Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நாட்களாகவே என்னை மனச் சோர்வு ஆட்கொண்டுள்ளது. மிகவும் துடிதுடிப்பானவள் என்று பெயர் எடுத்த நான் இப்போதெல்லாம் சோர்ந்து போய் காணப்படுகிறேன். எந்த வேலை செய்தாலும் அடுத்த வேலை இருந்தால் முடிகிறது தூங்க மாட்டேன் முன்பு. இப்போதோ வீட்டில் எந்த வேலையும் செய்ய மனம் வருகுதே இல்லை.

 

அதற்காக கடையில் வாங்கச் சாப்பிட்டுக் காலம் கழிக்கிறேன் என்று எண்ணிவிடவேண்டாம். அனால் எதோ சமைக்கிறேன். கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். இரண்டு நண்பிகளுடன் தொலைபேசியில் அப்பப்ப அரட்டை அடிக்கிறேன். எனது தோட்டம் இம்முறையும் பூக்க ஆரம்பித்துவிட்டதுதான். ஆனாலும் முன்பு இருந்ததுபோல் அவற்றைக் கூடக் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை பூக்கத்தான் செய்கின்றன.

 

மலையில் கட்டாயம் தூங்குவதும் பின்னர் இரவு பன்னிரண்டு மணிவரை விழித்திருந்து முகப்புத்தகத்தில் கிடப்பதுமாக நேரமும் காலமும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

 

என் நிலையைப் புரிந்து கொள்ளவும் இப்ப கணவனின் வேலைப் பளு விடுகுதில்லை. வீட்டில் முன்பு ஒரு வேலை செய்யவேண்டி இருந்தால் கணவனை இரு தடவைகள் கேட்பேன் அவர் செய்யாவிட்டால் நானே செய்துவிட்டுப் போய் விடுவன். ஆனால் இப்பொழுதெல்லாம் சின்னச் சின்ன வேலைகள் கணவனுக்காகக் காத்திருந்து காலம் நீள்கின்றன.

 

இன்று வழமைபோல் தூக்கம் கண்ணைச் சுற்ற மாலை ஆறு மணிக்கு தூங்கச் சென்றுவிட்டேன். முன்பெனில் என்பாட்டுக்கு மணிக்கூட்டில் வைத்த அலாம் எழுப்பும். இப்போது அலாம் அடித்தாலும் அதை நிறுத்திவிட்டு தொடர்ந்து தூங்குவதே சுகமாக இருக்கிறது. இருந்தாலும் என் மகளிடம் என்னை எட்டு மணிக்கு எழுப்புமாறு கூறிவிட்டு தூங்கிவிட்டேன்.

 

வழமைபோல் மணிச் சத்தத்துக்கும் எழும்பாத என்னை மகளின் குரல் தான் எழுப்புகிறது. அவள் கூப்பிட்டும் எழும்ப மனமின்றி நான் கிடக்க கட்டிலுக்கு வந்து என்னருகே இருந்தவள் எழும்புமாறு என்னை உலுக்கினாள். இப்பவே இப்பிடிக் கிடந்தால் பிறகு என் பிள்ளைக்கு எப்பிடித் தமிழ் படிப்பிக்கப் போறீங்கள் என்றாள்.

 

என் தூக்கம் அரைவாசி ஓடிப் போக எழுந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மகளுக்கு பத்து வயது வரமுன்பே உலகத்தில் முக்கியமான மொழிகளை எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் கற்பிக்க நீங்கள் தான் வாரத்தில் ஒருநாள் வரவேண்டும் என்றாள். மிச்சத் தூக்கமும் போய்விட ஏன் ஒருநாள் ஒவ்வொரு நாளும் வருகிறேன் தமிழ் சொல்லிக் கொடுக்க என்றேன் நான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மொழி படிப்பாள் ஆதலால் தமிழுக்கும் ஒரேயொரு நாள் தான் என்றாள்.

 

என் மனதில் ஓடிய எண்ணத்தை அவளிடமே கேட்டேன். நான் என் பேரப் பிள்ளைகளை பார்க்க வருவேன் தானே என்று. வரலாம் தான் ஆனால் அவள் ஒவ்வொரு நாளும் ஒரு கலை வகுப்புக்குப் போனால் நீங்கள் வந்தும் என்ன பிரயோசனம். சும்மா என் வீட்டில் இருந்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று இயல்பாகச் சொல்லிக் கொண்டே போனாள்.

