Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது நான் மட்டும்தான் - என்கிறார் விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

52f9268307ef23e87168dd22fce38568.jpg

13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது தான் மட்டும்தான் என தெரிவிக்கிறார் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்.
 
மட்டக்களப்பு, அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, 
 
அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமி மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதன்போது, அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமென்று  நீங்கள் ஒருவர் மட்டும் மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்களென என்னிடம் அவர் கேட்டார்.
 
உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது நான் மட்டும்தான். அதனைச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் கதைத்ததோ என்னவோ தெரியாது என்றேன்.
 
இது பற்றி எதிர்க்கட்சிகள் கதைத்தும் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலென்பது எமது உரிமை. அந்த வகையில் அரசாங்கத்தின் பக்கமிருந்து நான் கதைத்துள்ளேன்.
 
இதுபோன்று எதிர்காலத்தால் தமிழ் மக்களின் அபிவிருத்திகளுக்கு வளங்களை எடுத்தியம்பக்கூடிய நபர்களை உருவாக்க வேண்டும். இதற்கு தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை விடுத்து எதிர்ப்பு அரசியலுக்கு போயிருந்தால் வெறுமனே அறிக்கை அரசியலாகத்தான் போய்விடும்.
 
தற்போதிருக்கின்ற அபிவிருத்தியையும் உரிமைப் போராட்டத்தையும்  ஒன்றாக நோக்குவோம்.  தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன? அபிவிருத்தி வேண்டாம். உரிமை மட்டும்தான் வேண்டுமெனக் கத்திக்கொண்டு திரிகின்றார்கள். இவற்றுக்கு உரிமைக்காக ஒருவரிடமும் அபிவிருத்திக்காக இன்னொருவரிடமும் ஏன் போகவேண்டும்? இவ்விரண்டையும்  பெறுவதற்கு ஏன் நாங்கள் ஒருவரிடம் போகக்கூடாது.
 
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் ஒருமித்து கேட்குமிடத்துத்தான் உரிய அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் பக்கமிருந்து பல விடயங்களைச் சாதிக்கலாம் என்றார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=572552656917826656

 

  • கருத்துக்கள உறவுகள்

52f9268307ef23e87168dd22fce38568.jpg

 
அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமி மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதன்போது, அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமென்று  நீங்கள் ஒருவர் மட்டும் மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்களென என்னிடம் அவர் கேட்டார்.

 

அப்ப ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமியும் அம்மானும் நல்ல தோஸ்த் போலை :D

இவட்டைக்கு 13 வது என்டாலே என்னன்டு தெரியாது.

புலியில் இருந்த வேறு எவருக்காவது தெரியுமா என்ன . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலியில் இருந்த வேறு எவருக்காவது தெரியுமா என்ன . :icon_mrgreen:

 

 

ஆயுதப்போராட்டம் என தொடங்கி ஆயுத்தத்தை எதீரியின் மேல் பாவிக்காமல்  ஆயுதப்போராட்டத்தை ஏன் கைவிட்டார்கள் என்று தெரியாதவர்களுக்கு (இன்றும்) 13ம் திருத்த சட்டம் பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது. நம்புவோம். :icon_mrgreen:
 
கருணா என்பவர் சுவிசில் ஒரு பேச்சு, மகிந்தவுடன் ஒரு பேச்சு, மட்டக்களப்பில் ஒரு பேச்சு என கீழ்தரமான அரசியல்வாதியாகி விட்டார். :huh:

மண்ணுக்கும் பெண்ணுக்கும் பொன்னுக்கும் விலை போனவரின் கருத்துக்கு பதில் சொல்லி என்ன ஆகப்போவுது? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

புலியில் இருந்த வேறு எவருக்காவது தெரியுமா என்ன . :icon_mrgreen:

 

11 க்கும் 13 க்கும் பிச்சை எடுத்தால் .... அது புலியில்லை ....பூனையாகவே இருக்க வாய்ப்பில்ல்லை.
ஏதும் பூச்சி புளுவாத்தான் இருக்கும்.
 
புலி தனது  காட்டில் தன்னலம் தாளாது  வாழும் ஒரு மிருகம்.
அது 5சுக்கும் 10க்கும் யாரிடமும் பிச்சை எடுக்காது.
 
 
13றை தெரிந்தவர்கள் .............
வலது இடமாகமும்  ........ இடது வலதாகவும் மேல் கீழாகவும்..... தலைமாட்டில் மாட்டி வைத்து பார்த்துவிட்டு.
மண்டையை போட வேண்டியதுதான்.
 
கண்டு பிடித்தவர்களை போட்ட இடத்திலேயே பெரிய மரம் எழுந்து நிற்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது நான் மட்டும்தான் - என்கிறார் விநாயகமூர்த்தி முரளிதரன்

 

நீங்க

ஈக்கிங்களா  நைனா

 

அறுத்திட்டாங்கள் என்டு  நினைச்சன்.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.