Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை பூபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மாலை ஒன்று நான் தொடுக்க 
மலர்பறிக்கப் போயிருந்தேன். 
கைநீட்டிக் காம்போடு - நான் 
பூ பறிக்கு முன்னே 
'பூ கேட்டது...'
 
'நாளை நான் வாடிப்போவேன் 
இன்று என்னை வாழவிடு'
பூபதியின் நினைவுநாள் 
என்று நான் சொன்னதுமே 
நேற்று என்னை
மொட்டோடு பறித்திருந்தால் 
பூபதித்தாயின் கழுத்தில் 
இரண்டு நாள் 
மாலையாய் வாழ்ந்திருப்பேன்.
 
வளைந்து கொடுத்தது பூ என்னை
வாரி எடுத்துக்கொள் என்று.
பூபதித்தாய் 
அவள் உருகி பூத்த 
தமிழினத்தின் வாடாத 
நினைவுப் பூ.
 
வாழ்க்கையே உணவுக்காக 
வாழும் பிறப்பில் 
இனத்தின் வாழ்வுக்காய் 
உணவு மறுத்து 
உதிரம் உறைந்து 
உடலை உருக்கி 
உயிரை காற்றோடு கலந்து 
மாமாங்கப்பிள்ளையார் உள்ளே 
கற்சிலையாய் இருக்க
உண்மை தெய்வமாய் நீ 
வீதியிலே கிடந்ததை 
நெஞ்சம் மறக்குமோ தாயே...?
 
தத்துப்பிள்ளைகளாய் நாம் 
செத்துப்பிழைக்கிறோம் 
ஈழ நினைவுகளோடு 
அன்னிய தேசத்தில் இன்று.
 
தாயே...,
யுத்தம் முடிந்ததென்று 
பவுத்த தேசத்தில் கூறலாம் 
சத்தியமாய் நீ நம்பாதே தாயே
காலங்கள் போகலாம் கலங்காதே
கனவுகள் நினைவாகும் 
தமிழீழம் மலரும் 
ஓர் நாளில்..... 
 

Edited by ஈழப்பார்வை

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கவிதை,

இடைக்கவிதை,

புதுக்கவிதை

 

போன்றவைகளுக்கு ..ஆஹா.. ஓகோ...வென சகட்டுமேனிக்கு பச்சையை குத்திதள்ளும் யாழ் உறவுகள், உங்களுக்காக மரணித்த இத்தாயின் போற்றல் கவிதைக்கு ஏன் ஊக்கம் தரவில்லை?

மணக்கும் பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்பதை நிருபிக்கிறீர்கள்! :)

 

என்ன தமிழ் உலகமடா இது? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் ராசவன்னியன் அவர்களே உணர்வுகளோடு உங்களைப்போல் ஒருவராவது இருக்கின்றீர்களே,அது போதும் எமக்காக உயிர்த்தியாகம் செய்தவர் நினைவுகள் வாழும்

............நன்றி....உறவே,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கவிதை,

இடைக்கவிதை,

புதுக்கவிதை

 

போன்றவைகளுக்கு ..ஆஹா.. ஓகோ...வென சகட்டுமேனிக்கு பச்சையை குத்திதள்ளும் யாழ் உறவுகள், உங்களுக்காக மரணித்த இத்தாயின் போற்றல் கவிதைக்கு ஏன் ஊக்கம் தரவில்லை?

மணக்கும் பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்பதை நிருபிக்கிறீர்கள்! :)

 

என்ன தமிழ் உலகமடா இது? :o

 

உங்களது ஆதங்கம் புரிகின்றது... வன்னியன்.

 

அன்னை... பூபதியை, எந்தத் தமிழனாலும் மறக்க முடியாத... திலீபனுக்கு, அடுத்து உண்ணா நோன்பு இருந்து... தன் உயிரையே... தியாகம் செய்தவர். என்பதை... எவராலும் மறுக்க முடியாது.

இப்போ... கேள்வி என்னவென்றால்....,

 

ஈழப்பார்வையின்.... வக்கீலாக எப்போது நீங்க... வந்தீர்க?

