Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவர் போனபின்.........?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர் போனபின்.............?

 

இந்தப்பகுதிக்கு நான் குடிவந்து  15  வருடமாகிறது. அயல் அட்டைகளுடன் பெரிதாக  பழக்கமில்லை.

அதிகம்  பேசாதவன் என்கின்ற  பெயருண்டு.  ஆனால் சின்ன  வயசிலிருந்தே அயலுக்குள் எதுவும் செய்வதில்லை  என்ற  கொள்கையில் வளர்ந்ததால் இன்றுவரை பெயர்  சேதமில்லாமல் ஓடுகிறது............. :lol:

 

ஆனால்  ஒரு வெள்ளைக்கிழவி மட்டும் நான் வேறு பாதையால் சென்றாலும் ஓடி  வந்து வணக்கம் சொல்வார்

என் பிள்ளைகள் பற்றி  கேட்பார்.  அவர்களது படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி உயர்வாகப்பேசுவார்.....

அதற்கு எனதும் மனைவியினதும் வளர்ப்பே காரணம் என்பார்....

 

 

இதனால்  அந்த ஏரியாவை கணக்கு போட்டு வைத்திருக்கும் எனது துணைவியாரிடம் அவரைப்பற்றிக்கேட்டேன்.

அவர் சொன்னது மிக  ஆச்சரியமாக  இருந்தது.

 

அவரது கணவர்  இறந்து பல  வருடங்களாகின்றன.  பிள்ளைகள் வளர்ந்து சென்றுவிட தனியே  தான் இருக்கிறார்.

பிள்ளைகள் இடைக்கிடை  வந்து செல்வார்கள்.

 

கணவர் இறந்ததிலிருந்து 

காலையில் எழும்பி

கணவர் புதைக்கப்பட்ட  இடத்துக்கு காலை 9 மணியளவில் செல்வார்.

ஒரு மணித்தியாலம் வரை அவருடன் இருப்பார்...

அதன் பின் சந்தைக்கோ

கடைகளுக்கோ  சென்று தனக்கு அன்று தேவையான  பொருட்களை  மட்டும் வாங்குவார்.

வீட்டுக்கு வந்து  தானே சமைத்து உண்டு வாழ்கிறார்.

 

இதன் மூலம் அவர் தனது கணவருடன் ஒவ்வொரு நாளும் இருப்பதாக  உணர்கிறார்.

ஆனால் நான் பார்த்தது  வேற ஒரு விடயம்

 

இந்த ஒழுங்கு காரணமாக

80 வயசான போதிலும்  நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்

அத்துடன்  குறிப்பிட்ட நேரத்தில் நித்திரையால் எழும்புகின்றார்

காற்றோட்டமாக  நடக்கின்றார்

தனது வேலைகளை  தானே  செய்கின்றார்

மேலும்

அன்றாடம் தனக்கு தேவையான  பொருட்களை  வாங்குவதனால்

அவை  சுத்தமாகவும் தரமாகவும் இருப்பதால் ஆரோக்கியமாக வாழ்கின்றார்.

 

எந்த குளிர்

எந்த மழை

எவ்வளவு வெய்யிலும் அவரது இந்த வழமையான  நடவடிக்கைகளை  பாதித்ததில்லை.

பெரும் மழையில் கூட அவர் காலையில் நடந்து போவதைக்கண்டிருக்கின்றேன்

அந்த நிலையிலும் ஓடி  வந்து  வணக்கம் சொல்ல அவர் பின்னின்றதில்லை...

ஆரம்பத்தில் நான் கேட்பதுண்டு

வாகனத்தில் கொண்டு போய் இறக்கிவிடவா என?

ஆனால்  தான் நடப்பதற்காகவே  புறப்படுகின்றேன் என்பார்

அதுவும் வரவேற்கப்படவேண்டிய  விடயம் தானே

அதனால் தற்பொழது கேட்பதில்லை.....

 

அதேநேரம் இவர் என்னுள் புகுந்து கொண்டுள்ளார்

நானும் இப்படியொரு பழக்கத்தை பழகிக்கொள்ளணும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

 

நீங்கள்.................???

