Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடு வெட்டுவதற்கு இன்று தீர்வு கிடைக்காவிட்டால் பெளத்த பிக்குகள் தீக்குளிப்பர்: சிங்கள ராவய எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

93238faf661bf82a5056bc2c4f102e66.jpg

மாடு வெட்டுவதை நாட்டில் தடை செய்யவேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு இன்று 18 ஆம் திகதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் தாம் எடுக்கப் போகும்  நடவடிக்கைக்கு நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் தான் முழு பொறுப்பு என்று கடும்போக்கு  சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை  விடுத்துள்ளது .
 
மாடு வெட்டும் பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்கப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தெரிவித்துள்ளார்.
 
மாடு வெட்டுக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்தால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மாடு வெட்டு சர்ச்சைக்கு தீர்வு காண எட்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி. கொழும்பு நோக்கிய தமது பாத யாத்திரையின் இடைநடுவிலேயே தீர்வு வழங்கியிருக்க வேண்டும். எனினும், அவ்வாறு சாதகமான தீர்வு எதனையும் ஜனாதிபதி வழங்கவில்லை.
 
இன்று உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால்  தமது அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவர் அல்லது பலர் இன்று தீக்குளிப்பார் என சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளதாக ஆங்கில, சிங்கள  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=670912660818274760

இதை அரபு தூதரங்கள் இருக்கும் தெருவில் நீங்கள் செய்தால் நம்புவோம்.

மாடு பாவந்தான் இருந்தாலும் பிக்கு சாகுமேண்டால் மாட்டை வெட்டுங்கோ.

மனிசனை வெட்டுறதையே பாத்துக்கொண்டு இருந்த பிக்குகளுக்கு மாடு மேல என்ன திடீர் அக்கறை மாட்டை விடவும் மனிதன் (தமிழன்) கேவலமாக போட்டானோ துவேசம் பிடித்த பிக்குகளுக்கு  

ரீ குடிச்சிட்டாரோ???

 

தமிழனை தார் பீப்பாக்குள் போட்டு எரித்தவன்  இப்ப மாடு  வெட்டுறதை பற்றி பேசுறான்

காலையிலை 6:42 க்கு பதிந்திருக்குக்கு. 

 

இதுவரையில் ஏதாவது நல்ல செய்தி கிடைத்த்தா?   :(   <_<

 

:D  :D  :D

செத்தாண்டா சேகர்

பிக்குமார் தீக்குளிக்க மாட்டார்கள். யாரையாவது பிடித்து பிக்கு வேடம் போட்டு எரித்துவிடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Hafees 
மாடறுப்பிற்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
f12f15g1gg15g2.jpg
கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன் பெற்றோல் பாத்திரத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இவர் தற்கொலைக்கு எத்தனித்ததாகப் பொலிசார் தெரிவித்தனர். அப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றால் அது நாட்டில் பாரிய இன முருகலைத் தோற்றுவித்திருக்கும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
சூரியவௌ தர்மதூர் ஆச்சிரமத்தின் தம்பதெனியே தம்மதின்ன தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 

சே ..மொட்டை படங்காட்டி பிடிபட்டுட்டான்.

சப்பென்று போயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்

0-

?-

0-

?-

பொது பல யோசென தலைவர் எப்போது அம்பயர் ஆனார்? ;)

  • கருத்துக்கள உறவுகள்

முடியல! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Singala-Ravaya-60-60.jpg
மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த பிக்குமார்களினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த போராட்டம் கைவிடப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

மாடு அறுப்பதற்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். 

மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 
 

சிங்கம் வாளோடு கோபமா பாயுது கொடியில ஆனால் மாடு செத்தால் சிங்கம் வாளை போட்டிட்டு தீகுளிக்குமாம்.

இது பர்மா போல் ஒரு இஸ்லாமிய இன அழிப்பு உருவாக்க எடுக்கப்படும் முயற்சி.

இசுலாமிய சகோதரங்கள் தமது போலி இணக்க அரசியல்வாதிகளை நம்பாமல் எல்லா இசுலாமிய நாட்டு தூதரகங்கள் ஊடகங்களுக்கு தகவல் அனுப்பவேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.