 

இது வ‌ரை... ஈழ‌ப்பார்வை, ஏனோ... த‌னோ... என்று க‌விதை எழுதுவார்.

ஆனால்... ம‌ற்றைய‌வ‌ர் எழுதும், க‌விதைக்கு... ஒரு, சிமைலி ஆவ‌து... போட்டிருப்பாரா? என்ப‌து ச‌ந்தேக‌மே...

சில‌ இட‌ங்க‌ளில்.... கேள்வி கேட்காம‌ல் இருப்ப‌தும், புத்திசாலித்தன‌ம். என்று நினைக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ... கேள்வி என்னவென்றால்....,

 

ஈழப்பார்வையின்.... வக்கீலாக எப்போது நீங்க... வந்தீர்க?

 

இங்கே எங்கேயாவது அவர் எனது கட்சிக்காரர் என குறிப்பிட்டுள்ளேனா?

 

கவிதையின் சாரத்தை, அது உருவகப்படுத்தும் பிம்பத்தை பாருங்களென்றால் கவிதை எழுதிய கரங்களை ஏன் பார்க்கிறீர்களென புரியவில்லை.

உங்கள் அனுமானத்திற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எங்கேயாவது அவர் எனது கட்சிக்காரர் என குறிப்பிட்டுள்ளேனா?

 

கவிதையின் சாரத்தை, அது உருவகப்படுத்தும் பிம்பத்தை பாருங்களென்றால் கவிதை எழுதிய கரங்களை ஏன் பார்க்கிறீர்களென புரியவில்லை.

உங்கள் அனுமானத்திற்கு நன்றி!

 

கவிதை...

யாழ் களத்தில், ஆயிரமாய்... கொட்டிக் கிடக்குது.

அதை... வாசிக்கத் தான்... ஆள் இல்லை.

 

ஈழப்பார்வை போன்ற, நல்ல‌ கவிஞர்கள்... மற்றையவர்களின், கவிதையை வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்திருக்கலாமே.... என்பது எனது, ஆதங்கம்.

 

அதனை... விட்டுவிட்டு... அவருக்கு, ஒருவரும்... புகழாராம் சூட்டவில்லை என்று நினைப்பது சரியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி அவர்கலே

எனது தவறை சுட்டிக்காட்டியதிட்காய் முதலில் மன்னிப்பும் அதே நேரம் நன்றியும் சொல்லிக்கொள்கின்றேன்.இந்த யாழ் கழத்துக்கு நான் புதிது,

இனி எனது தவறை திருத்திக்கொள்கின்றேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை...

யாழ் களத்தில், ஆயிரமாய்... கொட்டிக் கிடக்குது.

அதை... வாசிக்கத் தான்... ஆள் இல்லை.

 

ஈழப்பார்வை போன்ற, நல்ல‌ கவிஞர்கள்... மற்றையவர்களின், கவிதையை வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்திருக்கலாமே.... என்பது எனது, ஆதங்கம்.

 

அதனை... விட்டுவிட்டு... அவருக்கு, ஒருவரும்... புகழாராம் சூட்டவில்லை என்று நினைப்பது சரியா?

 

முருகனைப் பாருங்களப்பு,..அக்கடவுளை துதிபாடும் பாடலை நினைத்து உருகுங்களப்பு என சொன்னால் நான் அந்த பூசாரியை புகழச் சொல்கிறேனென மருகினால் எங்கே போய் இந்த குழப்பத்தை சொல்ல..சிறி..சிறி..! :o

 

எனக்கும், கவிதைக்கும் காத தூரமப்பு.. :icon_mrgreen: .

 

இது உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இன்னுயிரைப் பற்றிய கவிதை என்பதால் இத்திரியை படிக்க நேர்ந்தது...கேட்பாரின்றி கிடப்பதால் ஆதங்கத்தை சொன்னேன்.

 

ஆளை விடுங்கள், இனி யாழில் கவிதை திரிகள் பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டேன்..! :lol::D

 

Be cool...