(ஒருவராவது இதைப்பின் பற்றினால் எனக்குக்கிடைத்த வெற்றியாகக்கொள்வேன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சில பேர் இருக்கினம் வெள்ளைகள் எல்லாம் ஏதோ ஒன்று என்று ...பகிர்விக்கு நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

இள வயதில் இருந்தே திட்டமிட்டு அட்டவணைப்படி  

 

தனித்து வாழ பழகி     விட்டார்கள்  .

எனக்கும் இப்பிடி சில மனிதர்களின் அறிமுகம் கிடைத்ததுண்டு.
அவர்களைப்போல வாழ்ந்து தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆசைப்பட்டதும் உண்டு.

ஆசைப்பட்டதோடு சரி..

உந்த நேர அட்டவணை வாழ்க்கை முறை எனக்குச் சரி வராது..!

 

வெரி வெரி சொறி விசுகர்!! :D  :o  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு எனது பிற்கால வாழ்க்கையை நினைத்தால் கொஞ்சம் தலைசுற்றும்.இருந்தாலும் விசுகரின் இந்த பதிவை வாசித்த பின் அடிவயிறு கொஞ்சம் குளிர்மையாக இருக்கின்றது. :)

நல்ல உதாரணமாக அந்த பாட்டி வாழ்கின்றா.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் போனபின்.............?

 

இந்தப்பகுதிக்கு நான் குடிவந்து  15  வருடமாகிறது. அயல் அட்டைகளுடன் பெரிதாக  பழக்கமில்லை.

அதிகம்  பேசாதவன் என்கின்ற  பெயருண்டு.  ஆனால் சின்ன  வயசிலிருந்தே அயலுக்குள் எதுவும் செய்வதில்லை  என்ற  கொள்கையில் வளர்ந்ததால் இன்றுவரை பெயர்  சேதமில்லாமல் ஓடுகிறது............. :lol:

 

ஆனால்  ஒரு வெள்ளைக்கிழவி மட்டும் நான் வேறு பாதையால் சென்றாலும் ஓடி  வந்து வணக்கம் சொல்வார்

என் பிள்ளைகள் பற்றி  கேட்பார்.  அவர்களது படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி உயர்வாகப்பேசுவார்.....

அதற்கு எனதும் மனைவியினதும் வளர்ப்பே காரணம் என்பார்....

 

 

இதனால்  அந்த ஏரியாவை கணக்கு போட்டு வைத்திருக்கும் எனது துணைவியாரிடம் அவரைப்பற்றிக்கேட்டேன்.

அவர் சொன்னது மிக  ஆச்சரியமாக  இருந்தது.

 

அவரது கணவர்  இறந்து பல  வருடங்களாகின்றன.  பிள்ளைகள் வளர்ந்து சென்றுவிட தனியே  தான் இருக்கிறார்.

பிள்ளைகள் இடைக்கிடை  வந்து செல்வார்கள்.

 

கணவர் இறந்ததிலிருந்து 

காலையில் எழும்பி

கணவர் புதைக்கப்பட்ட  இடத்துக்கு காலை 9 மணியளவில் செல்வார்.

ஒரு மணித்தியாலம் வரை அவருடன் இருப்பார்...

அதன் பின் சந்தைக்கோ

கடைகளுக்கோ  சென்று தனக்கு அன்று தேவையான  பொருட்களை  மட்டும் வாங்குவார்.

வீட்டுக்கு வந்து  தானே சமைத்து உண்டு வாழ்கிறார்.

 

இதன் மூலம் அவர் தனது கணவருடன் ஒவ்வொரு நாளும் இருப்பதாக  உணர்கிறார்.

ஆனால் நான் பார்த்தது  வேற ஒரு விடயம்

 

இந்த ஒழுங்கு காரணமாக

80 வயசான போதிலும்  நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்

அத்துடன்  குறிப்பிட்ட நேரத்தில் நித்திரையால் எழும்புகின்றார்

காற்றோட்டமாக  நடக்கின்றார்

தனது வேலைகளை  தானே  செய்கின்றார்

மேலும்

அன்றாடம் தனக்கு தேவையான  பொருட்களை  வாங்குவதனால்

அவை  சுத்தமாகவும் தரமாகவும் இருப்பதால் ஆரோக்கியமாக வாழ்கின்றார்.

