Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://raone1news.blogspot.com/search?updated-min=2014-01-31T10:30:00-08:00&updated-max=2014-02-24T00:29:00%2B05:30&max-results=50&start=46&by-date=false

அருமையான பதிவு பெருமாள். நன்றி

அப்படியே ஒரு சின்ன தொகுப்பு

32) வாங்கும் மரக்கறிகள் இயற்கையானவையா என்றும் கேளுங்கள். கிருமிநாசினி, இரசாயன உரம் கண்டபாட்டுக்கு பாவித்த காய்,கறிகளை தவிருங்கள். முக்கியமாக தெற்காசியாவில் விளையும் காய்கறிகளை கவனிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

bhindi.jpg

 

33) வெண்டிக்காயின்... வால் பகுதியை, முறித்துப் பார்த்து... அது உடைந்தால், பிஞ்சு வெண்டிக்காய். அதனை வாங்கவும்.
வெண்டிக்காயின் வால் பகுதியை... உடைக்கும் போது, கடைக்காரர் பார்க்கமல் உடைப்பது, உங்கள் கெட்டித்தனம்.
அவர் கண்டால், அவரிடம் பேச்சு வாங்கவும்.... ரெடியாய் இருக்க வேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு பெருமாள். நன்றி

அப்படியே ஒரு சின்ன தொகுப்பு

32) வாங்கும் மரக்கறிகள் இயற்கையானவையா என்றும் கேளுங்கள். கிருமிநாசினி, இரசாயன உரம் கண்டபாட்டுக்கு பாவித்த காய்,கறிகளை தவிருங்கள். முக்கியமாக தெற்காசியாவில் விளையும் காய்கறிகளை கவனிக்கவேண்டும்.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.http://www.yarl.com/forum3/index.php?showtopic=136856&hl=

உண்மைதான் விவசாயிவிக் தெற்காசியாவின் காய்கறிகள் என்ன மளிகை சாமான்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது  உதாரணமாய் ஊரிலை உழுந்து மூன்று மாதத்துக்கு மேல் கிடந்தால் உழுத்து போய் விடும் ஆனால் இங்கு அதே உழுந்தை trs பிராண்ட் கழுவிப்பாருங்கள் வெள்ளை பதார்த்தமாய் சிங் முழுக்க கிடக்கும் .போறபோக்கில் ஆளாளுக்கு  நீர்விவசாயம் (Hydroponics) வீட்டு தோட்ட முறைதான் தீர்வாக முடியும் என நினைக்கிறன்.

bhindi.jpg

33) வெண்டிக்காயின்... வால் பகுதியை, முறித்துப் பார்த்து... அது உடைந்தால், பிஞ்சு வெண்டிக்காய். அதனை வாங்கவும்.

வெண்டிக்காயின் வால் பகுதியை... உடைக்கும் போது, கடைக்காரர் பார்க்கமல் உடைப்பது, உங்கள் கெட்டித்தனம்.

அவர் கண்டால், அவரிடம் பேச்சு வாங்கவும்.... ரெடியாய் இருக்க வேண்டும். :D

போன கோடை சந்தையில் நேற்று பிடுங்கிய பிஞ்சு காய் என்று சொல்லியும் நுனியை உடைத்த தாய்க்குலத்திற்கு சாதரணமாக கொடுக்கும் ஒரு டொலர் கழிவு விலையை கொடுக்கவில்லை. அவரை மேசையை தொட விடகூடாது என்று இப்போது சட்டம்.

ஆதனால் அண்ணரின் கடைசி வரி அறிவுரையை கட்டாயம் கடை பிடியுங்கள். விவசாயிகளின் சாபம் வேண்டாம். :D

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.http://www.yarl.com/forum3/index.php?showtopic=136856&hl=

உண்மைதான் விவசாயிவிக் தெற்காசியாவின் காய்கறிகள் என்ன மளிகை சாமான்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது உதாரணமாய் ஊரிலை உழுந்து மூன்று மாதத்துக்கு மேல் கிடந்தால் உழுத்து போய் விடும் ஆனால் இங்கு அதே உழுந்தை trs பிராண்ட் கழுவிப்பாருங்கள் வெள்ளை பதார்த்தமாய் சிங் முழுக்க கிடக்கும் .போறபோக்கில் ஆளாளுக்கு நீர்விவசாயம் (Hydroponics) வீட்டு தோட்ட முறைதான் தீர்வாக முடியும் என நினைக்கிறன்.

