அர்ஜூன்.

 

கே.ஆர்.ராமசாமி பெண் வேடமிட்டு நடித்துள்ள "நீதிபதி" (1955) படத்தில் இப்பாடல்..

 

http://youtu.be/oTv8GKZ1ZPg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

s-17-3.jpg

 

குடும்பம்

:

டி.எஸ்.பாலையாவின் குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள்.

 

முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5 மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள்கள்.

 

2-வது மனைவி பெயர் லீலா (இவர் டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.) அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2 மகன்கள்.

 

3-வது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள்.

 

61 வயதில் மரணம்:

 

சென்னை தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 20-12-1972 அன்று டி.எஸ்.பாலையாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வீடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். என்றபோதிலும் மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

 

மகனும் நடிகர்:

 

அவருக்கு பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவரது குரலும் பாலையா குரலாக எதிரொலிக்கிறது.

 

 

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

தசரத மகாராசாவிற்கு அறுபதினாயிரம் பெண்டாட்டிகள் என்று சொல்லும்போது பாவம் பாலையாவுக்கு மூன்றுதானே. ஆனாலும் உங்கள் ஏக்கம் புரிகிறது. எதற்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் ஐயா.!!! :blink::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.