 

இத்தனைக்கும் அவளின் வயது பதின்னான்குதான். அவள் படித்து முடித்து திருமணம் செய்ய இன்னும் பத்தோ பதினைந்தோ ஆண்டுகள் ஆகும். அப்போது எனக்கும் அத்தனை ஆண்டுகள் கூடித்தான் போகும். இந்த வயதிலேயே எனக்கு இத்தனை சோர்வும் சோம்பலும். பதினைந்து ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறேன் என்னும் மலைப்பு என்னை ஆட்கொள்ள முற்றாகத் தூக்கக் கலக்கம் தெளிந்தது.

 

நான் என் பிள்ளைகளை மற்றவர் போல் டியூசன் என்றோ கலை வகுப்புகள் என்றோ கொண்டு அலைவதில்லை. எந்த நேரமும் படி படி என்று துன்புறுத்துவதும் இல்லை. அப்படி இருக்க, பிள்ளைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு நாளும் கலை வகுப்புக்களும் என்றால் நினைக்கவே எதோ செய்தது. ஏன் என் மகள் அப்படி என்னத்தைக் கொண்டிருக்கிறாள் என்று உடனே கேட்கும் துணிவுகூட என்னிடம் இப்ப இல்லாது மனம் மயங்க மீண்டும் கணனியில் வந்தமர்கிறேன் உங்களிடமாவது இதைப் பகிர்வோம் என்று.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த மூஞ்சிப் புத்தகத்தில் மினக்கடுறதை நிப்பாட்டினால் எல்லாம் சரியாகும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் நண்பிக்கு ...பகல் தூக்கம் ஆகவே ஆகாது அதுவும் மாலை ...சீதேவியின் அக்கா நடமாடும் வேளை . :lol: ..விளக்கு ...........வைக்கும் வேளை என்பார்கள். ......தரித்திரம் பிடிக்கும்....எனவே மதியம் ஒரு மணி நேரம் தூங்கி ...பின்  சோம்பலை கடத்த தோட்டத்தில்  மினக்கேடவும். தியானம் செய்யவும். :D

உங்கள் மகள் நீங்கள் சில நாட்களாக சோர்ந்து இருப்பதை அவதானித்து விட்டு அம்மாவுக்கு பேரப் பிள்ளைகள்,  அவர்களின் படிப்பு போன்ற விடயங்களைக் கதைத்தால் சந்தோசப்படுவார் என்று எண்ணிச் சொல்லியுள்ளார். அவர் உங்களை சந்தோசப்படுத்தி உற்சாகப்படுத்தத் தான் சொல்லியிருக்கின்றார்.  அவருக்கு தன் திருமணம் பற்றியோ தன் குழந்தையை படிப்பிப்பது பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாமல் உங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சொன்ன விடயங்களை பெரிசாக எடுக்க வேண்டாம்.

 

வெளிநாடுகளில் எம் பிள்ளைகளுக்கும் எமக்கும் இடையில் இருப்பது தலைமுறை இடைவெளி மட்டுமல்ல, கலாச்சார இடைவெளிகளும் தான். பிள்ளைகளும் இவற்றை மீறி எம்முடன் நெருங்க முற்பட்டு செய்யும் சில தத்துப் பித்து வேலைகள் இவை. கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Mid Life Crisis...! :o

 

சும்மா பகிடிக்கு, சுமே !   

 

இதுவும் கடந்து போகும்! :icon_idea:

 

C--Documents%20and%20Settings-Kurt-My%20

 

சுண்டு....... அந்த விளக்குமாறை எடப்பு இவவுக்கு இரண்டு குடுத்தால் பிடிச்சிருக்கிற பேய் பறந்திடும்!!! :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசுக்கோளாறுதான்..... பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு....... அந்த விளக்குமாறை எடப்பு இவவுக்கு இரண்டு குடுத்தால் பிடிச்சிருக்கிற பேய் பறந்திடும்!!! :D  :lol:

பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். சுமேரியரின் நிலைகண்டு இரங்கித்தான் பேய் அவவை அணைச்சு ஆறுதல்படுத்துது. :wub:  புரிஞ்சுகொள்ளுங்கோ. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி. உங்கள் பெயர்களை தனித்தனியே எழுதக் கூட எனக்கு மனம் வருகுதில்லை. என்ன செய்ய ??????

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி. உங்கள் பெயர்களை தனித்தனியே எழுதக் கூட எனக்கு மனம் வருகுதில்லை. என்ன செய்ய ??????

 

இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள், சில அயன்கள் குறைவாக இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.