 

எந்த குளிர்

எந்த மழை

எவ்வளவு வெய்யிலும் அவரது இந்த வழமையான  நடவடிக்கைகளை  பாதித்ததில்லை.

பெரும் மழையில் கூட அவர் காலையில் நடந்து போவதைக்கண்டிருக்கின்றேன்

அந்த நிலையிலும் ஓடி  வந்து  வணக்கம் சொல்ல அவர் பின்னின்றதில்லை...

ஆரம்பத்தில் நான் கேட்பதுண்டு

வாகனத்தில் கொண்டு போய் இறக்கிவிடவா என?

ஆனால்  தான் நடப்பதற்காகவே  புறப்படுகின்றேன் என்பார்

அதுவும் வரவேற்கப்படவேண்டிய  விடயம் தானே

அதனால் தற்பொழது கேட்பதில்லை.....

 

அதேநேரம் இவர் என்னுள் புகுந்து கொண்டுள்ளார்

நானும் இப்படியொரு பழக்கத்தை பழகிக்கொள்ளணும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

 

நீங்கள்.................???

(ஒருவராவது இதைப்பின் பற்றினால் எனக்குக்கிடைத்த வெற்றியாகக்கொள்வேன்)

 

இதே... குணத்துடன், எங்கள் மேல் வீட்டிலும் ஒரு கிழவி உள்ளார்.

கணவன் இல்லை எழுபத்தைந்து வயது. தனது கடமைகளை தானே... செய்வார்.

தினமும் கணவனின் புதைகுழிக்குப் போய் அஞ்சலி செலுத்துவார்.

அவரைத் தெரியாத ஊர் மக்களே... இல்லை எனலாம்.

வீதியால்... போகும் வழியில், வீதியில் கிடக்கும் கோலா ரின், பாவித்த சிகரட் பெட்டி போன்றவற்றை பொறுக்கி அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடுவார். அப்படி குனிந்து பொறுக்கும் போது... தனக்கு அது உடல் பயிற்சி என்று கூறுவார்.

 

எந்தக் காலநிலையிலும் அவரின் நேரம் தவறாது செய்து வரும் செயல் பிரமிக்க வைக்கும்.

அவர் வெளிக்கிடும் சம‌யத்தைப் பார்த்து... எமது மணிக்கூட்டை சரி செய்யலாம்.

தனது பென்சன் பணத்தில்.... பூனைச் சாப்பாடு வாங்கி, அருகில் உள்ள பூங்காவுக்கு போனால்.... இவரின் வரவை எதிர் பார்த்து சில பூனைகள் காத்துக் கொண்டிருக்கும்.

நல்ல ஒரு மனிதரைப் பற்றி, பகிர... வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த விசுகருக்கு நன்றி. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி விசுகு.

 

தன் வேலையை தானே செய்தால் இந்த பழக்கத்தை பற்றிக்கொள்ள இலகுவாய் இருக்கும் என்பது என் எண்ணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில பேர் இருக்கினம் வெள்ளைகள் எல்லாம் ஏதோ ஒன்று என்று ...பகிர்விக்கு நன்றி

 

நன்றி ஐயா

சொல்லணும் போல  இருந்தது

அதனால்  பகிர்ந்தேன்

இள வயதில் இருந்தே திட்டமிட்டு அட்டவணைப்படி  

 

தனித்து வாழ பழகி     விட்டார்கள்  .

 

நமக்கொரு நிலை  எப்பவும் வரலாம்  பாட்டி

அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட....

ஏதோ என்னால் முடிந்தது

 

நன்றி  பாட்டி

எனக்கும் இப்பிடி சில மனிதர்களின் அறிமுகம் கிடைத்ததுண்டு.

அவர்களைப்போல வாழ்ந்து தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆசைப்பட்டதும் உண்டு.

ஆசைப்பட்டதோடு சரி..