உண்மை சகோ.

தெற்காசியாவில் இயற்கை கிருமிநாசினிகள், பூச்சிகொல்லிகளை எதிர்க்க தொடங்கியதால் ஒவ்வொரு நாளும் தெளிக்கிறார்கள்.

மற்றும் ஜி.எம்.ஒ உணவுகளும் தெற்காசியாவில் பயிரிடபடுகிறது. ஜி எம் ஒ வாழை தமிழ்நாட்டில் வளர்கிறார்கள். எல்லாம் 5000 ஏக்கர் வளர்க்கும் கொர்பரட் விவசாய நிறுவனங்களின் அனுகூலத்திற்கு தான். இவை நீண்ட கால சோதனைக்கு உட்பட்டவை அல்ல.

தெய்வமா இருந்த தொழிலை கொலைகார தொழிலாக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போன கோடை சந்தையில் நேற்று பிடுங்கிய பிஞ்சு காய் என்று சொல்லியும் நுனியை உடைத்த தாய்க்குலத்திற்கு சாதரணமாக கொடுக்கும் ஒரு டொலர் கழிவு விலையை கொடுக்கவில்லை. அவரை மேசையை தொட விடகூடாது என்று இப்போது சட்டம்.

ஆதனால் அண்ணரின் கடைசி வரி அறிவுரையை கட்டாயம் கடை பிடியுங்கள். விவசாயிகளின் சாபம் வேண்டாம். :D

 

இதுக்காகத் தான், வெண்டிக்காயை (கொஞ்சம் தேவைக்கதிகமாக) வாங்கிக் 'காருக்குள்' வைத்து, ஒவ்வொன்றாக நுனியை உடைத்துப்பார்த்து, நல்லதை வீட்டுக்கும், மற்றதைக் குருவிகளுக்குமாகப் போட்டு விடுவது! :D

 

தோட்டக்காரனுக்கும் சந்தோசம்!

 

கடைக்காரனுக்கும் சந்தோசம்!

 

மனுசிக்கும் சந்தோசம்!

 

எல்லாரும் சந்தோசப்படுகிறதைப் பார்த்து, எனக்கும் சந்தோசம்! :icon_idea:  

இதுக்காகத் தான், வெண்டிக்காயை (கொஞ்சம் தேவைக்கதிகமாக) வாங்கிக் 'காருக்குள்' வைத்து, ஒவ்வொன்றாக நுனியை உடைத்துப்பார்த்து, நல்லதை வீட்டுக்கும், மற்றதைக் குருவிகளுக்குமாகப் போட்டு விடுவது! :D

தோட்டக்காரனுக்கும் சந்தோசம்!

கடைக்காரனுக்கும் சந்தோசம்!

மனுசிக்கும் சந்தோசம்!

எல்லாரும் சந்தோசப்படுகிறதைப் பார்த்து, எனக்கும் சந்தோசம்! :icon_idea:

நீங்கள் ஆயிரத்தில் ஒரு சந்தை நுகர்வோர் அண்ணா.

கனடா வந்தால் கட்டாயம் சந்தைக்கு வாங்கோ. கழிவு விலை கட்டாயம் கிடைக்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

31 வகையான மரக்கறியள் இருக்கேக்கை வெண்டிக்காயை மட்டும் கண்ணைபுடுங்கி வைச்சு ஆராய்வதன் மர்மம் என்னவோ?... :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

31 வகையான மரக்கறியள் இருக்கேக்கை வெண்டிக்காயை மட்டும் கண்ணைபுடுங்கி வைச்சு ஆராய்வதன் மர்மம் என்னவோ?... :rolleyes:  :lol:

 

அது லேடீஸ் பிங்கர் எல்லோ , அப்படியே வருடி நுனியில் நெட்டிமுறித்து ஆராய்யாமல் விட்டால் எப்படி...! :rolleyes:

 

மு. காயை திருகும்போது வி.விக் காதைத் திருகாமல் விட்டால் போதும்...! :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.