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி ஈழப்பார்வை.. :)

  • கருத்துக்கள உறவுகள்

-------

ஆளை விடுங்கள், இனி யாழில் கவிதை திரிகள் பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டேன்..! :lol::D

 

Be cool...

 

 

சரி போகுது... வன்னியன்.

நான் எழுதிய கவிதையை... வாசித்தீர்களா?

எல்லாத்துக்கும்.... விளம்பரம் முக்கியம்,

என்று சும்மாவா... சொன்னாங்க பெரியவங்க. :D  :lol:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சரி போகுது... வன்னியன்.

நான் எழுதிய கவிதையை... வாசித்தீர்களா?

எல்லாத்துக்கும்.... விளம்பரம் முக்கியம்,

என்று சும்மாவா... சொன்னாங்க பெரியவங்க. :D  :lol:  :wub:

 

இல்லை சிறி,. நீங்கள் கேட்டுள்ளபடியால் வாசிக்கிறேன்.

ஒவ்வொருத்தருக்கும் சில விரும்பிய ரசனைகள் இருக்கும் தானே?

நன்றி! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அவர்கலே

எனது தவறை சுட்டிக்காட்டியதிட்காய் முதலில் மன்னிப்பும் அதே நேரம் நன்றியும் சொல்லிக்கொள்கின்றேன்.இந்த யாழ் கழத்துக்கு நான் புதிது,

இனி எனது தவறை திருத்திக்கொள்கின்றேன்.....

 

எனது அன்பிற்குரிய... ஈழப்பார்வை அவர்களுக்கு,. :wub: 

முதலில்... மேற்கண்ட பதிவை, அவதானிக்க அவகாசமின்மையால்... தொடர்ந்து, ராசவன்னியனுடன் விவாதிக்க வேண்டி வந்தது.

எனது குணம், வேகம். அது... சில இடங்களில்... கெட்ட பெயரைத் தரும்.

என்னால்... உங்கள் நற்பெயருக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்,

தமிழ்சிறி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றிகள் ஈழப்பார்வை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி ஈழப்பார்வை

 

எழுத்துப்பிழைகளைக் கவனத்தில் எடுக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி சகாரா. எல்லோரையும்  போல என்னிடம் கணணியில்லை. கணணியென்றால் எழுத்துக்களை சரிபார்த்து திருத்திக் கொள்ள இலகுவாக இருக்கும். தொலைபேசியிலேயே எழுதுவதால் எழுத்துப் பிழைகளை உடனுக்கு உடன் திருத்த முடியாதுள்ளது.கருத்துக்களமும் எனக்கு புதிது. ஆகையால் எல்லா பகுதிகளையும் இலகுவாய் புரிந்து கொண்டு எழுதுவதிலும் சிரமங்களை எதிர்நோக்குகிறேன்.

 


எனது அன்பிற்குரிய... ஈழப்பார்வை அவர்களுக்கு,. :wub: 
முதலில்... மேற்கண்ட பதிவை, அவதானிக்க அவகாசமின்மையால்... தொடர்ந்து, ராசவன்னியனுடன் விவாதிக்க வேண்டி வந்தது.
எனது குணம், வேகம். அது... சில இடங்களில்... கெட்ட பெயரைத் தரும்.
என்னால்... உங்கள் நற்பெயருக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்,
தமிழ்சிறி. :)

நான் இங்கு மற்றைய உறவுகளின் படைப்புகளிலம் கருத்துகளை எழுதியுள்ளேன். அவற்றையும் நீங்கள் தேடினால் வாசிக்க முடியும். நான் வாழும் நிலமையும் இடமும் எல்லா வேளைகளும் இணையத்தில் இருப்பதற்கு முடியாது. அத்தோடு புதியவன் ஆகையால் இன்னும் பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. உங்களது அன்புக்கு நன்றிகள் தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஈழப்பார்வை!

 

அருமையான கவிதை!

 

உண்மையில் நான் உங்கள் கவிதையைக் காணவேயில்லை!

 

அன்னை பூபதிக்கு வீரவணக்கங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடபுடன் புங்கையூரன் உங்கள் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.