உந்த நேர அட்டவணை வாழ்க்கை முறை எனக்குச் சரி வராது..!

 

வெரி வெரி சொறி விசுகர்!! :D  :o  

 

குட்டித்தூக்கத்துக்கு  மட்டும்

நேர  அட்டவணை  தெரியுமாக்கும்........ :o

கொஞ்சம் நம்மை மாற்றிப்பார்க்கலாமே

நல்லதை  எடுத்துக்கொள்வதில் ஏன் பிடிவாதம் ஐயா :icon_idea:

 

நன்றி  கருத்துக்கும் வருகைக்கும்

எனக்கு எனது பிற்கால வாழ்க்கையை நினைத்தால் கொஞ்சம் தலைசுற்றும்.இருந்தாலும் விசுகரின் இந்த பதிவை வாசித்த பின் அடிவயிறு கொஞ்சம் குளிர்மையாக இருக்கின்றது. :)

 

அதுதுதுதுதுது

நல்லபிள்ளைக்கு அழகு இது தான்....

நன்றியண்ணா

 

எழுதியதற்கு கை மேல் பலன் கிடைத்தாச்சு :icon_idea:

நல்ல உதாரணமாக அந்த பாட்டி வாழ்கின்றா.

 

நன்றி  சகோதரி

உங்கள் கருத்துக்கும் நேரத்துக்கும் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே... குணத்துடன், எங்கள் மேல் வீட்டிலும் ஒரு கிழவி உள்ளார்.

கணவன் இல்லை எழுபத்தைந்து வயது. தனது கடமைகளை தானே... செய்வார்.

தினமும் கணவனின் புதைகுழிக்குப் போய் அஞ்சலி செலுத்துவார்.

அவரைத் தெரியாத ஊர் மக்களே... இல்லை எனலாம்.

வீதியால்... போகும் வழியில், வீதியில் கிடக்கும் கோலா ரின், பாவித்த சிகரட் பெட்டி போன்றவற்றை பொறுக்கி அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடுவார். அப்படி குனிந்து பொறுக்கும் போது... தனக்கு அது உடல் பயிற்சி என்று கூறுவார்.

 

எந்தக் காலநிலையிலும் அவரின் நேரம் தவறாது செய்து வரும் செயல் பிரமிக்க வைக்கும்.

அவர் வெளிக்கிடும் சம‌யத்தைப் பார்த்து... எமது மணிக்கூட்டை சரி செய்யலாம்.

தனது பென்சன் பணத்தில்.... பூனைச் சாப்பாடு வாங்கி, அருகில் உள்ள பூங்காவுக்கு போனால்.... இவரின் வரவை எதிர் பார்த்து சில பூனைகள் காத்துக் கொண்டிருக்கும்.

நல்ல ஒரு மனிதரைப் பற்றி, பகிர... வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த விசுகருக்கு நன்றி. :)

 

 

ஆமாம் சிறி

இன்னொரு  வெள்ளைக்கிழவி  உள்ளார்

அவருக்கு 90 வயசுக்கு மேலிருக்கும்

நாலைஞ்சு சிறிய கலர்ச்சட்டிகள் வைத்துள்ளார்

அவற்றில் ஒவ்வொரு நாளும் பூனைகளுக்கு பால் வைப்பார்

நேரம்  தவறமாட்டார்

பூனைகளுக்கு சாப்பாடு வைக்கப்படாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி அதனை  தொடர்ந்து அவர் செய்து வருகின்றார்

காலையில் வெளிக்கிடும் போது அநேகமாக இவர் தான் எனது முழிவளம்....

 

நன்றி  சிறி

எனக்கும் பூனைக்கருணையாளரை ஞாபகப்படுத்தியமைக்கு.

அனுபவப் பகிர்வுக்கு நன்றி விசுகு.

 

தன் வேலையை தானே செய்தால் இந்த பழக்கத்தை பற்றிக்கொள்ள இலகுவாய் இருக்கும் என்பது என் எண்ணம்.

 

நன்றி  கருப்பி

நேரத்துக்கும் வருகைக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.